<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-1831468623100134403</id><updated>2011-06-08T06:22:41.878Z</updated><category term='விபத்து'/><category term='தலைப்புகள்'/><category term='தினத்தந்தி'/><category term='இந்தியா'/><category term='பண்டிகை'/><category term='ஈழம்'/><category term='சென்னை'/><category term='கூட்டணி'/><category term='சட்டம்'/><category term='தினமணி'/><category term='இயற்கை'/><category term='நாசவேலை'/><category term='தமிழ்நாடு'/><category term='போராட்டம்'/><category term='தட்ஸ்தமிழ்'/><category term='பட்ஜெட்'/><category term='தினகரன்'/><category term='தகவல்கள்'/><category term='சினிமா'/><category term='தொலைக்காட்சி'/><category term='மாலைமலர்'/><category term='தினமலர்'/><category term='அரசியல்'/><category term='சமூகம்'/><title type='text'>செய்திவலை</title><subtitle type='html'>இன்று ஒரு செய்தி</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://newsintamil.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://newsintamil.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>வலைஞன்</name><uri>http://www.blogger.com/profile/09175459313475586529</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://photos1.blogger.com/blogger2/1027/223567947155778/183/gse_multipart64688.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>69</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-1831468623100134403.post-8127482647647941241</id><published>2007-03-26T08:44:00.000Z</published><updated>2007-03-26T08:49:36.462Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாலைமலர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>கொழும்பு விமானப்படை தளத்தில் விடுதலைப் புலிகள் வான்தாக்குதல்</title><content type='html'>&lt;strong&gt;கொழும்பு விமானபடை தளம் மீது விடுதலைப்புலிகள் விமானம் மூலம் குண்டுவீச்சு- 3 பேர் பலி, ஹெலிகாப்டர்கள் நாசம் &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொழும்பு, மார்ச். 26-&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடந்து வரும் உள்நாட்டு சண்டையில் கடந்த ஆண்டு வரை இரு தரப்பினரும் தரைவழி மோதல்களிலும் கடலிலும் தான் கவனம் செலுத்தி வந்தனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து சிங்களராணுவம் விமானப்படையை பயன் படுத்தி தமிழர்களின் கிரா மங்கள் மீது குண்டுகளை வீசி வருகிறது. இதில் பல கிரா மங்கள் அழிந்து விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் சொந்த கிராமங்களை காலி செய்து வேறு இடங்களுக்கு ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை பயன்படுத்தி சிங்கள ராணுவம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் முன்னேறி வருகிறது. குறிப்பாக கிபீர் வகை குட்டி விமானம் மூலம் சிங் களர்கள் நடத்தும் தாக்குதல் கொடூரமாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சிங்களர்களின் விமானப் படை தாக்குதல் அத்துமீறி போய் கொண்டிருப்பதால் விடுதலைப்புலிகள் மிகப் பெரிய பதிலடி கொடுப் பார் கள் என்று உளவுத்துறையி னர் கூறி வந்தனர். அதை உறு திப்படுத்துவது போல இன்று அதிகாலை விடுதலைப்புலி கள் முதன்முதலாக தங்கள் விமானப்படையைப் பயன் படுத்தி அதிரடி தாக்கு தலை நடத்தினார்கள். கொழும்பு அருகே காட்டுநாயக்காவில் உள்ள சிங்கள விமானப்படை தலைமை தளம் மீது இந்த தாக்குதல் நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நள்ளிரவு 12.45 மணிக்கு விடுதலைப்புலிகளின் 2 இலகு ரக விமானங்கள் இந்த தாக்குதலை நடத்தின. அந்த 2 விமானங்களும் இலங்கை விமானப்படை தளத்தை குறி வைத்து குண்டு மழை பொழிந்தன. பிறகு அந்த 2விமானங்களும் சக்தி வாய்ந்த 4 குண்டுகளை வீசி அதிரடி தாக்குதலை மேற்கொண்டன.&lt;br /&gt;&lt;br /&gt;தாக்குதலுகுள்ளான விமா னப்படை தளத்தில் தான் ரஷிய தயாரிப்பான `மிக்'ரக சண்டை விமானங்களும் இஸ்ரேல் தயாரிப்பான கிபிர் ரக விமானங்களும் நிறுத்தப்பட்டிருந்தன. ஈழத்தமி ழர்கள் மீது குண்டு வீச இந்த விமானங்களைத்தான் இலங்கை பயன்படுத்தி வரு கிறது. அந்த விமானங்களை குறி வைத்து விடுதலைப்புலிகள் விமானங்களில் இருந்து குண் டுகளை வீசினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் மிக், கிபிர் சண்டை விமானங்கள் கடும் சேதம் அடைந்தன. இந்த தாக்குதலின் போது விமானப்படை வீரர்கள் 3பேர் கொல்லப்பட்டனர். 16 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் நீர்கொழும்பு மருத் துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;வான்புலிகளின் எதிர் பாராத தாக்குதலால் இலங்கை விமானப்படை வீரர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். காட்டுநாயக்க விமானப்படை தளத்தின் மற்றொரு பகுதி யில்தான் கொழும்பு சர்வதேச விமான நிலையம் உள்ளது. வான்புலிகள் மீண்டும் தாக் கக்கூடும் என்ற பயத்தில் உட னடியாக கொழும்பு விமான நிலையம் மூடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று காலை 8.30 மணி வரை விமானநிலையம் மூடப்பட்டிருந்தது. இதனால் கொழும்புக்கு வந்த 3 வெளிநாட்டு விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப் பட்டன. 8.30 மணிக்கு பிறகு கொழும்பு விமானநிலையம் திறக்கப்பட்டாலும் அதிகாரிகளும், ஊழியர்களும் பதற்றத்துடன் காணப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;வான்புலிகளின் அதிரடி தாக்குதல் காரணமாககாட்டு நாயக்க ப குதி முழுவதும் இன்றுகாலை வரை புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் கொழும்பில் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இலங்கை விமானப்படை அதிகாரிகளுக்கும் இது கடும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. &lt;br /&gt;&lt;br /&gt;வான்புலிகள் தாக்குதல் நடத்தியதை சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் புலிகளின் செய்தித் தொடர்பாளர் தமிழ்ச்செல் வன் உறுதிப்படுத்தினார். காட்டு நாயக்க விமானப்படை தளத்தில் பார்க்கிங் பகுதியில் 4 குண்டுகள் வீசப்பட்டதாக தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;விடுதலைப்புலி தளபதிகளில் ஒருவரான ராசையா இளந்திரையன் கூறியதாவது:-&lt;br /&gt;&lt;br /&gt;வான்புலிகளின் 2 விமானங்கள் இந்த தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டன. காட்டு நாயக்க தலைமை முகாமை அழித்து விட்டு 2 விமானங்களும் பாதுகாப்பாக வன்னிபடை தளத்துக்கு திரும்பி வந்து விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;வான்புலிகள் தாக்குதலில் கிபிர், மிக் ரக விமானங்களுக்கு பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளது. எதிர் காலத்திலும் இத்தகைய தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்படும். வான்புலிகள் முதன் முதலாக இன்றுதான் தாக்குதலை தொடங்கி உள்ளனர். எமது மக்களை காப்பாற்றுவதற்காக, இலங்கை விமானப்படையை அழிக்கவே இன்றைய வான்தாக்குதல் நடத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு ராசையா இளந்திரையன் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;வான்புலிகள் தாக்குதலை ராணுவ செய்தித் தொடர்பாளர் அஜந்தாசில்வா ஒத்துக்கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் கூறியதாவது:-&lt;br /&gt;&lt;br /&gt;வான்புலிகள் தாக்குதல் நடத்தியதும் வான் எதிர்ப்பு சாதனங்கள் இயங்கின. உடனே புலிகளின் 2 விமானங்களும் தப்பிச் சென்று விட்டன. எங்களது வான்படை மூலம் புலிகளின் விமானங்களை தேடி வருகிறோம். &lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் நடத்திய குண்டு வீச்சு குறி தப்பி விட்டது. எனவே எங்களுக்கு அதிக சேதம் இல்லை. விமானப்படை தளத்துக்குள் எரிந்த தீயை உடனே அணைத்து விட்டோம். அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளன. &lt;br /&gt;&lt;br /&gt;வான்தாக்குதல் நடத் தப்பட்டதும் பயணிகள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். வான் தாக்குதல்கள் தொடரும் என விடுதலைப்புலிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் கொழும் பின் அனைத்துப் பகுதிகளிலும் இரவுநேரங்களில் மின் விளக்குகளை எரிய விட வேண்டாம் என்று பொது மக்களுக்கு அறிவுறுத்தி இருக் கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு அஜந்தாசில்வா கூறினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1831468623100134403-8127482647647941241?l=newsintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://newsintamil.blogspot.com/feeds/8127482647647941241/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1831468623100134403&amp;postID=8127482647647941241&amp;isPopup=true' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/8127482647647941241'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/8127482647647941241'/><link rel='alternate' type='text/html' href='http://newsintamil.blogspot.com/2007/03/blog-post_26.html' title='கொழும்பு விமானப்படை தளத்தில் விடுதலைப் புலிகள் வான்தாக்குதல்'/><author><name>✪சிந்தாநதி</name><uri>http://www.blogger.com/profile/13997924857674287983</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://photos1.blogger.com/x/blogger2/3177/508851162256371/612/z/593711/gse_multipart50358.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1831468623100134403.post-2081464071754206563</id><published>2007-03-21T04:47:00.000Z</published><updated>2007-03-21T04:50:35.490Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தினமலர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தினத்தந்தி'/><title type='text'>பாப்உல்மர் மரணத்தில் சந்தேகம்</title><content type='html'>&lt;strong&gt;பாகிஸ்தான் பயிற்சியாளர் விஷம் கொடுத்து கொலையா?&lt;br /&gt;விசாரணைக்காக பாகிஸ்தான் அணி ஜமைக்காவைவிட்டு வெளியேற தடை &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜமைக்கா, மார்ச்.21-&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் பாப் உல்மர் சாவில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. இதனால் பாகிஸ்தான் அணி ஜமைக்காவில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தான் படுதோல்வி&lt;br /&gt;&lt;br /&gt;வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து ஆகிய நாடுகளிடம் அடுத்தடுத்து படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி, உலக கோப்பை போட்டிகளில் இருந்தே வெளியேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பாப் உல்மர் மர்மமான முறையில் இறந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் உள்ள ஓட்டல் அறையில் அவர் வாந்தி எடுத்தும், மூக்கில் ரத்தம் வழிந்த நிலையிலும் மயங்கி கிடந்தார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது. அவரது மரணம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சந்தேகங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;பாப் உல்மர் மர்ம சாவு குறித்து ஜமைக்கா போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் சந்தேகத்திற்கிடமான பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. வழக்கமாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினருடன் சாப்பிடும் பாப் உல்மர், சம்பவத்தன்று அவர்களுடன் சாப்பிடவில்லை என்று தெரிய வந்துள்ளது. அவர் மன உளைச்சலுடன் காணப்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாப் உல்மர் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து காரில் சென்றால் 15 நிமிடத்தில் ஆஸ்பத்திரியை அடைந்து விடலாம். ஆனால் அவரை ஒரு மணி நேரத்துக்கு பிறகே ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அதுவரை அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததாக தெரிய வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், அவரது அறையில் ரத்தக்கறை படிந்திருப்பது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இந்த வாய்ப்பை ஜமைக்கா போலீசாரும் மறுக்க வில்லை. சம்பவத்தன்று பாப் உல்மரை சந்தித்தவர்களிடம் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;விஷம் கொடுத்து கொலையா?&lt;br /&gt;&lt;br /&gt;சூதாட்டக்காரர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு பாகிஸ்தான் அணி வீரர்கள், வேண்டுமென்றே தோற்றதாகவும், இது பாப் உல்மருக்கு தெரிய வந்ததால் அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தான் அணியின் தோல்வியை தாளமுடியாமல், அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும், மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என்றும் பல்வேறு ïகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;பிரேத பரிசோதனை தாமதம்&lt;br /&gt;&lt;br /&gt;இருப்பினும், பாப் உல்மர் சாவுக்கான காரணம், பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகுதான், உறுதியாக தெரிய வரும். கிங்ஸ்டன் நகரில் அமலில் உள்ள உள்ளூர் சட்டப்படி, மரணம் அடைந்தவரின் குடும்பத்தார் ஒப்புதலுடன்தான் பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்பது கட்டாயம் ஆகும். ஆனால் பாப் உல்மரின் குடும்பத்தினர் தென்ஆப்பிரிக்காவில் கேப் டவுன் நகரில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவர்களால் உரிய நேரத்தில் வர இயலாத சூழ்நிலை உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, தாங்கள் வராமலேயே பிரேத பரிசோதனையை நடத்த ஜமைக்கா அதிகாரிகளுக்கு பாப் உல்மர் குடும்பத்தினர் அதிகாரம் அளித்துள்ளனர். பிரேத பரிசோதனையை கூடவே இருந்து கவனித்து, பாப் உல்மர் உடலை தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி வைக்கும்படி, பாகிஸ்தான் அணியின் மற்றொரு பயிற்சியாளரான முரே ஸ்டீவன்சனை பாப் உல்மர் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பாப் உல்மர் குடும்பத்தினரை எதிர்பார்த்து காத்திருந்ததால், பிரேத பரிசோதனை தாமதமாகவே தொடங்கி உள்ளது. அதன் அறிக்கை இன்று வெளியாகும் என்று எதிர்பார்ப்பதாக பாகிஸ்தான் அணி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதன்பிறகுதான், பாப் உல்மர் மரணம் குறித்த மர்ம முடிச்சுகள் அவிழும் என்று தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;வெளியேற தடை&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தான் அணி தனது கடைசி ஆட்டத்தில் இன்று ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது. அதன்பிறகு நாளை பாகிஸ்தான் அணியினர் வெஸ்ட் இண்டீசில் இருந்து தாயகம் திரும்ப திட்டமிட்டு இருந்தனர். ஆனால் பாப் உல்மர் மரணம் குறித்த மர்மம் தீரும்வரை ஜமைக்காவை விட்டு வெளியேற வேண்டாம் என்று ஜமைக்கா போலீசார், பாகிஸ்தான் அணியினருக்கு உத்தரவிட்டுள்ளனர். அதனால் தாயகம் திரும்பும் திட்டத்தை சனிக்கிழமைக்கு பாகிஸ்தான் அணியினர் தள்ளி வைத்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;*தினத்தந்தி&lt;br /&gt;&lt;br /&gt;-oOo-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பாப் உல்மர் மரணத்தில் நீடிக்கிறது மர்மம்  பிரேத பரிசேதனை அறிக்கையில் போலீசார் சந்தேகம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜமைக்கா : பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் உல்மரின் திடீர் மரணத்தில் மர்மம் இன்னமும் தொடர்கிறது. அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர் .இந்நிலையில் தனிப்படை அமைக்கப்பட்டு, அவரை கடைசியாக சந்தித்தவர்கள் விசாரிக்கப்படுகின்றனர். உல்மர் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து 15 நிமிட பயணத்தில் தான் ஆஸ்பத்திரி இருக்கிறது. ஆனால் அறையில் மயங்கிக் கிடந்த உல்மர், ஒரு மணி நேரம் கழித்து தான் ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டுள்ளார். இவ்விஷயமும் பாத்ரூமில் உறைந்து கிடந்த ரத்தமும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளன. ஒருவேளை உல்மர் விஷம் கொடுக்கப்பட்டிருந்தால் அதில் கிரிக்கெட் சூதாட்ட புக்கிகளுடன் தொடர்பு கொண்டுள்ள பாக்., வீரர்களுக்கு நிச்சயம் தொடர்பு இருக்கும் என்றும், இது உறுதிப்படுத்தப்படும் வரை பாக்., வீரர்கள் நாட்டைவிட்டு வெளியேறக்கூடாது என்றும் அங்கு பிரச்னை கிளம்பியுள்ளது. நாளை (மார்ச் 22) வெ.இண்டீசைவிட்டு பாகிஸ்தான் அணி கிளம்புவதாக இருந்தது. போலீஸ் விசாரணையால் மார்ச் 24ம் தேதிதான் அந்த அணி புறப்பட முடியும் என தெரிகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;*தினமலர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1831468623100134403-2081464071754206563?l=newsintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://newsintamil.blogspot.com/feeds/2081464071754206563/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1831468623100134403&amp;postID=2081464071754206563&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/2081464071754206563'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/2081464071754206563'/><link rel='alternate' type='text/html' href='http://newsintamil.blogspot.com/2007/03/blog-post_21.html' title='பாப்உல்மர் மரணத்தில் சந்தேகம்'/><author><name>✪சிந்தாநதி</name><uri>http://www.blogger.com/profile/13997924857674287983</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://photos1.blogger.com/x/blogger2/3177/508851162256371/612/z/593711/gse_multipart50358.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1831468623100134403.post-2984646374100112151</id><published>2007-03-16T09:56:00.000Z</published><updated>2007-03-16T09:59:18.242Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தட்ஸ்தமிழ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>உச்சநீதிமன்ற நீதிபதி அழுகை!</title><content type='html'>&lt;strong&gt;உச்சநீதிமன்றத்தில் கதறி அழுத ஏ.ஆர்.லட்சுமணன்!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;மார்ச் 16, 2007&lt;br /&gt;&lt;br /&gt;டெல்லி: உ.பி. முதல்வர் முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகளில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த ஏ.ஆர்.லட்சுமணனுக்கு மிகவும் அநாகரீகமான வகையில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதை உச்சநீதிமன்றத்தில் இன்று தெரிவித்த லட்சுமணன், கண்ணீர் விட்டுக் கதறி அழுததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;உ.பி. முதல்வர் முலாயம் சிங் யாதவ், அவரது மகன் அகிலேஷ் சிங் யாதவ் ஆகியோர் ரூ. 5,00 கோடிக்கு மேல் சொத்து குவித்துள்ளதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து முலாயம் சிங் தாக்கல் செய்த மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில், முலாயம் சிங் மீதான சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்ற பெஞ்ச்சில் இடம் பெற்றிருந்த நீதிபதிகளில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த ஏ.ஆர்.லட்சுமணன் இன்று நீதிமன்றத்தில் பரபரப்புத் தகவலை வெளியிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;தனக்கு இந்த வழக்கு தொடர்பாக ஒரு அனாமதேய கடிதம் வந்துள்ளது. எனது நீதிமன்ற வாழ்க்கையில் இப்படி ஒரு மோசமான மிரட்டலை நான் சந்தித்ததில்லை என்று கூறிய லட்சுமணன் உணர்ச்சிவசப்பட்டு கதறி அழுதார். இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட லட்சுமணன், இந்த வழக்கை நான் விசாரிக்க விரும்பவில்லை. இதுகுறித்து தலைமை நீதிபதியிடம் தெரிவித்து விட்டேன் என்று கூறி விட்டு எழுந்து சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் ஐந்து நாளில் லட்சுமணன் நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் முலாயம் சிங் யாதவ் தரப்பிலிருந்து லட்சுமணனுக்கு மிரட்டல் வந்துள்ளதாக கூறி அவர் நீதிமன்றத்தில் அழுதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தனக்கு என்ன மாதிரியான மிரட்டல் வந்தது என்பதைத் தெரிவிக்க லட்சுமணன் மறுத்து விட்டார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1831468623100134403-2984646374100112151?l=newsintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://newsintamil.blogspot.com/feeds/2984646374100112151/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1831468623100134403&amp;postID=2984646374100112151&amp;isPopup=true' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/2984646374100112151'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/2984646374100112151'/><link rel='alternate' type='text/html' href='http://newsintamil.blogspot.com/2007/03/blog-post_16.html' title='உச்சநீதிமன்ற நீதிபதி அழுகை!'/><author><name>✪சிந்தாநதி</name><uri>http://www.blogger.com/profile/13997924857674287983</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://photos1.blogger.com/x/blogger2/3177/508851162256371/612/z/593711/gse_multipart50358.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1831468623100134403.post-1249116451305528771</id><published>2007-03-15T09:57:00.000Z</published><updated>2007-03-15T10:00:21.200Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாலைமலர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாசவேலை'/><title type='text'>சத்தீஸ்கரில் 50 போலீசார் கொலை</title><content type='html'>&lt;strong&gt;சத்தீஸ்கரில் நக்சலைட் தாக்குதலில் 50 போலீசார் பலி:&lt;br /&gt;வெடிகுண்டு வீச்சு, துப்பாக்கிசூடு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;ராய்ப்பூர், மார்ச். 15-&lt;br /&gt;&lt;br /&gt;சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் ராணிபோட்லி எனும் காட்டுப்பகுதியில் போலீஸ் புறக்காவல் நிலையம் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு சத்தீஸ்கர் ஆயுதப்படை போலீஸ் பிரிவைச் சேர்ந்த 23 போலீசார் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்களுக்கு துணையாக 55 சிறப்பு போலீஸ் அதிகாரி கள் அங்கு இருந்தனர். பிஜப்பூர் மாவட்டத்தில் காட்டுப்பகுதியில் நக்சலைட்டுகளை ஒடுக்க இவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நேற்றிரவு2.15 மணிக்கு நூற்றுக்கணக்கான நக்சலைட் டுக்கள் அந்த போலீஸ் நிலையத்தை சூழ்ந்தனர். போலீசார் உஷராவதற்குள் நக்சலைட்டுக்கள் நாலாபுறமும் நின்று அதிரடி தாக்குதலை நடத்தினார்கள். போலீஸ் நிலையத்துக்குள் கை எறி குண்டுகளை சரமாரியாக வீசினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பெட்ரோல் வெடிகுண்டுகளையும் வீசி எறிந்து அந்த போலீஸ்நிலையத்தை தகர்த்தனர். பிறகு துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே போலீஸ் நிலையத்துக்குள் நுழைந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நக்சலைட்டுக்களின் இëந்த திடீர் அதிரடி தாக்குதலில் சத்தீஸ்கர் மாநிலஆயுதப்படை போலீசார் 50 பேர் உயிர் இழந்தனர். மேலும் பலர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;தாக்குதல் நடத்தி முடித்த பிறகு நக்சலைட்டுக்கள் அனை வரும் அடர்ந்த காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டனர்.போகும் போது அவர்கள் போலீஸ் நிலையத்தில் இருந்த அனைத்து ஆயுதங் களையும் அள்ளிச் சென்று விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆயுதங்களை கைப்பற்றி விட்டு வெளியில் வந்ததும் நக்சலைட்டுகள் போலீஸ் நிலையத்தின் உள்ளேயும், போலீஸ் நிலையத்தை சுற்றியும் கண்ணி வெடிகளை வைத்து அவற்றை ரிமோட் மூலம் இயக்கி வெடிக்க வைத்தனர். இந்த கண்ணி வெடி தாக்குதலில் போலீஸ் நிலையம் தகர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் சுற்றுப்புறங்களும் கண்ணி வெடிகள் வெடித்ததால் போர்க்களம் போல மாறியது. படுகாயங்களுடன் போராடிக் கொண்டிருந்த போலீசார் கண்ணி வெடி தாக்குதல் காரணமாக போலீஸ் நிலையத்துக்குள்ளேயே பிணமானார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சம்பவ இடத்துக்கு மத்திய போலீஸ் படை வீரர்கள் விரைந்தனர். ராணிபோட்லி போலீஸ் நிலையத்தின் இடிபாடுகளை அகற்றி பிணங்களை மீட்டனர். அங்கு வெடிக்காத சில கண்ணி வெடிகள் கிடந்தன. வெடி குண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அந்த கண்ணி வெடிகள் செயல் இழக்க செய்யப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;ராணிபோட்லி காட்டுப் பகுதியில் போலீஸ்காரர்களின் உடல்கள் சில இடங்களில் சிதறி கிடக்கின்றன. அவற்றை கணக்கிட்டு வருவதாகவும் அது முடிந்த பிறகே பலியான போலீசாரின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு என தெரிய வரும் என்று பிஜப்பூர் மாவட்ட காட்டிலாகா போலீஸ் ஜ.ஜி. ஆர்.கே.விஜ்.கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நக்சலைட்டுகளுக்கு எதிராக சத்தீஸ்கர் மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுக்கத் தொடங்கியதில் இருந்து பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுக்களின் வெறியாட்டம் அதிகரித்து விட்டது. போலீசாரை மட்டுமின்றி பொது மக்களையும் அவர்கள் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 2 ஆண்டுகளில் சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டும் நக்சலைட்டுகள் 1187 தடவை தாக்குதல் நடத்தி இருக் கிறார்கள். இதில் 676 பேர் கொல்லப்பட்டனர். இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை இல்லாதபடி அதிக போலீசார் பலியாகி விட்டனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1831468623100134403-1249116451305528771?l=newsintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://newsintamil.blogspot.com/feeds/1249116451305528771/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1831468623100134403&amp;postID=1249116451305528771&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/1249116451305528771'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/1249116451305528771'/><link rel='alternate' type='text/html' href='http://newsintamil.blogspot.com/2007/03/50.html' title='சத்தீஸ்கரில் 50 போலீசார் கொலை'/><author><name>✪சிந்தாநதி</name><uri>http://www.blogger.com/profile/13997924857674287983</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://photos1.blogger.com/x/blogger2/3177/508851162256371/612/z/593711/gse_multipart50358.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1831468623100134403.post-8792882442415875190</id><published>2007-03-13T18:06:00.000Z</published><updated>2007-03-13T18:09:40.135Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தினமலர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='கூட்டணி'/><title type='text'>திமுக-கம்யூ நாடாளுமன்றத்தில் மோதல்</title><content type='html'>&lt;strong&gt;லோக்சபாவில் மார்க்சிஸ்ட் எம்.பி.,க்கள்... ரகளை! *&lt;br /&gt;மந்திரி டி.ஆர்.பாலுவை தாக்க பாய்ந்தனர் *&lt;br /&gt;சென்னை கடல்சார் பல்கலைக்கு எதிர்ப்பு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;சென்னையில் கடல்சார் பல்கலைக் கழகம் அமைப்பது தொடர்பான மசோதாவை லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்ய முற்பட்டபோது மேற்கு வங்க மார்க்சிஸ்ட் எம்.பி.,க்கள் பயங்கர ரகளையில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவை தாக்க முற்பட்டு, அவர் கையில் இருந்த மசோதா ஆவணத்தைப் பறிக்க முயன்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பாலுவை காப்பாற்றும் வகையில் மற்ற தமிழக எம்.பி.,க்கள் அரண் அமைத்ததால், அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. சென்னையில் கடல்சார் பல்கலைக் கழகம் அமைக்க, மத்திய அமைச்சரவையில் கடந்த ஆண்டே விவாதிக்கப்பட்டது. விவாதம் நடந்த போது மகாராஷ்டிராவைச் சேர்ந்த அமைச்சர் சரத்பவார் தவிர வேறு எந்த அமைச்சரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே, கடந்த டிசம்பர் 18ம் தேதி, மத்திய அமைச்சரவையில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கான மசோதாவை லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. லோக்சபாவில் எடுத்துக் கொள்ளப்படும் விவாதங்கள் அனைத்துமே, விவாதம் செய்வதற்கான முதல் வாரமே ஆலோசனை செய்யப்பட்டு, அலுவல் குறிப்பேட்டில் எழுதப்படுவது வழக்கம். இதேபோல், கடந்த வாரம் ஆலோசனை நடந்தபோது "கடல்சார் பல்கலைக் கழகத்தை சென்னையில் அமைப்பதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும்' என்று கூறப்பட்டு, அலுவல் குறிப்பேட்டில் எழுதப்பட்டது. அப்போதும் எந்த எம்.பி.,க்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.அலுவல் குறிப்பேட்டில் கூறியபடி, லோக்சபாவில் இந்த மசோதாவை தாக்கல் செய்வதற்காக நேற்று நண்பகல் 12 மணியவில் அமைச்சர் பாலு எழுந்தார். அப்போது, யாரும் சற்றும் எதிர்பாராத வகையில், மேற்கு வங்க மார்க்சிஸ்ட் எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். "திபுதிபு'வென சபாநாயகர் இருக்கையை நோக்கி ஓடி வந்தனர். சபையில் திடீரென கூச்சலும், குழப்பமும் நிலவியது. இதனால் சபை 10 நிமிடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் மதியம் 12.15 மணிக்கு சபை கூடியதும், மசோதா குறித்து அமைச்சர் பாலு பேச முற்பட்டார். அப்போது, மேற்கு வங்க மார்க்சிஸ்ட் எம்.பி.,க்கள் அனில் பாசு, சுமித் லாகிரி ஆகியோர் பின் வரிசையில் இருந்து படு வேகமாக ஓடி வந்தனர். முன் வரிசையில் நின்று கொண்டிருந்த பாலுவை நோக்கி ஆவேசமாக கத்தியபடியே ஓடி வந்து, பாலுவின் கைகளில் இருந்த மசோதா ஆவணங்களை பறிக்க முற்பட்டனர். இவர்கள் இருவரோடு சேர்ந்து மற்ற மார்க்சிஸ்ட் எம்.பி.,க்களும் பாலுவை தாக்க முயன்றனர். அப்போது, மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பழனி மாணிக்கம், அரண் போல கைகளை அகற்றி நின்று பாலுவைப் பாதுகாத்தார். மார்க்சிஸ்ட் எம்.பி.,க்கள், பழனி மாணிக்கத்தை தள்ளி விட்டு பாலுவை நெருங்க முயற்சி செய்தனர். இதற்குள் தங்கபாலு ஓடி வந்து எம்.பி.,க்களை அப்புறப்படுத்தினார். தமிழக எம்.பி.,க்கள் அனைவரும் அங்கே கூடி, மார்க்சிஸ்ட் எம்.பி.,க்களை கடுமையாக எச்சரித்தனர். இரு தரப்பும் ஒருவரையொருவர் எதிர்த்து ஆவேசமாக வாக்குவாதம் செய்யவே, சபையை ஒத்தி வைப்பதாக கூறிவிட்டு சபாநாயகர் எழுந்து சென்று விட்டார். அதை கவனிக்காத மேற்கு வங்க எம்.பி.,க்களும், தமிழக எம்.பி.,க்களும் அவையில் ஒருவொரையொருவர் முட்டித் தள்ளத் துவங்கிய நேரத்தில், சபை பாதுகாவலர்கள் வேகமாக உள்ளே நுழைந்து, எம்.பி.,க்களை விலக்க முயன்றனர். மூத்த அமைச்சர்கள் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி மற்றும் சிவராஜ்பாட்டீல் ஆகியோர் எம்.பி.,க்களை சமாதானப்படுத்தினர். அரைமணி நேரத்திற்கு பின், சபையில் அமைதி திரும்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;காலை நடந்த அமளிக்கு பிறகு மதியம் 2.30 மணிக்கு லோக்சபா மீண்டும் கூடியது. அப்போது மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த எம்.பி., பாசுதேவ் ஆச்சார்யா எழுந்து ஒரு அறிக்கை வாசித்தார். அவர் கூறியதாவது: இன்று (நேற்று) காலையில் நடந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. எங்கள் எம்.பி.,க்கள் சிலர் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டதால் சம்பவம் நடந்து விட்டது. சபாநாயகர் இருக்கை அருகே வந்து விட்டனர். இதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். எனது கட்சி சார்பில் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் நடவடிக்கையினால் சபையின் கண்ணியத்திற்கும், சபாநாயகர் இருக்கைக்கும் அவமரியாதை ஏற்பட்டிருந்தால் அதற்கும் வருந்துகிறேன். இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதால் எங்களது உணர்வுகள் காயப்பட்டுள்ளன. எனவே மத்திய அரசு இவ்விஷயத்தில் உரிய கவனம் செலுத்தும் என நம்புகிறேன். இவ்வாறு பாசுதேவ் ஆச்சார்யா கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;சபை முன்னவர் பிரணாப் முகர்ஜி பேசியதாவது: மதியம் நடந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஒரு மசோதா அறிமுகம் செய்யப்பட்டால், அது குறித்து தங்களது கருத்தை தெரிவிக்க எவ்வளவோ வழிகள் உள்ளன. மசோதா அறிமுகம் ஆன பின் பார்லிமென்ட் நிலைக்குழு போன்றவற்றிற்கு அது செல்லும். அப்போது தங்களது எதிர்ப்பையும், விமர்சனத்தையும் தெரிவிக்க வாய்ப்புள்ளது. அதை விட்டு விட்டு சபையிலேயே இவ்வாறு நடந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. இவ்வாறு பிரணாப் முகர்ஜி பேசினார். தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் அத்வானி பேசினார். அதன்பின் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு சென்னையில் கடல்சார் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான மசோதாவை தாக்கல் செய்தார். இத்துடன் சபையில் பிரச்னை முடிவுக்கு வந்தது. தும்பை விட்டு வாலை பிடித்த கதை மும்பை, கோல்கட்டா மற்றும் சென்னை ஆகிய மூன்று இடங்களிலும் கடல் சார் கல்வி மையங்கள் உள்ளன. சென்னையில் "துறைமுக நிர்வாக கல்வி மையம்' உள்ளது. இவற்றை ஒருங்கிணைத்து கடல்சார் பல்கலைக் கழகம் அமைப்பது எனவும், அதை சென்னையில் அமைப்பது எனவும் அமைச்சர் பாலு முடிவு செய்தார். இந்த விவரத்தை 200506ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டிலேயே நிதியமைச்சர் சிதம்பரம் அறிவிப்பு செய்திருந்திருந்தார். அதே ஆண்டு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதலுக்காக இந்த திட்டம் சென்றபோது அங்கு மகாராஷ்டிரா அமைச்சர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். சரத்பவார் தலைமையிலான குழு, மும்பையில் தான் இந்த பல்கலைக் கழகம் அமைக்க வேண்டுமென குரல் எழுப்பியது. அப்போது பாலு, "அதற்கு தேவையான நிலத்தை தாருங்கள். எனக்கு ஆட்சேபனை இல்லை' என்றார். நிலம் அளிக்க முடியாத நிலையை ஒப்புக் கொண்ட சரத்பவார், சென்னையிலேயே அமைத்துக் கொள்ள ஒப்புதல் அளித்தார். இதன் பின்னர் மத்திய அமைச்சரவையில் இத்திட்டத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டது. ஜனாதிபதி உரையிலும் இவ்விஷயம் இடம்பெற்றது. இவ்வளவு தடைகளையும் கடந்து வந்த பின்னரே, கடல்சார் பல்கலைக் கழக மசோதாவை அமைச்சர் பாலு லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்ய முயன்றார். ஆனால் முன்னர் எந்த இடத்திலும் எதிர்ப்பு தெரிவிக்காத மார்க்., எம்.பி.,க்கள் நேற்று எதிர்ப்பு தெரிவித்தது, "தும்பை விட்டு வாலை பிடித்த கதை' ஆகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;நடப்பது "சிவில் வார்': அத்வானி வர்ணனை லோக்சபாவில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் அத்வானி பேசுகையில்,""இந்த சம்பவம் நடந்த போது நான் சபையில் இல்லை. சபையில் என்ன நடந்திருந்தாலும் அது மிகவும் துரதிர்ஷ்டவமானது. ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்குள் "சிவில் வார்' (உள்நாட்டுக் குழப்பம்) உள்ளது. இந்த சூழ்நிலை முன் எப்போதும் இருந்ததில்லை. ஆளும் கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு இருந்தால் அதை அமைச்சரவை கூட்டத்திலேயே சரி செய்திருக்க வேண்டும். அமைச்சரவையில் ஏற்கனவே ஒப்புதல் பெறப்பட்ட மசோதா இது. ஆனால் பார்லிமென்ட்டில் தாக்கலாகும் போது இப்படி நடக்கிறது என்றால் மத்திய அரசின் நிர்வாகம் தோல்வி அடைந்துள்ளதையே காட்டுகிறது. சபைக்குள் பாதுகாவலர்கள் வந்து சமாதானப்படுத்துவது முன்னெப்போதும் நடந்ததில்லை. வழக்கமாக ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே சண்டை நடப்பது வழக்கம். ஆனால் ஆளும் கூட்டணிக்குள்ளேயே சண்டை நடப்பது கேவலமாக உள்ளது. கூட்டணி தர்மத்தை இந்த அரசு மீறியுள்ளதையே காட்டுகிறது. இந்த கூட்டணி அரசை அவர்களே முடித்துக் கொள்வர்' என்று கூறினார். அத்வானியின் பேச்சுக்கு இடதுசாரி கட்சி எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தி.மு.க.,வினர் அமைதி காத்தனர். வருத்தம் தெரிவித்த சபாநாயகர் லோக்சபாவில் நேற்று அமைச்சர் பாலுவை தாக்க முயன்ற சம்பவம் நடந்த பின்னர், சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி அறைக்கு தமிழக எம்.பி.,க்கள் விரைந்தனர். அவர்களிடம் பேசிய சபாநாயகர் நடந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவிப்பதாகக் கூறினார். இதன் பிறகு மார்க்சிஸ்ட் கட்சி மூத்த எம்.பி.,க்கள் பாசுதேவ் ஆச்சார்யா, ரூப்சந்த் பால் ஆகியோர் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1831468623100134403-8792882442415875190?l=newsintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://newsintamil.blogspot.com/feeds/8792882442415875190/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1831468623100134403&amp;postID=8792882442415875190&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/8792882442415875190'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/8792882442415875190'/><link rel='alternate' type='text/html' href='http://newsintamil.blogspot.com/2007/03/blog-post.html' title='திமுக-கம்யூ நாடாளுமன்றத்தில் மோதல்'/><author><name>✪சிந்தாநதி</name><uri>http://www.blogger.com/profile/13997924857674287983</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://photos1.blogger.com/x/blogger2/3177/508851162256371/612/z/593711/gse_multipart50358.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1831468623100134403.post-3609564288265442306</id><published>2007-02-28T08:28:00.000Z</published><updated>2007-02-28T08:32:15.318Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாலைமலர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பட்ஜெட்'/><title type='text'>பட்ஜெட்:  வருமானவரி உச்சவரம்பு உயர்வு</title><content type='html'>&lt;strong&gt;மத்திய பட்ஜெட் தாக்கல்: &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;வருமானவரி உச்சவரம்பு உயர்வு&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;புதுடெல்லி, பிப். 28-&lt;br /&gt;&lt;br /&gt;2007-08 ஆம் ஆண்டுக்கான மத்திய பட் ஜெட்டை நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பட்ஜெட்டில் கூறப்பட்டி ருப்பதாவது:-&lt;br /&gt;&lt;br /&gt;நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 2006-07-ல் 9.2 ஆக இருந்தது. கடந்த 3 ஆண்டுகளில் இது சராசரியாக 8.6 சதவீதம் இருந்தது. உற்பத்தி வளர்ச்சி விகிதம் 11.3 சதவீதமாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சேமிப்பு விகிதம் 32.4 சதவீதமாகவும், முதலீட்டு விகிதம் 33.8 சதவீதமாகவும் தொடர்ந்து நீடிக்கும். 2007-ம் நிதி ஆண்டில் சராசரி பண வீக்க விகிதம் 5.2 முதல் 5.4 சதவீதம் வரையில் இருக்கும். பணவீக்கம் கட்டுப்படுத்தப் படும்.&lt;br /&gt;&lt;br /&gt;2006-07 நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் வங்கிக்கடன் விகிதம் 29 சதவீதமாக உயர்ந்ததது. கோதுமை, அரிசி தொடர்பாக எந்த புதிய ஒப்பந்தமும் செய்யப்பட மாட்டாது. கூடுதலாக 24 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் பாசன வசதி செய்யப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊரகப்பகுதிகளில் தொலைபேசியை கொண்டு செல்லும் திட்டத்தின் கீழ் 15 ஆயிரத்து 54 கிராமங் களில் போன் வசதி செய்யப் பட்டுள்ளது. உடல் நலத்துக்கான நிதிஒதுக் கீடு 21.9 சதவீதமாக அதிகரிக்கப் பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கல்விக்கு 34.2 சதவீதமும் கூடுதல் நிதி ஒதுக்கீடு நடப்பாண் டில் கூடுதலாக 2 லட்சம் ஆசிரியர்கள் நியமிக்கப் படுவார்கள். 5 லட்சம் புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;மேல்நிலைப்பள்ளி கல்விக் கான உதவித்தொகை ரூ. 1837 கோடியில் இருந்து ரூ.3794 கோடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது. ராஜீவ்காந்தி குடிநீர் திட்டத்தின் கீழ் புதிய பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.4680 கோடியில் இருந்து ரூ.5850 கோடியாக அதிகரிக் கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பாரத் நிர்மான் திட்டத்தின் கீழ் புதிதாக 15 லட்சம் வீடுகள் கட்டப்படும். தேசிய ஊரக சுகாதார திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு ரூ.8207 கோடியில் இருந்து ரூ.9947 கோடியாக அதிகரிக்கப்படுகிறது. எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத் துக்கு ரூ. 969 கோடி நிதிஒதுக்கப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;நாடெங்கும் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்து பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதை தடுக்க தேசிய அளவில் புதிய ஸ்காலர்ஷிப் திட்டம் அமல் படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குழந்தைக்கும் படிப்பைத்தொடர தலா ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;போலியோவை முற்றிலு மாக விரட்ட ரூ.1290 கோடி வழங்கப்படும். உத்தர பிரதேசத்தில் 20 மாவட்டங் களிலும், பீகாரில் 10 மாவட்டங்களிலும் போலியோ ஒழிப்புக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;பொது வினியோக முறை கம்ப்ïட்டர்மயமாக்கப்படும். இந்திய உணவுக்கழக செயல் பாடுகள் கம்ப்ïட்டரில் ஒருங்கிணைக்கப்படும். எஸ்.சி. மற்றும் எஸ்.டி.க்களுக்கு மட்டுமே வழங்கப்படும் திட்டங்களுக்கு நிதிஒதுக்கீடு ரூ.3271 கோடியாக அதிகரிக் கப்படுகிறது. எஸ்.சி., எஸ்.டி.க்கான உதவித்தொகை நிதி ஒதுக்கீடு ரூ.440 கோடியில் இருந்து ரூ.611 கோடியாக அதிகரிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுபான்மை இன மாணவ-மாணவிகளுக்கான ஸ்காலர்ஷிப் திட்டத்தில் மெட்ரிக்கில் படிப்பவர்களுக்கு ரூ.72 கோடியும், பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படிப்பவர் களுக்கு ரூ.48 கோடியும் வழங்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாட்டுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும். இந்த மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.12041 கோடியில் இருந்து ரூ.14365 கோடியாக உயர்த்தப்படுகிறது. அதோடு வடகிழக்கு மாநிலங்களுக்கு வரும் மார்ச் 31-ந்தேதிக்குள் புதிய தொழில்கொள்கை தயாரித்து வெளியிடப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;பெண்கள் மேம்பாட்டுக் கான நிதிஒதுக்கீடு ரூ.22,282 கோடியாக இருக்கும். விவசாயிகளுக்கு ரூ.2,25,000 கோடி பயிர்க்கடன்கள் வழங்க புதிய பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக 50 லட்சம் விவசாயிகள் பயன் பெறு வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;2006-07-ல் விவசாயி களுக்கு ரூ.1,75,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டது. இது ரூ.1,90,000 கோடியை எட்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தேயிலை உற்பத்திக்கு புதிய உத்வேகம் கொடுக்க சிறப்பு நோக்க தேயிலை நிதி உருவாக்கப்படும். இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு தேசிய விவசாய இன்சூரன்ஸ் திட்டம் தொடர்ந்து நடை முறைப்படுத்தப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;மாநில அரசுகளின் உதவியுடன் சமூகநலத்திட்டங் கள் மேம்படுத்தப்படும். இதன் மூலம் ஒரு அங்கமாக 70 லட்சம் குடும்பங்கள் எல்.ஐ.சி. திட்டத்தில் இணைக்கப் படுவார்கள். இவர்களுக்கு 50 சதவீத பிரிமீயத்தொகையாக 200 ரூபாயை மத்திய அரசு வழங்கும். இந்த திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.16,261 கோடி கடனாக வழங்கும். தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கான நிதிஒதுக்கீடு ரூ.9955 கோடியில் இருந்து ரூ.12,600 கோடியாக அதிகரிக் கப்படுகிறது. டெல்லி, கொல் கத்தா, மும்பை, சென்னை ஆகிய 4 முக்கிய நகரங் களை இணைக்கும் தங்கநாற்கர சாலைத்திட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. வட கிழக்கு மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலை மேம் பாட்டுத்திட்டத்துக்கு ரூ.405 கோடி வழங்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;கைத்தறித்தொழில் மேம்பாட்டு நிதி ரூ.533 கோடியில் இருந்து ரூ.911 கோடியாக உயர்த்தப்படுகிறது. நெசவாளர்களுக்கான சுகா தார காப்பீட்டுத்திட்டம் இதர சிறு தொழில்களுக்கும் விரிவு படுத்தப்படும். இதற்காக நிதி ஒதுக்கீடு ரூ. 241 கோடியில் இருந்து ரூ.321 கோடியாக அதி கரிக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;கயிறு தொழிற்சாலை நவீனப்படுத்த ரூ. 23.55 கோடி வழங்கப்படும். சுற்றுலாத் துறைக்கான நிதிஒதுக்கீடு ரூ.423 கோடியில் இருந்து ரூ.520 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;நலிவடைந்த பிரிவின ருக்கு கடன் வழங்க ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப் படுகிறது. அவர்களது வீட்டுக் கடனுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.5000 கோடியில் இருந்து 20 ஆயிரம் கோடியாக அதிகரிக் கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வராத மாவட்டங்களுக்கு சம்பூர்ணா கிராம வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ.800 கோடி ஒதுக்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள சொர்ண ஜெயந்தி வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ஒதுக்கீடு ரூ.250 கோடியில் இருந்து ரூ.344 கோடியாக உயர்த்தப்படுகிறது. இந்த நிதி ஆண்டில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 12.5 பில்லியன் டாலர்களாக (ரூ.57 ஆயிரம் கோடி) உயர்ந்துள்ளது. துறை ரீதியான முதலீடுகள் 6.8 பில்லியன் டாலர்கள் தேசிய மழைநீர் பிடிப்புபகுதி மேம்பாட்டு நிறுவன, திட்டங் களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு ரூ.96 ஆயிரம் கோடி யாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் மூலதன செலவு ரூ.41,922 கோடியும் அடங்கும். நாட்டு பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நிதிஉதவிகளும் செய்யப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;பிற்பட்ட மண்டல பகுதி களை மேம்படுத்துவதற்காக ரூ.5800 கோடி சிறப்பு நிதி வழங்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;மும்பை நகரை உலகத்தரம் வாய்ந்த நிதி மையமாக மாற்ற உயர் அதிகாரக்குழு ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;உடல்ஊனமுற்றோருக்காக 1 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். நாட்டில் ஏற்பட்டுள்ள சீதோஷ்ண இயற்கை மாற்றத்தின் விளைவை ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்று ஏற்படுத் தப்படும். பல்வேறு துறை களில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டு ரூ.1,72,728 கோடியாக இருந்தது. 2007-2008-ம் ஆண்டுக்கான ஒதுக்கீடு ரூ.2,05,100 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் மத்திய திட்டங்களுக்கான ஒதுக்கீடு ரூ.1,54,939 கோடி.&lt;br /&gt;&lt;br /&gt;20 மாநிலங்களுக்கு ரூ.8575 கோடி கடன் பாக்கி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மாநிலங்கள் மூலம் மத்திய அரசுக்கு வருவாய் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 450 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ.1,20,377 கோடியாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த நிதி ஆண்டு முதல் தேசிய அளவில் பொருட்கள் மற்றும் சேவைவரி திட்டம் அறிமுகம் செய்யப்படும். நடப்பு நிதி ஆண்டில் நிதிபற்றாக்குறை 3.7 சதவீதமாக இருக்கும். வருவாய் பற்றாக்குறை 2 சதவீதம். மொத்த செலவு ரூ.6,81,521 கோடியாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;விவசாயம் அல்லாத பொருட்கள் மீதான சுங்கவரி விகிதம் 12.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப் படுகிறது. சமையல் செய்ய பயன்படும் நிலக்கரி மீதானவரி விதிப்பு முழுமையாக நீக்கப் படுகிறது. குறைபாடுள்ள பொருட்கள் மீதான வரி விதிப்பு 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக் கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பாலிஸ்டர் மீதான வரி 10-ல் இருந்து 7.5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. விவசாய கருவிகள், உணவு பதப்படுத்தும் கருவிகளுக்கு வரி 7.5லிருந்து 5 சதவீதமாக குறைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சில உணவுகளுக்கு வரி 30 லிருந்து 20 சதவீதமாக குறையும். சூரியகாந்தி எண்ணைக்கு வரி 15 சதவீதமாக குறைக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;குடைகளுக்கான உதிரி பாகங்கள், கைக்கடிகார டயல் ஆகியவற்றுக்கான வரி 12 சதவீதத்தில் இருந்த 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;விமான உதிரிப்பாகங் கள் இறக்குமதிக்கு 3 சதவீத இறக்குமதி வரிவிதிக்கப்படும். இரும்புதாது ஏற்றுமதிக்கு டன்னுக்கு ரூ.300 வரி விதிக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறு தொழில்களுக்கான சுங்கவரி விலக்கு ரூ.1 கோடியில் ரூ.1.5 கோடி யாக உயர்த்தப்படுகிறது. பெட்ரோல், டீசல் பற்றிய விளம்பர படவரி 8 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறை கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பிளைவுட் மீதான சுங்கவரி 16 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைக்கப்படுகிறது. கலப்பு உணவுகளுக்கு முழுமை யான வரி விலக்கு வழங்கப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பயோ-டீசல் மீதான சுங்க வரி முழுமையாக நீக்கப்படு கிறது. தண்ணீர் சுத்தி கரிக்கும் கருவிகள், அனைத் திற்கும் வரிவிலக்கு அளிக்கப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;சிகரெட் மீதான சுங்கவரி அதிகரிக்கப்படுகிறது. புகையிலை இல்லாத பான் மசாலா மீதான சுங்கவரி 66 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக குறைக்கப்படுகிறது. டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடக்க உள்ளதால் கவுரவ புத்தாநகரம், ஸ்ரீதாபாத், காவியாபாத், கோரகன், டெல்லியில் 2,3,4 நட்சத்திர ஓட்டல்களுக்கு 5 ஆண்டுகளுக்கு வரிச்சலுகை வழங்கப்படும். 20 ஆயிரம் கூடுதல் அறைகள் தேவைப் படுவதால் வரி சலுகை நீடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;மாதசம்பளம் பெறுவோருக் கான வருமான வரியில் இந்த பட்ஜெட்டில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை ஆண்டு ஒன்றுக்கு ரூ. 1 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமானவரி இல்லை. இந்த வருமான உச்சவரம்பில் மேலும் ரூ. 10 ஆயிரம் உயர்த் தப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்படி ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமானவரி இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வருமானவரி விலக்குக் கான உச்சவரம்பு ரூ. 1,45,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு இந்த வருமான வரி விலக்கு ரூ.1,95,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சேவை வரி விலக்கால் 2 லட்சம் பேருக்கு பயன்&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய பட்ஜெட்டில் பல சேவை வரிகளில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இத னால் 2 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வரி விலக்கு காரண மாக மத்திய அரசுக்கு ஆண் டுக்கு ரூ.800 கோடி இழப்பு ஏற்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை உயர்தர குடி யிருப்போர் நலச் சங்கங் கள் மீது சேவை வரி விதிக் கப் பட்டிருந்தது. புதிய பட் ஜெட்டில் அதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கம்பெனிகளுக்கான கார்ப் பரேட் வருமான வரியில் சர்சார்ஜ் (ரூ.1 கோடிக்கு கீழ் உள்ளவர்களுக்கு) நீக்கப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;பொது பட்ஜெட் 2007: முக்கிய அம்சங்கள்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;. மகளிர் திட்டங்களுக்கு 22,282 கோடி ரூபாய்&lt;br /&gt;&lt;br /&gt;. சிறுபான்மையினர் கழகத்துக்கு 63 கோடி ரூபாய்&lt;br /&gt;&lt;br /&gt;. தங்க நாற்கரச் சாலைத் திட்டம் 2009ல் நிறைவு&lt;br /&gt;&lt;br /&gt;. அந்நிய செலாவணி கையிருப்பு விபரம்&lt;br /&gt;&lt;br /&gt;. சுகாதாரம், கல்வி மற்றும் பணவீக்கம் சிதம்பரம் பட்ஜெட்டின் முக்கிய இலக்குகள்&lt;br /&gt;&lt;br /&gt;. வடகிழக்கு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;. வடகிழக்கு சாலை வசதிக்கு 405 கோடி&lt;br /&gt;&lt;br /&gt;. கிராமப்புற மின்வசதிக்கு ரூ. 3983 கோடி&lt;br /&gt;&lt;br /&gt;. தேயிலை, தேங்காய் வளர்ச்சி நிதி&lt;br /&gt;&lt;br /&gt;. நிலமற்ற கிராமத்தினருக்கு இன்சூரன்ஸ்&lt;br /&gt;&lt;br /&gt;. தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சிக்கு கூடுதல் நிதி&lt;br /&gt;&lt;br /&gt;. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டம்&lt;br /&gt;&lt;br /&gt;. கல்விக்கான நிதி 34 சதமாக அதிகரிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;. விவசாயத்துக்கு 2,25,000 கோடி கடன்&lt;br /&gt;&lt;br /&gt;. எஸ்சி, எஸ்டிக்களுக்கான திட்டங்களுக்கு கூடுதல் நிதி&lt;br /&gt;&lt;br /&gt;. 15 ஆயிரம் கிராமங்களுக்கு தொலைபேசி வசதி&lt;br /&gt;&lt;br /&gt;. எய்ட்ஸ் இல்லாத நிலையை உருவாக்க கூடுதல் நிதி&lt;br /&gt;&lt;br /&gt;. போ#யாவை ஒழிக்க 1290 கோடி ஒதுக்கீடு&lt;br /&gt;&lt;br /&gt;. கல்வித்துறை ஒதுக்கீடு 34.2 சதவீதமாக உயர்வு&lt;br /&gt;&lt;br /&gt;. குடிநீர் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;. சுகாதாரத் துறைக்கு நிதி ஒதுக்கீடு உயர்வு&lt;br /&gt;&lt;br /&gt;. கடந்த மூன்று ஆண்டுகளில் 8.6 சதவீத வளர்ச்சி&lt;br /&gt;&lt;br /&gt;. 11வது ஐந்தாண்டு திட்டத்தில் விவசாயத்துக்கு முன்னுரிமை&lt;br /&gt;&lt;br /&gt;. விவசாயத்துக்கு புதிய நீர்ப்பாசணத் திட்டம்&lt;br /&gt;&lt;br /&gt;. பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர சிதம்பரம் உறுதி&lt;br /&gt;&lt;br /&gt;. 8% வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது&lt;br /&gt;&lt;br /&gt;. விவசாயத்துக்கு முக்கியத்துவம்&lt;br /&gt;&lt;br /&gt;. பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக பங்குச்சந்தை வீழ்ச்சி&lt;br /&gt;&lt;br /&gt;. வடகிழக்கு சாலை வசதிக்கும் 405 கோடி&lt;br /&gt;&lt;br /&gt;. பாதுகாப்பு துறைக்கு 96,000 கோடி ஒதுக்கீடு&lt;br /&gt;&lt;br /&gt;. மின் ஆளுமை திட்டத்துக்காக ரு.719 கோடி ஒதுக்கீடு&lt;br /&gt;&lt;br /&gt;. காமன்வெல்த் போட்டிகளுக்கு 150 கோடி நிதி&lt;br /&gt;&lt;br /&gt;. வாட் வருவாய் 24.3 சதமாக அதிகரிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;. வலுவான நிலையில் பொருளாதாரம்&lt;br /&gt;&lt;br /&gt;. டிசம்பருக்குள் 12198 கிலோமீட்டர் கிராமப்புற சாலைகள்&lt;br /&gt;&lt;br /&gt;. ஜவுளியை நவீனப்படுத்த 911 கோடி நிதி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1831468623100134403-3609564288265442306?l=newsintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://newsintamil.blogspot.com/feeds/3609564288265442306/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1831468623100134403&amp;postID=3609564288265442306&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/3609564288265442306'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/3609564288265442306'/><link rel='alternate' type='text/html' href='http://newsintamil.blogspot.com/2007/02/blog-post_28.html' title='பட்ஜெட்:  வருமானவரி உச்சவரம்பு உயர்வு'/><author><name>✪சிந்தாநதி</name><uri>http://www.blogger.com/profile/13997924857674287983</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://photos1.blogger.com/x/blogger2/3177/508851162256371/612/z/593711/gse_multipart50358.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1831468623100134403.post-1118008934498354319</id><published>2007-02-27T13:23:00.000Z</published><updated>2007-02-27T13:25:08.452Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாலைமலர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>பஞ்சாப், உத்தராஞ்சல் - தேர்தல் முடிவுகள்</title><content type='html'>&lt;strong&gt;பஞ்சாப் சட்டசபை தேர்தல் அகாலி தளம் ஆட்சியை பிடித்தது: &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;காங்கிரஸ் படுதோல்வி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சண்டிகர், பிப். 27-&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்தாண்டு பதவிக் காலம் முடிந்ததைத் தொடர்ந்து கடந்த 13-ந் தேதி பஞ்சாப் மாநிலத் தில் சட்டசபை தேர்தல் நடந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பஞ்சாபில் மொத்தம் 117 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தேர்தல் வன்முறை காரணமாக பியாஸ் தொகுதி தவிர மீதமுள்ள 116 தொகுதிகளுக்கும் ஓட்டுப் பதிவு நடத்தப்பட்டது. இந்த 116 தொகுதிகளில் 1043 பேர் போட்டியிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆளும் காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் போட்டி யிட்டது. அவர்களை எதிர்த்து பா.ஜ.க.-சிரோமணி அகாலிதளம் கூட்டணி களம் இறங்கியது. இதனால் ஆட்சியை கைப்பற்றப் போவது யார் என்பதில் கடும் போட்டி நிலவியது.&lt;br /&gt;&lt;br /&gt;116 தொகுதிகளிலும் மின்னணு எந்திரத்தில் ஓட்டுப்பதிவு நடந்தது. இன்று (செவ்வாய்) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. இந்த தேர்தலில் பா.ஜ.க.-அகாலி தளம் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்து கணிப்புகள் கூறியிருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;பஞ்சாப் தேர்தல் முடிவும் இன்று அதை உறுதி செய்தது. ஓட்டு எண்ணிக்கை தொடக்கம் முதலே பா.ஜ.க-அகாலி தளம் கூட்டணி பெரும்பா லான தொகுதிகளில் அதிக ஓட்டுக்கள் பெற்று முன்னணி யில் இருந்தது. காலை 9 மணிக்கெல்லாம் பஞ்சாபில் பா.ஜ.க.-அகாலிதளம் கூட் டணி ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மதியம் 1 மணி நிலவரப்படி 116 இடங்களில் அகாலி தளம் கூட்டணி 65 இடங்களிலும் காங்கிரஸ் 46 இடங்களிலும் வெற்றி பெறும் நிலையில் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;பஞ்சாபில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்துள்ளது. அங்குள்ள மூத்த தலைவர்கள் பலர் தோல்வியைத் தழுவி னார்கள். கடந்த தேர்தலில் காங்கிரஸ் 62 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்திருந் தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தடவை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பாதி பேர் வெற்றி வாய்ப்பை இழந்தனர். கடந்த தேர்தலில் 44 இடங் களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பா.ஜ.க.-அகாலி தளம் கூட்டணி இந்த தடவை அந்த இட எண்ணிக்கையை கணிசமாக அதிகரித்து ஆட்சியைப் பிடித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அகாலி தளம் மூத்த தலை வர் பிரகாஷ்சிங் பாதல் லம்பி தொகுதியில் எளிதாக வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் மகேஷ் இந்தர்சிங் பாதலை 6 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல்-மந்திரி அம்ரிந்தர்சிங் பாட்டியாலா தொகுதியில் வெற்றி பெற்றார். அவர் அகாலி தளம் வேட்பாளர் சுர்ஜித்சிங் சோகிலியை 32, 149 ஓட்டுக்கள் வித்தியாசத் தில் தோற்கடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;காங்கிரஸ் மந்திரிகளில் ஜகஜித்சிங், ஜக்மோகன்சிங், சர்தூல்சிங் கர்னாம்தாஸ் ஜோகர், ரமேஷ் சந்திரதோக்ரா, ராகேஷ் பாண்டே ஆகிய 6 பேர் தோல்வி அடைந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அகாலி தளம் மூத்த தலை வர்களில் சிரோமணி குருத் வாரா கமிட்டி தலைவர் பிபி ஜகிர்கவுர், குல்தீப் சிங் வகேலா ஆகியோர் தோல்வியைத் தழு வியவர்களில் முக்கியமான வர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பஞ்சாப் துணை முதல்- மந்திரி ரஜிந்தர் கவுர் (காங்) எலக்ரா தொகுதியில் அகாலி தளம் வேட்பாளர் பிரேம்சிங்கை 259 ஓட்டுக்களில் தோற்கடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அகாலி தளம் மீண்டும் வெற்றி பெற்றதன் மூலம் பஞ்சாப் முதல்-மந்திரியாக பிரகாஷ்சிங் பாதல் பதவி ஏற்பார். இதை பாதலின் மகன் சுக்பீர்சிங் இன்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் மேலும் கூறுகையில், "முதல்-மந்திரியாக இருந்த அம்ரிந்தர்சிங் ஒரு சர்வாதி காரி போல ஆட்சி நடத்தினார். சர்வாதிகாரி போல வாழ்ந்தார். சர்வாதிகாரி போல நடந்து கொண்டார். அவர் ஒரு போதும் மக்கள் உணர்வுகளை உணரவில்லை. மக்களின் அந்த உணர்வுதான் ஓட்டுக்களாக மாறி உள்ளது'' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;-oOo-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;உத்தகாண்டம் மாநிலத்தில் பா.ஜனதா அபார வெற்றி: &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கந்தூரி முதல்-மந்திரி ஆகிறார்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;டேராடூன், பிப். 27-&lt;br /&gt;&lt;br /&gt;உத்தரகாண்டம் மாநிலத்தில் என்.டி.திவாரி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. கடந்த 21-ந்தேதி அந்த மாநில சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 69 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி யது. பாரதீய ஜனதா கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் என்று கருத்து கணிப்புகள் கூறி இருந்தன. தேர்தல் முடிவும் அது போலவே இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;ஓட்டு எண்ணிக்கை தொடக் கத்தில் பா.ஜ.க., காங்கிரஸ் இரு கட்சிகளும் சம அளவில் முன்னணியில் இருந்தன. எனவே உத்தரகாண்டம் மாநி லத்தில் இழுபறி ஏற்படும் என்று எல்லாரும் முதலில் கருதினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;10 மணி அளவில் காங்கிரசை விட பா.ஜ.க. கூடுதல் இடங்க ளில் முன்னணி பெற தொடங்கியது. மதியம் 12 மணிக்கு 69 இடங்களில் 38 இடங்களில் பா.ஜ.கவும், 14 இடங்களில் காங்கிரசும் மற்ற கட்சியினர் சுயேச்சைகள் 14 இடங்களில் முன்னணியில் இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;உத்தரகாண்டம் மாநிலத்தில் ஆட்சி அமைக்க 36 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை.12.30 மணி அளவில் பாரதீய ஜனதா கட்சி 38 இடங்களில் வெற்றி பெறும் வகையில் இருந்தது. இதன் மூலம் உத்தரகாண்டத்தில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;உத்தரகாண்டம் மாநில பா.ஜனதா மூத்த தலைவர்கள் அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் அந்த மாநிலத்தில் பா.ஜ.க.வினர் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;உத்தரகாண்டம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. வயதான காரணத்தால் ஆளும் காங்கிரஸ் முதல்-மந்திரி என்.டி.திவாரி இந்த தடவை தேர்தலில் போட்டியிடவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவருக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் தகவல் தொடர்பு மந்திரி இந்திர ஹிரிதயேஸ். இவர் ஹல்டவாணி தொகுதியில் போட்டியிட்டு தோற்றுப்போனார். மூத்த தலைவர்கள் தோல்வி காரணமாக உத்தரகாண்ட மாநில காங்கிரசார் துவண்டு போய் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்திருந்த காங்கிரஸ் இந்த தடவை 16 இடங்களுடன் திருப்திப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியாவின் 27-வது மாநிலமாக 2000-ம் ஆண்டு உருவான உத்தரகாண்டம் மாநிலத்தில் முதலில் நித்தி யானந்த சுவாமி தலைமையில் 9.11.2000 முதல் 30.10.2001 வரை பா.ஜ.க. ஆட்சி நடந்தது. பிறகு 30.10.2001 முதல் 2.3.02 வரை பகத்சிங் கோஷியாரி முதல்-மந்திரியாக இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து நடந்த முதல் தேர்தலில் காங்கிரஸ் வென்று 2002-ல் என்.டி.திவாரி முதல்வராக இருந்தார். அவரிடம் இருந்த ஆட்சியை தற்போது பா.ஜ.க. மீண்டும் தட்டிப் பறித்து தன் வசமாக்கி உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;உத்தரகாண்டத்தில் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்ய பா.ஜ.க. பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று மாலை டெல்லியில் கூடுகிறது. கூட்டத்துக்கு பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங் தலைமை ஏற்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டத்தில் உத்தரகாண்டம் புதிய முதல்-மந்திரியாக புவன்சந்திர கந்தூரி தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது. இவர் கடந்த பா.ஜ.க. மத்திய மந்திரி சபையில் போக்குவரத்துத் துறை மந்திரியாக இருந்தவர். இவர் போட்டியின்றி முதல்வர் பதவிக்கு ஏகமனதாக தேர்வாகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல்-மந்திரி பதவி ஏற்க போகும் பி.சி.கந்தூரி இன்று மதியம் நிருபர்களிடம் கூறியதாவது:-&lt;br /&gt;&lt;br /&gt;மக்களுக்கு சேவை செய்ய எனக்கு கிடைத்த அதிர்ஷ்டகரமான வாய்ப்பாக இதை நான் கருதுகிறேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிëக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பா.ஜ.க.வின் பாரம்பரிய சேவையை அங்கீகரிக்கும் வகையில் மக்கள் மகத்தான ஆதரவு கொடுத்துள்ளனர். எனது தலைமையில் அமையும் அரசு நம்பகத் தன்மைக்கு முதலிடம் கொடுக்கும். ஊழலை ஒழிக்கவும், அரசு பணம் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் முன்னுரிமை கொடுக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு பி.சி.கந்தூரி கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;தோல்வி குறித்து உத்தரகாண்டம் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், "விலைவாசி உயர்வு எப்போதும் இருப்பதுதான். அதற்காக நாங்கள் தோல்வி அடையவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 5 ஆண்டுகளில் என்.டி.திவாரி அரசு மக்களுக்கு எவ்வளவோ நன்மைகளை செய்துள்ளது. அந்த சாதனைகளை நாங்கள் மக்களிடம் சரியாக எடுத்துச் சொல்ல தவறி விட்டோம். ஆனால் பா.ஜ.க.வினர் விலைவாசி உயர்வை பூதாகர மாக்கி வென்று விட்டனர் என்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1831468623100134403-1118008934498354319?l=newsintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://newsintamil.blogspot.com/feeds/1118008934498354319/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1831468623100134403&amp;postID=1118008934498354319&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/1118008934498354319'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/1118008934498354319'/><link rel='alternate' type='text/html' href='http://newsintamil.blogspot.com/2007/02/blog-post_27.html' title='பஞ்சாப், உத்தராஞ்சல் - தேர்தல் முடிவுகள்'/><author><name>✪சிந்தாநதி</name><uri>http://www.blogger.com/profile/13997924857674287983</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://photos1.blogger.com/x/blogger2/3177/508851162256371/612/z/593711/gse_multipart50358.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1831468623100134403.post-6430228467965441958</id><published>2007-02-26T13:11:00.000Z</published><updated>2007-02-26T13:15:15.051Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாலைமலர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இந்தியா'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='பட்ஜெட்'/><title type='text'>ரெயில்வே பட்ஜெட் - முழுவிவரம்</title><content type='html'>&lt;strong&gt;முதல் வகுப்பு-புறநகர், 2-வது வகுப்பு கட்டணம் குறைந்தது;&lt;br /&gt;மாணவர்கள்-பெண்களுக்கு சலுகை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புதுடெல்லி, பிப். 26-&lt;br /&gt;&lt;br /&gt;2007-08-ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்ஜெட்டை பாராளு மன்றத்தில் இன்று ரெயில்வே மந்திரி லல்லுபிரசாத் யாதவ் தாக்கல் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;பயணிகளை கவரும் வகையிலும், அவர்கள் பாது காப்பை கவனத்தில் கொண் டும் பட்ஜெட் தயாரிக்கப் பட்டுள்ளதாக லல்லுபிரசாத் கூறினார். பட்ஜெட் அறிவிப்புகள் அனைத்தும் இதை பிரதிபலிப்பதாக இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;ரெயில்வே பட்ஜெட் முக்கிய அம்சங்கள் வருமாறு:-&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய ரெயில்வேக்கு கடந்த ஆண்டு ரூ.20 ஆயிரம் கோடி லாபம் கிடைத்துள்ளது. ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் எண்ணிக்கை கடந்த ஏப்ரல்-டிசம்பர் இடையிலான காலக்கட்டத்தில் 14 சதவீதம் அதிகரித்துள்ளது. சரக்கு கட்டண வருமானம் இதே காலக்கட்டத்தில் 17 சதவீதம் உயர்ந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;குறிப்பாக சிமெண்ட்-சரக்கு போக்குவரத்து நாடெங்கும் 30 சதவீத அளவுக்கு அதிகரித் துள்ளது. தனியார் கண் டெய்னர்கள் 15 பேருக்கு அனு மதி வழங்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கூடுதலான பயணிகள் பயணம் செய்ய வசதியாக ஜெய்ப்பூர்-பிபவா இடையே இரட்டை அடுக்கு வசதி கொண்ட "டபுள் டெக்கர் ரெயில்'' விடப்படும். சரக்கு போக்குவரத்து மேம் படுத்தப்படும். 2008-ல் கூடுதலாக 6 கோடி டன் சரக்குகளை கையாளும் வகையில் ரெயில்வே துறை நவீனப்படுத்தப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;இது ஏழைகளுக்கு நன்மை பயக்கும் பட்ஜெட். ரெயில்வே துறை முழுமையாக சீரமைப்பு செய்யப்படும். பயணிகள் வசதிக்கு முன்னுரிமை வழங்கப்படும். சரக்குபெட்டி பயணிகள் பெட்டிகள் உற்பத்தி 10 சதவீதம் அதிகரிக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;முக்கிய எக்ஸ்பிரஸ் ரெயில்களில் கூடுதலாக 800 பயணிகள் பெட்டிகள் சேர்க்கப்படும். தற்போது முன்பதிவு செய்யப்படாத ரெயில்களில் சாதாரண வகுப்புகளில் பயணம் செய் பவர்களுக்கு கட்டை சீட்களே உள்ளன. அடுத்த நிதி ஆண்டு இந்த மரக்கட்டை இருக்கைகள் மாற்றப்பட்டு சொகுசாக பயணம் செய்வதற்காக மெத்தை இருக்கைகள் (குசன்சீட்) பொருத்தப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது எக்ஸ்பிரஸ் ரெயில்களில் 4 முன்பதிவு செய்யாத பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இனிவிடப்படும் புதிய ரெயில் களில் முன்பதிவு செய்யாத 6 பெட்டிகள் இணைக்கப்படும்.ஊனமுற்றோருக்கு எளி தில் உதவும் வகையில் இனி ரெயில் பெட்டி வடிவமைப்பு களில் மாற்றம் கொண்டு வரப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;தற்போது ரெயில் பெட்டி களில் தூங்கும் வசதி கொண்ட படுக்கை சீட்டுகள் 72 உள்ளன. இனி இது 84 ஆக உயர்த்தப்படும். அடுத்த 2 ஆண்டுகளில் 6 ஆயிரம் தானியங்கி டிக்கெட் கொடுக்கும் எந்திரங்கள் நிறுவப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;டிக்கெட்டுக்களை முன் பதிவு செய்ய ரெயில்வே கால் சென்டர்கள் உருவாக்கப்படும். மத்திய அரசு தேர்வு மற்றும் ரெயில்வே அலுவலக தேர்வு எழுத செல்பவர்களுக்கு ரெயில் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்கப் படும்.&lt;br /&gt;&lt;br /&gt;ரெயில் நிலையங்களில் டிக்கெட் எடுக்க சேரும் கூட்டத்தை தவிர்க்கவும், பயணிகள் வசதிக்காகவும் இனி பெட்ரோல் பங்குகளிலும் பணம் எடுக்கும் ஏடிஎம் மையங்களிலும், தபால் நிலையங்களிலும், ரெயில் டிக்கெட்டுக்கள் விற்பனை செய்யப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;பயணிகள் ரெயிலில் இனி காய்கறி வியாபாரிகளுக்கும், பால்காரர்களுக்கும் தனி பெட்டி இணைக்கப்படும். நாடெங்கும் விரைவில் 200 நவீன மாதிரி ரெயில் நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;படுக்கை வசதியில் கீழ் இருக்கையை வழங்க பெண்களுக்கும், முதியோர்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்படும். மும்பை புறநகர் ரெயில் பயணிகள் மேம்பாட்டுத்திட்டத்துக்கு அடுத்த 5 ஆண்டு திட்டத்தில் ரூ. 5000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும். சரக்கு போக்கு வரத்துக்கான விசேஷ இருப்புபாதைகள் கட்டும்பணி 2007-08-ல் தொடங்கும். அதற்கு ரூ.30 ஆயிரம் கோடி நிதிஒதுக்கீடு செய்யப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;வரும் மார்ச் மாதத்துக்குள் நாடெங்கும் புதிதாக 225 ரெயில் நிலையங்கள் கட்டப் படும்.&lt;br /&gt;&lt;br /&gt;ரெயில் போக்குவரத்து மற்றும் டிக்கெட் போன்ற விசாரணைகளுக்கு நாடு முழுவதும் 139 என்ற ஒரே மாதிரியான டெலிபோன் நம்பர் அறிமுகம் செய்யப்படும். ரெயில்வேத்துறை எக் காரணம் கொண்டு தனியார் மயமாகாது.&lt;br /&gt;&lt;br /&gt;குறைந்த தூரங்களுக்கு இடையே அதிவேக ரெயில்கள் இயக்கப்படும். இருப்புப் பாதைகளை மின் மயமாக்குவது அதிகரிக்கப் படும். நாடெங்கும் முக்கிய நகரங்களின் புறநகர் ரெயில் திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். மாணவர்களுக்கு 2-ம் வகுப்பு பயணத்துக்கு மட்டுமே சலுகை வழங்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;ரெயில் கட்டணம் உயர்த்தப்படமாட்டாது. சரக்கு கட்டணத்தில் மாற்றம் இல்லை. பயணிகள் நலனுக்காக 32 புதிய ரெயில்கள் விடப்படும். ஏழைகள் பயன்பெறுவதற்காக 8 ஏழைகள் ரதம் புதிதாக அறிமுகம் செய்யப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்து உயர் வகுப்பு கட்டணங்களும், ஏ.சி. வகுப்பு கட்டணங்களும் குறைக்கப்படும். எல்லா புறநகர் ரெயில்களின் கட்டணத்தில் ரூ.1 குறைக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைத்து ரெயில்களிலும் 2-ம் வகுப்பு கட்டணத்துக்கான கூடுதல் வரிவிதிப்பில் 20 சதவீதம் குறைக்கப்படும். இதனால் 2-ம் வகுப்பு கட்டணம் குறைகிறது. 23 ரெயில்களின் தூரம் நீட்டிக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;உயர் வகுப்பு கட்டண குறைப்பு விவரம் வருமாறு:-&lt;br /&gt;&lt;br /&gt;நெருக்கடி இல்லாத சாதாரண நாட்களில் ஏ.சி. முதல் வகுப்பு கட்டணத்தில் 6 சதவீதம் குறைக்கப்படும். ஆனால் பிசியான சீசனில் ஏ.சி. முதல் வகுப்பு கட்டணத்தில் 3 சதவீதம் குறைக்கப்படும். இது போல ஏ.சி. இரண்டடுக்கு படுக்கை வசதி கொண்ட பெட்டிகளுக்கான கட்டணம் பிசியான சீசனில் 2 சதவீதம் குறைக்கப்படும். சாதாரண நாட்களில் இந்த வகுப்புக்கான கட்டண குறைப்பு 4 சதவீதமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏ.சி. சேர் கார் கட்டணம் பிசியான சீசனில் 4 சதவீதமும், சாதாரண நாட்களில் 8 சதவீதமும் குறைக்கப்படும். தூங்கும் வசதி கொண்ட வகுப்புகளில் கட்டண குறைப்பு அனைத்து சீசன்களிலும் 4 சதவீதமாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;குண்டு வெடிப்பை தடுக்க ரெயில்களில் கேமரா- மெட்டல் டிடெக்டர்&lt;br /&gt;&lt;br /&gt;ரெயில்களில் குண்டு வெடிப்பு, நாசவேலைகளை தடுக்க ரெயில் கதவுகளில் மெட்டல் டிடெக்டர் கருவி பொருத்தப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;கண்காணிப்பு கேமரா, டெலிவிஷன் ஆகியவையும் ரெயில் பெட்டிகளில் அமைக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;ரெயில்வே பாதுகாப்பு படையில் காலியாக உள்ள 8 ஆயிரம் பணியிடம் நிரப்பப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏழை மக்களும் ஏ.சி. ரெயிலில் பயணம் செய்யும் வகையில் மேலும் 8 ஏழைகள் ரதம் ரெயிலை லல்லுபிரசாத் யாதவ் ரெயில்வே பட்ஜெட்டில் அறிவித்தார். அதன் விவரம்:-&lt;br /&gt;&lt;br /&gt;1.செகந்திராபாத்- யெஷ்வந்த்பூர் (வாரம் 3 முறை)&lt;br /&gt;&lt;br /&gt;2. ஜெய்ப்பூர்-பந்த்ராஅகமதாபாத் வழியாக(வாரம் 3 முறை)&lt;br /&gt;&lt;br /&gt;3. கொல்கத்தா- பாட்னா (வாரம் 3 முறை)&lt;br /&gt;&lt;br /&gt;4. புவனேஸ்வர்-ராஞ்சி (வாரம் 3 முறை)&lt;br /&gt;&lt;br /&gt;5. திருவனந்தபுரம்- லோக்மான்யா திலக் (வாரம் 2 முறை)&lt;br /&gt;&lt;br /&gt;6. கொல்கத்தா- கவுகாத்தி (வாரம் 2 முறை)&lt;br /&gt;&lt;br /&gt;7. புதுடெல்லி- டேராடூன் (வாரம் 3 முறை)&lt;br /&gt;&lt;br /&gt;8. ராய்பூர்- லக்னோ (வாரம் 2 முறை)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ரெயில்வே பட்ஜெட் முக்கிய அம்சங்கள் தொகுப்பு&lt;/strong&gt;:&lt;br /&gt;&lt;br /&gt;*முதல்வகுப்பு ஏ.சி. பெட்டிகளுக்கு கட்டணம் குறைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;* புறநகர் ரெயில்களுக்கு பயணிகள் கட்டணம் ரூ.1 குறைக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;*சூப்பர் பாஸ்ட் ரெயில் களில் 2-வதுவகுப்புகளில் கூடுதல் கட்டணம் (சர் சார்ஜ்) 20 சதவீதம் குறைக் கப்படுகிறது. இதனால் கட்டணம் குறைகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;* பயணிகள் பெயர்களுக்கு பயணஅட்டை முறை அமு லுக்கு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;*23ரெயில் பாதைகள் நீட்டிக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;* 800 புதிய வேகன் கள் (பெட்டிகள்) சேர்க்கப் படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;* ரெயில்வே துறையில் தனியார் மயமாக்கல் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;* முக்கிய ரெயில் நிலையங் களில் பாதுகாப்பு கருதி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;*காஷ்மீர் முதல் கன் னியாகுமரி வரை மின் மயமாக்க முயற்சிகள் மேற் கொள்ளப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;*கூடுதல் ரெயில் என் ஜின்கள் பெட்டிகள் உற்பத்தி செய்யப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;* 32 புதிய ரெயில்கள், 8 ஏழைகள் ரதம் இந்த ஆண் டில் விடப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;* மும்பையில் புறநகர் ரெயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;*பாசஞ்சர் ரெயில்களில் வியாபாரிகள், பால் ஆகியவற்றை கொண்டு செல்ல தனி பெட்டிகள் விடப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;*மத்திய தேர்வாணை குழு தேர்வு(யு.பி.எஸ்.சி.) எழுத செல்பவர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை.&lt;br /&gt;&lt;br /&gt;*பெட்ரோல் நிலையங்கள், மற்றும் ஏடிஎம் மையங்களில் ரெயில் டிக்கெட் விற் பனை.&lt;br /&gt;&lt;br /&gt;* படுக்கை வசதி கொண்ட பெட்டிகளில் படுக்கை வசதி எண்ணிக்கை 72ல் இருந்து 84 ஆக உயருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;*2007-2008ம் ஆண்டை ரெயில்வே சுத்தமான ஆண்டாக கடைபிடிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;*300 ரெயில் நிலையங்கள் மாதிரி ரெயில் நிலையமாக உயர்த்தப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;* முக்கிய நகரங்களில் 6000 தானியங்கி டிக்கெட் இயந்திரம் வைக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;* ரெயில் பயணிகள் 139 என்ற எண்ணை டயல் செய்து உள்ளூர் கட்ட ணத்தில் தொலை பேசியில் பேசலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;*உடல் ஊனமுற்றோ ருக்காக 1250 சிறப்பு பெட் டிகள் உருவாக்கப்பட்டு வரு கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;*முதியோர் மற்றும் 45 வயதுக்கு மேற்பட்ட பெண் களுக்கு ஏ.சி. மற்றும் 2வது வகுப்பு படுக்கை வசதியில் முன்னுரிமை வழங்கப்படு கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;*ஒவ்வொரு ரெயிலிலும் முன்பதிவு இல்லாத பொது பெட்டிகளின் எண் ணிக்கை 4ல் இருந்து 6ஆக உயர்த்தப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;*பயணிகளுக்கு இருக் கைகள் மெத்தை வசதி செய் யப்படும் மரஇருக்கைகள் இனி கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;*கண்டெய்னர் போக்கு வரத்து 5 மடங்காக அதிக ரிக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;* 3 அடுக்கு கண்டெய்னர் ரெயில்கள் விடப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;* சிமெண்ட், ஸ்டீல் சரக்கு போக்குவரத்து 30 சதவிதம் அதிகரிக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;* பயணிகளின் அனைத்து புகார்களும் 3 மாதத்தில் கவ னிக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;# 2006-2007ல் ரெயில்வே துறைக்கு 20 ஆயிரம் கோடி லாபம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1831468623100134403-6430228467965441958?l=newsintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://newsintamil.blogspot.com/feeds/6430228467965441958/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1831468623100134403&amp;postID=6430228467965441958&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/6430228467965441958'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/6430228467965441958'/><link rel='alternate' type='text/html' href='http://newsintamil.blogspot.com/2007/02/blog-post_26.html' title='ரெயில்வே பட்ஜெட் - முழுவிவரம்'/><author><name>✪சிந்தாநதி</name><uri>http://www.blogger.com/profile/13997924857674287983</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://photos1.blogger.com/x/blogger2/3177/508851162256371/612/z/593711/gse_multipart50358.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1831468623100134403.post-6071837566353416879</id><published>2007-02-24T06:05:00.000Z</published><updated>2007-02-24T06:07:16.404Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தினமலர்'/><title type='text'>பாகிஸ்தான் ஏவுகணை சோதனை</title><content type='html'>&lt;strong&gt;இந்தியாவின் முக்கிய நகரங்களை தாக்கக் கூடிய ஏவுகணை சோதனையை நடத்தியது பாகிஸ்தான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;இஸ்லாமாபாத்: அணுஆயுதங்களை தாங்கிச் சென்று இரண்டாயிரம் கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் திறன் கொண்ட "ஷாகீன்' ஏவுகணை சோதனையை பாகிஸ்தான் வெற்றிகரமாக நடத்தியது. இந்த ஏவுகணை மூலமாக இந்தியாவின் முக்கிய நகரங்களை தாக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தான் தரைப் பகுதியிலிருந்து தரையில் உள்ள மற்றொரு இலக்கை தாக்கி அழிக்கும் ஹட்ப் 6 (ஷாகீன் 2) ரக ஏவுகணைகளை உருவாக்கி வருகிறது. இந்த ஏவுகணை அணுஆயுதங்களை தாங்கிச் செல்லும் திறன் கொண்டது. மேலும் இரண்டாயிரம் கி.மீ., தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக சென்று தாக்கி அழிக்கும் திறன் கொண்டது. அந்நாட்டு ராணுவம் நேற்று ரகசிய இடத்திலிருந்து "ஷாகீன்2' ஏவுகணையை விண்ணில் ஏவி வெற்றிகரமாக சோதித்தது. இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ""பாகிஸ்தான் ஏவுகணை திட்டத்தை தொழில்நுட்ப ரீதியாக மேம்படுத்தும் தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியே இந்த ஏவுகணை சோதனை,'' என்று தெரிவித்துள்ளது. ஏவுகணை வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதை தொடர்ந்து இந்தியாவின் முக்கிய நகரங்களை தாக்கும் திறனை பாகிஸ்தான் பெற்றுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் மற்றும் பிரதமர் சவுகத் அஜீஸ் ஏவுகணை சோதனையை மேற்கொண்ட தொழில்நுட்ப அணியினருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர். பாகிஸ்தான் ராணுவ கூடுதல் தளபதிகளின் தலைவர் இசான் உல் ஹக் ஏவுகணை சோதனையை நேரில் பார்வையிட்டு சோதனையில் ஈடுபட்ட விஞ்ஞானிகள், பொறியாளர்கள், மற்றும் தொழில்நுட்ப ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவித்தார். அவர் கூறுகையில், ""நாட்டின் பாதுகாப்பு தேவைகளுக்கு அரசு எப்போதும் முக்கியத்துவம் வழங்கும். நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் ஒட்டுமொத்த மக்களின் வரவேற்பையும் பெற்றுள்ள இந்த ஏவுகணை திட்டம் மேலும் மேம்படுத்தப்படும்,'' என்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1831468623100134403-6071837566353416879?l=newsintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://newsintamil.blogspot.com/feeds/6071837566353416879/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1831468623100134403&amp;postID=6071837566353416879&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/6071837566353416879'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/6071837566353416879'/><link rel='alternate' type='text/html' href='http://newsintamil.blogspot.com/2007/02/blog-post_24.html' title='பாகிஸ்தான் ஏவுகணை சோதனை'/><author><name>✪சிந்தாநதி</name><uri>http://www.blogger.com/profile/13997924857674287983</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://photos1.blogger.com/x/blogger2/3177/508851162256371/612/z/593711/gse_multipart50358.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1831468623100134403.post-6005782439280009651</id><published>2007-02-23T09:05:00.000Z</published><updated>2007-02-23T09:08:28.455Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாலைமலர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சட்டம்'/><title type='text'>கடமை தவறும் பிள்ளைகளுக்கு ஜெயில்</title><content type='html'>&lt;strong&gt;மத்திய மந்திரி சபை கூட்டத்தில் அதிரடி முடிவு:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;வயதான பெற்றோரை பாதுகாக்க தவறும் பிள்ளைகளுக்கு 3 மாதம் ஜெயில் தண்டனை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புதுடெல்லி, பிப்.23-&lt;br /&gt;&lt;br /&gt;வயதான பெற்றோரை அவர்களின் பிள்ளைகள் பராமரிப்பதை கட்டாயம் ஆக்கும் வகையிலான மசோதா ஒன்றை பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மந்திரிசபை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, வயதான பெற்றோரின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்வகையில் அனைத்து மாநில அரசுகளும் தாலுகா அளவில் முதியோர் குறைதீர்ப்பு ஆணையம் அமைக்கவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;வயதான பெற்றோர் தங்களது பிரச்சினைகளை இந்த ஆணையத்தில் தாங்களே நேரிடையாக ஆஜராகி தங்களது குறைகள் குறித்து ஆணையத்தின் முன்பு விவாதிக்கலாம். மேலும் வழக்கறிஞர்களின் உதவியுடன்தான் வாதாட முடியும் என்ற நிலை தவிர்க்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இச்சட்டத்தின்கீழ், வயதான பெற்றோரை பராமரிக்காத வாரிசுகளுக்கு 3 மாத சிறைத்தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படும். வயதான பெற்றோரின் சுகாதாரம் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் ஆஸ்பத்திரிகளில் சிறப்பு உரிமை வழங்கப்பட்டுள்ளது. வயதான பெற்றோரின் சொத்துக்களை அந்தந்த மாநில அரசின் காவல்துறை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அவர்களால் எழுதப்பட்ட உயிலை மாற்றி அமைக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களது தேவைகளுக்கு ஏற்ப வாரிசுகள் அனைத்து வசதிகளையும் செய்து தரவேண்டும் என இந்த புதிய மசோதா மூலம் வலியுறுத்தப்பட உள்ளது. மேலும் இவர்களுக்கு கிடைத்துள்ள பரிசு பொருட்களையும் தங்கள் விருப்பப்படி யாருக்கு வேண்டுமானாலும் அளிக்கலாம் என்றும் அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய விற்பனை வரியை ஒரு சதவீதம் குறைப்பது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன்படி, மத்திய விற்பனை வரி 4 சதவீதத்தில் இருந்து 3 சதவீதமாக குறைகிறது. ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து இந்த வரிகுறைப்பு அமலுக்கு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்காக, வரும் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் வரிவிதிப்பு சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும். மத்திய விற்பனை வரி சட்டத்திலும், கூடுதல் உற்பத்தி வரி சட்டத்திலும் தேவையான திருத்தங்கள் செய்யப்படும். நாடு முழுவதும் மதிப்பு கூட்டு வரி (வாட்) அமல்படுத்தப்பட்டு இருப்பதால், மத்திய விற்பனை வரியை படிப்படியாக ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாகவே, வரிகுறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய மந்திரிசபை கூட்டத்தில் விலைவாசி உயர்வு, பணவீக்க அதிகரிப்பு ஆகியவை பற்றியும் விவாதிக்கப்பட்டது. பின்னர் மத்திய நிதிமந்திரி ப.சிதம்பரம் நிருபர்களிடம் கூறியதாவது:-&lt;br /&gt;&lt;br /&gt;அத்தியாவசிய பொருட்களின் சப்ளையில் ஏற்பட்ட முட்டுக்கட்டையாலும், சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை உயர்வாலும்தான் பணவீக்கம் அதிகரித்தது. பொருட்களின் சப்ளையில் ஏற்பட்ட முட்டுக்கட்டைகளை அகற்றுவதன்மூலம் பணவீக்கத்தை கட்டுப்படுத்துவோம். தற்போது சர்க்கரை, உருளைக்கிழங்கு ஆகியவற்றின் சப்ளை அதிகரித்துள்ளது. ஆனால் மற்ற பொருட்களின் சப்ளை இன்னும் அதிகரிக்கவில்லை. விலைவாசியை குறைக்க மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க மத்திய அரசு தயங்காது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்வது பற்றி பாராளுமன்ற நிலைக்குழு தாக்கல் செய்த அறிக்கையை மத்திய வேளாண்மை அமைச்சகம் ஆய்வு செய்து வருகிறது. அதன்பிறகு இதுகுறித்து அந்த அமைச்சகம் இறுதி முடிவு எடுக்கும். பின்னர் மந்திரிசபை தனது நிலையை அறிவிக்கும். தேவை அதிகரித்ததால்தான் சிமெண்ட் விலை உயர்ந்துள்ளது. அதை கட்டுப்படுத்த மத்திய அரசு தலையிட முடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு ப.சிதம்பரம் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;சுங்கத்துறைக்காக ரூ.358 கோடியே 19 லட்சம் செலவில் 109 கப்பல்கள் வாங்குவதற்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. 5 ஆண்டுகளுக்கு உதிரி பாகங்கள் வாங்குவதற்கும், வருடாந்திர பராமரிப்பு ஒப்பந்தம் செய்து கொள்வதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஆயுதங்கள், வெடிபொருட்கள், போதை மருந்து பொருட்கள் ஆகியவற்றை நமது நாட்டிலிருந்து கடல் வழியாக கடத்துவதை தடுப்பதற்கு, சுங்கத்துறைக்கு இக்கப்பல்கள் உதவும். வரும் 2009-ம் ஆண்டுக்குள் 109 கப்பல்களை வாங்கும் பணி முடிந்து விடும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய ரெயில்வே அமைக்க திட்டமிட்டுள்ள கிழக்கு சரக்கு ரெயில்பாதை, மேற்கு சரக்கு ரெயில்பாதை ஆகியவற்றுக்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. கிழக்கு சரக்கு ரெயில்பாதை ரூ.11,589 கோடி செலவிலும், மேற்கு சரக்கு ரெயில்பாதை ரூ.16,592 கோடி செலவிலும் அமைக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;செமி கண்டக்டர்கள், எல்.சி.டி., சோலார் செல்கள், மற்றும் நவீன மைக்ரோ தொழில்நுட்ப, நானோ தொழில்நுட்ப கருவிகளை உருவாக்குவதற்கான தொழிற்சாலைகள் அமைக்கப்படுவதை ஊக்குவிப்பதற்காக, அவற்றுக்கு சிறப்பு சலுகை வழங்கும் திட்டத்துக்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நிர்வாக செலவாக தற்போது 2 சதவீதம் அளிக்கப்படுகிறது. இந்த நிர்வாக செலவை 4 சதவீதமாக உயர்த்த மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. கூடுதல் ஆள் நியமனம் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2001-2002-ம் ஆண்டுக்கான தேசிய சிறுபான்மையினர் கமிஷனின் 9-வது ஆண்டறிக்கையையும், அதன் நடவடிக்கை அறிக்கையையும் வரும் பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மேகாலயா மாநில தலைநகர் ஷில்லாங்கில் ரூ.165 கோடி செலவில் இந்தியன் இன்ஸ்டிடிïட் ஆப் மேனேஜ்மெண்ட் (ஐ.ஐ.எம்.) அமைக்க மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதற்கு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி பெயர் சூட்டப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;தூதரக பாஸ்போர்ட் வைத்திருக்கும் இந்தியர்கள், விசா இல்லாமலேயே துருக்கி நாட்டுக்குள் நுழைவதற்கான ஒப்பந்தத்தை துருக்கி நாட்டுடன் செய்து கொள்வதற்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. இதன்படி, தூதரக பாஸ்போர்ட் வைத்திருக்கும் துருக்கி மக்கள், இந்தியாவுக்கு விசா இல்லாமலேயே வரலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அன்னிய நேரடி முதலீடு&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;மேற்கு வங்காளத்தில் சிறப்பு பொருளாதார மண்டலங்கள், துணை நகரங்கள், வீடுகள் ஆகியவை அமைப்பதற்கு இந்தோனேஷியா நாட்டை சேர்ந்த சலீம் குரூப் ரூ.2,250 கோடி அன்னிய நேரடி முதலீடு செய்வதற்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்தது. பாராளுமன்றத்தில் மைக்ரோ பைனான்ஸ் மசோதா தாக்கல் செய்வதற்கு மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கொல்கத்தாவில் உள்ள தேசிய இன்ஸ்ட்ருமெண்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தை மூடுவது என்றும், அதில் பணியாற்றும் ஊழியர்களை ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்துக்கு பணிமாற்றம் செய்வது என்றும் மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1831468623100134403-6005782439280009651?l=newsintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://newsintamil.blogspot.com/feeds/6005782439280009651/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1831468623100134403&amp;postID=6005782439280009651&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/6005782439280009651'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/6005782439280009651'/><link rel='alternate' type='text/html' href='http://newsintamil.blogspot.com/2007/02/blog-post_23.html' title='கடமை தவறும் பிள்ளைகளுக்கு ஜெயில்'/><author><name>✪சிந்தாநதி</name><uri>http://www.blogger.com/profile/13997924857674287983</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://photos1.blogger.com/x/blogger2/3177/508851162256371/612/z/593711/gse_multipart50358.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1831468623100134403.post-8600011780188164958</id><published>2007-02-22T17:02:00.000Z</published><updated>2007-02-22T17:06:05.495Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தட்ஸ்தமிழ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடைகிறது</title><content type='html'>&lt;span style="font-size:130%;"&gt;&lt;strong&gt;இலங்கை போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் முடிகிறது!!:&lt;br /&gt;அச்சத்தில் தமிழர்கள்!!!&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;பிப்ரவரி 22, 2007&lt;br /&gt;&lt;br /&gt;ராமேஸ்வரம்: விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் மீனவர்கள் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லாமல் உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நார்வே தூதுக் குழுவின் முயற்சியால், இலங்கை அரசுக்கும்,விடுதலைப் புலிகளுக்கும் இடையே கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஆரம்பம் முதலே இரு தரப்பும் போர் நிறுத்தத்தை முறையாக கடைப்பிடிக்கவில்லை. இரு தரப்பும் போர் நிறுத்தத்தை மீறி விட்டதாக மாறி மாறி புகார் கூறி வந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;இந் நிலையில் போர் நிறுத்த ஒப்பந்தம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. இதனால் இலங்கையில் பெரிய அளவில் போர் மூளக் கூடிய அபாயம் அதிகரித்துள்ளது. இதை உறுதிப்படுத்துவது போல இலங்கை கடலோரப் பகுதிகளில் கடல் படையின் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கடல்படை ரோந்துக் கப்பல்களும் அதிக அளவில் கண்காணிப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு வரும் அகதிகள் எண்ணிக்கை சுத்தமாக நின்றுள்ளது. தமிழகத்திற்கு வரத் திட்டமிட்டுள்ள தமிழர்கள் காட்டுப் பகுதியில் தங்கியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் நிலவும் இந்தப் பீதி தமிழகத்தையும் விட்டு வைக்கவில்லை. ராமேஸ்வரம் மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் செல்ல அச்சப்பட்டு மீன் பிடிக்கச் செல்லாமல் உள்ளனர். மீன் பிடிக்கச் சென்றால் இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்பதால், இந்திய கடற்படை தங்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை பதட்டத்தை மனதில் கொண்டு தமிழக கடலோர மாவட்டங்களில் குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் கடலோரக் காவல் படையின் கட்டுப்பாட்டில் கொணட் வரப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கொழும்பு துறைமுகத்தைத் தகர்க்க புலிகள் திட்டம்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே கொழும்பு துறைமுகத்தைத் தாக்கி தகர்க்க தமிழக கடலோரப் பகுதிகளில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட 15 தற்கொலைப் படை படகுகளை விடுதலைப் புலிகள் ஆயத்த நிலையில் வைத்திருப்பதாக இந்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே விடுதலைப்புலிகளின் கடல் புலி பிரிவுக்குச் சொந்தமான படகை, பயங்கர ஆயுதங்களுடன் இந்திய கடலோர காவல் படை பிடித்தது. அதில் இருந்த 2 விடுதலைப் புலிகள் உள்பட 5 பேரை கடலோரக் காவல் படை பிடித்து தமிழக கியூ பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இநத சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக கடலோரப் பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்பபடுத்தப்பட்டது. இந்த நிலையில்,தமிழக கடலோரப் பகுதிகளில் கடல்புலிகள் பிரிவுக்குச் சொந்தமான 15 வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட தற்கொலைப் படை தாக்குதல் படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப் படகுகளைக் கொண்டு கொழும்பு துறைமுகத்தைத் தாக்கித் தகர்க்க விடுதலைப்புலிகள் திட்டமிட்டுள்ளதாகவும் உளவுத்துறை தெரிவித்துள்ளது. இந்திய, இலங்கை எல்லையில் இந்தப் படகுகள் நிறுத்தப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சில ஆண்டுகளுக்கு முன்பு கொழும்பு காட்டு நாயகே சர்வதேச விமான நிலையத்தில் புகுந்த விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படை, விமானங்களை குறி வைத்துத் தாக்கியது. அதே போல தற்போது கொழும்பு துறைமுகத்தில் மிகப்பெரிய தாக்குதல்களை நடத்த கடல் புலிகள் திட்டமிட்டுள்ளதாக உளவுத்துறை கூறியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;தாக்குதல் நடத்த, 15 தற்கொலை படகுகளும் புலிகள் அமைப்பின் தலைமையின் உத்தரவுக்காக காத்திருப்பதாக கூறப்படுகிறது. எந்த இடத்தை தாக்க வேண்டும் என்று சாடிலைட் போன் மூலம் வரும் உத்தரவுக்காக இவர்கள் காத்துள்ளனர். சிக்னல் கிடைத்தவுடன் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அதேசமயம், நமது இலக்கு கொழும்பு துறைமுகம்தான், தமிழர்கள் மீதோ. இந்திய நிலைகள் மீதோ எந்த தாக்குதலும் நடத்த க்கூடாது என்று கடல் புலிகளுக்கு, புலிகள் தலைமையகம் கண்டிப்பாக தெரிவித்துள்ளது. இதன் காரணமாகத்தான் கடந்த வாரம் கோடியக்கரை அருகே இந்தியக் கடலோரக் காவல் படையினர், புலிகளின் படகை மடக்கிய போது விடுதலைப்புலிகள் எந்த எதிர்ப்பும் காட்டாமல் சரண் அடைந்துவிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தாக்குதல் தொடர்பான தகவல் வெளியானதைத் தொடர்நது, தமிழக கடலோரப் பகுதிகளில் முழு அளவில் உஷார் நிலையில் இருக்குமாறு உளவுத்துறை மத்திய, மாநில அரசுகளை எச்சரித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆயுதக் கடத்தல்: மேலும் 6 பேர் கைது:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே, மதுரையிலிருந்து ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்குக் வெடிபொருட்கள், அலுமினியக் குண்டுகளை கடத்தியது தொடர்பாக மேலும் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;மதுரையிலிருந்து ராமேஸ்வரம் வழியாக இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 2 டன் அலுமினிய குண்டுகள், வெடிபொருட்கள் ஆகியவற்றை போலீசார் நேற்றுமுன்தினம் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக செல்வராஜ், குணசேகர பாண்டியன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களிடம் விசாரணை நடத்தியதில் அலுமினிய தகடுகள், பவுடர்கள் போன்றவற்றை வாங்கி கொடுப்பதில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகளத்தூர் அருகே உள்ள பொந்தம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த முரளி, பூமி, கண்ணன், பெரியசாமி, கர்ணன், முருகநாதன் ஆகிய 6 பேரை இன்று போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் கியூ பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களுக்கு விடுதலைப்புலிகளுடன் நேரிடையாக தொடர்பு இருக்கிறதா? அல்லது ஏஜெண்டுகள் மூலமாக வெடிபொருட்களை அனுப்புகிறார்களா? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;புலிகளை விசாரிக்க விரும்பும் இலங்கை கடற்படை:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே, ஆயுதக் கடத்தல் தொடர்பாக இந்திய கடலோரக் காவல் படையால் கைது செய்யப்பட்டுள்ள 3 விடுதலைப் புலிகளை தாங்களும் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என இலங்கை கடற்படை இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுதொடர்பாக இலங்கை கடற்படை அதிகாரி ஒருவர் கூறுகையில், பாதுகாப்பு அமைச்சகம் மூலமாக விடுதலைப் புலிகளிடம் நடைபெறும் விசாரணையில் கடற்படையையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று இந்தியத் தூதரகத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். இந்திய அதிகாரிகளிடமிருந்து நல்ல பதிலை எதிர்பார்த்துக் கொண்டுள்ளோம் என்றார் அவர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கிளிநொச்சி பள்ளி மீது குண்டு வீச்சு:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தநிலையில், வன்னி பகுதியில் இலங்கை விமானப்படையின் கேபிர் ரக விவீமானங்கள் விடிய விடிய குண்டு வீசித் தாக்கியதில், பல தமிழர் வீடுகள் தரைமட்டமாயின.&lt;br /&gt;&lt;br /&gt;கிளிநொச்சி அருகே பள்ளிக்கூடம் மீது குண்டு வீசியதில், அங்கிருந்த மாணவர்கள் தப்பி ஓடினர். மருத்துவமனை மற்றும் சந்தை மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1831468623100134403-8600011780188164958?l=newsintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://newsintamil.blogspot.com/feeds/8600011780188164958/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1831468623100134403&amp;postID=8600011780188164958&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/8600011780188164958'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/8600011780188164958'/><link rel='alternate' type='text/html' href='http://newsintamil.blogspot.com/2007/02/blog-post_22.html' title='போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவடைகிறது'/><author><name>✪சிந்தாநதி</name><uri>http://www.blogger.com/profile/13997924857674287983</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://photos1.blogger.com/x/blogger2/3177/508851162256371/612/z/593711/gse_multipart50358.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1831468623100134403.post-1843785293711049065</id><published>2007-02-21T03:08:00.000Z</published><updated>2007-02-21T03:14:50.993Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தினமலர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='ஈழம்'/><title type='text'>வெடிகுண்டுகளுடன் பிடிபட்ட படகு தகர்க்கப்பட்டது</title><content type='html'>&lt;strong&gt;பிடிபட்ட புலிகள் படகு நடுக்கடலில்...தூள்!:&lt;br /&gt;8 நாள் புதிருக்கு விடையாக அழிப்பு&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;சென்னை:எட்டு நாட்களுக்கு முன் பாக் ஜலசந்தி அருகே பிடிபட்ட விடுதலைப் புலிகளின் படகு நடுக்கடலுக்கு எடுத்துச் செல்லப்பட்டு தூள் தூளாக தகர்க்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்படகின் பக்கவாட்டுச் சுவர்களில், வெளியில் தெரியாத வகையில் 500 கிலோ அதிபயங்கர வெடி பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாலும், அதை வெளியில் எடுக்க முடியாது என்ற காரணத்தினாலும், அப்படகு நேற்று பகல் 11 மணிக்கு நடுக்கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டு வெடி வைத்து தகர்க்கப்பட்டது..&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா, இலங்கைக்கு இடையே நடுக்கடலில், பாக் ஜலசந்தி அருகே கடலோர காவல் படையின் "ரமாதேவி' என்ற கப்பல் பத்து நாட்களுக்கு முன் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தது. அப்போது, நடுக்கடலில் பைபர் படகு ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்படகில் ஐந்து பேர் இருந்தனர். அவர்களை கேட்ட போது, "இன்ஜின் பழுதாகி விட்டது; சரி செய்து கொண்டிருக்கிறோம்' என்று கூறினர். இதையடுத்து, கடலோர காவல் படையினர் சென்று விட்டனர். மறுநாளும் அதே இடத்தில் அப்படகு இருந்தது கடலோர காவல் படைக்கு சந்தேகத்தை எழுப்பியது. உடனே, அப்படகை கடலோர காவல் படையினர் சோதனையிட முடிவு செய்து, படகிற்கு சென்ற போது அதிர்ந்தனர். படகில் ஏ.கே., 56 ரக துப்பாக்கி, அத்துப்பாக்கிக்கு தேவையான 124 குண்டுகள், ஐந்து கையெறி குண்டுகள், சாட்டிலைட் போன், டெட்டனேட்டர், மனித வெடிகுண்டுக்காக பயன்படுத்தப்படும் தற்கொலை ஜாக்கெட், எட்டு பேரல்களில் திரவ ரசாயனம் ஆகியவை இருந்தன.பிடிபட்ட படகை, கடலோர காவல் படையினர் சென்னைக்கு எடுத்து வந்தனர். அப்படகில் இருந்தவர்களும் சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர். கடலோர காவல் படை நடத்திய விசாரணையில், இப்படகில் இருந்தவற்றை கடலூரில் ஒப்படைக்க வந்ததாக தெரிவித்தனர். கடலோர காவல் படையினரிடம் இருந்து பிடிபட்ட ஐந்து பேரையும் "கியூ' பிரிவு போலீசார், மத்திய உளவுப் பிரிவினர் மற்றும் சென்னை நகர போலீசார் தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர். இதில் பிடிபட்ட ஐந்து பேரில் நான்கு பேர் இலங்கை தமிழர்கள் என்பதும், அதில் இரண்டு பேர் விடுதலைப்புலிகள் அமைப்பின் கடற்புலிகள் பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதும் தெரிந்தது. கடற்புலிகள் பிரிவில் செயல்படும் அருமைநாயகம் புருஷோத்தமன், சிவபத்மநாபன் ஆகியோர் தான் முக்கியமானவர்கள் என்பதால், இவர்களிடம் கடந்த ஒரு வாரமாக தீவிர விசாரணை நடந்து வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மனித வெடிகுண்டாக மாறி வெடிக்கச் செய்யும் தற்கொலை ஜாக்கெட் படகில் இருந்தது தான் "கியூ' பிரிவு போலீசுக்கு கடும் சந்தேகத்தை ஏற்படுத்தியது. முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தியை படுகொலை செய்ய வைத்தது மனித வெடிகுண்டு தான். அந்த வகையில், 14 கிலோ எடையுடைய தற்கொலை ஜாக்கெட்டை எடுத்துக் கொண்டு இந்திய கடலோரப் பகுதிகளில் சுற்றித் திரிந்தது ஏன்? என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது தான் அதிபயங்கர தகவல் கிடைத்தது. புலிகள் வந்த படகு புத்தம் புதிய படகு. பைபரால் செய்யப்பட்டது. படகில் பக்கவாட்டு சுவர் பகுதிகளில் 500 கிலோ எடையுள்ள வெடி மருந்து பொருட்கள் பதுக்கி, அதை பைரறக தகடால் சீல் வைத்திருப்பதாக தெரிவித்தனர். இத்தகவல் நேற்று முன்தினம் பிற்பகலில் தெரிவித்ததும், "கியூ' பிரிவு போலீசார் மேலும் தீவிர விசாரணை நடத்தினர். அப்படகை உடனே சோதனை நடத்தும்படி உத்தரவிடப்பட்டது. கடலோர காவல் படையின் வெடிகுண்டு நிபுணர் படை ஓடி வந்தது. படகை சோதனையிட்ட போது, படகில் வெடி மருந்து இருப்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டது. அந்த வெடி மருந்து பொருட்களை எடுக்கவே முடியாது; துறைமுகத்தில் வைத்து செயலிழக்கவும் செய்ய முடியாது. அப்படி செய்தால், சென்னை நகரத்துக்கே பெரும் ஆபத்து ஏற்படும் என்று வெடிகுண்டு நிபுணர்கள் தெரிவித்து விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பாக மத்திய, மாநில உள்துறை அதிகாரிகளும் கடலோர காவல் படையின் உயர் அதிகாரிகளும் ஆலோசனை நடத்தினர். நடுக்கடலுக்கு படகை இழுத்துச் சென்று வெடிக்கச் செய்வது என்று முடிவெடுக்கப்பட்டது. உடனே படகை வெடிக்கச் செய்வது தொடர்பான தகவலை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் தெரிவித்து விட்டு, அதற்கான உத்தரவும் பெறப்பட்டது. நேற்று அதிகாலை 5 மணிக்கு கடலோர காவல் படையின் "அவ்வையார்' கப்பல் மூலம் புலிகளின் படகு இழுத்துச் செல்லப்பட்டது. பகல் 10.15 மணிக்கு "அவ்வையார்' கப்பல் நின்றது. புலிகளின் படகு மற்றொரு ரப்பர் படகு மூலம் இழுத்துச் செல்லப்பட்டது. சென்னையிலிருந்து 20 கடல் மைலுக்கு (37 கிலோ மீட்டர்) அப்பால் படகை எடுத்துச் சென்று நிறுத்தினர். புலிகளின் படகிற்கு ரப்பர் படகு மூலம் வெடிகுண்டு நிபுணர்கள் சென்றனர். புலிகளின் படகில் இருந்த வெடி மருந்துகளுடன் கிரானைடு இணைக்கப்பட்டது. அதை "டைம் டிவைசர்' மூலம் வெடிக்கும்படி செய்யப்பட்டது. 40 நிமிடங்கள் கழித்து புலிகளின் படகு வெடிக்கும் வகையில் வெடிகுண்டு நிபுணர்கள் செய்துவிட்டு, ரப்பர் படகு மூலம் "அவ்வையார்' கப்பலுக்கு வந்து விட்டனர். அப்படகு பகல் 11 மணிக்கு வெடித்து சிதறியது. நெருப்பு பிழம்பாக நடுக்கடலில் அக்காட்சி தெரிந்தது. புலிகளின் படகு வெடித்து சிதறியதை கடலோர காவல் படையின் அதிகாரிகள் பல மைல்களுக்கு அப்பால் இருந்தபடி பார்த்தனர். போலீஸ் காவலில் இருக்கும் விடுதலைப்புலிகளிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;படகில் வந்த புலிகள் நெஞ்சுரம் படைத்தவர்கள்: கடலோர காவல் படையிடம் பிடிபட்டவர்களில் இரண்டு பேர் புலிகளின் அமைப்பில் தீவிர பயிற்சி பெற்றவர்கள். அருமைநாயகம் புருஷோத்தமன், சிவபத்மநாபன் ஆகிய இருவரும் தான் இப்படகை எடுத்துக் கொண்டு, புலிகளுக்கு தேவையான பொருட்களை சப்ளை செய்வது வழக்கம். அவர்களை இலங்கை கடற்படையினர் பிடிக்க முற்பட்டால், படகை வெடிக்கச் செய்து, இலங்கை வீரர்களை அழிக்கச் செய்து விடுவார்களாம். இந்திய கடற்படை பிடித்ததால், எந்தவித எதிர்ப்பும் காட்டாமல் பணிந்து விட்டதாக விசாரணையில் தெரிவித்துள்ளனர். தவிரவும் சிறிதும் சோர்வோ, தயக்கமோ இன்றி அவர்கள் இருவரும் விசாரணையின் போது சிரித்தபடியே எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்லியது; அதிகாரிகளை ஆச்சரியத்துக்கு கொண்டு போனது. "அவர்களின் மூளையில் இலங்கைக்கும், விடுதலைப் புலிகளுக்கும் நடக்கும் போர், இதுவே இறுதியானது என்ற வகையில் நன்றாக பதிந்து விட்டது' என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். "இரண்டு பேரும் அழுத்தமானவர்கள் மட்டுமல்ல; கடும் நெஞ்சுரம் படைத்தவர்களாகவே இருக்கின்றனர்' என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;டி.என்.டி., என்றால் என்ன?:புலிகளின் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிப்பொருளின் பெயர் டி.என்.டி., என்று அழைக்கப்படுகிறது. "ட்ரை நைட்ரோ டொலுவீன்' என்பதின் சுருக்கம் தான் டி.என்.டி. இது ஆரம்பத்தில் சாயப்பொருளாகத் தான் பயன்படுத்தப்பட்டது. முதல் உலகப் போரில் இதை வெடிபொருளாக பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். மஞ்சள் நிற திடப்பொருளான டி.என்.டி., மிகுந்த விஷத்தன்மை கொண்டது. அமெரிக்க ராணுவத்தில் அதிகமாக பயன்படுத்தப்படுவது டி.என்.டி., தான். இப்பொருள் வெடிக்கும் போது, மனிதனுக்கு பல்வேறு உபாதைகள் ஏற்படும். கல்லீரல் கடுமையாக பாதிக்கும். நுரையீரலிலும், கல்லீரலிலும் ரத்தம் வரும். மூச்சுத்திணறல் ஏற்படும். ஆண் தன்மை மங்கிப் போகும். உடலில் டி.என்.டி., பட்டால் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறமாக தோல் மாறிவிடும். தோல் மீது பட்டதும் எரிச்சல் ஏற்படும். டி.என்.டி., தண்ணீரில் கரையாது. தண்ணீரை உறிஞ்சவும் செய்யாது. ஈரமான இடத்தில் கூட டி.என்.டி.,யை வெடிக்க வைக்க முடியும். அதற்காகத்தான் படகில் டி.என்.டி., வெடிபொருளை கொண்டு வந்து வெடிக்க வைக்க திட்டமிட்டுள்ளனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1831468623100134403-1843785293711049065?l=newsintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://newsintamil.blogspot.com/feeds/1843785293711049065/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1831468623100134403&amp;postID=1843785293711049065&amp;isPopup=true' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/1843785293711049065'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/1843785293711049065'/><link rel='alternate' type='text/html' href='http://newsintamil.blogspot.com/2007/02/blog-post_8256.html' title='வெடிகுண்டுகளுடன் பிடிபட்ட படகு தகர்க்கப்பட்டது'/><author><name>✪சிந்தாநதி</name><uri>http://www.blogger.com/profile/13997924857674287983</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://photos1.blogger.com/x/blogger2/3177/508851162256371/612/z/593711/gse_multipart50358.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1831468623100134403.post-7129607785467873853</id><published>2007-02-21T02:54:00.000Z</published><updated>2007-02-21T02:57:59.345Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தினத்தந்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சென்னை'/><title type='text'>மாநகராட்சி தேர்தல் முடிவுகள்</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;சென்னை மாநகராட்சி மறு தேர்தல் முடிவு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;59 வார்டுகளில் தி.மு.க. கூட்டணி வெற்றி&lt;br /&gt;தே.மு.தி.க - 5&lt;br /&gt;பா.ஜனதா - 2&lt;br /&gt;மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு - 1&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;சென்னை, பிப்.21-&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை மாநகராட்சி மறுதேர்தலில் 59 வார்டுகளில் தி.மு.க. கூட்டணியும், தே.மு.தி.க. 5 வார்டுகளிலும், பா.ஜனதா 2 வார்டுகளிலும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு ஒரு வார்டிலும் வெற்றி பெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மாநகராட்சி மறுதேர்தல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை மாநகராட்சி 100 வார்டுகளுக்கு மறுதேர்தல் நடத்த மாநில தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இந்த மறுதேர்தலை அ.தி.மு.க., ம.தி.மு.க. கட்சிகள் புறக்கணித்தன. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன் உள்பட 33 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதியுள்ள 67 வார்டுகளுக்கும் கடந்த 18-ந் தேதி தேர்தல் நடைபெற்றது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தேர்தலில் 30 சதவீத வாக்குகளே பதிவாகி இருந்தது. ஓட்டுபதிவு முடிந்ததும் ஓட்டு பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டது. ஓட்டு எண்ணிக்கை நேற்று காலை 8 மணிக்கு தொடங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தி.மு.க.அணி வெற்றி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரவு 11.30 மணி அளவில் 67 வார்டுகளுக்கும் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டன. இதில் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி அதிக இடங்களை கைப்பற்றியது. தி.மு.க. 32 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், பா.ம.க. 9 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.&lt;br /&gt;&lt;br /&gt;தே.மு.தி.க 5 இடங்களையும், பா.ஜனதா 2 இடங்களையும், மார்க்சிஸ்டு கம்ïனிஸ்டு ஒரு இடத்தையும் கைப்பற்றின.&lt;br /&gt;&lt;br /&gt;வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் அவருக்கு அடுத்த படியாக ஓட்டு பெற்றவர்கள் வார்டு வாரியாக விவரம் வருமாறு:-&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 2&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.டி.சேகர் (தி.மு.க.) - 7849, வடிவேலு (சுயே) - 3567, காஞ்சனா (பகுஜன் சமாஜ்) - 304.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 4&lt;br /&gt;&lt;br /&gt;எம்.எம்.சாமி (தி.மு.க.) - 2254, தனுஷ்கோடி (தே.மு.தி.க.) - 1984.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 6&lt;br /&gt;&lt;br /&gt;சின்னபொண்ணு (தி.மு.க.) - 2912, டில்லியம்மாள் (தே.மு.தி.க.) - 2451.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 9&lt;br /&gt;&lt;br /&gt;புனிதவள்ளி (தி.மு.க.) - 4211, விஜி (தே.மு.தி.க.) -1611.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 12&lt;br /&gt;&lt;br /&gt;முத்துகிருஷ்ணன் (தி.மு.க.) - 1767, நாராயணசாமி (தே.மு.தி.க.) - 1206, ஷாஜகான் (சி.பி.எம்.) - 1190.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 14&lt;br /&gt;&lt;br /&gt;தேவகி (தி.மு.க.) - 6341, தமிழ்ச்செல்வி (தே.மு.தி.க.) - 3698.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண்-18&lt;br /&gt;&lt;br /&gt;ஸ்ரீதர்(தி.மு.க.)-2,639, திருநாவுக்கரசு(தே.மு.தி.க.)-607.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 19&lt;br /&gt;&lt;br /&gt;ராஜேந்திரன் (பா.ம.க.) - 2455, சவுந்தரபாண்டியன் (தே.மு.தி.க.) - 2057&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 22&lt;br /&gt;&lt;br /&gt;சுரேஷ் ஜெயக்குமார் (தி.மு.க.) - 4049, மேகமணி (தே.மு.தி.க.) - 1777, நாகராஜன் (பா.ஜ.க.) - 697&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 23&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயசங்கர் (தி.மு.க.) - 2367, குணசீலன் (தே.மு.தி.க.) - 704, வெங்கட்ராவ் (பா.ஜ.க.) - 404&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 26&lt;br /&gt;&lt;br /&gt;சுபாஷ் சந்திரபோஸ் (தி.மு.க.) - 3461, கார்மேகம் (தே.மு.தி.க.) - 1811, குமார் (பா.ஜ.க.) - 192.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 27&lt;br /&gt;&lt;br /&gt;சர்தார் (தே.மு.தி.க.) - 3098, ஜெய்னுலாபுதீன் (தி.மு.க.) - 1922.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 31&lt;br /&gt;&lt;br /&gt;செங்கை செல்லப்பா (காங்) - 3017, கிருஷ்ணமூர்த்தி (தே.மு.தி.க.) - 2707.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண்-35&lt;br /&gt;&lt;br /&gt;சேகர்(தே.மு.தி.க.)-3,455, நெடுமாறன்(தி.மு.க.)-3326, பாண்டியன்(மார்க்சிஸ்டு கம்ï)-2706, ஜெயகுமார்(பா.ஜ.க.)-220&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 36&lt;br /&gt;&lt;br /&gt;திருவேங்கடம் (காங்) - 5407, ஜி.வி.பெருமாள் (தே.மு.தி.க.) - 4162.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண்-37&lt;br /&gt;&lt;br /&gt;துரைராஜ்(தி.மு.க.)-3,083, பரிமளாசுரேஷ்பாபு(தே.மு.தி.க.)-1,426, கோபிகிருஷ்ணன்(பா.ஜ.க.)-341.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 40&lt;br /&gt;&lt;br /&gt;கன்னியப்பன் (தி.மு.க.) - 4461, பாலமுருகன் (பகுஜன்சமாஜ்) -4142, குணசேகர் (தே.மு.தி.க.) - 3082,&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண்-42&lt;br /&gt;&lt;br /&gt;பிரபு (விடுதலை சிறுத்தைகள்) - 2919, மதியரசன் (தே.மு.தி.க.) - 2418, சத்தியமூர்த்தி (பா.ஜ.க.) - 403.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 45&lt;br /&gt;&lt;br /&gt;உஷா (தே.மு.தி.க.) - 2639, சாந்தலட்சுமி (பா.ம.க.) - 2005, ரேணுகாதேவி (சி.பி.எம்) - 1314.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 48&lt;br /&gt;&lt;br /&gt;மு.சரவணன் (தே.மு.தி.க) - 1638, எஸ்.வி.சங்கர் (காங்) - 1428, கண்ணதாசன் (பகுஜன் சமாஜ்) - 780&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 49&lt;br /&gt;&lt;br /&gt;முத்துகுமார் (பா.ஜ.க.) - 1726, மணிபால் (காங்) - 1475, லோகம்மாள் (தே.மு.தி.க.) - 241,&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண்-52&lt;br /&gt;&lt;br /&gt;ஹேமாவதி(காங்)-2,200, செல்வி(தே.மு.தி.க.)-1,045.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 54&lt;br /&gt;&lt;br /&gt;மொத்த வாக்குகள்-11,382, நாகராஜன்(தி.மு.க.)-6,924 ,லிங்கதுரை(பா.ஜ.க.)-295, ஜெயசந்திரன்(தே.மு.தி.க.)-4,057.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண்-55&lt;br /&gt;&lt;br /&gt;செஞ்சி தங்கராஜ் (பா.ம.க.) - 2368, மதியழகன் (தே.மு.தி.க.) - 1610.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண்-57&lt;br /&gt;&lt;br /&gt;காஞ்சிதுரை(தி.மு.க.)-2,485, தாஸ்(தே.மு.தி.க.)-1,067, ஜெயசங்கர்(பா.ஜ.க.)-621.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண்-59&lt;br /&gt;&lt;br /&gt;தேவி(எ)தேவகி(மார்க்சிஸ்டு கம்ïனிஸ்டு)-2,803, சேகர்(தி.மு.க.)-1,739, பவுல்ராஜ்(தே.மு.தி.க.)-711.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 61&lt;br /&gt;&lt;br /&gt;முகமது யாசின் (தி.மு.க.) - 1874, சம்பத் (தே.மு.தி.க.) - 1224, கார்த்திகேயன் (பா.ஜ.க.) - 238.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 63&lt;br /&gt;&lt;br /&gt;மோகன் (தி.மு.க.) - 6321, பிரபாகரன் (தே.மு.தி.க.) - 6835, மாசானமுத்து (பா.ஜ.க.) - 573&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 64&lt;br /&gt;&lt;br /&gt;பி.கே.சேகர் (பா.ம.க.) - 5068, டெல்லி பாபு (தே.மு.தி.க.) - 2926, குமரேசன் (பா.ஜ.க.) - 1261.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 65&lt;br /&gt;&lt;br /&gt;இளங்கோவன் (தி.மு.க.) - 7370, அன்புராஜ் (தே.மு.தி.க.) - 5070.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 66&lt;br /&gt;&lt;br /&gt;புஷ்பலதா (தி.மு.க.) - 11,167, கிரிஜா (சுயே.) - 884.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 67&lt;br /&gt;&lt;br /&gt;ஏழுமலை (பா.ம.க.) - 3308, ரமேஷ் (தே.மு.தி.க.) - 2504, டெல்லிபாய் (பா.ஜ.க.) - 181.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண்-69&lt;br /&gt;&lt;br /&gt;சாந்திபாய்(தி.மு.க.)-1,896, லட்சுமி(தே.மு.தி.க.)-1,782, சரஸ்வதி(மார்க்சிஸ்ட் கம்ï)-1115.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 71&lt;br /&gt;&lt;br /&gt;சிவலிங்கம் (தி.மு.க.) - 1922, ஞானசவுந்தரி (சுயே) - 918, விஜயரங்கன் (தே.மு.தி.க.) - 578.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 73&lt;br /&gt;&lt;br /&gt;விஜயலட்சுமி (பா.ஜ.க.) - 1854, சரஸ்வதி (காங்கிரஸ்) - 1819 ,சித்ரா (தே.மு.தி.க.) - 1337.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 77&lt;br /&gt;&lt;br /&gt;திராவிடநாடு முனுசாமி (தி.மு.க.) - 4198, சிவராமன் (தே.மு.தி.க.) - 770, சதாசிவம் (பா.ஜ.க.) - 299.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 78&lt;br /&gt;&lt;br /&gt;லாசர் (காங்) - 7792, செல்வம் (சுயே) - 955, சிவசங்கர் (பா.ஜ.க.) 838.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண்-82&lt;br /&gt;&lt;br /&gt;பிரபாகரன்(தி.மு.க.)-5,703, ரமேஷ்(தே.மு.தி.க.)-1,126.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 83&lt;br /&gt;&lt;br /&gt;எம்.நாகராஜன் (காங்) - 4933, கமாலுதீன் மஜீத் (தேசியவாத காங்கிரஸ்) - 1044, சிவநேசன் (பா.ஜ.க.) - 243.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண்-88&lt;br /&gt;&lt;br /&gt;வாசுதேவன்(காங்)-6,075, முகமது தப்ரீஸ் (தே.மு.தி.க.) - 848.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 89&lt;br /&gt;&lt;br /&gt;வனஜா (காங்) - 5368, மஞ்சுளா (தே.மு.தி.க.) - 643, சிவசித்ரா (பா.ஜ.க.) - 1102.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 95&lt;br /&gt;&lt;br /&gt;ஆர்.துரை (தி.மு.க.) - 4069, ராமநாதன் (பா.ஜ.க.) - 580.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண்-97&lt;br /&gt;&lt;br /&gt;கோவிந்தசாமி(காங்)-3,126, பாபு(தே.மு.தி.க.)-1,434, ஜெயசந்திர பாபு(பா.ஜ.க.)-55.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண்-102&lt;br /&gt;&lt;br /&gt;பாலகிருஷ்ணன்(பா.ம.க.)-561, மகேஷ்(தே.மு.தி.க.)-354, தனசேகர்(பா.ஜ.க.)-227.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 103&lt;br /&gt;&lt;br /&gt;ராஜாத்தி (தி.மு.க.) - 1752, சரளா (சி.பி.எம்) - 1045, வசந்தி (தே.மு.தி.க.) - 234, பத்மினி (பா.ஜ.க.) - 54.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 105&lt;br /&gt;&lt;br /&gt;ருக்மாங்கதன் (காங்கிரஸ்) - 1596, மணிகண்டன் (தே.மு.தி.க.) - 720, குமரேசன் (பா.ஜ.க.) - 309.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 106&lt;br /&gt;&lt;br /&gt;ஆளூர் மஜித் (தி.மு.க.) - 2938, அப்துல்காலிக் (தே.மு.தி.க.) - 1490.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண்-122&lt;br /&gt;&lt;br /&gt;சுப்பிரமணி(தி.மு.க.)-2,733, லோகநாதன்(தே.மு.தி.க.)-2,278.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டுஎண்-124&lt;br /&gt;&lt;br /&gt;சுசீலா கோபாலகிருஷ்ணன்(காங்)-2,902, ஆனந்தன்(தே.மு.தி.க.)-1,300, ஸ்ரீதரன்(பா.ஜ.க.)-697.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 125&lt;br /&gt;&lt;br /&gt;பிரகாஷ் (பா.ம.க.) - 6774, பாலாஜி (தே.மு.தி.க.) - 1065, கணேசன் (பா.ஜ.க.) - 598.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 126&lt;br /&gt;&lt;br /&gt;ஏழுமலை (தி.மு.க.) - 5688, மலர்மன்னன் (தே.மு.தி.க.) - 672, சாய்ராமன் (பா.ஜ.க.) - 159.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண்-130&lt;br /&gt;&lt;br /&gt;தனசேகரன்(தி.மு.க.)-4,674, செல்வமணி(தே.மு.தி.க.)-2,688.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 131&lt;br /&gt;&lt;br /&gt;வெங்கடேசன் (பா.ம.க.) - 6913, முத்து (தே.மு.தி.க.) - 2918.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 132&lt;br /&gt;&lt;br /&gt;வில்லியம் (காங்) - 6193, ரவிக்குமார் (தே.மு.தி.க.) - 2026.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 133&lt;br /&gt;&lt;br /&gt;கவிதா (தி.மு.க.) - 6082, ஆர்.அமுதா (தே.மு.தி.க.) - 714.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண்-142&lt;br /&gt;&lt;br /&gt;ஜெயராமன்(பா.ம.க.)-2,198, குருசாமி(தே.மு.தி.க.)-591, சரோஜா(மார்க்சிஸ்டு கம்ï)-651, அசோக்குமார்(பா.ஜ.க.)-540.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 143&lt;br /&gt;&lt;br /&gt;குப்பன் (தி.மு.க.) - 2753, மணி (பா.ஜ.க.) - 868, பாலமுருகன் (தே.மு.தி.க.) - 721.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 144&lt;br /&gt;&lt;br /&gt;மங்கள்ராஜ் (காங்) - 6701, குணசேகரன் (தே.மு.தி.க.) - 667, ஏழுமலை (பா.ஜ.க.) - 284.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண்-145&lt;br /&gt;&lt;br /&gt;உமாசாசவி (விடுதலை சிறுத்தைகள்) -4923, மகாலட்சுமி (தே.மு.தி.க.) -1707.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 147&lt;br /&gt;&lt;br /&gt;அன்பழகன் (தி.மு.க.) - 4381, நாகப்பன் (தே.மு.தி.க.) - 1045, லட்சுமி சுரேஷ் (பா.ஜ.க.) - 812.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 149&lt;br /&gt;&lt;br /&gt;ஜமுனா கேசவன் (பா.ம.க.) - 4514, பிரேமா (தே.மு.தி.க.) - 1675, தனலட்சுமி (பா.ஜ.க.) - 649.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 150&lt;br /&gt;&lt;br /&gt;வேலு (தி.மு.க.) - 8306, ஜமால் முகைதீன் (தே.மு.தி.க.) - 1526&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 151&lt;br /&gt;&lt;br /&gt;எம்.வேலாயுதம் (காங்) - 2917, வாசுதேவன் (தே.மு.தி.க.) - 1040, ராஜ்குமார் (பா.ஜ.க.) - 627.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 152&lt;br /&gt;&lt;br /&gt;முருகேசன் (காங்) - 5633, ராஜா (தே.மு.தி.க.) - 1327&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் - 153&lt;br /&gt;&lt;br /&gt;கிஷா குமாரி (தி.மு.க.) - 31386, மைதீன் பீவி (தே.மு.தி.க.) - 1930&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 154&lt;br /&gt;&lt;br /&gt;மீனாட்சி வெங்கட்ராமன் (காங்) - 4622, புஷ்பலதா (தே.மு.தி.க.) - 4526.&lt;br /&gt;&lt;br /&gt;வார்டு எண் 155&lt;br /&gt;&lt;br /&gt;சாந்தி (காங்) - 6825, சுமதி (தே.மு.தி.க.) - 3154.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1831468623100134403-7129607785467873853?l=newsintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://newsintamil.blogspot.com/feeds/7129607785467873853/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1831468623100134403&amp;postID=7129607785467873853&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/7129607785467873853'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/7129607785467873853'/><link rel='alternate' type='text/html' href='http://newsintamil.blogspot.com/2007/02/blog-post_21.html' title='மாநகராட்சி தேர்தல் முடிவுகள்'/><author><name>✪சிந்தாநதி</name><uri>http://www.blogger.com/profile/13997924857674287983</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://photos1.blogger.com/x/blogger2/3177/508851162256371/612/z/593711/gse_multipart50358.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1831468623100134403.post-7733938960748375292</id><published>2007-02-20T04:42:00.000Z</published><updated>2007-02-20T04:47:25.958Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='போராட்டம்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தட்ஸ்தமிழ்'/><title type='text'>கர்நாடகாவில் காவிரிப் போராட்டங்கள்</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="font-size:130%;"&gt;*கர்நாடகத்தில் தமிழக பஸ் மீது தாக்குதல்&lt;br /&gt;*தமிழ் நாளிதழ்களுக்கு தடை&lt;br /&gt;*ஐடி ஊழியர் போராட்டம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிப்ரவரி 19, 2007&lt;br /&gt;&lt;br /&gt;ஓசூர்: பெங்களூரிலிருந்து ஓசூர் திரும்பிக் கொண்டிருந்த தமிழக அரசு விரைவுப் பேருந்து கல்வீசித் தாக்கப்பட்டதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து தொடர்ந்து கர்நாடகத்தின் காவிரி டெல்டா மாவட்டங்களில் போராட்டம் நடந்து வருகிறது. பெங்களூரில் நடந்து வந்த போராட்டம் சற்றே ஓய்ந்ததைத் தொடர்ந்து ஓசூர் வழியாக பெங்களூருக்கு பேருந்துகள் மற்றும் பிற வாகனப் போக்குவரத்து கடந்த சில நாட்களாக பிரச்சினையின்றி நடந்து வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந் நிலையில் நேற்று பெங்களூர் சென்ற தமிழக அரசுப் பேருந்து கல்வீசித் தாக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஓசூரிலிருந்து பெங்களூருக்கு அரசு விரைவுப் பேருந்து ஒன்று சென்றது. அதை மணிவாசகம் ஓட்டிச் சென்றார். நேற்று அதிகாலை பெங்களூர் சென்ற அந்தப் பேருந்து மீண்டும் ஓசூர் திரும்பியது.&lt;br /&gt;&lt;br /&gt;பேருந்தில் 40 பயணிகள் இருந்தனர். லக்கசந்திரா என்ற இடத்தில் பேருந்து வந்தபோது ஒரு கும்பல் வழிமறித்து கல்வீசித் தாக்குதல் நடத்தியது. இதில் பேருந்தின் முன்பக்கக் கண்ணாடி உடைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது, பேருந்தில் இருந்த பயணிகள் பீதியடைந்தனர். பின்னர் அந்த வழியாக வந்த தனியார் பேருந்தில் பயணிகளை ஏற்றி ஓசூருக்கு அனுப்பினர். டிரைவர் மணிவாசகம் கண்ணாடி உடைந்த நிலையில் பேருந்தை ஓசூருக்கு ஓட்டி வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இச் சம்பவத்தால் அங்கு பரபரப்பு நிலவுகிறது. மாவட்ட எஸ்.பி. தேன்மொழி எல்லைப் பகுதியில் பாதுகாப்பை பலப்படுத்த உத்தரவிட்டுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் தமிழக எல்லைப் பகுதியில் குவிக்கப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சாமியார்கள் போராட்டம்&lt;/strong&gt;:&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே, காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகத்øத்ச சேர்ந்த சாமியார்கள் போராட்டம் நடத்தவுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து பெட்டாபுரா ஸ்ரீ சென்னபசவ தேசிகேந்திர சுவாமிஜி மற்றும் அத்வைத் மடாதிபதி சிவலிங்கேந்திர சுவாமிஜி ஆகியோர் மைசூ&gt;ல் செய்தியாளர்களிடம் பேசுகையில், சீக்கிய, கிறிஸ்தவ, முஸ்லீம் மற்றும் இந்து மதத் தலைவர்கள், பல்வேறு மடத் தலைவர்கள் என கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட மதத் தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மைசூருக்கு வரவுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;20ம் தேதி அனைவரும் பங்கேற்கும் பாதயாத்திரை நடைபெறவுள்ளது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக பாதயாத்திரை மேற்கொள்ளப்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் முடிவடையும்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கு பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கோரிக்கை விடுத்து தயாரிக்கப்பட்டுள்ள மனுவை ஆட்சித் தலைவ&gt;டம் வழங்கவுள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கர்நாடக விவசாயிகள் நலனைப் புறக்கணிக்கும் வகையில், மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து செயல்பட்டால் டெல்லிக்குச் சென்று குடியரசுத் தலைவர் மாளிகை முன் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று அவர்கள் கூறினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஸ்ரீ ரவிசங்கரும்&lt;/strong&gt; ...&lt;br /&gt;&lt;br /&gt;இப்போராட்டத்தில் ஆர்ட் ஆப் லிவிங் நிறுவனத் தலைவரும், ஆன்மீகத் தலைவருமான ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், சித்தகங்கா மடாதிபதி சிவக்குமார சுவாமி, ஆதிசுன்சுனகிரி மடாதிபதி பாலகங்காதர சுவாமி, சுட்டூர் மடாதிபதி சிவாத்ரி தேசிகேந்திர சுவாமி, உடுப்பி பெஜாவர் மடாதிபதி விஸ்வேஸ்வர தீர்த்த சுவாமி உள்ளிட்டோர் முக்கிய மடாதிபதிகள், ஆன்மீகத் தலைவர்களும் பங்கேற்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே, மைசூர், மாண்டியா, சாம்ராஜ்நகர் ஆகிய காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மாண்டியா மாவட்டத்தில் மட்டூர், கே.ஆர்.பேட்டை, ஸ்ரீரங்கப்பட்டனா, மாண்டியா ஆகிய நகரங்களில் விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பெங்களூர்மைசூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பல மணி நேரம் பாதிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மாண்டியாவில் காவிரி பாதுகாப்பு சமிதி சார்பில் பட்டினிப் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தமிழ் நாளிதழ்கள் நிறுத்தம்:&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;மைசூரில், இன்று முதல் ஒரு வாரத்திற்கு தமிழ் நாளிதழ்களை வினியோகிப்பதை நிறுத்தி வைக்க மைசூர் செய்தித்தாள் வினியோகஸ்தர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சாப்ட்வேர் என்ஜினியர்கள் போராட்டம்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந் நிலையில் பெங்களூர் மகாத்மா காந்தி சாலையில் கன்னட சாப்ட்வேர் என்ஜினியர்கள் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து போராட்டம் நடத்தினர். சுமார் 600 பேர் இந்தப் போரட்டத்தில் பங்கேற்றனர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1831468623100134403-7733938960748375292?l=newsintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://newsintamil.blogspot.com/feeds/7733938960748375292/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1831468623100134403&amp;postID=7733938960748375292&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/7733938960748375292'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/7733938960748375292'/><link rel='alternate' type='text/html' href='http://newsintamil.blogspot.com/2007/02/blog-post.html' title='கர்நாடகாவில் காவிரிப் போராட்டங்கள்'/><author><name>✪சிந்தாநதி</name><uri>http://www.blogger.com/profile/13997924857674287983</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://photos1.blogger.com/x/blogger2/3177/508851162256371/612/z/593711/gse_multipart50358.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1831468623100134403.post-8548564231939001524</id><published>2007-02-19T13:24:00.000Z</published><updated>2007-02-19T13:29:26.732Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாலைமலர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='நாசவேலை'/><title type='text'>டெல்லி-லாகூர் ரயிலில் குண்டு: 66 பலி</title><content type='html'>&lt;strong&gt;டெல்லியில் இருந்து பாகிஸ்தான் சென்ற ரெயிலில் குண்டு வெடித்து 66 பயணிகள் சாவு: தீவிரவாதிகள் நாசவேலை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பானிபட், பிப். 19-&lt;br /&gt;&lt;br /&gt;டெல்லியில் இருந்து பாகிஸ்தானில் உள்ள லாகூருக்கு வாரத்துக்கு 2 தடவை பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா-பாகிஸ்தான் இடையே சுமூக உறவை மேம்படுத்தும் வகையில் 2004ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ந்தேதி முதல் இந்த ரெயில் சேவை நடந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தியா-பாகிஸ்தான் எல்லையான அத்தாரி வரை இந்த ரெயில் ஓடுவதால் "அத்தாரி எக்ஸ்பிரஸ்'' என்றும் அதன் பிறகு பாகிஸ்தானுக்குள் ஓடும் ரெயில் "சம்ஜ×தா எக்ஸ்பிரஸ்'' என்றும் இந்த ரெயில் அழைக்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பழைய டெல்லி ரெயில் நிலையத்தில் இருந்து நேற்றி ரவு 10.40 மணிக்கு இந்த ரெயில் அத்தாரி நோக்கிப் புறப்பட்டது. 16 பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. அதில் மொத்தம் 610 பயணி கள் இருந்தனர். பெரும்பா லானவர்கள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களா கும்.&lt;br /&gt;&lt;br /&gt;நள்ளிரவு 1.50 மணிக்கு அரியானா மாநிலம் பானிபட் அருகே ரெயில் சென்று கொண்டிருந்த போது கடைசி பெட்டிகளில் திடீரென குண்டு வெடித்தது.&lt;br /&gt; இதையடுத்து கடைசி 2 பெட்டிகளில் தீ பிடித்தது. ரெயில் வேகமாக சென்று கொண்டிருந்த காரணத்தால் கடைசி 2 பெட்டி முழுக்க தீ பரவி நாலாபுறமும் பற்றி எரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அயர்ந்து தூங்கிக் கொண் டிருந்த பயணிகள் திடீரென தங்களை சுற்றி தீ எரிவதை கண்டு அலறினார்கள். இதை யடுத்து சிவா கிராமம் பகுதியில் ரெயில் நிறுத்தப்பட்டது. உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;2 இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்தனர். இதற்கிடையே கடைசி 2 பெட்டியையும் துண்டித்து தீயை அணைக்க சிலர் முயன்ற னர். அதற்கு பலன் கிடைக்க வில்லை&lt;br /&gt;&lt;br /&gt;நாலாபுறமும் தீ எரிந்ததால் கடைசி 2 பெட்டிகளில் இருந்த பயணிகளில் சிலர் மட்டுமே தப்ப முடிந்தது. மற்றவர்கள் தீயில் கருகினார்கள். 66 பேர் ரெயில் பெட்டிக்குள்ளேயே கருகி உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் பாகிஸ் தான் நாட்டுக்காரர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் முதன் முதலாக இந்த குண்டு வெடிப்பு நாச வேலை மூலம் பாகிஸ்தானி யர்களையே கொன்று குவித் துள்ளனர்.&lt;br /&gt;சுமார் 50 பயணிகள் தீகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு பானிபட் நகரில் உள்ள சிவில் மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டுள்ளனர். அவர்களில் சில ரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் 1 மணி நேர போராட் டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. அதன் பிறகு 2 பெட்டிகளும் துண்டிக்கப்பட்டு தனியாக கொண்டு செல் லப்பட்டது. 2 பெட்டிகளுக் குள் பிணமான 64 பேர்களின் உடல்கள் கரிக்கட்டையாகி விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;உயிரிழந்த பயணிகளில் பெரும்பாலானவர்கள் யார் என்றே தெரியாத அளவுக்கு உடல்கள் உருக்குலைந்து சாம்பலாகி விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;சம்பவ இடத்துக்கு போலீ சாரும் வடக்கு மண்டல ரெயில்வே உயர் அதிகாரி களும் சென்று தீவிர விசா ரணை நடத்தினார்கள். அப் போது 3 சூட்கேஸ்களில் வெடிகுண்டுகள், தீ பிடிக்கும் திரவங்கள் இருப்பதை கண்டு பிடித்தனர். அதில் 2 வெடிகுண்டுகள் ரெயிலுக் குள்ளும், ஒரு வெடிகுண்டு தீவானா ரெயில் நிலையப் பகுதியிலும் கிடந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;தேசிய பேரழிவு பதிலடிப் படை வீரர்கள், சிறப்பு அதிரடிப்படை வீரர்கள், அரியானா மாநில தடயவியல் நிபுணர்கள் மற்றும் ரெயில்வே போலீசார் ஒருங்கிணைந்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்கள். பானிபட் மாவட்டம் முழுக்க அதிரடி தேடுதல் வேட்டையும் நடத்தப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் கட்ட விசாரணையில் இது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளின் சதி வேலை என்று தெரிய வந்துள்ளது. பெரிய அளவில் உயிரிழப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற கொடூர திட்டத்துடன் அவர்கள் நன்கு திட்டமிட்டு கடைசி 2 பெட்டியில் குண்டு வெடிப்பை நிகழ்த்தி தீ பிடிக்க செய்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ரெயிலில் குண்டு வெடிக்கும் சத்தத்தை கேட்டதாக தீவானா ரெயில் நிலைய கேட் கீப்பர் கூறினார். அவர் உள்பட பயணிகளிடம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சம்பவ இடத்துக்கு மத்திய மந்திரிகள் சிவராஜ் பாட்டீல், லல்லுபிரசாத் யாதவ், வேலு, உள்துறை செயலாளர் வி.கே.தக்கல், தேசிய பாதுகாப்பு படை இயக்குனர் ஜே.கே.தத், வடக்கு மண்டல ரெயில்வே பொது மேலாளர் வி.என்.மாத்தூர் உள்பட உயர் அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர். ரெயிலுக்கு குண்டு வைத்த தீவிரவாதிகளை பிடிக்க தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தீவிர விசாரணைக்கு பிறகு அத்தாரி எக்ஸ்பிரஸ் ரெயில் 5 பெட்டிகளை மட்டும் விட்டு விட்டு 11 பெட்டிகளுடன் இன்று அதிகாலை 3 மணிக்கு எல்லை நோக்கி புறப்பட்டுச் சென்றது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1831468623100134403-8548564231939001524?l=newsintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://newsintamil.blogspot.com/feeds/8548564231939001524/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1831468623100134403&amp;postID=8548564231939001524&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/8548564231939001524'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/8548564231939001524'/><link rel='alternate' type='text/html' href='http://newsintamil.blogspot.com/2007/02/66.html' title='டெல்லி-லாகூர் ரயிலில் குண்டு: 66 பலி'/><author><name>✪சிந்தாநதி</name><uri>http://www.blogger.com/profile/13997924857674287983</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://photos1.blogger.com/x/blogger2/3177/508851162256371/612/z/593711/gse_multipart50358.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1831468623100134403.post-6856721995926362590</id><published>2006-12-30T06:14:00.000Z</published><updated>2006-12-30T06:17:59.067Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தட்ஸ்தமிழ்'/><title type='text'>குழந்தைகள் பிணக்குவியல்</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;டெல்லி: 30 குழந்தைகளை கொன்ற கொடூரன்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;டிசம்பர் 30, 2006&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;டெல்லி: டெல்லி அருகே மர்ம பங்களாவுக்குள் 30 சிறுமிகளின் எலும்புக் கூடுகள் குவியல் குவியலாக தோண்டி எடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;டெல்லி புறநகர்ப் பகுதியான நோய்டா அருகே உள்ள நிதாரி என்ற கிராமத்தில் மொஹீந்தர் சிங் என்பவருக்குச் சொந்தமான ஆடம்பர பங்களா உள்ளது. இவர் கிரேன் டீலராக இருக்கிறார். இவரது வீட்டில் சதீஷ் என்ற சுரேந்திரா என்பவர் வேலைக்காரராக இருந்து வந்தார். சதீஷ் உத்தராஞ்சல் மாநிலம் அல்மோரா நகரைச் சேர்ந்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;நோய்டா 19வது செக்டார் பகுதியில் வசித்து வந்த பாயல் என்ற 20 வயதுப் பெண்ணை கடந்த மே மாதம் முதல் காணவில்லை. இதுகுறித்து கௌதம் புத்தா நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். பாயல் வைத்திருந்த செல்போனை தற்போது யார் பயன்படுத்தி வருகின்றனர் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் சுரேந்திரா வேலை பார்த்து வந்த வீட்டின் சாக்கடைக் கால்வாயிலிருந்து பெரும் துர்நாற்றம் நேற்று வீசியுள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;போலீஸார் விரைந்து வந்து சாக்கடையை தோண்ட உத்தரவிட்டனர். அப்படித் தோண்டியபோது எலும்புக் கூடுகள் சில சிக்கின. இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் சுரேந்திராவை தீவிரமாக விசாரித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த விசாரணையில் நெஞ்சை உறைய வைக்கும் தகவல்களை வெளியிட்டான் சுரேந்திரா. 30 வயதாகும் சுரேந்திரா, அந்தப் பகுதியைச் சேர்ந்த சிறுமிகளை சாக்லேட் கொடுத்தும், விளையாட்டுப் பொருட்களை கொடுத்தும் வரவழைப்பானாம்.&lt;br /&gt;&lt;br /&gt;மொஹீந்தர் சிங்கின் வீட்டுக்குள் அழைத்துச் சென்று அவர்களை பாலியல் பலாத்காரம் செய்து கொன்று விடுவானாம். பிறகு அவர்ளின் உடல்களை சாக்குப் பையில் வைத்துக் கட்டி வீட்டுக்குள் புதைத்து விடுவானாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் அவன் பாலியல் பலாத்காரம் செய்த 6 சிறுமிகளின் உடல்களை சாக்குப் பையில் கட்டி சாக்கடைக்குள் போட்டு விட்டான். அந்த உடல்களிலிருந்து வந்த துர்நாற்றம்தான் இப்போது சுரேந்திராவைக் காட்டிக் கொடுத்து விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;காணாமல் போன பாயலையும் இவன்தான் கடத்தி வந்து கற்பழித்துக் கொலை செய்துள்ளான். பாயலின் செல்போனையும் இவனே பயன்படுத்தி வந்துள்ளான்.&lt;br /&gt;&lt;br /&gt;சுரேந்திரா கொடுத்த வாக்குமூலத்தைத் தொடர்ந்து போலீஸார் மொஹீந்தர் சிங்கின் வீடு முழுவதும் தோண்டி சோதனை போட்டனர். அப்போது குவியல் குவியலாக எலும்புக் கூடுகள் வரவே போலீஸாருக்கு அதிர்ச்சி அதிகரித்தது. வீட்டு வளாகம் முழுவதும் பிணக் குவியல்களாக உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இதுவரை 30 பேரின் எலும்புக் கூடுகள் சிக்கியுள்ளதாக தெரிகிறது. அனைவருமே 18 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுதான் கொடூரம். அத்தனை பேரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு இறந்தவர்கள் என்று கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த பயங்கர சம்பவத்தைத் தொடர்ந்து சுரேந்திரா மற்றும் மொஹீந்தர் சிங் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர். கொலை செய்ய பயன்படுத்தப்பட்ட கத்தி உள்ளிட்ட சில ஆயுதங்களையும் வீட்டிலிருந்து போலீஸார் மீட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சில உடல்கள் முற்றிலும் உருக்குலையாமல் பாதி அழுகிய நிலையில் கிடைத்துள்ளன. இதுவரை கிடைத்துள்ள எலும்புக் கூடுகள், அழுகிய உடல்களை வைத்துப் பார்க்கும்போது 30 பேரின் உடல்களாக அவை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் மரபணு சோதனைக்குப் பிறகே எத்தனை பேரின் உடல்கள் என்பதை உறுதியாகச் சொல்ல முடியும் என நோய்டா எஸ்.பி. ரத்தோர் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;நிதாரி கிராமத்திலிருந்து கடந்த 2 ஆண்டுகளில் 21 சிறுவர், சிறுமியர் காணாமல் போயுள்ளனர். இவர்களில் சிறுமிகள்தான் அதிகம். ஆனால் போலீஸார் பதிவு செய்யாமல் விட்ட புகார்களையும் சேர்த்து 31 பேர் காணாமல் போயுள்ளதாக கிராமத்தினர் கூறுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்கள் அனைவரையும் சுரேந்திராதான் பாலியல் பலாத்காரம் செய்து கொன்றிருக்க வேண்டும் என கருதப்படுகிறது. எலும்புக் கூடு குவியல் கண்டுபிடிக்கப்பட்ட தகவல் பரவியதும் நிதாரி கிராமத்தினர் கூட்டம் கூட்டமாக மொஹீந்தர் சிங் வீட்டு முன்பு கூடி கலாட்டாவில் இறங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டின் மீது கல்வீசியும், கட்டைகளால் அடித்தும் தாக்குதல் நடத்தினர். வீட்டு வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் தாக்குதலில் சேதமடைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட இடத்திலிருந்து சிறுவர், சிறுமியர் அணியும் செருப்புகள் அதிக அளவில் கிடைத்தன. அதேபோல சீருடைகள், டிபன் பாக்ஸ், பள்ளிக்கூட பைகள் உள்ளிட்டவையும் குவியல் குவியலாக கிடைத்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;நோய்டாவில் சிறார்களின் எலும்புக் கூடுகள் குவியல் குவியலாக சிக்கியுள்ளது டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;&lt;strong&gt;செய்தி : தட்ஸ்தமிழ்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1831468623100134403-6856721995926362590?l=newsintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://newsintamil.blogspot.com/feeds/6856721995926362590/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1831468623100134403&amp;postID=6856721995926362590&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/6856721995926362590'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/6856721995926362590'/><link rel='alternate' type='text/html' href='http://newsintamil.blogspot.com/2006/12/blog-post_30.html' title='குழந்தைகள் பிணக்குவியல்'/><author><name>வலைஞன்</name><uri>http://www.blogger.com/profile/09175459313475586529</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://photos1.blogger.com/blogger2/1027/223567947155778/183/gse_multipart64688.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1831468623100134403.post-4045827844501611529</id><published>2006-12-29T11:55:00.000Z</published><updated>2006-12-29T11:58:36.209Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தட்ஸ்தமிழ்'/><title type='text'>மதிமுகவிலிருந்து வைகோ நீக்கம்</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;வைகோவை நீக்கியது போட்டி பொதுக் குழு:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#009900;"&gt;செஞ்சி ராமச்சந்திரன் புதிய பொ.செ!&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;டிசம்பர் 29, 2006&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சேலம்: மதிமுக பொதுச் செயலாளர் பதவியிலிருந்து வைகோவை நீக்கி சேலத்தில் நடந்து வரும் போட்டி மதிமுக பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. புதிய பொதுச் செயலாளராக செஞ்சி ராமச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;சேலத்தில் எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் கூட்டிய மதிமுக போட்டி பொதுக்குழு இன்று காலை கூடியது. சுமங்கலி கல்யாண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு கூட்டம் தொடங்குவதாக இருந்தது. ஆனால், ஆட்கள் வர தாமதமானதால் 12.30 மணிக்குத் தான் தொடங்கியது. இதுவரை எல்.ஜியும் செஞ்சியும் காத்திருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இக் கூட்டத்திற்கு விழுப்புரம், சென்னை, திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே அதிகம் வந்திருந்தனர். அவர்களில் எத்தனை பேர் பொதுக்குழு உறுப்பினர்கள் என்பது தெரியவில்லை. திரளாக வந்தவர்களை போலீஸார் சோதனை நடத்திய பின்னர் உள்ளே அனுமதித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இக்கூட்டத்தில் வைகோவை பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்தத் தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்படுவதாக எல்.கணேசன் அறிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், புதிய பொதுச் செயலாளராக செஞ்சி ராமச்சந்திரனை நியமித்தும் ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இனிமேல் எக்காரணம் கொண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதில்லை என்றும் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுக்குழுக் கூட்டத்தையொட்டி கல்யாண மண்டபம் உள்ள பகுதியில் அசம்பாவிதம் ஏதும் நடப்பதைத் தடுக்க சீருடையிலும், மாறு வேடத்திலும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டத்துக்கு எல்.கணேசன் தலைமை தாங்குகிறார். செஞ்சி ராமச்சந்திரன் முன்னிலை வகிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டம் நடக்கும் கல்யாண மண்டபப் பகுதியிலும் ஐந்து ரோடு, நாலு ரோடு உள்ளிட்ட பல இடங்களிலும் மதிமுக கொடிகள், கட் அவுட்கள்,தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;பொதுக் குழுக் கூட்டத்தைத் தொடர்ந்து இன்று மாலை அம்மாப்பேட்டை காந்தி மைதானத்தில் பொதுக் கூட்டமும் நடைபெறுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே, சேலம் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பலத்த பாதுகாப்புடன் சேலத்தை விட்டு வெளியேறி (வெளியேற்றப்பட்டு?) விட்டனர். இதனால் அவர்களில் ஒருவர் கூட எல்.ஜி கூட்டியுள்ள கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டார்கள் என கூறப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னதாக சேலம் வந்த எல்.கணேசனும், செஞ்சி ராமச்சந்திரனும் செய்தியாளர்களிடம் பேசுகையில், பொதுக்குழுக் கூட்டத்தில், 500 முதல் 600, 700 உறுப்பினர்கள் வரை கலந்து கொள்வார்கள். பொதுக்குழுக் கூட்டத்தில், 13 ஆண்டு கால மதிமுக தேர்தல் கூட்டணி, அரசியல் பணிகள், திராவிடர் கொள்கையிலிருந்து வைகோ வழி தவறியது குறித்துப் பேசவுள்ளோம் என்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கூட்டத்தில் வைகோவை கட்சியிலிருந்து நீக்குவது தொடர்பான தீர்மானமும் கொண்டு வரப்படும் எனத் தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எல்ஜி நடத்தும் கூட்டத்தில் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் வழக்குப் போடுவோம், சிறையில் தள்ளுவோம் என காவல்துறை மூலம் மதிமுக பொதுக் குழு உறுப்பினர்களை திமுக மிரட்டி வருவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது குறித்து சேலம் மாவட்ட மதிமுக செயலாளர் தாமரைக்கண்ணன் கூறுகையில், சேலம் மாவட்டத்தில் மொத்தமுள்ள 8 பொதுக்குழு உறுப்பினர்களும் வைகோ பக்கமே உள்ளனர். இதில் ஒருவர் கூட போட்டி எல்.ஜி. கூட்டிய பொதுக்குழுவில் கலந்து கொள்ளவில்லை. ஆனால், அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தனது ஆட்களை மதிமுகவினர் என்று கூறி போட்டி பொதுக் குழுவிற்கு ஆட்களை அனுப்பியுள்ளார். இது பொதுகுழுக் கூட்டமும் அல்ல, அதில் எடுக்கும் எந்த முடிவும் வைகோவை கட்டுப்படுத்தப் போவதும் இல்லை என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;&lt;strong&gt;செய்தி: தட்ஸ்தமிழ்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1831468623100134403-4045827844501611529?l=newsintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://newsintamil.blogspot.com/feeds/4045827844501611529/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1831468623100134403&amp;postID=4045827844501611529&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/4045827844501611529'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/4045827844501611529'/><link rel='alternate' type='text/html' href='http://newsintamil.blogspot.com/2006/12/blog-post_29.html' title='மதிமுகவிலிருந்து வைகோ நீக்கம்'/><author><name>வலைஞன்</name><uri>http://www.blogger.com/profile/09175459313475586529</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://photos1.blogger.com/blogger2/1027/223567947155778/183/gse_multipart64688.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1831468623100134403.post-3320325896033357040</id><published>2006-12-22T16:54:00.000Z</published><updated>2006-12-22T16:59:21.775Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாலைமலர்'/><title type='text'>மேத்தாவுக்கு சாகித்ய அகாடமி</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;கவிஞர் மு.மேத்தாவுக்கு சாகித்ய அகாடமி விருது&lt;/span&gt;&lt;/strong&gt;: &lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;பிப்ரவரி 20-ந் தேதி வழங்கப்படுகிறது&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;புதுடெல்லி, டிச.22&lt;/span&gt;-&lt;br /&gt;&lt;br /&gt;சிறந்த இலக்கிய படைப்புகளை வழங்கியவர்களுக்கு, உயரிய இலக்கிய விருதான சாகித்ய அகாடமி விருது ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு உரியவர்களை தேர்ந்தெடுக்க, 23 இந்திய மொழிகளை சேர்ந்த வல்லுனர்கள் அடங்கிய தேர்வுக்குழு அமைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் மொழி சார்பில் ஈ.சுந்தரமூர்த்தி, ஆர்.எம்.பெரிய கருப்பன் (தமிழண்ணன்), புவியரசு ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றனர். இக்குழு, பல்வேறு இலக்கிய படைப்புகளை ஆய்வு செய்து விருதுக்கு உரியவர்களை சிபாரிசு செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;7 கவிதைகள், 4 நாவல்கள், 4 சிறுகதை தொகுப்புகள், 3 நாடகங்கள், 3 கட்டுரைகள், ஒரு பயணக்கட்டுரை, ஒரு சுயசரிதை ஆகியவை விருதுக்கு சிபாரிசு செய்யப்பட்டன. இந்த தேர்வுக்கு சாகித்ய அகாடமி போர்டு ஒப்புதல் அளித்தது. இதையடுத்து நேற்று விருதுக்கு உரியவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு பிரபல கவிஞர் மு.மேத்தா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளார். `ஆகாயத்துக்கு அடுத்த வீடு' என்ற கவிதை நூலுக்காக இவருக்கு விருது வழங்கப்படுகிறது. மு.மேத்தா ஏராளமான கவிதைகள் மற்றும் நாவல்களை எழுதி உள்ளார். நிறைய சினிமா பாடல்களையும் எழுதி உள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மற்ற இலக்கியவாதிகள் வருமாறு:-&lt;br /&gt;&lt;br /&gt;கவிஞர்கள் தர்ஷன் தர்ஷி (டோக்ரி மொழி), ஞானேந்திரபதி (இந்தி), ஷபி ஷாக் (காஷ்மீரி), பன்ஷிதர் சாரங்கி (ஒரியா), ஹர்ஷ்தேவ் மாதவ் (சமஸ்கிருதம்),&lt;br /&gt;&lt;br /&gt;நாவலாசிரியர் அமர் மித்ரா (வங்காளம்), ஆஷா போகே (மராத்தி), நாடக ஆசிரியர்கள் அஜ்மீர் சிங் அலக் (பஞ்சாபி), கிரத் பப்தி (சிந்தி),&lt;br /&gt;&lt;br /&gt;சிறுகதை ஆசிரியர்கள் அதல்நந்தா கோஸ்வாமி (அசாமி), விபுதி ஆனந்த் (மைதிலி), எம்.சுகுமாரன் (மலையாளம்), பயண கட்டுரைக்காக சரத்சந்த் தியாம், சுயசரிதைக்காக ஸ்ரீராம் சந்திர மர்மு.&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கில படைப்புக்கான சாகித்ய அகாடமி விருது, பின்னர் அறிவிக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் பிப்ரவரி 20-ந் தேதி நடைபெறும் விழாவில் விருது வழங்கப்படும். இவ்விருது தாமிர பட்டயமும், ரூ.50 ஆயிரத்துக்கான காசோலையும் அடங்கியது ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;&lt;strong&gt;செய்தி: மாலைமலர்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1831468623100134403-3320325896033357040?l=newsintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://newsintamil.blogspot.com/feeds/3320325896033357040/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1831468623100134403&amp;postID=3320325896033357040&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/3320325896033357040'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/3320325896033357040'/><link rel='alternate' type='text/html' href='http://newsintamil.blogspot.com/2006/12/blog-post_22.html' title='மேத்தாவுக்கு சாகித்ய அகாடமி'/><author><name>வலைஞன்</name><uri>http://www.blogger.com/profile/09175459313475586529</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://photos1.blogger.com/blogger2/1027/223567947155778/183/gse_multipart64688.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1831468623100134403.post-3703940496814946224</id><published>2006-12-17T19:50:00.000Z</published><updated>2008-12-09T10:49:12.321Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தினமலர்'/><title type='text'>பதக்கம் பறிப்பு?</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_5od4XniWiEA/RYWiw8Q5ujI/AAAAAAAAAAM/GxaUB6_Tkvg/s1600-h/santhi.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5009589122213984818" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://4.bp.blogspot.com/_5od4XniWiEA/RYWiw8Q5ujI/AAAAAAAAAAM/GxaUB6_Tkvg/s400/santhi.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;பாலின பிரச்னையில் சாந்தி!*&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;ஆசிய விளையாட்டு பதக்கம் பறிப்பு?&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புதுடில்லி: சர்வதேச விளையாட்டு அரங்கில் இந்தியாவுக்கு இன்னொரு அதிர்ச்சி. ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை சாந்தி பாலினம் தொடர்பான பிரச்னையில் சிக்கிக் கொண்டுள்ளார். இவரிடம் பாலின ரீதியாக பெண்ணுக்கான குணாதிசயங்கள் இல்லை என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனால் இவர் வென்ற வெள்ளிப் பதக்கம் பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சமீபத்தில் கத்தார் தலைநகர் தோகாவில் 15வது ஆசிய விளையாட்டு போட்டி நடந்தது. இதில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் மின்னல் வேகத்தில் ஓடிய இந்தியாவின் சாந்தி 2 நிமிடம் 3.16 வினாடிகளில் கடந்து வெள்ளி வன்றார். பதக்கம் வென்ற பிறகு இவர் பெண் தானா...? என்ற சந்தேகத்தை ஒரு வீராங்கனை கிளப்பியுள்ளார். இதையடுத்து பாலின வேறுபாட்டை கண்டறியும் சோதனை நடத்தப் பட்டுள்ளது. ஊக்க மருந்து சோதனை போல் அல்லாமல் யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் மட்டுமே பாலினத்தை கண்டறியும் சோதனை நடத்தப்படும். இதில் பெண்களுக்கான குணயியல்புகள் இல்லை என்ற விபரம் தெரிய வந்துள்ளது. இதையடுத்து சாந்தி வென்ற வெள்ளி பதக்கம் பறிக்கப்பட வாய்ப்பு உள்ளது. ரூ.15 லட்சம்: மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் இருந்து வந்தவர் சாந்தி. இலங்கையை பூர்வீகமாக கொண்ட இவரது பெற்றோர்கள் செங்கல் சூளையில் வேலை பார்க்கிறார்கள். இப் படி வறுமையை வென்று சாதித்ததால் பாராட்டு மழையில் நனைந்தார் சாந்தி. ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்றதும் தமிழக அரசு கூட ரூ. 15 லட்சத்தை பரிசுத் தொகையாக அளித்தது. இந்திய தடகளத்துக்கு இன்னொரு நட்சத்திரம் கிடைத்து விட்டார் என்ற மகிழ்ச்சியில் இருந்தவர்களுக்கு சாந்தி சோதனையில் சிக்கியது பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஊக்க மருந்து: இம்முறை ஆசிய விளையாட்டு போட்டியின் துவக்கத்தில் வட்டு எறிதல் வீராங்கனை சீமாஅன்டில் ஊக்க மருந்து சோதனையில் சிக்கினார். பின்னர் இந்திய விளையாட்டு ஆணையம் விசாரணை நடத்தியதில் இவர் ஊக்க மருந்து உட்கொள்ளவில்லை என தெரிவித்தது. இதையடுத்து பெரும் சிக்கலில் இருந்து தப்பினார். ஆனாலும் மனதளவில் பாதிக்கப்பட்டதாக கூறி போட்டியில் இருந்து விலகுவதாக சீமா அறிவித்தார். இந்த பிரச்னை ஓய்வதற்குள் சாந்தி சர்ச்சை மிகப் பெரும் புயலை இந்திய விளையாட்டு அரங்கில் கிளப்பியுள்ளது. சர்வதேச போட்டிகளுக்கு வீராங்கனைகளை அனுப்பும் போது இனி அனைத்து வகையான சோதனைகளையும் செய்ய வேண்டும். அப்போது தான் பிரச்னைகளுக்கு விமோசனம் பிறக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;சாந்தி சர்ச்சையின் பின்னணி!: ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்ற தமிழக வீராங்கனை சாந்தியின் நிலைமை பரிதாபமாக இருக்கிறது. புகழின் உச்சியில் இருந்த இவர், பாலின சோதனையில் சிக்கிக் கொள்ள பதக்கம் பறிக்கப்படும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளார். சமீபத்தில் கத்தார் தலைநகர் தோகாவில் 15வது ஆசிய விளையாட்டு போட்டி நடந்தது. இதில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டத்தில் தமிழகத்தின் சாந்தி வெள்ளி வென்றார். அப்போது இவர் பெண் தானா என்ற சந்தேகம் மற்ற வீராங்கனைகள் உள்ளிட்ட போட்டி அதிகாரிகளின் மனதில் எழுந்துள்ளது. இதையடுத்து பாலின வேறுபாட்டை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது. இதில் பெண்களுக்கான குணவியல்புகள் இல்லை என்ற விபரம் தெரிய வந்துள்ளது. இந்த விபரம் ஏற்கனவே இந்திய விளையாட்டு அதிகாரிகளுக்கும் தெரியும் என்றும் கூறப்படுகிறது. இது குறித்து முன்னாள் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி உறுப்பினர் அஷ்வின் குமார் கூறுகையில்,""எங்களது காலத்தில் இது போன்ற சோதனைகள் எல்லாம் இல்லை. தற்போது பரிசுத் தொகை அதிகம் என்பதால் தடகள வீரர், வீராங்கனைகள் குறுக்கு வழியில் பதக்கம் வெல்ல முயல்கின்றனர். இதற்காக சிலர் ஊக்க சக்தியை அதிகப்படுத்த பல்வேறு மருந்து பொருட்களை பயன்படுத்துகின்றனர். இது ஹார்மோனில் மாற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. தற்போது பாலினத்தை வேறுபடுத்தி காட்டும் சோதனைகள் மிகப் பெரும் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது,'' என்றார். எந்த அடிப்படை: பாலினம் தொடர்பான சோதனையில் பிறப்பில் பிரச்னை, குரோமோசோம் மாற்றம், ஹார்மோன்களில் குழப்பம் போன்ற வகைகளில் ஆய்வு செய்யப்படும். இதில் சந்தேகத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வீராங்கனை சில நேரங்களில் தப்பலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;சாந்தி மீது எந்த விதமான சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது என்ற விபரம் தெளிவாக தெரியவில்லை. திருச்சியில் இருந்து: சாந்தியின் கிராமம் திருச்சியிலிருந்து 70 கி.மீ., தொலைவில் உள்ளது. வறுமையை கடந்து சாதித்த இவர், புதுக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியில் வணிக நிர்வாகத்தில் பட்டப் படிப்பை முடித்தார். தொடர்ந்து சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் எம்.சி.ஏ., முதுகலைப் படிப்பைத் தொடர்ந்தார். கல்லூரியில் படித்த காலத்திலும் தடகளம், ஹாக்கி, ஈட்டி எறிதல் முதலான விளையாட்டுகளில் ஜொலித்தார். 200506ல் நடந்த தமிழக அளவிலான தடகளப் போட்டியில் தங்கம் வென்றார். ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்று நம்பிக்கை அளித்த இவர், இப்போது மிகப் பெரும் சோதனையில் சிக்கியுள்ளார். இதில் இருந்து மீள்வாரா சாந்தி...? &lt;br /&gt;&lt;br /&gt;பயிற்சியாளர் நழுவல் : &lt;br /&gt;&lt;br /&gt;சாந்தியின் பயிற்சியாளர் நாகராஜ் பிரச்னையில் இருந்து நழுவ பார்த்தார். பிரபல "டிவி'க்கு பேட்டி அளித்த இவர்,""கடந்த இரண்டு வருடங்களாக தான் சாந்தியின் பயிற்சியாளராக இருக்கிறேன். இவர் பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்கள் வென்றுள்ளார். அப்போது எல்லாம் இது போன்ற பிரச்னை எழவில்லை. பாலின சோதனையில் மாட்டிக் கொண்ட விபரம் எதுவும் தெரியாது,''என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;செய்தி: தினமலர்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1831468623100134403-3703940496814946224?l=newsintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://newsintamil.blogspot.com/feeds/3703940496814946224/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1831468623100134403&amp;postID=3703940496814946224&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/3703940496814946224'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/3703940496814946224'/><link rel='alternate' type='text/html' href='http://newsintamil.blogspot.com/2006/12/blog-post_17.html' title='பதக்கம் பறிப்பு?'/><author><name>வலைஞன்</name><uri>http://www.blogger.com/profile/09175459313475586529</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://photos1.blogger.com/blogger2/1027/223567947155778/183/gse_multipart64688.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_5od4XniWiEA/RYWiw8Q5ujI/AAAAAAAAAAM/GxaUB6_Tkvg/s72-c/santhi.jpg' height='72' width='72'/><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1831468623100134403.post-3634424367420423242</id><published>2006-12-15T02:42:00.000Z</published><updated>2006-12-15T02:50:11.985Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தினமலர்'/><title type='text'>பாலசிங்கம் மரணம்</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;புலிகளின் அரசியல் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் மரணம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;லண்டன்: விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும், பிரபாகரனின் நம்பிக்கைக்கு உரியவருமான ஆண்டன் பாலசிங்கம்(68) லண்டனில் நேற்று மரணமடைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சர்வதேச அளவில் விடுதலைப் புலிகளின் அரசியல் நிலைப்பாடுகள் மற்றும் யுத்திகளை வகுப்பதிலும், முக்கிய முடிவுகள் மேற்கொள்வதிலும் பிரதான பங்களிப்பு அளித்து வந்தவர் ஆண்டன் பாலசிங்கம். இவர் விடுதலைப் புலிகளின் சட்டத் தூணாக கருதப்பட்டவர். ராஜிவ் காந்தி கொலை சம்பவத்துக்கு பின்னர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் முதல்முறையாக நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது உடனிருந்த பாலசிங்கம் சர்வதேச நிருபர்களிடம் அனைத்து கேள்விகளுக்கும் சளைக்காமல் பதில் அளித்து சமாளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 1985ம் ஆண்டு திம்புவில் நடந்த பேச்சுவார்த்தையில் துவங்கி, 30 ஆண்டுகளுக்கும் மேலாக விடுதலைப் புலிகளுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்த பாலசிங்கம், சில ஆண்டுகளாக உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டு லண்டன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பாலசிங்கத்துக்கு 35 ஆண்டுகளாக நீரிழிவு நோய் உள்ளது. கடந்த 90ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் செய்து கொண்டார். சமீப காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த நவம்பர் மாதம் உடல் நிலை கடுமையாக மோசமடைந்தது. இவரின் பித்த நாளத்தில் புற்றுநோய் அதிகரித்து கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், நுரையீரல், கல்லீரல், அடிவயிறு மற்றும் எலும்புகளில் புற்றுநோய் வேகமாக பரவியதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவருக்கு லண்டன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில், நேற்றிரவு ஆண்டன் பாலசிங்கம் லண்டனில் மரணமடைந்தார். லண்டனில் உள்ள அவரின் வீட்டில் பாலசிங்கம் மரணமடைந்ததாக அவரது நெருங்கிய உறவினர் தெரிவித்தார். பாலசிங்கத்தின் இறுதிச் சடங்கு லண்டனிலேயே நடக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலசிங்கத்தின் மனைவி ஆடெல். ஆஸ்திரேலியாவில் பிறந்தவர். இருவரும் புலிகளின் விடுதலை இயக்கம் தொடர்பாக பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;உடல் நிலை மோசம் அடைந்ததால் கடந்த அக்டோபர் மாதம் ஜெனிவாவில் நடந்த புலிகள் இலங்கை அரசுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் அவர் பங்கேற்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆரம்ப காலத்தில் இலங்கையில் தமிழ் பத்திரிகையில் பணியாற்றினார். பின்னர் பிரிட்டிஷ் துõதரகத்தில் மொழி பெயர்ப்பாளராக இருந்தார். இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர் லண்டனில் வசித்து வந்தார். பல ஆண்டுகளாக இலங்கைக்கு வராமல் இருந்த பாலசிங்கம் 2002ம் ஆண்டு ஏப்ரல் மாதம் தான் இலங்கை வந்தார். அப்போது தான் இலங்கையில் புலிகளுக்கும், அரசுக்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. இருப்பினும், தொடர்ந்து இலங்கையில் தங்கியிருக்கவில்லை. மீண்டும் லண்டன் திரும்பினார். பின்னர் ஜப்பான், தாய்லாந்து, நார்வே, ஜெர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற புலிகள் மற்றும் இலங்கை அரசுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த 1985ம் ஆண்டு திம்புவில் நடந்த பேச்சுவார்த்தை முதல் கடந்த பிப்ரவரி மாதம் ஜெனிவாவில் நடந்த பேச்சுவார்த்தை வரை புலிகள் தரப்பின் குழுவிற்கு பாலசிங்கமே தலைமை வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;&lt;strong&gt;செய்தி: தினமலர்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1831468623100134403-3634424367420423242?l=newsintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://newsintamil.blogspot.com/feeds/3634424367420423242/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1831468623100134403&amp;postID=3634424367420423242&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/3634424367420423242'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/3634424367420423242'/><link rel='alternate' type='text/html' href='http://newsintamil.blogspot.com/2006/12/blog-post_15.html' title='பாலசிங்கம் மரணம்'/><author><name>வலைஞன்</name><uri>http://www.blogger.com/profile/09175459313475586529</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://photos1.blogger.com/blogger2/1027/223567947155778/183/gse_multipart64688.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1831468623100134403.post-3859084078423035196</id><published>2006-12-13T13:00:00.000Z</published><updated>2006-12-13T13:04:14.124Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாலைமலர்'/><title type='text'>பாராளுமன்ற தாக்குதல் நினைவு!</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;அப்சல் தூக்கு தண்டனையை தாமதப்படுத்துவதா?&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;பாராளுமன்ற தாக்குதலில் உயிர் இழந்த குடும்பத்தினர்&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஜனாதிபதியிடம் பதக்கத்தை திருப்பி கொடுத்தனர்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;புதுடெல்லி, டிச. 13&lt;/span&gt;-&lt;br /&gt;&lt;br /&gt;டெல்லி பாராளுமன்றத்துக் குள் கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 9 பாதுகாப்பு படையினர் பலியானார்கள். பாராளுமன்றத்துக்குள் நுழைந்த தீவிரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த சம்பவத்தில் புகைப்பட கலைஞர் ஒருவரும் பலியானார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த தாக்குதல் தொடர்பாக காஷ்மீர் தீவிரவாதி முகமது அப்சலுக்கு டெல்லி கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. தூக்கில் போடுவதற்கு கோர்ட்டு நாள்குறித்த நிலை யில் அப்சல் மற்றும் அவனது குடும்பத்தினர் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியதால் தண்டனை நிறைவேற்றப்பட வில்லை. கருணை மனு மீது இன்னும் மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு எடுக்காமல் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;பாராளுமன்ற தாக்குதல் சம்பவம் நடந்து இன்றுடன் 5 ஆண்டுகள் ஆகிறது. அப் சலுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதற்கு பாராளுமன்ற தாக்குதலில் பலியானவர்களின் மனைவி மார்கள் மற்றும் குடும்பத்தினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்று அவர்கள் டெல்லி யில் ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணி சென்றனர். உயிர்நீத்த போலீஸ்காரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய "அமர்ஜோதி ஜவான்'' விருதையும், பதக்கத்தையும் ஜனாதிபதி மாளிகையில் திரும்ப ஒப்படைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;தீவிரவாதிகளை எதிர்த்து போராடி உயிர்நீத்த டெல்லி போலீஸ் உதவி சப்-இன்ஸ் பெக்டர் நானக் சந்த்தின் மனைவி கங்கா தேவி. விதவையான இவர் ஆவேசத்துடன் கூறியதாவது:-&lt;br /&gt;&lt;br /&gt;எனது கணவர் இந்த நாட் டுக்காக தீவிரவாதிகளை எதிர்த்து போராடி உயிர் நீத் தார். அவரது தியாகத்தை மத்திய அரசு நினைத்துப் பார்க்க வேண்டும். எனது கணவரின் தியாகத்துக்காக `அமர் ஜவான் ஜோதி' விருதும் மெடலும் வழங்கப்பட்டுள்ளது. மெடல் வழங்கினால் மட்டும் போதாது. உயிர் நீத்தவர்களின் தியாகத்தை மதிக்க வேண்டும். தீவிரவாதி அப்சலை உடனே தூக்கில் போட வேண்டும் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;கணவரை இழந்த மேலும் ஒரு பெண் கூறும்போது, என் கணவரது தியாகத்துக்கு மதிப்பு அளிக்க வேண்டும், அப்சலின் தூக்கு தண்ட னையை நிறைவேற்றுவது தொடர்பாக முடிவு எடுப்பதில் மத்திய அரசு காலம் தாழ்த்தக் கூடாது. சம்பவம் நடந்து 5 ஆண்டுகள் ஆகி விட்டன. இதில் முடிவு எடுக்க தாமதிப்பதால் எங்களுக்கு வழங்கப்பட்ட மெடல்களை அரசிடம் திரும்ப ஒப்படைக்கிறோம் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பலியான போலீஸ்காரர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக தீவிரவாத தடுப்பு முன்னணி தலைவரான மனீந்தர் சிங் பிட்டா, முன்னாள் உளவுத்துறை இயக்குனர் அஜீத் கே.டோவல் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;பிட்டா கூறுகையில், அப்ச லுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகள் குரல் கொடுக்கின்றன. அவர்கள் அப்சலை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள். அதற்கு ஒரு போதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்சலை தூக்கில் போடுவது தொடர்பாக மத்திய அரசு முடிவு எடுப்பதில் தேவையில்லாமல் காலம் கடத்து வதாக பலியான போலீஸ்காரர்களின் குடும்பத்தினர் பலர் குறை கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே அப்சல் தூக்கு தண்டனை விவாகரம் குறித்து டெல்லி மேல்- சபையில் பாரதீய ஜனதா உறுப்பினர்கள் பிரச்சினையை எழுப்பினார்கள். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து பிற்பகல் வரை சபை ஒத்திவைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;முன்னதாக டெல்லி மேல்-சபையிலும், பாராளுமன்றத்திலும் பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;செய்தி: மாலைமலர்&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1831468623100134403-3859084078423035196?l=newsintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://newsintamil.blogspot.com/feeds/3859084078423035196/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1831468623100134403&amp;postID=3859084078423035196&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/3859084078423035196'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/3859084078423035196'/><link rel='alternate' type='text/html' href='http://newsintamil.blogspot.com/2006/12/blog-post_7660.html' title='பாராளுமன்ற தாக்குதல் நினைவு!'/><author><name>வலைஞன்</name><uri>http://www.blogger.com/profile/09175459313475586529</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://photos1.blogger.com/blogger2/1027/223567947155778/183/gse_multipart64688.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1831468623100134403.post-554835528490101183</id><published>2006-12-13T02:40:00.000Z</published><updated>2006-12-13T02:45:02.492Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தினமலர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்நாடு'/><title type='text'>என்கவுண்டரில் 'பங்க்'குமார்.</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;பிரபல ரவுடி "பங்க்' குமார் "என்கவுன்டரில்' சுட்டுக்கொலை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை: கொலை, ஆளை கடத்தி பணம் பறிப்பு, கொலை முயற்சி, கட்டப் பஞ்சாயத்து உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி "பங்க்' குமார் நேற்றிரவு சென்னையில் என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டான். இவன் மீது நாற்பது வழக்குகள் உள்ளன. சென்னை சைதாப்பேட்டை கொத்தவால்சாவடி தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் குமார் என்ற "பங்க்' குமார் என்ற கொத்தவால் சாவடி குமார்(36). சென்னை நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ., பட்டதாரியான பங்க் குமார், கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போதே நண்பர்களுடன் சேர்ந்து ரவுடி கும்பலை உருவாக்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;கட்டப் பஞ்சாயத்து உட்பட பல்வேறு சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தான். கடந்த 1992ம் ஆண்டில் பரமசிவம் என்பவரை மாம்பலம் பகுதியில் கொலை செய்தான். இவ்வழக்கில் அவன் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டான். இதையடுத்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டான். பிரபல ரவுடியாக வளர்ந்து வந்த "பங்க்'குமார் தென் சென்னை பகுதியில் சைதாப்பேட்டை, தாம்பரம், குமரன் நகர், வேளச்சேரி உட்பட்ட பகுதியில் தனது ஆதிக்கத்தை வளர்த்தான். கடந்த 1993ம் ஆண்டில் சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு வெளியே இரண்டு கைதிகளை வெட்டிக் கொலை செய்தான். இந்த இரட்டை கொலை தான் "பங்க்' குமாருக்கு தென் சென்னை தாதா என்ற பெயரை பெற்று தந்தது. கடந்த பத்து ஆண்டுகளாக ரவுடி ஆதிக்கத்தை தென் சென்னை பகுதியில் நடத்தி வந்தான். அ.தி.மு.க., ஆட்சியில் "பங்க்' குமாரை என்கவுன்டரில் தீர்த்துக் கட்ட போலீசார் நேரம் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், அப்போது மத்திய அமைச்சரின் காரிலேயே சுற்றித் திரிந்து கொண்டிருந்ததால், தப்பித்துக் கொண்டான். தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் "பங்க்' குமாரின் செயல்கள் மீண்டும் தலையெடுத்தன. மயிலாப்பூரில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள "ஷாப்பிங்' கட்டடத்தை அடிமாட்டு விலைக்கு ஏலத்தில் வாங்கிய நபருக்கு ஆதரவாக களம் இறங்கினான். இந்த ஏலத்தில் வேறு யாரும் கலந்து கொள்ளாதபடி "பங்க்' குமார் இருபது கார்களில் 60 அடியாட்களுடன் வந்து மயிலாப்பூரை கலக்கினான். இதுவே தி.மு.க., ஆட்சிக்கு பெரும் கெட்ட பெயரை தேடிக் கொடுத்தது. போலீஸ் அதிகாரிகளுக்கும் அவன் பயப்படாமல் தனது வேலைகளை நடத்திக் கொண்டிருந்தான். ரியல் எஸ்டேட் அதிபர்களை மிரட்டி பணம் வசூல் செய்து வந்தான். கடந்த 9ம் தேதி மேற்கு மாம்பலத்தில் ரியல் எஸ்÷ட் தொழில் செய்து வரும் பஷீர் என்பவரை மிரட்டி 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டான். இது தொடர்பாக அவர் கமிஷன் லத்திகா சரண், கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் ஆகியோரிடம் புகார் கொடுத்தார். புகாரை வாங்கிய மத்திய குற்றப்பிரிவு போலீசார் "பங்க்' குமார் மீது கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்தனர். அவனது நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்து வந்தனர். திருநீர்மலைக்கு உட்பட்ட சீனிவாசன் நகர் பைபாஸ் சாலையில் நேற்று மாலை 7 மணிக்கு "பங்க்' குமார் மற்றும் அவனது கூட்டாளிகள் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தில்லை நடராஜன், சப்இன்ஸ்பெக்டர்கள் பூமாறன், ரவிக்குமார் ஆகியோர் தலைமையில் சென்ற போலீஸ் படையினர் "பங்க்' குமாரை மடக்கி பிடிக்க முற்பட்டனர். அப்போது தப்பி ஓடிய "பங்க்' குமார் நான்கு வெடிகுண்டுகளை போலீசார் மீது வீசினான். அதில் இரண்டு குண்டுகள் வெடித்தது. மற்ற இரண்டு குண்டுகளையும் அதே இடத்தில் போட்டு விட்டு டாடா சுமோ காரில் "பங்க்' குமார் தப்பினான். பின் தொடர்ந்த போலீஸ் படையினர் மீது தாக்குதல் நடத்தினான். அப்போது இன்ஸ்பெக்டர் நடராஜன் தனது துப்பாக்கியால் "பங்க்' குமார் மீது சுட்டார். மயங்கி விழுந்த "பங்க்' குமாரை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு எடுத்து சென்றனர். அங்கு "பங்க்' குமாரை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து செங்கல்பட்டு ஆர்.டி.ஓ.,வுக்கு போலீசார் தகவல் அறிக்கையை அனுப்பியுள்ளனர். காயம் அடைந்த சப்இன்ஸ்பெக்டர்கள் இருவரும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பா.ம.க.,வில் எம்.எல்.ஏ., "சீட்' கேட்ட "பங்க்' குமார் சென்னையைச் சேர்ந்த பங்க் குமார் ஆள் கடத்தல், கட்டப் பஞ்சாயத்து, கொலை, கொள்ளை போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபட்டு வந்தான். வன்னியர் சமூகத்தைச் சேர்ந்த பங்க் குமார் பா.ம.க., கட்சியில் சில ஆண்டுகளுக்கு முன்னர் இணைந்தான். பா.ம.க.,வில் உள்ள முக்கிய தலைவர்களுடன் நெருக்கமானான். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் சைதாப்பேட்டை தொகுதி பா.ம.க.,வுக்கு ஒதுக்கப்பட்டது. ரவுடியாக இருந்த பங்க் குமார் அரசியலில் பெரிய ஆளாக வர வேண்டும் விரும்பி "சீட்' கேட்டான். ஆனால், பா.ம.க., தலைமை பங்க் குமாருக்கு "சீட்' கொடுக்கவில்லை. கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பங்க் குமாரின் ரவுடிக் கும்பலைச் சேர்ந்தவர்கள் தி.நகர், சைதாப்பேட்டை போன்ற பல சட்டசபை தொகுதிகளில் கள்ள ஓட்டுகள் போட்டு பிரச்னை செய்தனர். "பங்க்' குமாரின் கொடூர கொலைகள்... நந்தனம் அரசு கலைக் கல்லூரியில் படித்தவன் "பங்க்' குமார். இவனது நண்பன் உமர். கடந்த 1991ம் ஆண்டு சம்பத் மற்றும் புருஷோத்தமன் ஆகியோர் உமரை வெட்டிக் கொலை செய்தனர். உயிர் நண்பனை வெட்டிக் கொன்றதும் ஆத்திரமடைந்தான் "பங்க்' குமார். உமர் சமாதிக்கு சென்றவன் "உன்னை வெட்டிக் கொன்றவர்களை பழிக்குப்பழி வாங்குவேன்' என்று ரத்த சபதம் செய்தான். அந்த சபதத்தை நிறைவேற்ற 1992ம் ஆண்டு உமரை வெட்டிக் கொன்ற கொலை கும்பலில் இடம் பெற்ற பரமசிவம் என்ற ரவுடியை "பங்க்' குமார் கொலை செய்தான். இது தான் அவனது முதல் கொலை. தாம்பரத்தில் மனைவியுடன் இருந்தான் பரமசிவம். அந்த வீட்டிற்குள் ஓட்டை பிரிந்து "பங்க்' குமாரும் அவனது நண்பர்களும் குதித்தனர். வீட்டில் இருந்த மனைவி மற்றும் குழந்தைகள் கண் முன்னே பரமசிவத்தை வெட்டிக் கொலை செய்தான் "பங்க்' குமார். அந்த ரத்தத்தை எடுத்து, பரமசிவன் மனைவி வாயில் ஊற்றினான். உமர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பத்தையும் புருஷோத்தமனையும் சைதாப்பேட்டை கோர்ட்டுக்கு வெளியே 1994ம் ஆண்டு "பங்க்' குமார் வெட்டி சாய்த்தான். போலீஸ் பாதுகாப்போடு வந்த இரண்டு பேரையும் கொலை செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட "பங்க்' குமாருக்கு எதிராக யாரும் சாட்சி சொல்லாத காரணத்தால், கொலை செய்த வழக்கில், கைது செய்யப்பட்ட "பங்க்' குமாருக்கு எதிராக யாரும் சாட்சி சொல்லாத காரணத்தால், விடுதலை செய்யப்பட்டான். அடுத்து 95ம் ஆண்டு, முருகன் என்ற பரட்டை முருகனை "பங்க்' குமாரும் அவனது நண்பர்களும் தீர்த்துக் கட்டினர். இதன் பின்னர் கட்டப் பஞ்சாயத்தில் ஈடுபட்டான். பின்னர் தொழிலதிபர்களை மிரட்டி பணம் பறிக்கத் தொடங்கினான். அடுத்து தி.மு.க., ஆட்சி வந்ததும் தி.மு.க.,வினரை கடுமையாக எதிர்த்தான். தி.மு.க., ஆட்சியில் கான்ட்ராக்டர் தெய்வசிகாமணி என்பவரை கடத்தி பணம் பறிக்க முற்பட்ட வழக்கிலும் போலீசார் அவனை தேடினர். மீண்டும் 2001ம் ஆண்டு அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் தனது செயல்களை குறைத்துக் கொண்டான். அ.தி.மு.க., ஆட்சியில் "பங்க்' குமாருக்கு இரண்டு முறை போலீசார் குறி வைத்தனர். சைதாப்பேட்டை கோர்ட் அருகே அவனை மடக்கிப்பிடிக்க போலீசார் காத்திருந்த போது, ஜட்டியுடன் ஆற்றில் குதித்து ஓடிவிட்டான். "பங்க்' குமார் ஏழு முறை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறை சென்றவன். அவன் மீது மொத்தம் 40 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;ரவுடிகள் மீதான நடவடிக்கை தொடரும் * கமிஷனர் லத்திகா சரண் பேட்டி பிரபல ரவுடி "பங்க்' குமார் சுட்டுக் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவனது உடல் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டது. நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மருத்துவமனைக்கு வந்த போலீஸ் கமிஷனர் லத்திகா சரண், கூடுதல் கமிஷனர் ஜாங்கிட் ஆகியோர் கூறுகையில், ""பிரபல ரவுடி பங்க் குமார் மீது 30க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன. இவன் ஏழு முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறை சென்று வந்துள்ளான். மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபரான பஷீர் என்பவரிடம் 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளான். பணத்தை கொடுக்க தாமதமாகவே மேலும் ஐந்து லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று மிரட்டல் விடுத்துள்ளான். இதையடுத்து, பஷீர் போலீசில் புகார் செய்தார். இப்புகாரின் அடிப்படையில் "பங்க்' குமாரை கைது செய்ய மத்திய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் தில்லை நடராஜன், எஸ்.ஐ., சுகுமாறன், ரவிக்குமார் மற்றும் நான்கு ஏட்டுக்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அனகாபுத்துõர் சீனிவாசபுரம் விரிவு அருகே பங்க் குமாரை கைது செய்ய முயன்ற போது இன்ஸ்பெக்டர் தில்லைநடராஜனை அரிவாளால் அவன் வெட்ட முயன்றான். இதை தொடர்ந்து அவனுடன் இருந்த கூட்டாளி மூன்று பேரும் நாட்டு வெடிகுண்டை வீசி போலீசாரை தாக்கினர். இதில், மூன்று போலீசார் காயமடைந்தனர். இதை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் தில்லைநடராஜன் தற்காப்பிற்காக தனது துப்பாக்கியால் பங்க் குமாரை சுட்டுள்ளார். சென்னையில் மொத்தம் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ரவுடிகள் உள்ளனர். அவர்கள் மீதான நடவடிக்கை தொடரும்,'' என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஜாங்கிட் தனிப்படையின் தளபதி தில்லை நடராஜன் தமிழகத்தில் வடமாநில கொள்ளை கும்பல் அட்டகாசத்தில் ஈடுபட்டது. வடக்கு மண்டல ஐ.ஜி.,யான ஜாங்கிட் வடமாநில கொள்ளை கும்பலை பிடிக்க வியூகம் வகுத்தார். அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் எஸ்.ஐ.,யாக இருந்தவர் தில்லை நடராஜன். துப்பாக்கி சுடுவதில் கெட்டிக்காரர். இவரை தனிப்படையில் சேர்த்தார் ஜாங்கிட். வடமாநில கொள்ளைக்காரன் பவாரியா என்கவுன்டரில் முக்கிய பங்காற்றியவர் தில்லை நடராஜன். பதவி உயர்வில் இன்ஸ்பெக்டரான தில்லை நடராஜன் புறநகரில் வேலை பார்த்து வந்தார். ஒரு மாதத்திற்கு முன்னர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள மாநகர ரவுடிகள் கண்காணிப்பு பிரிவு இன்ஸ்பெக்டராக நியமிக்கப்பட்டார். நேற்று பங்க் குமாரை என் கவுன்டர் செய்தவரும் தில்லை நடராஜன் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பல பெண்களின் வாழ்க்கையை சீரழித்தவன்... "பங்க்' குமாரின் கொலைகளும், கட்டப்பஞ்சாயத்து விவகாரங்களும் வெளியே தெரிந்தன. ஆனால், அவனது பல அட்டூழியங்கள் வெளியே வரவில்லை. சைதாப்பேட்டை மற்றும் மாம்பலம் பகுதியில் வசித்தவர்களுக்கு மட்டுமே இது தெரிந்த விஷயம். அழகான பெண்களை கண்டால், தனது வேலைகளை காட்டத் தொடங்கிவிடுவான். அந்த பெண்ணின் வீட்டை கண்டுபிடித்து, ராத்திரியில் அந்த வீட்டுக்கு போய்விடுவான். இப்படி பல பெண்களை மானப்பங்கம் செய்தவன் "பங்க்' குமார். இப்படி பாதிக்கப்பட்டவர்கள் யாருமே புகார் கொடுத்தது கிடையாது. காரணம், குடும்ப மானம் போய்விடும் என்பதால். மாம்பலத்தில் ஒரு நபரின் வீட்டில் இருந்த பெண் மீது கண் வைத்த இவன், பல ராத்திரியில் அந்த வீட்டிற்கு சென்றுவிட்டான். அந்த குடும்பத்தில் இருப்பவர்களால் வெளியே சொல்லவும் முடியவில்லை. அவனை எதிர்த்து போராடவோ, புகார் கொடுக்கவோ தைரியம் இல்லாதவர்கள். அந்த குடும்பம் கடைசியில் வீட்டை காலி செய்து கொண்டு, எங்கோ சென்றுவிட்டது. இப்படி பல பெண்களின் வாழ்வை சீரழித்தவன் தான் "பங்க்' குமார். கடைசியில் மனைவியின் தங்கையான ஹேமாவையும் துப்பாக்கி முனையில் பெங்களூருக்கு கடத்திச் சென்று கற்பழித்தான். இது தொடர்பாக மட்டுமே விருகம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் ஒன்று பதிவானது. மற்றபடி அவனால், பாதிக்கப்பட்ட எந்த பெண்ணும் போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;&lt;strong&gt;செய்தி: தினமலர்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1831468623100134403-554835528490101183?l=newsintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://newsintamil.blogspot.com/feeds/554835528490101183/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1831468623100134403&amp;postID=554835528490101183&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/554835528490101183'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/554835528490101183'/><link rel='alternate' type='text/html' href='http://newsintamil.blogspot.com/2006/12/blog-post_13.html' title='என்கவுண்டரில் &apos;பங்க்&apos;குமார்.'/><author><name>வலைஞன்</name><uri>http://www.blogger.com/profile/09175459313475586529</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://photos1.blogger.com/blogger2/1027/223567947155778/183/gse_multipart64688.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1831468623100134403.post-7349950740858604289</id><published>2006-12-06T04:50:00.000Z</published><updated>2006-12-06T04:55:29.735Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தினத்தந்தி'/><title type='text'>சிபுசோரனுக்கு ஆயுள்சிறை!</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;கொலை வழக்கில் கைதான முன்னாள் மத்திய மந்திரி&lt;br /&gt;சிபுசோரனுக்கு ஆயுள் தண்டனை&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#009900;"&gt;ரூ. 5 லட்சம் அபராதமும் விதித்து டெல்லி கோர்ட்டு தீர்ப்பு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கொலை வழக்கில் கைதான முன்னாள் மத்திய மந்திரி சிபுசோரனுக்கு ஆயுள் தண்டனை வழங்கி டெல்லி கோர்ட்டு தீர்ப்பு கூறியது. மேலும் ரூ.5 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;புதுடெல்லி, டிச.6-&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;முன்னாள் மத்திய மந்திரியும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான சிபுசோரனிடம் உதவியாளராக இருந்தவர் சசிநாத் ஜா.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் கடந்த 1994-ம் ஆண்டு டெல்லியில் உள்ள அவரது வீட்டில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இக்கொலை குறித்து சி.பி.ஐ. புலன் விசாரணை நடத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;5 பேர் மீது வழக்கு&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;கொலையில் சிபுசோரனுக்கு முக்கிய பங்கு இருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்தது. அவர் தீட்டிய சதித்திட்டப்படி, நந்தகிஷோர் மேத்தா, சைலேந்திர பட்டாச்சார்யா, பசுபதிநாத் மேத்தா, அஜய்குமார் மேத்தா ஆகியோர் இந்த கொலையை செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 1998-ம் ஆண்டு சிபுசோரன் உள்பட 5 பேர் மீதும் சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு விசாரணை டெல்லியில் உள்ள சி.பி.ஐ. கோர்ட்டில் நடந்து வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;குற்றவாளி&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;இதற்கிடையே, மன்மோகன்சிங் அரசில் சிபுசோரன் மத்திய மந்திரியாக பதவி ஏற்றார். இருப்பினும் விசாரணை தொடர்ந்து நடந்தது. கடந்த 28-ந் தேதி இவ்வழக்கில் நீதிபதி பி.ஆர்.கேதியா தீர்ப்பு அளித்தார். சிபுசோரன் உள்பட 5 பேரும் குற்றவாளிகள் என்று அவர் தீர்ப்பு அளித்தார். தீர்ப்பை கேட்பதற்காக கோர்ட்டுக்கு வந்திருந்த சிபுசோரனை கோர்ட்டு வளாகத்திலேயே போலீசார் கைது செய்தனர். அவர் தனது மந்திரி பதவியை ராஜினாமா செய்தார். அதை பிரதமர் மன்மோகன்சிங் ஏற்றுக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;கைது செய்யப்பட்ட சிபுசோரன், நெஞ்சுவலி காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதனால் அவருக்கு தண்டனை விவரம் அறிவிப்பதில் சில நாட்கள் தாமதம் ஏற்பட்டது. சிகிச்சை முடிவடைந்து சிபுசோரன், டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;பரபரப்பு விவாதம்&lt;br /&gt;&lt;br /&gt;அதையடுத்து, நேற்று சி.பி.ஐ. கோர்ட்டில் சிபுசோரன் உள்ளிட்ட 5 பேருக்கு தண்டனை வழங்குவது குறித்து பரபரப்பு விவாதம் நடைபெற்றது. சிபுசோரன், கோர்ட்டில் ஆஜர்படுëத்தப்பட்டார். சிபுசோரன் தரப்பு வக்கீல் ஆனந்த், சிபுசோரனுக்கு குறைந்த தண்டனை அளிக்குமாறு வாதாடினார். அவர் வாதிடுகையில் கூறியதாவது:-&lt;br /&gt;&lt;br /&gt;சிபுசோரன், ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக பாடுபட்டவர். அம்மாநிலத்தின் பழங்குடி மக்கள் மேம்பாட்டுக்காக பாடுபட்டவர். எனவே தண்டனையை நிர்ணயிக்கும்போது அவரது தகுதியையும், பின்னணியையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அவர் சமூகத்துக்கு அச்சுறுத்தலாக இருக்க மாட்டார். எனவே அவரை நிபந்தனைகளுடன் விடுதலை செய்யலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு ஆனந்த் வாதாடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;சி.பி.ஐ. வக்கீல் கோரிக்கை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சி.பி.ஐ. வக்கீல் ஏ.கே.சிங் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். அவர் கூறியதாவது:-&lt;br /&gt;&lt;br /&gt;சிபுசோரன் உத்தரவின் பேரில் நந்தகிஷோர் மேத்தா இந்த படுகொலையை செய்தார். சிபுசோரனிடமிருந்து அரசியல் ஆதாயம் பெறும் நோக்கத்தில் கொலை செய்ய நந்தகிஷோர் மேத்தா சம்மதித்தார். அவர் சசிநாத் ஜாவை தனது வீட்டுக்கு விருந்துக்கு வருமாறு அழைத்தார். அங்கு வந்த சசிநாத் ஜாவை ரகசியமாக கொலை செய்தார். இதற்காக அவருக்கு சட்டசபை தேர்தலில் போட்டியிட சிபுசோரன் டிக்கெட் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், நரசிம்மராவ் அரசு மீதான நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு எதிராக ஓட்டு போட ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர்கள் லஞ்சம் வாங்கியது, சசிநாத் ஜாவுக்கு தெரிந்து விட்டதால்தான் அவர் கொல்லப்பட்டு உள்ளார். எனவே, இது சாதாரண குற்றம் அல்ல. அசாதாரண சூழ்நிலையில் சசிநாத் ஜா கொலை செய்யப்பட்டு இருப்பதால், சிபுசோரனை விடுவிக்க கோருவது ஏற்புடையது அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மரண தண்டனை அளிக்க வேண்டும்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தன் மீது சசிநாத் ஜா வைத்திருந்த நம்பிக்கையை சிபுசோரன் சீர்குலைத்து விட்டார். எனவே இந்த வழக்கு அரிதினும், அரிதான வழக்காக இருப்பதால், குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும். கொலைக்கு சதித்திட்டம் தீட்டியதில் சிபுசோரன் முக்கியப்பங்கு வகித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;ராஜீவ் காந்தி கொலை வழக்கு, பாராளுமன்றம் தாக்கப்பட்ட வழக்கு ஆகியவற்றில் நேரடியாக காரியத்தில் ஈடுபட்டவர்களுக்கு அளித்த அதே தண்டனை, சதித்திட்டம் தீட்டியவர்களுக்கும் அளிக்கப்பட்டு உள்ளது. எனவே, இந்த வழக்கில் சதித்திட்டம் தீட்டிய சிபுசோரனுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு அவர் வாதாடினார்.&lt;br /&gt;&lt;br /&gt;இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி பி.ஆர்.கேதியா, மாலை 4.30 மணிக்கு தண்டனை விவரம் அறிவிக்கப்படும் என்றார். அதன்படி தண்டனை விவரத்தை அறிய மாலை 4.30 மணிக்கு பத்திரிகையாளர்கள் கோர்ட்டு முன்பு திரண்டனர். ஆனால் மாலை 5.30 மணிக்கு தள்ளி வைப்பதாக நீதிபதி அறிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;ஆயுள் தண்டனை&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;அதன்படி, மாலை 5.30 மணிக்கு நீதிபதி பி.ஆர்.கேதியா தண்டனை விவரத்தை அறிவித்தார். சிபுசோரன் உள்பட 5 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிப்பதாக அவர் அறிவித்தார். மேலும், சிபுசோரனுக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்தார். இந்த தொகையில் ரூ.1 லட்சத்தை சசிநாத் ஜாவின் தாயாருக்கும், தலா ரூ.2 லட்சத்தை சசிநாத் ஜாவின் 2 மகள்களுக்கும் பிரித்து அளிக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;குற்றவாளிகளான மற்ற 4 பேரும் தலா ரூ.15 ஆயிரம் அபராதம் செலுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். தீர்ப்பை கேட்டவுடன் சிபுசோரன் அதிர்ச்சி அடைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அப்பீல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்ய சிபுசோரன் உள்ளிட்ட 5 பேருக்கும் 3 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. சிபுசோரன் தற்போது எம்.பி. ஆக உள்ளார். இருப்பினும் தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்தால், அவரது எம்.பி. பதவிக்கு ஆபத்து இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தண்டனையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யப்போவதாக சிபுசோரனின் வக்கீல் நிருபர்களிடம் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;&lt;strong&gt;செய்தி: தினத்தந்தி.&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1831468623100134403-7349950740858604289?l=newsintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://newsintamil.blogspot.com/feeds/7349950740858604289/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1831468623100134403&amp;postID=7349950740858604289&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/7349950740858604289'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/7349950740858604289'/><link rel='alternate' type='text/html' href='http://newsintamil.blogspot.com/2006/12/blog-post.html' title='சிபுசோரனுக்கு ஆயுள்சிறை!'/><author><name>வலைஞன்</name><uri>http://www.blogger.com/profile/09175459313475586529</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://photos1.blogger.com/blogger2/1027/223567947155778/183/gse_multipart64688.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1831468623100134403.post-2164611221374442324</id><published>2006-11-24T12:07:00.000Z</published><updated>2006-11-24T12:11:01.578Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தட்ஸ்தமிழ்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><title type='text'>கருணாநிதிக்கு சால்வை போட்ட சரத்-ராதாரவி</title><content type='html'>&lt;a href="http://tinypic.com" target="_blank"&gt;&lt;img alt="Image and video hosting by TinyPic" src="http://i7.tinypic.com/4g5znnd.jpg" align="right" border="0" /&gt;&lt;/a&gt;&lt;span style="font-size:85%;"&gt;நவம்பர் 24, 2006&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்னை: சென்னையில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் கருணாநிதிக்கு, சமீபத்தில் அதிமுகவிலிருந்து விலகிய நடிகர் சரத்குமார் சால்வை அணிவித்து வணங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;தனது மனைவி ராதிகா சகிதமாக திமுகவை விட்டு அதிமுகவில் இணைந்த சரத்குமார் சமீபத்தில் அங்கிருந்து விலகினார். அவரை தனிக் கட்சி ஆரம்பிக்கக் கோரி நாடார் இன பிரமுகர்கள் நெருக்கி வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நாடார் சமூகப் பிரமுகர்கள் பலருடன் அவர் ரகசிய ஆலோசனைகள் நடத்தி வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந் நிலையில் திரைப்படத் தயாரிப்பாளர் கே.ராஜனின் மகன் கே.ஆர். சுரேஷ் திருமணம் சென்னை வடபழனி முருகன் கோவிலில் நடந்தது. தி.நகரில் உள்ள நடிகர் சங்க சுவாமி சங்கரதாஸ் கலையரங்கில் வரவேற்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் முதல்வர் கருணாநதி கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வதித்தார். அப்போது அங்கு வந்த நடிகர் சரத்குமாரும், நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதாரவியும் (இவர் அதிமுகவில் ஓரம் கட்டப்பட்ட நிலையில் இருக்கிறார்) கருணாநிதிக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதி¬கவிலிருந்து விலகிய சரத்குமாரும், ஜெயலலிதாவின் ஹிட் லிஸ்ட்டில் இருப்பவருமான ராதாரவியும் கருணாநிதிக்குப் பொன்னாடை போர்த்தி வரவேற்றது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;விரைவில் ராதாரவிக்கு அதிமுக ஆப்பு வைக்கும் எனத் தெரிகிறது. ஏற்கனவே அதை எதிர்பார்த்துக் காத்திருக்கும் ராதாரவியும் திமுகவில் சேர நோட்டம் விட்டுக் கொண்டிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந் நிலையில் சரத்துடன் போய் கருணாநிதிக்கு அவரும் பொன்னாடை போர்த்தியிருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;திமுகவிலிருந்து விலகிய பின்னர் கருணாநிதியை சரத்குமார் சந்திக்கவில்லை. சமீபத்தில் திரையுலகம் சார்பில் நடந்த கருணாநதிக்குப் பாராட்டு விழாவிலும் ராதிகா தான் கலந்து கொண்டாரே (இதனால் தான் அவரை கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா) தவிர சரத்குமார் கலந்து கொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இந் நிலையில் முதல் முறையாக அவர் கருணாநிதியை சந்தித்து பொன்னாடை போர்த்தியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;&lt;strong&gt;செய்தி: தட்ஸ்தமிழ்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1831468623100134403-2164611221374442324?l=newsintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://newsintamil.blogspot.com/feeds/2164611221374442324/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1831468623100134403&amp;postID=2164611221374442324&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/2164611221374442324'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/2164611221374442324'/><link rel='alternate' type='text/html' href='http://newsintamil.blogspot.com/2006/11/blog-post_725.html' title='கருணாநிதிக்கு சால்வை போட்ட சரத்-ராதாரவி'/><author><name>வலைஞன்</name><uri>http://www.blogger.com/profile/09175459313475586529</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://photos1.blogger.com/blogger2/1027/223567947155778/183/gse_multipart64688.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://i7.tinypic.com/4g5znnd_th.jpg' height='72' width='72'/><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1831468623100134403.post-1973726226298807906</id><published>2006-11-24T06:00:00.000Z</published><updated>2006-11-24T06:11:04.570Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்நாடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தினமணி'/><title type='text'>முல்லைப் பெரியாறு!</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;தமிழக அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் பெரியாறு அணையை ஆய்வு செய்யாமல் பாதியிலேயே திரும்பிய கடற்படை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#009900;"&gt;பெரியாறு அணையை வியாழக்கிழமை ஆய்வு செய்ய வந்த கொச்சி கடற்படை நிபுணர் குழுவினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;தேனி, நவ. 24: முல்லைப் பெரியாறு அணையை வியாழக்கிழமை ஆய்வு மேற்கொள்ளச் சென்ற கொச்சி (கேரளம்) கடற்படை நிபுணர் குழுவுக்கு, தமிழக பொதுப்பணித் துறை அதிகாரிகள் அனுமதியளிக்க மறுத்தனர். இதையடுத்து, முழுமையாக ஆய்வு செய்யாமல் அந்தக் குழுவினர் பாதியிலேயே திரும்பினர்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாறு அணை நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அமல்படுத்த மறுத்து, கேரள அரசு மறு பரிசீலனை செய்யக் கோரி மனுத் தாக்கல் செய்தது. அம்மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் இது தொடர்பாக உச்ச நீதிமன்ற அறிவுரையின்படி, தில்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சைபுதீன் சோஸ் முன்னிலையில் தமிழக, கேரள முதல்வர்கள் நவ. 29-ம் தேதி பேச்சு நடத்த உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் கேரள அரசு திடீரென கொச்சி கடற்படை நிபுணர்கள் குழுவை அனுப்பி அணையை ஆய்வு மேற்கொள்ள உத்தரவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து, கடற்படை கமாண்டர் கே.என். ரெட்டி தலைமையில் உதவி கமாண்டர் தினேஷ் சிங்கர் உள்பட நீர்மூழ்கி வீரர்களுடன், கடற்படை அலுவலர்கள் வியாழக்கிழமை பெரியாறு அணைப் பகுதிக்குச் சென்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது, தமிழக பொதுப்பணித் துறையைச் சேர்ந்த அணை செயற் பொறியாளர் பாஸ்கரன், கண்காணிப்பாளர் சுந்தர்ராஜன் ஆகியோரின் கேமராவை கேரள போலீஸôர் பறித்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அணைப் பகுதியில் நீர்க்கசிவு ஏற்படும் அளவைக் குறிக்கும், காலரி பகுதியை பார்வையிடச் சென்றபோது, தமிழகப் பொறியாளர்கள் முன் அனுமதியின்றி ஆய்வு செய்யக் கூடாது எனக் கூறி காலரியை திறந்துவிட மறுத்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் கேரள, தமிழக அலுவலர்களிடையே தகராறு ஏற்பட்டதையடுத்து, ஆய்வு செய்வதை கடற்படையினர் பாதியிலேயே நிறுத்திவிட்டு திரும்பி விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கடற்படையினருடன் இடுக்கி மாவட்ட ஆட்சியர் ராஜன், காவல்துறை கண்காணிப்பாளர் செல்லப்பன் மற்றும் உயர் அலுவலர்கள் சென்றிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;oOo&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;பெரியாறு - கேரள அரசின் அத்துமீறல் தொடர்ந்தால் தில்லி பேச்சு புறக்கணிப்பு: கருணாநிதி எச்சரிக்கை&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;சென்னை, நவ. 24: கேரள அரசின் அத்துமீறல் தொடர்ந்தால் தில்லியில் வரும் 29-ம் தேதி நடைபெறும் பேச்சில் பங்கேற்க முடியாத நிலை ஏற்படும் என்று முதல்வர் கருணாநிதி எச்சரித்துள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசு எல்லை மீறி நடந்துகொள்கிறது. இதை பிரதமர் தலையிட்டு உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக இரு மாநில முதல்வர்களும் தில்லியில் இம்மாதம் 29-ம் தேதி மத்திய நீர்வளத்துறை அமைச்சர் முன்னிலையில் பேச்சு நடத்த ஒப்புக் கொண்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்நிலையில் முல்லைப் பெரியாறு அணையின் நிலையை ஆராய மத்திய கப்பல் படை அலுவலர்கள் குழுவை கேரள அரசு அனுப்பியுள்ளதாக வியாழக்கிழமை செய்தி வெளியானது. இது மிகவும் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது என்று முதலமைச்சர் கருணாநிதி பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பேச்சுக்கு ஒப்புக் கொண்டு விட்டு அறிக்கை விடுவது மற்றும் கப்பல்படை அலுவலர்கள் குழுவை ஆய்வு நடத்த அனுப்புவது போன்ற எல்லை மீறிய செயல்களில் கேரள அரசு ஈடுபடுவதாக முதலமைச்சர் கருணாநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;இது தொடர்பாக வியாழக்கிழமை பிரதமர் மன்மோகன்சிங் மற்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு இரண்டு பக்க கடிதத்தை ஃபேக்ஸ் மூலம் முதல்வர் கருணாநிதி அனுப்பியுள்ளார். அதன் விவரம்:&lt;br /&gt;&lt;br /&gt;கேரள அரசின் வேண்டுகோளின்படி மத்திய கடற்படை அலுவலர்கள் 17 பேர் கொண்ட குழு கேரள மாநில காவல்துறைத் தலைவர் மேற்பார்வையில் முல்லைப் பெரியாறு அணையை சோதனையிட வியாழக்கிழமை சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;முல்லைப் பெரியாறு அணை தமிழக அரசுக்குச் சொந்தமானதும், தமிழக அரசின் பராமரிப்பில் இருப்பதுமாகும். தமிழக அரசின் எந்தவித அனுமதியும் இன்றி தன்னிச்சையாக கேரள அரசு இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சிக்குரியதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி 142 அடி தண்ணீரை முல்லைப் பெரியாறு அணையில், தேக்கி வைத்துக் கொள்ள அனுமதியளித்து கடந்த பிப்.27-ம் தேதி உத்தரவிட்ட பிறகும், இத்தகைய செயல்களில் கேரள அரசு ஈடுபட்டிருப்பது முறையானதல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;இரு மாநில முதலமைச்சர்களுடன் மத்திய அரசு பேச்சு நடத்த அழைப்பு விடுத்து, நாளும் குறிக்கப்பட்ட நிலையில், கேரள அரசின் இத்தகைய அத்துமீறிய செயல் தேவையற்றதும், இரு மாநிலங்களின் சுமுக உறவுக்குப் பங்கம் விளைவிக்கக் கூடியதுமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;தொடர்ந்து இத்தகைய தவறான வகையில் மற்றும் தமிழக மக்களிடையே மனக் கொந்தளிப்பை அதிகமாக்கிடும் வகையில் கேரள அரசின் நடவடிக்கைகள் இருக்குமானால், இம்மாதம் 29-ம் தேதி தில்லியில் நடைபெறவிருக்கும் பேச்சில் தமிழக அரசு கலந்துகொள்ள இயலாமல் போகக் கூடும் என்பதுடன் நடைபெற்ற சம்பவங்களை நேரடியாக உச்ச நீதிமன்றத்தில் எடுத்துக் கூறி நிவாரணம் தேட வேண்டி வரும். எனவே மத்திய அரசு உடனடியாக இதில் தலையிட்டு கேரள அரசினுடைய சட்டத்திற்குப் புறம்பான இத்தகைய நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் கருணாநிதி.&lt;br /&gt;&lt;br /&gt;oOo&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;கருணாநிதியின் கருத்து ஆத்திரமூட்டுவதாகும்: கேரள முதல்வர் பதில்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருவனந்தபுரம், நவ. 24:முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக 29 ம் தேதி நடைபெறவுள்ள பேச்சு வார்த்தையிலிருந்து விலக நேரும் என தமிழக முதல்வர் கருணாநிதி பேசியிருப்பது ஆத்திரமூட்டுவதாகும் என கேரள முதல்வர் அச்சுதானந்தன் கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரியாறு அணையை கடற்படை அதிகாரிகள் ஆய்வு செய்வதுகுறித்து தேனிமாவட்ட ஆட்சியருக்கு தெரியும். கேரளத்துக்கு சொந்தமான நிலத்தில் அணை கட்டப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது அணையின் பாதுகாப்பை மதிப்பிட தமிழகத்தின் அனுமதியைப் பெறவேண்டிய அவசியம் இல்லை. கேரளத்தின் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 35 லட்சம் மக்களின் வாழ்க்கை மற்றும் சொத்துகளின் பாதுகாப்பு குறித்து நாங்கள் கவலைப்படுகிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;செய்ய்திகள் : தினமணி&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1831468623100134403-1973726226298807906?l=newsintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://newsintamil.blogspot.com/feeds/1973726226298807906/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1831468623100134403&amp;postID=1973726226298807906&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/1973726226298807906'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/1973726226298807906'/><link rel='alternate' type='text/html' href='http://newsintamil.blogspot.com/2006/11/blog-post_24.html' title='முல்லைப் பெரியாறு!'/><author><name>வலைஞன்</name><uri>http://www.blogger.com/profile/09175459313475586529</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://photos1.blogger.com/blogger2/1027/223567947155778/183/gse_multipart64688.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1831468623100134403.post-6167617459910562334</id><published>2006-11-16T17:38:00.000Z</published><updated>2006-11-16T17:42:00.088Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாலைமலர்'/><title type='text'>இலங்கை தமிழர்களுக்கு உதவி</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;இலங்கை தமிழர்களுக்கு 7000 டன் அரிசி- சர்க்கரை; பால் பவுடர்:&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#009900;"&gt;பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;சென்னை, நவ. 16-&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இலங்கையில் சிங்கள ராணுவம் அப்பாவி தமிழர்கள் மீது குண்டு வீசி தாக்கி வருகிறது. இதில் ஏராளமானோர் பலியானார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;குண்டுவீச்சுக்கு பயந்து தமிழர்கள் ஊரை காலி செய்துவிட்டு காடுகளில் தஞ்சம் அடைந்து உள்ளனர். தமிழர்கள் பகுதிக்கு செல்லும் சாலைகளையும் சிங்கள ராணுவம் துண்டித்து விட்டது. இதனால் அவர்கள் உணவு கிடைக்காமல் பசி-பட்டினியால் தவிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து முதல்-அமைச்சர் கருணாநிதி பிரதமர் மன் மோகன்சிங்குக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில் இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுக்க வேண்டும். பள்ளிகளில் தங்கும் தமிழர்களுக்கு உணவு பொருடங்கள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு பதில் அளித்து பிரதமர் மன்மோகன்சிங் கருணாநிதிக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-&lt;br /&gt;&lt;br /&gt;அன்புள்ள டாக்டர் கருணாநிதி அவர்களுக்கு, இலங்கை இராணுவத் தினரால் இலங்கையில் உள்ள நூற்றுக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்படுவது பற்றியும், படுகாயப்படுத்தப்படுவது பற்றியும் 10.11.2006 அன்று தாங்கள் வெளியிட்ட அறிக்கையின் நகல் ஒன்றை - நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவரும், என்னுடைய சகாவுமான டி.ஆர்.பாலு என்னை நேரில் சந்தித்துக் கொடுத்தார். பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட ஏராளமான அப்பாவித் தமிழர்களின் உயிரிழப்பு இத்தகைய கொடிய நிகழ்ச்சிகளால் ஏற்பட்டுள்ளது. அப்பாவிப் பெண் களையும், குழந்தைகளையும் கொல்வதற்கு எந்தவிதமான நியாயமும் கிடையாது.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் சமீப காலமாக ஏற்பட்டு வரும் வன்முறையின் காரணமாக தமிழ் மக்கள் உயிரிழப்பது பற்றி எங்களுடைய ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்திக் கொண்டுள்ளோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த காலங்களில் செய்ததைப் போலவே இலங்கை அரசுக்கு இந்த முறையும் எங்களுடைய உணர்வுகளை திரும்பவும் எடுத்துரைப் போம்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கைப் பிரச்சினைக்கு இராணுவ ரீதியாக தீர்வு காண முடியாது என்பதையும் பேச்சுவார்த்தை மூலம் தான் அரசியல் தீர்வு காண முடியும் என்பதையும் அதன் மூலமாகத் தான் தமிழர்களுடைய உண்மையான உரிமைகளைக் காப்பாற்றுவதற்குத் தேவையான அதிகாரப் பங்கீடு செய்து கொள்ள முடியுமென்பதையும் நாங்கள் தெளிவுபடுத்தியிருக்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கை வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்டு வரும் சூழல்களைக் கருத்தில் கொண்டு இந்திய அரசு 5200 மெட்ரிக் டன் அரிசியையும், 1500 மெட்ரிக் டன் சர்க்கரையையும், 300 மெட்ரிக் டன் பால் பவுடரையும் அனுப்பி வைக்கவுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருங்கிணைந்த கூட்டாட்சி அடிப்படையிலான இலங்கையில் தமிழர் களுடைய உரிமைகளைப் பாதுகாப்பதற்குரிய வகையில் இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென்ற எங்களுடைய எண்ணம் ஆழ மானதும், தொடர்ந்து இருந்து வருவதுமாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;எனினும் இப்பொழுது அப்பாவி மக்கள் கொல்லப் படுவது நிறுத்தப்பட்டு, மனிதாபிமான அடிப்படை நிலை நிறுத்தப்பட வேண்டு மென்பதுதான் முதன்மையானதாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்திய அரசின் வெளியுறவுத்துறை செயலாளர் கொழும்பு செல்லவிருக்கிறார். அப்பொழுது இலங்கை அரசுக்கு நமது ஆழ்ந்த கவலைகளை தெரிவிப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் மற்ற குடிமக்களுக்கு அளிக்கப் பட்டுள்ள உரிமைகளையும், சலுகை களையும் இலங்கையில் வாழும் தமிழர்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதன் அவசியத்தை அவர் வலியுறுத்துவார். அடுத்து, இலங்கைக் குடியரசு தலைவர் ராஜபக்சேயை நான் சந்திக்கும்போது, உரிய முறையில் இவற்றை அவருக்குத் தெரிவிப்பேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு பிரதமர் கூறி உள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;&lt;strong&gt;செய்தி: மாலைமலர்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1831468623100134403-6167617459910562334?l=newsintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://newsintamil.blogspot.com/feeds/6167617459910562334/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1831468623100134403&amp;postID=6167617459910562334&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/6167617459910562334'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/6167617459910562334'/><link rel='alternate' type='text/html' href='http://newsintamil.blogspot.com/2006/11/7000.html' title='இலங்கை தமிழர்களுக்கு உதவி'/><author><name>வலைஞன்</name><uri>http://www.blogger.com/profile/09175459313475586529</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://photos1.blogger.com/blogger2/1027/223567947155778/183/gse_multipart64688.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1831468623100134403.post-1588249377685171014</id><published>2006-11-16T17:30:00.000Z</published><updated>2006-11-16T17:34:29.210Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்நாடு'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தினமணி'/><title type='text'>கட்டணமில்லா தொலைபேசி</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளை தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;சென்னை, நவ. 16: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளை இலவசமாக போனில் தொடர்பு கொள்ளலாம். இதற்கான கட்டணமில்லா தொலைபேசியை எண் 1056-ஐ தமிழக அரசு அறிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து முதல்வர் கருணாநிதி புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;தமிழகத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள், மாவட்ட சுகாதார அலுவலகங்கள் ஆகியவை தகவல் தொடர்புகளால் இணைந்த "மருத்துவக் கட்டுப்பாட்டு அவசர சேவை மையங்கள்' தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த மையங்கள் மூலமாகக் கர்ப்பிணிப் பெண்கள், விபத்தில் சிக்கியோர், பிற அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள் ஆகியோருக்கான முதலுதவி மருந்துகளையும், பிற மருத்துவ சாதனங்களையும் கொண்ட ஆம்புலன்ஸ் வாகன வசதி, ரத்தம் வழங்கும் தகவல், தேவைப்படும் சிகிச்சைக்கு ஏற்ப உடனடியாகச் செல்ல வேண்டிய மருத்துவமனை பற்றிய தகவல்கள் ஆகியவை மக்களுக்கு உடனுக்குடன் அளிக்கப்பட உள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவக் கட்டுப்பாட்டு அவசர சேவை மையங்களைப் மக்கள் உடனடியாகத் தொடர்பு கொள்ள காவல் மற்றும் தீயணைப்புத் துறைகளுக்கு வழங்கப்பட்டுள்ளதைப் போல் மூன்று அல்லது நான்கு இலக்க இலவசத் தொலைபேசி எண்ணை ஒதுக்க கடந்த 27-ம் தேதி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கோரிக்கையை மத்திய தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் ஏற்று, தமிழகத்தில் நிறுவப்பட உள்ள மருத்துவக் கட்டுப்பாட்டு அவசரச் சேவை மையங்களைத் தொடர்பு கொள்ள இலவச தொலைபேசி தொடர்பு எண்ணை ஒதுக்கீடு செய்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;&lt;strong&gt;செய்தி: தினமணி&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1831468623100134403-1588249377685171014?l=newsintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://newsintamil.blogspot.com/feeds/1588249377685171014/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1831468623100134403&amp;postID=1588249377685171014&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/1588249377685171014'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/1588249377685171014'/><link rel='alternate' type='text/html' href='http://newsintamil.blogspot.com/2006/11/blog-post_16.html' title='கட்டணமில்லா தொலைபேசி'/><author><name>வலைஞன்</name><uri>http://www.blogger.com/profile/09175459313475586529</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://photos1.blogger.com/blogger2/1027/223567947155778/183/gse_multipart64688.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1831468623100134403.post-6667904495906223818</id><published>2006-11-16T16:01:00.000Z</published><updated>2006-11-16T16:03:14.148Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தலைப்புகள்'/><title type='text'>தலைப்புகள்-11/16</title><content type='html'>&lt;strong&gt;தினமலர்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;* சீல்!* கர்நாடக, ஆந்திர எல்லை பகுதிகளில் போலீஸ் குவிப்பு* தமிழகத்துக்குள் நக்சலைட்டுகள் ஊடுருவலை தடுக்க அதிரடி&lt;br /&gt;# சென்னை : எப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் நக்சல்கள் ஊடுருவக் கூடும் என்று உளவுத் துறை எச்சரித்துள்ளதால், தமிழகத்தை ஒட்டியுள்ள கர்நாடக, ஆந்திர எல்லைப் பகுதிகளில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;* ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் ; அபாயம் நீங்கியது&lt;br /&gt;# டோக்கியோ : ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;* பயங்கரவாத தடுப்பு அமைப்பை உருவாக்க இந்தியா பாக்.,சம்மதம்! *இரண்டு நாள் பேச்சுவார்த்தைக்கு பின் கூட்டறிக்கை வெளியீடு&lt;br /&gt;# புதுடில்லி:இந்தியா பாகிஸ்தான் வெளியுறவு செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் பயங்கரவாத தடுப்பு அமைப் பை உருவாக்குவது என தீர்மானிக்கப்பட்டது. இந்த அமைப்பில் இரு தரப்பிலும் தலா மூன்று அதிகாரிகள் இடம் பெறுவர். இரு நாடுகளுக்கும் உட்பட்ட பகுதிகளில் அணு ஆயுத அபாயத்தை தவிர்ப்பது என்றும், அடுத்த கட்ட பேச்சுவார்த் தையை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடத்துவது என்றும் முடிவு செய்யப் பட்டது. இரு நாடுகளின் சார்பில் கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;* மேட்டூர் மலையில் நக்சல் பயிற்சி முகாம்? * மலை உச்சியில் இரண்டு "டென்ட்' * மர்ம மனிதர்கள் நடமாட்டத்தால் பீதி&lt;br /&gt;# மேட்டூர்: மேட்டூர் அருகே பாலமலை உச்சியில் இரு டென்ட்டுகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. அங்கு, இரவு நேரத்தில் மர்ம மனிதர்கள் நடமாட்டம் இருப்பது பாலமலை அடிவார கிராம மக்களை பீதியடைய வைத்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;* உள்நாட்டு விமான கட்டணம் ஏறுது&lt;br /&gt;# புதுடில்லி:போட்டா போட்டியை சமாளிக்க என்னதான் விலை குறைத்தாலும், செலவு கணக்குகள் "கையை' கடிப்பதால், உள்நாட்டு விமான கட்டணங்களை ஏற்ற வேண்டிய நிலைக்கு பல தனியார் நிறுவனங்கள் வந்துள்ளன என்று தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;* இந்திய அணுசக்தி உடன்பாடு மசோதா :அமெரிக்க செனட் சபையில் இன்று விவாதம்&lt;br /&gt;# வாஷிங்டன்:அமெரிக்க செனட் சபையில் நேற்று இந்திய அணுசக்தி உடன்பாடு குறித்தான மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக இருந்தது கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டது. இன்று நடக்கும் கூட்டத்தில் இந்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;* வெற்றியுடன் துவக்குமா இந்தியா?* இன்று தெ.ஆ., "ஏ' அணியுடன் மோதல்&lt;br /&gt;# பெனோனி : தென் ஆப்ரிக்க பயணத்தை இந்திய அணி வெற்றியுடன் துவக்க காத்திருக்கிறது. இன்று தனது முதல் பயிற்சி போட்டியில் தென் ஆப்ரிக்க "ஏ' அணியை சந்திக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மாலைமலர்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* இலங்கை தமிழர்களுக்கு 7000 டன் அரிசி- சர்க்கரை; பால் பவுடர்: பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு&lt;br /&gt;* தமிழ்நாட்டில் மேலும் 2 நாட்கள் மழை நீடிக்கும்&lt;br /&gt;* முல்லைபெரியாறு அணையில் 142 அடி தண்ணீரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயலலிதா கோரிக்கை&lt;br /&gt;* தடையை மீறி நாளை இலங்கை தூதரகம் முன் ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: வைகோ தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்&lt;br /&gt;* நிலச்சரிவால் துண்டிக்கப்பட்ட பாலங்கள் சீரமைப்பு: மழை பெய்வதால் மீட்பு பணி தாமதம்&lt;br /&gt;* ஜனநாயக படுகொலை என்று விமர்சித்து உள்ளாட்சி தேர்தலை குறை சொல்வதா? காங்.தலைவர் கிருஷ்ணசாமி கண்டனம்&lt;br /&gt;* வக்கீல் தொழிலுக்கு எந்த வயதிலும் பதிவு செய்யலாம்: ஐகோர்ட்டு தீர்ப்பு&lt;br /&gt;* நீர்மட்டம் 138 அடியை தாண்டியது; முல்லைப்பெரியாறு அணைக்கு பாதிப்பா? தயார் நிலையில் ராணுவம்-கப்பல் படை&lt;br /&gt;* முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்புக்கு 650 ஆயுதப்படை போலீசார்&lt;br /&gt;* தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 3700 கிராம உதவியாளர்கள் விரைவில் நியமனம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1831468623100134403-6667904495906223818?l=newsintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://newsintamil.blogspot.com/feeds/6667904495906223818/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1831468623100134403&amp;postID=6667904495906223818&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/6667904495906223818'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/6667904495906223818'/><link rel='alternate' type='text/html' href='http://newsintamil.blogspot.com/2006/11/1116.html' title='தலைப்புகள்-11/16'/><author><name>வலைஞன்</name><uri>http://www.blogger.com/profile/09175459313475586529</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://photos1.blogger.com/blogger2/1027/223567947155778/183/gse_multipart64688.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1831468623100134403.post-8012812598215887747</id><published>2006-11-15T17:51:00.000Z</published><updated>2006-11-15T18:02:42.387Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தினத்தந்தி'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='இயற்கை'/><title type='text'>நிலச்சரிவு</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;பலத்த மழையால் திடீர் காட்டாற்று வெள்ளம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#009900;"&gt;ஊட்டி மலைப்பாதையில் 10 இடங்களில் நிலச்சரிவு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;7 பாலங்கள் அடித்து செல்லப்பட்டன&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#993300;"&gt;2 லாரிகளை வெள்ளம் இழுத்து சென்றது: ஒருவர் பலி-பலர் உயிருடன் மீட்பு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீலகிரி மாவட்டத்தில் பெய்த பலத்த மழையின் காரணமாக காட்டாறுகளில் திடீரென்று வெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் ஊட்டி மலைப்பாதையில் உள்ள 7 பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. 2 லாரிகளை வெள்ளம் இழுத்துச் சென்றது. இதில் ஒருவர் பலி ஆனார். 10 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டதால் ஊட்டிக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;கோவை, நவ.15-&lt;br /&gt;&lt;br /&gt;நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நல்ல மழை பெய்து வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;பலத்த மழை பெய்யும் போது மலைப்பகுதியில் அவ்வப்போது நிலச்சரிவு ஏற்படுவது உண்டு. ஊட்டிக்கு செல்லும் மலை ரெயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டதால், கடந்த 1-ந் தேதி முதல் அந்த ரெயில் நிறுத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;பயங்கர மழை&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து பர்லியார் வழியாகவும், கோத்தகிரி வழியாகவும் உள்ள இரு சாலை மார்க்கங்களில் மட்டும் ஊட்டிக்கு போக்குவரத்து நடைபெற்று வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு நீலகிரி மாவட்டம் குன்னூர் பகுதியில் பயங்கர மழை கொட்டியது.&lt;br /&gt;&lt;br /&gt;பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் மலைப்பகுதியில் உள்ள காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. திடீரென பெருக்கெடுத்த காட்டாற்று வெள்ளத்தில் மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் உள்ள கல்லாறு அருகே உள்ள வெள்ளைப்பாலம் உள்ளிட்ட 7 பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;காட்டாற்று வெள்ளம் சில இடங்களில் சாலையையும் அரித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;நிலச்சரிவு&lt;br /&gt;&lt;br /&gt;மேலும் பலத்த மழையின் காரணமாக கோவை மாவட்டம் கல்லாறு-நீலகிரி மாவட்டம் பர்லியார் இடையே சாலையில் 10 இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. மண்ணுடன் ராட்சத பாறைகள் உருண்டு விழுந்தன. ஏராளமான மரங்களும் வேறோடு சாய்ந்து சாலையில் விழுந்தன. இதனால் சாலை அப்படியே மூடி நாசமானது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலச்சரிவில் 2-வது கொண்டை ஊசி வளைவு முற்றிலுமாக அழிந்தது. 10 அடி பாலம் அருகே 2 இடங்களில் ரோடு அரிக்கப்பட்டு துண்டானது.&lt;br /&gt;&lt;br /&gt;பலத்த மழை பெய்து கொண்டு இருந்ததால் மேட்டுப்பாளையம்-குன்னூர் சாலையில் சென்று கொண்டிருந்த வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;அடித்துச் செல்லப்பட்ட லாரிகள்&lt;br /&gt;&lt;br /&gt;திடீரென்று பெருக்கெடுத்த காட்டாற்று வெள்ளத்திலும் நிலச்சரிவிலும் சிக்கி 2 லாரிகள் பள்ளத்தில் விழுந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;கல்லாறு-பர்லியார் இடையே ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய ஒரு லாரி 500 அடி கிடுகிடு பள்ளத்தில் விழுந்தது. அப்போது லாரி டிரைவர் ஜாபர் தூக்கி வீசப்பட்டார். ஒரு மரக்கிளையை பிடித்தபடி உயிருக்கு போராடிய அவர் காப்பாற்றும்படி அபயக்குரல் எழுப்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;பின்னர் அவரை மீட்டு தொட்டில் கட்டி வெளியே தூக்கி வந்தனர். மேட்டுப்பாளையம் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட அவர் பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;கிளீனர் சாவு&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விபத்தில் கிளீனர் வினோத் குமார் லாரியின் இடிபாடுகளுக்குள் சிக்கி பரிதாபமாக செத்தார். அவரது உடல் மீட்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு லாரி வெள்ளத்தில் நாசமான இரும்பு பாலத்தில் சிக்கி தொங்கிக் கொண்டு இருந்தது. அதில் இருந்த 5 பேரை நேற்று அதிகாலை தீயணைப்பு படையினரும் மீட்புகுழுவினரும் மீட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சோதனைச் சாவடி நாசம்&lt;br /&gt;&lt;br /&gt;பர்லியாரில் உள்ள போலீஸ் சோதனைச் சாவடி நிலச்சரிவில் சிக்கி நாசமானது. மலையில் இருந்து மண்ணுடன் உருண்டு விழுந்த பாறைகளும் கற்களும் அந்த சோதனைச் சாவடியை அமுக்கின.&lt;br /&gt;&lt;br /&gt;பலத்த சத்தத்துடன் நிலச்சரிவு ஏற்பட்டதை அறிந்ததும் அங்கு இருந்த கவிதா என்ற பெண் சப்-இன்ஸ்பெக்டரும் கண்ணையன் என்ற போலீஸ் ஏட்டும், சங்கர் என்ற போலீஸ்காரரும் வெளியே ஓடிவ ந்து உயிர் தப்பினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது ஏட்டு கண்ணையன் காட்டாற்று வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டார். மரக்கிளை ஒன்றை பிடித்தபடி தொங்கிக் கொண்டிருந்த அவரை பின்னர் தீயணைப்பு படையினர் மீட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சோதனைச் சாவடி காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;மாணவர்கள் மீட்பு&lt;br /&gt;&lt;br /&gt;கேரள மாநிலம் காசர்கோட்டில் இருந்து பஸ்சில் சுற்றுலா வந்த சுமார் 19 கல்லூரி மாணவர்களும் மற்றும் வேனில் வந்த சில சுற்றுலா பயணிகளும் மலைப்பாதையில் நிலச்சரிவில் சிக்கி நடுவழியில் தவித்தனர். அவர்களை போலீசார் மீட்டு மேட்டுப்பாளையத்துக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஊட்டியைச் சேர்ந்த காதர்கனி என்ற வியாபாரியின் 3 மாத குழந்தை இர்பானை சிகிச்சைக்காக அங்கிருந்து ஆம்புலன்ஸ் வேனில் கோவை ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். அந்த வேன் பர்லியார் அருகே நிலச்சரிவில் சிக்கிக் கொண்டது. இதுபற்றிய தகவல் கிடைத்ததும் குன்னூர் போக்கு வரத்து சப்-இன்ஸ்பெக்டர் முரளி அங்கு விரைந்து சென்று குழந்தையை மீட்டு வேறொரு வாகனத்தில் அனுப்பி வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாசமான சாலை&lt;br /&gt;&lt;br /&gt;நிலச்சரிவின் காரணமாக மேட்டுப்பாளையம்-குன்னூர் மலைப்பாதையில் பல இடங்களில் ரோட்டில் பாறைகளும் சேறும் சகதியுமாக உள்ளது. அவற்றை `பொக்லைன்' இயந்திரம் மூலம் அகற்றும் முயற்சியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு உள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பெரிய பெரிய பாறைகள் சாலையில் கிடப்பதால் அவற்றை அப்புறப்படுத்துவதில் சிரமம் ஏற்பட்டு உள்ளது. 50 டன் எடை கொண்ட ராட்சத பாறையை துளை போட்டு உடைத்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் மீட்புக்குழுவினர் முழு மூச்சுடன் ஈடுபட்டு இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சில இடங்களுக்கு மீட்புக்குழுவினரால் இன்னும் போய்ச் சேர முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பர்லியாரில் நிலச்சரிவு ஏற்பட்ட இடத்தை தமிழக கதர் வாரிய துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், நீலகிரி மாவட்ட கலெக்டர் சந்தோஷ் கே.மிஸ்ரா ஆகியோர் பார்வையிட்டு, மீட்புப்பணியை முடுக்கி விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;போக்குவரத்து துண்டிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;நிலச்சரிவின் காரணமாக மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையே போக்கு வரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டு உள்ளது. சாலையில் லாரிகள் உள்ளிட்ட வாகனங்கள் அப்படியே நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் அதில் இருப்பவர்கள் எங்கும் செல்ல முடியாமல் தவிக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இதனால் மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்பட்டு உள்ளன. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையம் வரும் வாகனங்கள் தொட்டப்பெட்டா பிரிவு, கட்டப்பட்டு, குஞ்சப்பனை வழியாக வருகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;செய்தி: தினத்தந்தி&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1831468623100134403-8012812598215887747?l=newsintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://newsintamil.blogspot.com/feeds/8012812598215887747/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1831468623100134403&amp;postID=8012812598215887747&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/8012812598215887747'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/8012812598215887747'/><link rel='alternate' type='text/html' href='http://newsintamil.blogspot.com/2006/11/blog-post_15.html' title='நிலச்சரிவு'/><author><name>வலைஞன்</name><uri>http://www.blogger.com/profile/09175459313475586529</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://photos1.blogger.com/blogger2/1027/223567947155778/183/gse_multipart64688.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1831468623100134403.post-2842641843134124991</id><published>2006-11-15T17:44:00.000Z</published><updated>2006-11-15T17:47:03.671Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தலைப்புகள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தினமணி'/><title type='text'>தலைப்புகள்-11/15</title><content type='html'>.ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்} சுனாமி எச்சரிக்கை&lt;br /&gt;.அருணாச்சலம் சர்ச்சைக்குரிய பகுதி: சீனத் தூதர் பிடிவாதம்&lt;br /&gt;.குறைந்தபட்ச தேவை அளவுக்கு அணு ஆயுதங்களை&lt;br /&gt;வைத்திருக்க ஜப்பான் முடிவு&lt;br /&gt;.நெதர்லாந்திலிருந்து ஐஸ்வர்யாவுக்கு டாலர்: விசாரணைக்கு கஸ்டம்ஸ் அழைப்பு&lt;br /&gt;.ஜோகன்னஸ்பர்கில் இந்திய கிரிக்கெட் அணி&lt;br /&gt;.அருணாசல பிரதேசம் இந்தியாவுக்கே சொந்தம்: சீன தூதருக்கு பிரணப் காட்டமான பதில்&lt;br /&gt;.புதுச்சேரி: பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தக் கோரி கையெழுத்து இயக்கம்&lt;br /&gt;.பெங்களூர்: முதல்வர் மீது ரூ. 150 கோடி லஞ்சப்புகார்: சி.பி.ஐ. விசாரணை கோரி வழக்கு&lt;br /&gt;.இலங்கை: இலங்கை அரசு-புலிகள் அமைதிப் பேச்சு: பிரிட்டன் புது முயற்சி&lt;br /&gt;.சிறப்பு பக்கம்: இந்த ஆண்டு இறுதிக்குள் சதாம் தூக்கிலிடப்படுவார்: இராக் பிரதமர் &lt;br /&gt;  தமிழகம் &lt;br /&gt;.வரும் கூட்டத்தொடரில் 'வாட்' மசோதா: தமிழக அரசு&lt;br /&gt;.இலங்கை அதிபர் இந்தியா வரும் முன்பாக யாழ்ப்பாண நெடுஞ்சாலையை திறக்க நிர்பந்திக்க வேண்டும்: ராமதாஸ்&lt;br /&gt;.கூட்டுறவுத் தேர்தலும் நியாயமாக நடக்காது: ஜெ.&lt;br /&gt;.மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் விரிசலை சீரமைக்க நிபுணர் குழு அமைக்கக் கோரி மனு&lt;br /&gt;.கன மழையால் மண் சரிவு: பாறைகள் உருண்டன மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலை துண்டிப்பு&lt;br /&gt;.நடந்து முடிந்த தேர்தலை ரத்து செய்துவிட்டு உள்ளாட்சிகளுக்கு நேரடியாக தேர்தல் நடத்த தயாரா?: வைகோ&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1831468623100134403-2842641843134124991?l=newsintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://newsintamil.blogspot.com/feeds/2842641843134124991/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1831468623100134403&amp;postID=2842641843134124991&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/2842641843134124991'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/2842641843134124991'/><link rel='alternate' type='text/html' href='http://newsintamil.blogspot.com/2006/11/1115.html' title='தலைப்புகள்-11/15'/><author><name>வலைஞன்</name><uri>http://www.blogger.com/profile/09175459313475586529</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://photos1.blogger.com/blogger2/1027/223567947155778/183/gse_multipart64688.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1831468623100134403.post-5229663902769524929</id><published>2006-11-14T18:38:00.000Z</published><updated>2006-11-14T18:41:48.080Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாலைமலர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='சமூகம்'/><title type='text'>ஆபாச படம்</title><content type='html'>&lt;strong&gt;ரெயில் நிலையத்தில் ஆபாச படம் எடுத்தவர்&lt;/strong&gt; &lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;காதல் ஜோடியை ரகசிய காமிராவில் படம் பிடித்தார்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;சென்னையில் சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களுக்கு வரும் பெண் பயணிகளை செல்போன் மூலம் ஆபாசமாக படம் பிடித்து வக்கிர கும்பல் ஒன்று இன்டர்நெட்டில் பரப்புவதை மாலைமலர் அம்பலப்படுத்தியது.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஆனிவிஜயா தலைமையில் பெண் போலீசார் சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் காமிரா செல்போனுடன் சுற்றி திரிந்த வாலிபர்களை பிடித்து செல்போனை சோதனை செய்தனர். தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ரெயில் நிலையம் வரும் பெண் பயணிகளை செல்போன் மூலம் ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் பரவவிடுவது குறித்து விசாரிக்க கமிஷனர் லத்திகா சரண் உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் கட்ட விசாரணையில் பெண்களை செல்போன் மூலம் படம் பிடித்தது இண்டர்நெட் மைய உரிமையாளர் என்பது தெரிய வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் தனது இண்டர்நெட் மையத்துக்கு வரும் சில மாணவிகளை அவர்களுக்கு தெரியாமலேயே செல்போன் மூலம் ஆபாசமாக படம் பிடித்ததும் அந்த படங்களை தான் உருவாக்கிய `இண்டியன் மசாலா மிக்ஸ்டு டாட் ரிப்போடு டாட்காம்' என்ற இணைய தள முகவரி மூலம் பரவ விட்டிருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து அவரது இணைய தள முகவரியை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்யத் தொடங்கினர். இதில் அவர் தனது இண்டர்நெட் மையத்துக்கு வரும் காதல் ஜோடிகளை ரகசிய வீடியோ காமிரா மூலம் ஆபாச படம் பிடித்தது தெரிய வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அது பற்றிய விவரம் வருமாறு:-&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களை செல்போன் காமிரா மூலம் ஆபாசமாக படமெடுத்தவரின் இண்டர் நெட் மையத்தில் பிரவுசிங் செய்ய வரும் ஜோடிகளுக்கு என்று தனி தனி கேபின்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் இந்த கேபினில் வலது ஓரத்தில் ரகசிய கேமிரா ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இங்கு பிரவுசிங் செய்வதற்கு என்று வரும் இளம் ஜோடிகளுக்கு சம்பந்தப்பட்ட கேபின்கள் ஒதுக்கப்படும் என தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த கேபின்கள் ஒவ்வொன்றும் தனி அறை போல் காட்சி அளிக்கிறது. இதில் 2 இருக்கைகளும் நவீன வசதியுடன் கூடிய கம்ப்ïட்டர்கள் உள்ளன. பிரவு சிங் செய்ய வரும் காதல் ஜோடிகள் கேபினுக்குள் வைத்து செய்யும் செக்ஸ் விளையாட்டுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட காதல் ஜோடிகளுக்கு தெரியாமலேயே ரகசிய காமிராவில் படம் பிடிக்கப்படுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் ஒரு சில காதல் ஜோடிகள் எல்லை மீறி ஒட்டுதல், உரசுதல், கட்டுதலை தொடர்ந்து `அந்த' விஷயத்தையும் கேபின் உள்ளேயே அரங்கேற்றுகின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த காட்சிகளை அப்படியே காமிரா படம் பிடிக்கிறது. இதில் உள்ள ஆபாச காட்சிகளை தொகுத்து ஒரு முழு நீள `புளூ பிலிம்' ஆக தயாரித்து 1/2 நிமிடம் ஓடும் அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வீடியோ காட்சிகளையும், இண்டர்நெட்டில் பரவவிட்டுள்ளனர். இண்டர்நெட்டில் பரப்பப்பட்ட வீடியோ காட்சி மூலம் மேற்படி தகவல் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;சம்பந்தப்பட்ட இணைய தள முகவரியில் இந்த புளூ பிலிம் வீடியோ காட்சிகள் 3 பிரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. முதல் வீடியோவில் பிரவுசிங் செய்யும் காதல் ஜோடிகள் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபடுவது போலவும் அடுத்தடுத்த வீடியோவில் மேற்படி சமாச்சாரங்ள் நடப்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து இண்டர்நெட் மையத்தில் ரகசிய கேமிரா மூலம் படம் பிடித்து இண்டர்நெட்டில் பரவவிடுவது என்றால் அதன் உரிமையாருக்கு தெரியாமல் நடைபெற வாய்ப்பில்லை என போலீசார் சந்தேகிக்கின்றனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கிடையே ரகசிய காமிராவில் பதிவாகி உள்ளது போல் சென்னையில் எங்கெல்லாம் இண்டர்நெட் மைய கேபின் உள்ளது என போலீசார் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட கேபின் அடையாளம் காணப்பட்டால் அதன் உரிமையாளர் யார்? என்பது தெரிந்து விடும் என உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;&lt;strong&gt;செய்தி : மாலைமலர்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1831468623100134403-5229663902769524929?l=newsintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://newsintamil.blogspot.com/feeds/5229663902769524929/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1831468623100134403&amp;postID=5229663902769524929&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/5229663902769524929'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/5229663902769524929'/><link rel='alternate' type='text/html' href='http://newsintamil.blogspot.com/2006/11/blog-post_1407.html' title='ஆபாச படம்'/><author><name>வலைஞன்</name><uri>http://www.blogger.com/profile/09175459313475586529</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://photos1.blogger.com/blogger2/1027/223567947155778/183/gse_multipart64688.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1831468623100134403.post-9090981860466634788</id><published>2006-11-14T18:23:00.000Z</published><updated>2006-11-14T18:26:12.558Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்நாடு'/><title type='text'>இளையராஜாவுக்கு கண்டனம்</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;'பெரியார்' படத்துக்கு இசை அமைக்க மறுப்பு:&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;இளையராஜாவுக்கு எழுத்தாளர் சங்கம் கண்டனம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;திருநெல்வேலி, நவ. 14: "பெரியார்' திரைப்படத்திற்கு இசை அமைக்க மறுத்த இளையராஜாவுக்கு பகிரங்கமாக வருத்தம் தெரிவிப்பது என தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் முடிவு செய்துள்ளதாக, அதன் பொதுச் செயலர் ச. தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:&lt;br /&gt;&lt;br /&gt;மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் செயற்குழுக் கூட்டத்தில் முக்கியமான சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;இசை அமைப்பளர் இளையராஜா, "பெரியார்' திரைப்படத்துக்கு இசை அமைக்க மறுத்து கோபமாக பேசிய வார்த்தைகள் முற்போக்கு எண்ணம் கொண்ட அத்தனை தமிழ் மக்களின் நெஞ்சங்களிலும் பெருத்த வேதனையை உண்டாக்கியுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் ஆத்திகராக இருப்பதும், எந்த ஒரு படத்துக்கும் இசை அமைக்க மறுப்பதும் அவரது ஜனநாயக உரிமை. ஆனால், ஆத்திகராக இருப்பதால், "பெரியார்' படத்துக்கு இசை அமைக்க மாட்டேன் என கூறியிருப்பது பல கேள்விகளை எழுப்புகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;மேலும், அவரது கருத்துக்கு ஆதரவாக மதவாத சக்திகள் குரல் கொடுப்பது தமிழ்ப் பண்பாட்டுச் சூழலில் மிகுந்த கவலை அளிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனவே, நல்லெண்ணத்தின் அடிப்படையில் எங்களது வருத்தத்தை பகிரங்கமாக இளையராஜாவுக்கு தெரிவிக்க முடிவு செய்துள்ளோம் என்றார் தமிழ்ச்செல்வன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;&lt;strong&gt;செய்தி : தினமணி&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1831468623100134403-9090981860466634788?l=newsintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://newsintamil.blogspot.com/feeds/9090981860466634788/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1831468623100134403&amp;postID=9090981860466634788&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/9090981860466634788'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/9090981860466634788'/><link rel='alternate' type='text/html' href='http://newsintamil.blogspot.com/2006/11/blog-post_14.html' title='இளையராஜாவுக்கு கண்டனம்'/><author><name>வலைஞன்</name><uri>http://www.blogger.com/profile/09175459313475586529</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://photos1.blogger.com/blogger2/1027/223567947155778/183/gse_multipart64688.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1831468623100134403.post-8046709634312845411</id><published>2006-11-14T18:19:00.000Z</published><updated>2006-11-14T18:21:34.519Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தலைப்புகள்'/><title type='text'>தலைப்புகள்-11/14</title><content type='html'>&lt;strong&gt;தினத்தந்தி &lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* 4 ஊராட்சிகளுக்கும் தி.மு.க. சார்பில் ரூ.5 லட்சம்&lt;br /&gt;# பாப்பாபட்டி, கீரிப்பட்டி, உ∙பட 4 ஊராட்சிகளுக்கும் தி.மு.க. சார்பில் தலாரூ.5லட்சம் வழங்கப்படும் என்று கருணாநிதி அறிவிப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;* காளிமுத்துவை நான் மிரட்டவில்லை -ஜெயலலிதா&lt;br /&gt;# கருணாநிதியின் திருக்குறள் உரையை காளிமுத்து வாசித்ததற்காக நான் அவரை மிரட்டியதாக சொல்வது முழு கற்பனை என்று ஜெயலலிதாகூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;* மருத்துவம், என்ஜினீயரிங்நுழைவுத்தேர்வு ரத்து&lt;br /&gt;# தமிழ்நாட்டில் தொழிற்கல்வி படிப்புகளில் மாணவர்க∙சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வை ரத்துசெய்யலாம் என்று வல்லுனர்குழு பரிந்துரை.&lt;br /&gt;&lt;br /&gt;* முல்லைப்பெரியாறு பிரச்சினை: 23-ந் தேதி பேச்சுவார்த்தை&lt;br /&gt;# முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக மாநிலமுதல்-மந்திரிகள் கூட்டம் வரும் 23-ந் தேதி டெல்லியில் நடக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;* ஆண்டிப்பட்டி தேர்தல் :அ.தி.மு.க-தி.மு.க. மோதல்&lt;br /&gt;# ஆண்டிப்பட்டியில் அ.தி.மு.க-தி.மு.க.வினர் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து ïனியன் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தினமலர்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* துண்டிப்பு! * மேட்டுப்பாளையம் குன்னூர் ரோட்டில் 12 இடங்களில் நிலச்சரிவு * பலத்த மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் உருண்டன பாறாங்கற்கள்&lt;br /&gt;# குன்னூர்:கடந்த 10 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, குன்னுõர் மேட்டுப்பாளையம் சாலையில் 12 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பாறைகள் உருண்டு பாதையில் நின்றிருந்த லாரிகள் மீது விழுந்ததால், இரண்டு லாரிகள் மண்ணில் புதைந்தன. மூன்று பேர் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். ஒருவர் உடல் மீட்கப்பட்டது. குன்னுõர்மேட்டுப்பாளையம் இடையேயான போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;* இந்தியா பாக்., வெளியுறவு செயலர்களின் பேச்சுவார்த்தை துவங்கியது *காஷ்மீர், பயங்கரவாதம் உட்பட பல பிரச்னைகள் குறித்து அலசல்&lt;br /&gt;# புதுடில்லி:நான்கு மாத இடைவெளிக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு செயலர்களின் இரண்டு நாள் பேச்சு வார்த்தை டில்லியில் நேற்று துவங்கியது. காஷ்மீர், பயங்கரவாதம் உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்தும், இருநாடுகளுக்கு இடையே நம்பிக்கையை வலுப்படுத் தும் நடவடிக்கைகள் குறித்தும் நேற்று பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.&lt;br /&gt;&lt;br /&gt;* காளிமுத்து மரணம் ஏன்? ஜெயலலிதா புது விளக்கம்&lt;br /&gt;# சென்னை: ""மறைந்த காளிமுத்துவை நான் அண்ணனாக மதித்தேன். ஆனால், அவர் மீது பொய் வழக்கு போட்டு மன உளைச்சலை ஏற்படுத்தி அவரை சாகடித்தது கருணாநிதி,'' என்று அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா ஆவேசமாக கூறியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;* இந்திய விமானப்படை எப்போதும்"பெஸ்ட்' * தென்பிராந்திய பயிற்சி தளபதி பெருமிதம்&lt;br /&gt;# சென்னை: ""எந்த காலத்திலும் பாகிஸ்தானை விட இந்திய விமானப் படை அனைத்திலும் சிறந்தே விளங்குகிறது,'' என்று இந்திய விமானப் படையின் தென்பிராந்திய பயிற்சி பிரிவு தளபதி ஜி.எஸ்.சவுதிரி தெரிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;* யு.எஸ்., பறக்க ஜெட் தயாராகுது&lt;br /&gt;# புதுடில்லி: கடும் போராட்டத்துக்கு பின்னர், இந்தியாவின் முதன்மையான தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ்க்கு, அமெரிக்க வானில் பறக்க அனுமதி கிடைக்கும் சாத்தியம் அதிகரித்துள்ளதாக தெரிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;* வங்கதேச எதிர்க்கட்சி போராட்டத்தில் வன்முறை: ஒருவர் படுகொலை&lt;br /&gt;# தாகா: வங்கதேசத்தில் தலைமை தேர்தல் ஆணையரை நீக்கக்கோரி எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியது. இதில், ஒருவர் கொல்லப் பட்டார். மேலும் 60 பேர் காயமடைந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;* உலக கோப்பைக்கு யுவராஜ் வருவாரா?* தெ.ஆப்ரிக்க தொடரிலிருந்து நீக்கம்&lt;br /&gt;# புதுடில்லி: இந்திய அணியின் தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணத்திலிருந்து யுவராஜ் சிங் நீக்கப்பட்டுள்ளார். எனினும் உலக கோப்பை தொடரில் அவர் இடம் பெறும் வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1831468623100134403-8046709634312845411?l=newsintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://newsintamil.blogspot.com/feeds/8046709634312845411/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1831468623100134403&amp;postID=8046709634312845411&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/8046709634312845411'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/8046709634312845411'/><link rel='alternate' type='text/html' href='http://newsintamil.blogspot.com/2006/11/1114.html' title='தலைப்புகள்-11/14'/><author><name>வலைஞன்</name><uri>http://www.blogger.com/profile/09175459313475586529</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://photos1.blogger.com/blogger2/1027/223567947155778/183/gse_multipart64688.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1831468623100134403.post-8118272325135796893</id><published>2006-11-13T12:28:00.000Z</published><updated>2006-11-13T12:35:55.096Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='மாலைமலர்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்நாடு'/><title type='text'>நுழைவுத் தேர்வு ரத்தாகும்!</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;கருணாநிதியிடம் வல்லுநர் குழு அறிக்கை:&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;span style="color:#009900;"&gt;&lt;strong&gt;நுழைவு தேர்வு ரத்து ஆகிறது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;span style="font-size:85%;"&gt;சென்னை, நவ. 13-&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;`கிராமப்புற மாணவர் களும், அரசுப்பள்ளி மாணவர்களும் நுழைவுத் தேர்வால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்' என்று கோரிக்கை விடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இதையடுத்து, இந்த முறையை ரத்து செய்வது தொடர்பாக அண்ணா பல் கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;செய்த: மாலைமலர்&lt;br /&gt;&lt;br /&gt;இந்த குழு நுழைவுத் தேர்வு ரத்து தொடர்பாக சென்னை, மதுரையில் கலந்தாய்வு கூட்டம் நடத்தி பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோரிடம் கருத்து கேட்டது. அப்போது பெரும்பாலானோர் "நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்'' என்று கூறினார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;சி.பி.எஸ்.இ. மாணவர்கள், நகர்புற மாணவர்கள் உள்ளிட்ட ஒருசிலர் மட்டும் நுழைவுத் தேர்வு வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். நுழைவுத் தேர்வு பற்றிய பல்வேறு பிரச்சினைகள் குறித்து நிபுணர் குழு ஆய்வு செய்தது.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் ஆனந்த கிருஷ்ணன் தலைமையிலான நிபுணர் குழு, நுழைவுத் தேர்வு பற்றிய அறிக்கையை இன்று முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் வழங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்போது அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, எ.வ.வேலு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த குழுவின் பரிந்துரைப்படி நுழைவுத் தேர்வு ரத்தா கிறது. அதற்கான சட்டமும் வரும் சட்டசபை கூட்டத்தில் நிறைவேற்றப்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-&lt;br /&gt;&lt;br /&gt;2006 மே மாதம் ஆளுநர் சட்டமன்றத்தில் உரையாற்றிய போது-தொழிற்கல்வி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு மாணவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை தரக்கூடியதாகவும், அதிகப் பொருட் செலவை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;கிராமப்புற மாணவர்கள் மற்றும் ஏழைக் குடும் பங்களைச் சேர்ந்த மாண வர்களுக்கு நுழைவுத் தேர்வில் சம வாய்ப்பு இல்லை என்ற நிலை இருப்பதாலும் நுழைவுத் தேர்வினை ரத்து செய்வது குறித்து ஆராய்ந்து பரிந்துரை செய்ய ஒரு வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று அறி விக்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அதனைத் தொடர்ந்து 7.7.2006 அன்று அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் எம்.ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் இது குறித்து ஆராய்ந்து பரிந் துரைகளை வழங்க ஒரு வல்லுநர் குழு அமைக்கப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;வல்லுநர் குழு இன்று பரிந்துரைகளை முதல்- அமைச்சர் கருணாநிதியிடம் அளித்தது. நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படலாம் என்ற வல்லுநர் குழுவின் பரிந் துரைகளை நடைமுறைப் படுத்துவதற்கான வழிமுறை கள் அமைச்சரவைக் கூட் டத்தில் விவாதிக்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;டிசம்பர் 4 அன்று தொடங்கப்படும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் உரிய சட்ட முன் வடிவினைக் கொண்டு வந்து அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;&lt;strong&gt;செய்தி: தினமலர்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1831468623100134403-8118272325135796893?l=newsintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://newsintamil.blogspot.com/feeds/8118272325135796893/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1831468623100134403&amp;postID=8118272325135796893&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/8118272325135796893'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/8118272325135796893'/><link rel='alternate' type='text/html' href='http://newsintamil.blogspot.com/2006/11/blog-post_13.html' title='நுழைவுத் தேர்வு ரத்தாகும்!'/><author><name>வலைஞன்</name><uri>http://www.blogger.com/profile/09175459313475586529</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://photos1.blogger.com/blogger2/1027/223567947155778/183/gse_multipart64688.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1831468623100134403.post-2496340156846025918</id><published>2006-11-13T12:26:00.000Z</published><updated>2006-11-13T12:27:56.991Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தலைப்புகள்'/><title type='text'>தலைப்புகள்-11/13</title><content type='html'>&lt;strong&gt;தினமலர்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;* தமிழகத்தில் நுழைவு தேர்வை ரத்து செய்ய அனந்த கிருஷ்ணன் குழு பரிந்துரை&lt;br /&gt;# சென்னை : தமிழகத்தில் தொழிற் படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வை ரத்து செய்ய அனந்த கிருஷ்ணன் குழு பரிந்துரை செய்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;* தனித்து போட்டி * காங்கிரசில் இப்போதே ஒலிக்கத் துவங்கி விட்டது கோஷம் *மத்திய அரசில் இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சிகள் கலக்கம்&lt;br /&gt;# புதுடில்லி:மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. அடுத்த லோக்சபா தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் இருந்தாலும், தனித்து போட்டி என்ற கோஷம் இப்போதே காங்கிரஸ் கட்சிக்குள் எழ தொடங்கி விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;* சென்னையிலிருந்து புறப்படும் விமானங்களை கடத்த சதி அமெரிக்க உளவுத்துறையின் எச்சரிக்கையால் பரபரப்பு * ஐரோப்பிய விமானங்களில் விடிய விடிய சோதனை&lt;br /&gt;# சென்னை:இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் விமானங்களை பயங்கரவாதிகள் கடத்தப் போவதாக வந்த தகவலை தொடர்ந்து சென்னையில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட மூன்று விமானங்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதே போன்றதொரு எச்சரிக்கை நடவடிக்கை டில்லி, மும்பை விமான நிலையங்களிலும் மேற்கொள்ளப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;* மத்திய அரசு பணிகளில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு * வீரப்ப மொய்லி யோசனை&lt;br /&gt;# புதுடில்லி:""மத்திய அரசு பணிகளில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்'' என்று வீரப்ப மொய்லி கூறினார்.மத்திய அரசு பணிகளில் பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்க மாஜி கர்நாடக முதல்வர் வீரப்ப மொய்லி தலைமையில் உயர் மட்ட கமிட்டி மத்திய அரசு நியமித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;* புதிய ஜென் மாடல் கார்கள்&lt;br /&gt;# புதுடில்லி:மாருதி உத்யோக் நிறுவனம், புதிய ஜென் மாடல் கார்களை விரைவில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;* வங்கதேசத்தில் எதிர்க்கட்சி போராட்டம் ரயில் மற்றும் பஸ்களுக்கு தீ வைப்பு&lt;br /&gt;# தாகா:வங்கதேசத்தில் எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டத்தில் ரயில் மற்றும் பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லுõரிகள் இயங்கவில்லை. வங்கதேசத்தில் விரைவில் பார்லிமென்ட் தேர்தல் நடக்கவுள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;* முகமது யூசுப் சதத்தில் பாக்., முன்னிலை! * எடுபடவில்லை வெ.இண்டீஸ் பந்துவீச்சு&lt;br /&gt;# லாகூர்:லாகூர் டெஸ்டில் துõள் கிளப்புகிறது பாகிஸ்தான்.நேற்று முகமது யூசுப் சூப்பர் சதம் அடிக்க, முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்தது. தற்போது 59 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் ரசாக் போன்றோர் இருப்பதால் வலுவான ஸ்கோரை எட்ட வாய்ப்பு உள்ளது. ஆடுகளம் படுமந்தமாக இருந்ததால் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு எடுபடாமல் போனது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மாலைமலர்&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;* கருணாநிதியிடம் வல்லுநர் குழு அறிக்கை: நுழைவு தேர்வு ரத்து ஆகிறது&lt;br /&gt;* விமானங்களை கடத்த சதி: மிரட்டல் விடுத்தது யார்? உளவுத்துறை தீவிர விசாரணை&lt;br /&gt;* டெல்லி கடைகள் `சீல்'வைப்பை எதிர்த்து மத்திய அரசு அப்பீல்&lt;br /&gt;* ஆண்டிப்பட்டியில் பஸ் மறியலில் ஈடுபட்ட தங்கதமிழ்செல்வன் எம்.பி. உள்பட 100 அ.தி.மு.க.வினர் கைது&lt;br /&gt;* காளிமுத்துவை நான் மிரட்டவில்லை: கருணாநிதிக்கு ஜெயலலிதா பதில்&lt;br /&gt;* திருமண மண்டப இடிப்பு பிரச்சினை: விஜயகாந்த்-மந்திரி டி.ஆர்.பாலு மோதல்&lt;br /&gt;* போலீஸ் வேட்டை தீவிரம்: சென்னையில் 5 நாளில் 2000 ரவுடிகள் கைது&lt;br /&gt;* ம.தி.மு.க.வை நிர்மூலம் செய்ய கருணாநிதி திட்டம்: வைகோ குற்றச்சாட்டு&lt;br /&gt;* கிராம மக்களுடன் சிறப்பு ரெயிலில் வருகை: 4 பஞ்சாயத்து தலைவர்களை மு.க.ஸ்டாலின் வரவேற்றார்&lt;br /&gt;* இலங்கையில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் எம்.பி. உடல் புதன்கிழமை அடக்கம்; கொழும்பில் இன்று முழு அடைப்பு&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1831468623100134403-2496340156846025918?l=newsintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://newsintamil.blogspot.com/feeds/2496340156846025918/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1831468623100134403&amp;postID=2496340156846025918&amp;isPopup=true' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/2496340156846025918'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/2496340156846025918'/><link rel='alternate' type='text/html' href='http://newsintamil.blogspot.com/2006/11/1113.html' title='தலைப்புகள்-11/13'/><author><name>வலைஞன்</name><uri>http://www.blogger.com/profile/09175459313475586529</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://photos1.blogger.com/blogger2/1027/223567947155778/183/gse_multipart64688.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1831468623100134403.post-3488164473862449516</id><published>2006-11-12T03:26:00.000Z</published><updated>2006-11-12T03:32:17.213Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தினகரன்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தமிழ்நாடு'/><title type='text'>வேலையற்றோர் உதவித்தொகை</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் 2 லட்சம்&lt;/span&gt;&lt;/strong&gt; &lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;இளைஞர்களுக்கு நிதியுதவி&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#3333ff;"&gt;தமிழகம் முழுவதும் திட்டம் தொடங்கியது&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருச்சி. நவ.12: வேலைவாய்ப்பு அலுவலங்களில் பதிவு செய்து காத்திருக்கும் இளைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் நேற்று தொடங்கியது. திருச்சியில் இத்திட்டத்தை முதல்வர் கருணாநிதி தொடங்கி வைத்தார். மாவட்டங்களில் அமைச்சர்கள் இத்திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 5 ஆண்டு பூர்த்தியான இளைஞர்களுக்கு மாத உதவித் தொகை அளிக்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் திமுக உறுதி அளித்திருந்தது. அந்தத் திட்டம் மாநிலம் முழுவதும் நேற்று தொடங்கப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இத்திட்டத்தின்படி, பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.150, பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ரூ.200, பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.300 உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;உதவி பெறுவோரின் வங்கிக் கணக்கில் 3 மாதங்களுக்கு ஒரு முறை இந்தத் தொகை சேர்க்கப்படும். மாநிலம் முழுவதும் 2 லட்சம் இளைஞர்களுக்கு உதவித் தொகை அளிக்கப்படும். இதற்காக அரசு மாதம் ரூ.4 கோடி செலவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;திருச்சி நேரு விளையாட்டரங்கில் நடந்த திட்டத் தொடக்க விழாவில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது:&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த விழாவைப் பார்க்கும்போது, அண்ணா சொன்ன பொன்மொழி ஒன்று நினைவுக்கு வருகிறது. 'சாலை ஓரத்தில் வேலையற்றதுகள். வேலையற்றதுகள் உள்ளத்தில் விபரீத எண்ணங்கள், அரசே, அதுதான் காலக்குறி?' என்பதுதான் அந்த பொன்மொழி.&lt;br /&gt;&lt;br /&gt;சாலையோரத்தில் படுத்துக்கொண்டு மௌனப்புரட்சி செய்துகொண்டிருக்கும் வேலையற்றவர்கள் கொதித்து எழுந்தால் அரசு கவிழும். அந்த சுழல்காற்றில் நீங்கள் எல்லாம் சுழற்றி எறியப்படுவீர்கள் என்பதே அதன் அர்த்தம். அதை நெஞ்சில் பதிய வைத்துதான், இந்தத் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வாறு உதவித்தொகை வழங்குவதன் மூலம் வேலையில்லாத நிலை ஏற்படுமா? என்றால் அது முடியாது. இது ஆறுதல் உதவிதான். இதை உதவித்தொகை என்றோ, கருணைத்தொகை என்றோ அழைக்கப்படுவதை நான் விரும்பவில்லை. இது அரசின் கடமைத்தொகை.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தத் தொகையைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பு பெற்று, அரசின் திட்டங்களைப் பெற்று வீட்டையும் நாட்டையும் காப்பாற்ற வேண்டும் என்று இளைஞர்களை கேட்டுக்கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தேர்தல் நேரத்தில் திமுக அளித்த வாக்குறுதிகளை தொடர்ந்து நிறைவேற்றி வருவதை இங்கே குறிப்பிட்டார்கள். இதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. எந்த ஒரு ஆட்சியிலும் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினால் அது வியப்புக்குரிய ஒன்றுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழக அரசு போலவே மத்திய அரசும் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. இப்போது நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் நமது கூட்டணி மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;செய்தி: தினகரன்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1831468623100134403-3488164473862449516?l=newsintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://newsintamil.blogspot.com/feeds/3488164473862449516/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1831468623100134403&amp;postID=3488164473862449516&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/3488164473862449516'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/3488164473862449516'/><link rel='alternate' type='text/html' href='http://newsintamil.blogspot.com/2006/11/blog-post_12.html' title='வேலையற்றோர் உதவித்தொகை'/><author><name>வலைஞன்</name><uri>http://www.blogger.com/profile/09175459313475586529</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://photos1.blogger.com/blogger2/1027/223567947155778/183/gse_multipart64688.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1831468623100134403.post-3504598149196713126</id><published>2006-11-12T03:18:00.000Z</published><updated>2006-11-12T03:22:46.076Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தலைப்புகள்'/><title type='text'>தலைப்புகள்-11/12</title><content type='html'>தினமலர்&lt;br /&gt;&lt;br /&gt;* மிரட்டல்!* இலங்கையில் உள்நாட்டு கலவரம் வெடிக்கும் * சிங்களர்களை தாக்க புதிய அமைப்பு எச்சரிக்கை &lt;br /&gt;# கொழும்பு : இலங்கையில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 1983ம் ஆண்டு துவங்கி பல ஆண்டுகள் நீடித்த உள்நாட்டு கலவரத்தால் 65 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். அது போன்றதொரு உள்நாட்டு கலவரம் மீண்டும் வெடிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக, சர்வதேச அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. &lt;br /&gt; &lt;br /&gt;* "தம்பிக்கு அண்ணன் கொடுக்கும் தொகை' திருச்சியில் முதல்வர் கருணாநிதி உருக்கம் &lt;br /&gt;# திருச்சி : ""வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அளிக்கும் உதவித் தொகை முதல்வர் வழங்கும் தொகை அல்ல. தம்பிக்கு அண்ணன் கொடுக்கும் தொகையாக கருத வேண்டும்,'' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.&lt;br /&gt; &lt;br /&gt;* போலி ஆவணங்களுடன் விமான நிலையத்தில் மூவர் * பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்பதால் பரபரப்பு *மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை &lt;br /&gt;# சென்னை : பயங்கரவாதிகள் எந்த நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்ற பதட்டத்துடன் அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டிருக்கும் வேளையில், போலி விசா மற்றும் பாஸ்போர்ட்டுகளுடன் விமானத்தில் பயணம் செய்ய வந்த வெளிநாட்டைச் சேர்ந்த மூவரால் சென்னை விமான நிலையத்தில் பதட்டம் ஏற்பட்டது.&lt;br /&gt; &lt;br /&gt;* போரை விட அச்சுறுத்தலாக உள்ளது எல்லை தாண்டிய பயங்கரவாதம் : பிரணாப் முகர்ஜி ஆவேசம் &lt;br /&gt;# புதுடில்லி : ""நாடுகளுக்கு இடையேயான போர்களை விட, எல்லை கடந்த பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இப்பிரச்னையைச் சமாளிக்க, சர்வதேச சமூகத்தினரின் குறிக் கோளுடன் கூடிய ஒத்துழைப்பு தேவை,'' என்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.&lt;br /&gt; &lt;br /&gt;* தொடர் மழையால் தக்காளி விலை உயர்வு *வெளி மாநில ஏற்றுமதியும் பாதிப்பு &lt;br /&gt;# வாழப்பாடி : வாழப்பாடி பகுதியில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து பெய்த மழையால், தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், வெளி மாநிலங்களுக்கான ஏற்றுமதி தடைபட்டுள்ளது. &lt;br /&gt; &lt;br /&gt;* டாக்டர்களுக்கு பேருதவி புரியும் கூகுல் வெப்சைட் &lt;br /&gt;# லண்டன் : நோயாளிகள் மட்டுமல்லாது டாக்டர்களும் நோய்கள் தொடர்பாக தங்களுக்கு வேண்டிய தகவல்களைத் தேடுவதற்கு "கூகுல் வெப்சைட்டை' பயன்படுத்துகின்றனர் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.&lt;br /&gt; &lt;br /&gt;* சாதிக்க தவறும் முன்னணி வீரர்கள்!* டிராவிட் குற்றச்சாட்டு &lt;br /&gt;# பெங்களூர் : ""டாப் ஆர்டர் பேட்ஸ் மேன்களின் பொறுப்பற்ற ஆட்டமே, தொடர்ச்சியான தோல்விக்கு வழிவகுத்து விட் டது. உலககோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்பாக முன்னணி வீரர்கள் இழந்த பார்மை மீட்க வேண்டும். ,'' என எச்சரிக்கிறார் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1831468623100134403-3504598149196713126?l=newsintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://newsintamil.blogspot.com/feeds/3504598149196713126/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1831468623100134403&amp;postID=3504598149196713126&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/3504598149196713126'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/3504598149196713126'/><link rel='alternate' type='text/html' href='http://newsintamil.blogspot.com/2006/11/1112.html' title='தலைப்புகள்-11/12'/><author><name>வலைஞன்</name><uri>http://www.blogger.com/profile/09175459313475586529</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://photos1.blogger.com/blogger2/1027/223567947155778/183/gse_multipart64688.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1831468623100134403.post-2651669329582366101</id><published>2006-11-11T02:18:00.000Z</published><updated>2006-11-11T02:19:35.761Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தலைப்புகள்'/><title type='text'>தலைப்புகள்-11/11</title><content type='html'>&lt;strong&gt;தினத்தந்தி&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;* இலங்கையில் தமிழ் எம்.பி. சுட்டுக் கொலை&lt;br /&gt;# இலங்கையில் தமிழ் எம்.பி.யான நடராஜா ரவிராஜ், மர்ம மனிதர்களால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;* திருமண மண்டபம் இடிப்பு :விஜயகாந்த் புகார்&lt;br /&gt;# எனது கட்சியை அழிப்பதற்கே, திருமண மண்டபத்தை இடிக்க போவதாக அறிவித்துள்ளனர்-விஜயகாந்த் புகார்.&lt;br /&gt;&lt;br /&gt;* இலங்கை பிரச்சினை :மன்மோகன்சிங் உறுதி&lt;br /&gt;# இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மன்மோகன்சிங் உறுதி.&lt;br /&gt;&lt;br /&gt;* இட ஒதுக்கீடு வழக்கு :ஜெயலலிதா குற்றச்சாட்டு&lt;br /&gt;# இடஒதுக்கீட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கை நடத்தியதாக மத்திய, தமிழக அரசு மீது ஜெயலலிதா குற்றச்சாட்டு.&lt;br /&gt;&lt;br /&gt;* "நான் பிரதமர் ஆவது உறுதி''-லல்லு பிரசாத் அறிவிப்பு&lt;br /&gt;# "நான் பிரதமர் ஆவது உறுதி'' என்று மத்திய ரெயில்வே மந்திரி லல்லு பிரசாத் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தினமலர்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* அகதிகளை தாக்கிய ராணுவத்திற்கு புலிகள் பதிலடி * கொழும்பு நகரில் தமிழ் எம்.பி., சுட்டுக் கொலை&lt;br /&gt;# கொழும்பு : இலங்கையில் விடுதலைப் புலிகளின் ஆதரவு எம்.பி., நடராஜா ரவிராஜ் நேற்று காலை சுட்டுக் கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் சரமாரி துப்பாக்கி சூடு நடத்தியதில் எம்.பி.,யின் பாதுகாவலரும் கொல்லப்பட்டார். அதே நேரத்தில் திரிகோணமலை கடற்பகுதியில் இலங்கை கடற்படை மற்றும் விடுதலைப் புலிகள் இடையே நடந்த மோதலில் இரண்டு தரப்பையும் சேர்ந்த 50 பேர் கொல்லப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;* நுழைவுத்தேர்வு உண்டா?: அரசு முடிவு என்ன? 13ம் தேதி முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு&lt;br /&gt;# சென்னை : நுழைவுத் தேர்வை ரத்து செய்வது குறித்து ஆய்வு செய்த அனந்தகிருஷ்ணன் கமிட்டி வரும் 13ம் தேதி முதல்வரிடம் தனது அறிக்கையை சமர்ப்பிக்கிறது. அதனடிப்படையில் நுழைவுத் தேர்வு விஷயத்தில் மாணவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;* மனித நேயமற்று சுடுகாட்டில் வீசப்பட்ட முதியவர் சாவு&lt;br /&gt;# மேலூர் : மேலூர் அருகே சுடுகாட்டில் வீசிப்பட்ட முதியவர் இறந்து போனார். இறந்த அவர், தன் தம்பியை கொலை செய்த குற்றவாளி என அடையாளம் தெரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;* இந்திய அமெரிக்க உடன்பாட்டுக்கு ஆதரவு திரட்ட ஜனநாயக கட்சியினருடன் அதிபர் புஷ் ஆலோசனை&lt;br /&gt;# வாஷிங்டன் : இந்திய அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டுக்கு செனட் சபையில் ஒப்புதல் பெற அதிபர் புஷ் தனிப்பட்ட ஆர்வம் காட்டி வருகிறார். இது குறித்து ஜனநாயக கட்சி தலைவர்களுடனும் அவர் பேசியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;* ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சாலை: "சாம்சங்' நிறுவனம் ஒப்பந்தம்&lt;br /&gt;# சென்னை : சென்னையை அடுத்த ஸ்ரீபெரும் புதூரில் "சாம்சங்' நிறுவனம் 450 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற் சாலை துவங்க தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.&lt;br /&gt;&lt;br /&gt;* அமைதி ஒப்பந்தத்தின் வெற்றியை கொண்டாடிய மாவோயிஸ்ட்கள்&lt;br /&gt;# காத்மாண்டு : நேபாள அரசுக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தை கொண்டாடும் பொருட்டு மாவோயிஸ்ட்டுகள் சார்பில் நேற்று வெற்றி பேரணிகள் நடத்தப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;* மகாத்மா, நேரு வரிசையில் நானா...!* சச்சின் ஆச்சர்யம்&lt;br /&gt;# மும்பை : மகாத்மா காந்தி, நேரு ஆகியோரது வரிசையில் தனது பெயரையும் சேர்த்துள்ளது மிகப் பெரும் கவுரவம் என சச்சின் தெரிவித்துள்ளார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1831468623100134403-2651669329582366101?l=newsintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://newsintamil.blogspot.com/feeds/2651669329582366101/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1831468623100134403&amp;postID=2651669329582366101&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/2651669329582366101'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/2651669329582366101'/><link rel='alternate' type='text/html' href='http://newsintamil.blogspot.com/2006/11/1111.html' title='தலைப்புகள்-11/11'/><author><name>வலைஞன்</name><uri>http://www.blogger.com/profile/09175459313475586529</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://photos1.blogger.com/blogger2/1027/223567947155778/183/gse_multipart64688.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1831468623100134403.post-7920111069326897443</id><published>2006-11-11T02:06:00.000Z</published><updated>2006-11-11T02:09:17.981Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தகவல்கள்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தினமணி'/><title type='text'>வல்லிக்கண்ணன்</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;பன்முகத்தன்மை கொண்ட எழுத்தாளர் வல்லிக்கண்ணன்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருநெல்வேலி, நவ. 11: சிறுகதை, நாவல், திறனாய்வு என இலக்கியத்தின் அனைத்துத் தளங்களிலும் தடம் பதித்த பன்முகத்தன்மை கொண்டவர் மறைந்த எழுத்தாளர் வல்லிக்கண்ணன். இறுதிமூச்சு வரை இலக்கியத்துக்காகவே வாழ்ந்தவர். இலக்கியத்தின் மீது கொண்ட தீவிரப் பற்றால், மணவாழ்க்கையை மறுத்து, எளிமையாக வாழ்ந்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுகதைகளின் உச்சத்தை தொட்ட நெல்லைச் சீமையின் அழியாப் புகழ் பெற்ற இலக்கியகர்த்தா. புதுமைப்பித்தனின் சம காலத்தவர்.&lt;br /&gt;&lt;br /&gt;திருநெல்வேலி அருகே உள்ள ராஜவல்லிபுரத்தில் பிறந்த இவர், இளமைப் பருவம் முதல் இலக்கிய தாகம் உடையவராக இருந்தார். அதன் காரணமாக, தனது பெயரைக்கூட ஊரின் பெயரை நினைவுகூரும் வகையில் வல்லிக்கண்ணன் என மாற்றிக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;தமக்கிருந்த இலக்கிய தாகத்துக்கு வடிகால் தேடவும், அதற்காக ஏதேனும் ஒரு பத்திரிகையில் பணியாற்றும் ஆர்வத்துடனும் தான் பார்த்து வந்த அரசு வேலையை உதறிவிட்டு நடந்தே சென்னை சென்றார். அங்கு "காந்தி', "கிராம ஊழியன்' உள்ளிட்ட பத்திரிகைகளில் பணி செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;புதுமைப்பித்தனுடன் தொடர்பு வைத்திருந்த வல்லிக்கண்ணன், பல குறு நாவல்கள், சிறுகதைகள், திறனாய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;குடும்பச் சூழலில் இருந்து விலகி இருந்த இவர், அவரது சகோதரர் இறந்த பிறகு அந்தக் குடும்பச் சுமையை ஏற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர் எழுதிய ""புதுக்கவிதையின் தோற்றமும், வளர்ச்சியும்'' என்ற திறனாய்வு நூலுக்கு 1978-ல் சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது. இந்த விருதைப் பெற்ற ராஜவல்லிபுரத்தைச் சேர்ந்த இரண்டாவது நபர் வல்லிக்கண்ணன். இதே ஊரைச் சேர்ந்த ரா.பி. சேதுப்பிள்ளை முதல் விருதைப் பெற்றவர் ஆவார்.&lt;br /&gt;&lt;br /&gt;தாமிரபரணி பிரியர்: சென்னையில் வசித்து வந்த வல்லிக்கண்ணன், சொந்த ஊரான திருநெல்வேலிக்கு வந்த உடன் பஸ் அல்லது ரயில் நிலையத்தில் இருந்து நேராக தாமிரபரணி ஆற்றுக்குச் சென்று குளித்துவிட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்ப்பாராம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;color:#3333ff;"&gt;&lt;strong&gt;செய்தி : தினமணி&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/1831468623100134403-7920111069326897443?l=newsintamil.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://newsintamil.blogspot.com/feeds/7920111069326897443/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=1831468623100134403&amp;postID=7920111069326897443&amp;isPopup=true' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/7920111069326897443'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/1831468623100134403/posts/default/7920111069326897443'/><link rel='alternate' type='text/html' href='http://newsintamil.blogspot.com/2006/11/blog-post_4282.html' title='வல்லிக்கண்ணன்'/><author><name>வலைஞன்</name><uri>http://www.blogger.com/profile/09175459313475586529</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='32' height='32' src='http://photos1.blogger.com/blogger2/1027/223567947155778/183/gse_multipart64688.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-1831468623100134403.post-2723345831711211728</id><published>2006-11-11T02:01:00.000Z</published><updated>2006-11-11T02:06:39.396Z</updated><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='அரசியல்'/><category scheme='http://www.blogger.com/atom/ns#' term='தினத்தந்தி'/><title type='text'>விஜயகாந்த் மண்டப அரசியல்</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#cc0000;"&gt;எனது கட்சியை அழிப்பதற்காக திருமண மண்டபத்தை இடிக்கிறார்கள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;விஜயகாந்த் குற்றச்சாட்டு&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;சென்னை, நவ.11-&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனது கட்சியை அழிப்பதற்காகவே, திருமண மண்டபத்தை இடிக்கப் போவதாக அறிவித்துள்ளனர் என்று விஜயகாந்த் குற்றம் சுமத்தி உள்ளார்.&lt;br /&gt;&lt;br /&gt;தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;திருமண மண்டப விவகாரம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சட்டசபை தேர்தலுக்கு முன்னர் மத்திய மந்திரி டி.ஆர்.பாலு இப்போதைக்கு எனது திருமண மண்டபத்தை இடிக்கும் திட்டம் இல்லை என்றார். பின்னர் விஜயகாந்த் மாற்று திட்டம் கொடுத்தால் பரிசீலிப்போம் என்றார். அப்போதே நான் இடித்துக் கொள்ளுங்கள் என்று தான் கூறினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிலையில் ஜனவரி 1-ந் தேதி எனக்கு எந்த வாழ்த்தும் அனுப்பாத டி.ஆர்.பாலு புத்தாண்டு வாழ்த்து அனுப்பினார். அந்த வாழ்த்தின் பின்பக்கத்தில் கோயம்பேடு பாலம் மற்றும் நெடுஞ்சாலையின் வரைபடம் இருந்தது. அந்த வரைபடத்தை வைத்து, ஓய்வு பெற்ற சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் தலைமை திட்ட அமைப்பாளர் ஒருவரை கொண்டு மாற்று திட்டத்தை தயாரித்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன்படி எனது திருமண மண்டபம் பகுதியில் மேம்பாலம் வரவில்லை. அந்த பகுதியில் தரைவழிப் பாதை தான் செல்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தேர்தல்கள் முடிந்தபின்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதனை நிராகரித்து விட்டதாக இப்போது பதில் அனுப்பியிருக்கிறார்கள். அதிலும் என்ன காரணம் என்று கூறவில்லை. தொழில்நுட்பம் ஒத்துவரவில்லை என்று கூறியுள்ளனர். அவர்களது மனது தான் ஒத்துவரவில்லை. இத்தனை மாதம் கழித்து, சட்டசபை தேர்தல், உள்ளாட்சி தேர்தல் அனைத்தும் முடிந்த பின்னர் இப்போது இடிப்பதாக கூற காரணம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;மத்திய கைலாஷ் பகுதியில் கோவிலை இடிக்காமல் கோவிலுக்கு பின்னால் பாதையை கொண்டு செல்லவில்லையா? ஏன் கோவிலை இடிக்க வேண்டியது தானே? மதுரை மற்றும் பல இடங்களில் சாலை விரிவாக்கத்திற்காக கோவில்களை இடிக்கவில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;விமான நிலைய விரிவாக்கம்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உளுந்தூர்பேட்டையில் ரெயில்வே மேம்பாலம் வேண்டும், லட்சக்கணக்கான வாகனங்கள் பாதிக்கிறது என்று பல ஆண்டுகளாக கேட்கிறார்கள், அதைப்பற்றி எல்லாம் யாரும் கவலைப்படவில்லை. மண்டபத்தை இடித்துவிட்டு குடிசை மாற்று வாரிய வீடுகள் கட்டி ஏழைகளுக்கு வீடு தரப்போகிறார்களா? வாகனங்கள் செல்லும் தரைவழிப்பாதை தானே, மாற்றி அமைத்தால் என்ன குறைந்துவிடும். கிழக்கு கடற்கரை சாலை பல இடங்களில் வளைந்து செல்லவில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;மீனம்பாக்கம் விமான நிலைய விரிவாக்கத்துக்காக பொழிச்சலூரில் இடம் தேவை என்ற போது எதிர்ப்பு கிளம்பியது. அங்கு குடியிருப்பவர்கள் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியினர் தான் என்பது தெரியவந்ததும் அந்த திட்டத்தை கைவிட்டு விட்டார்கள். மத்திய அரசு அந்த இடத்தை கேட்கிறது. ஆனால் தமிழக அரசு அதனை கையகப்படுத்தி தரும் திட்டத்தை கைவிட்டு விட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அதே போல சென்னைக்கு வெளியே துணை நகரம் அமைக்கப்போவதாக கூறினார்கள். தி.மு.க.வின் கூட்டணி கட்சி எதிர்ப்பு தெரிவித்ததும் அதனை கைவிட்டு விட்டார்கள். இவர்களுக்கு தேவை என்றால் ஒன்று, தேவையில்லை என்றால் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;கட்சியை அழிக்க சதி&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சட்டசபை தேர்தலில் அதிக வாக்குகள் வாங்கினோம். அதைவிட உள்ளாட்சி தேர்தலில் கூடுதல் வாக்குகள் வாங்கியிருக்கிறோம். இதனால் விஜயகாந்தை வளரவிடக் கூடாது. கட்சியையே அழித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தான் மண்டபத்தையும், கட்சி அலுவலகத்தையும் இடித்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;தி.மு.க.வுக்கு அடுத்த படியாக எனது அலுவலகத்துக்கு தான் கூட்டங்கள் நடத்துவதற்கு வசதியாக பெரிய மண்டபம் இருக்கிறது. எனவே நம்மைப் போலவே தே.மு.தி.க.வும் கூட்டம் நடத்துவதா என்ற எண்ணம். இந்த கட்டிட இடிப்பு விவகாரம் திட்டமிட்ட சதிச் செயல். தேர்தலுக்கு முன்பே இதை கூறியிருக்கலாமே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தவறான தகவல்&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மதிப்பீடு எவ்வளவு என்று கேட்டார்கள். எவ்
