Monday, March 26, 2007

கொழும்பு விமானப்படை தளத்தில் விடுதலைப் புலிகள் வான்தாக்குதல்

கொழும்பு விமானபடை தளம் மீது விடுதலைப்புலிகள் விமானம் மூலம் குண்டுவீச்சு- 3 பேர் பலி, ஹெலிகாப்டர்கள் நாசம்

கொழும்பு, மார்ச். 26-

இலங்கையில் சிங்கள ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடந்து வரும் உள்நாட்டு சண்டையில் கடந்த ஆண்டு வரை இரு தரப்பினரும் தரைவழி மோதல்களிலும் கடலிலும் தான் கவனம் செலுத்தி வந்தனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து சிங்களராணுவம் விமானப்படையை பயன் படுத்தி தமிழர்களின் கிரா மங்கள் மீது குண்டுகளை வீசி வருகிறது. இதில் பல கிரா மங்கள் அழிந்து விட்டன.

பல்லாயிரக்கணக்கான ஈழத்தமிழர்கள் சொந்த கிராமங்களை காலி செய்து வேறு இடங்களுக்கு ஓட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதை பயன்படுத்தி சிங்கள ராணுவம் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் முன்னேறி வருகிறது. குறிப்பாக கிபீர் வகை குட்டி விமானம் மூலம் சிங் களர்கள் நடத்தும் தாக்குதல் கொடூரமாக உள்ளது.

சிங்களர்களின் விமானப் படை தாக்குதல் அத்துமீறி போய் கொண்டிருப்பதால் விடுதலைப்புலிகள் மிகப் பெரிய பதிலடி கொடுப் பார் கள் என்று உளவுத்துறையி னர் கூறி வந்தனர். அதை உறு திப்படுத்துவது போல இன்று அதிகாலை விடுதலைப்புலி கள் முதன்முதலாக தங்கள் விமானப்படையைப் பயன் படுத்தி அதிரடி தாக்கு தலை நடத்தினார்கள். கொழும்பு அருகே காட்டுநாயக்காவில் உள்ள சிங்கள விமானப்படை தலைமை தளம் மீது இந்த தாக்குதல் நடந்தது.

நள்ளிரவு 12.45 மணிக்கு விடுதலைப்புலிகளின் 2 இலகு ரக விமானங்கள் இந்த தாக்குதலை நடத்தின. அந்த 2 விமானங்களும் இலங்கை விமானப்படை தளத்தை குறி வைத்து குண்டு மழை பொழிந்தன. பிறகு அந்த 2விமானங்களும் சக்தி வாய்ந்த 4 குண்டுகளை வீசி அதிரடி தாக்குதலை மேற்கொண்டன.

தாக்குதலுகுள்ளான விமா னப்படை தளத்தில் தான் ரஷிய தயாரிப்பான `மிக்'ரக சண்டை விமானங்களும் இஸ்ரேல் தயாரிப்பான கிபிர் ரக விமானங்களும் நிறுத்தப்பட்டிருந்தன. ஈழத்தமி ழர்கள் மீது குண்டு வீச இந்த விமானங்களைத்தான் இலங்கை பயன்படுத்தி வரு கிறது. அந்த விமானங்களை குறி வைத்து விடுதலைப்புலிகள் விமானங்களில் இருந்து குண் டுகளை வீசினார்கள்.

இதில் மிக், கிபிர் சண்டை விமானங்கள் கடும் சேதம் அடைந்தன. இந்த தாக்குதலின் போது விமானப்படை வீரர்கள் 3பேர் கொல்லப்பட்டனர். 16 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் நீர்கொழும்பு மருத் துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.

வான்புலிகளின் எதிர் பாராத தாக்குதலால் இலங்கை விமானப்படை வீரர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர். காட்டுநாயக்க விமானப்படை தளத்தின் மற்றொரு பகுதி யில்தான் கொழும்பு சர்வதேச விமான நிலையம் உள்ளது. வான்புலிகள் மீண்டும் தாக் கக்கூடும் என்ற பயத்தில் உட னடியாக கொழும்பு விமான நிலையம் மூடப்பட்டது.

இன்று காலை 8.30 மணி வரை விமானநிலையம் மூடப்பட்டிருந்தது. இதனால் கொழும்புக்கு வந்த 3 வெளிநாட்டு விமானங்கள் சென்னைக்கு திருப்பி விடப் பட்டன. 8.30 மணிக்கு பிறகு கொழும்பு விமானநிலையம் திறக்கப்பட்டாலும் அதிகாரிகளும், ஊழியர்களும் பதற்றத்துடன் காணப்பட்டனர்.

வான்புலிகளின் அதிரடி தாக்குதல் காரணமாககாட்டு நாயக்க ப குதி முழுவதும் இன்றுகாலை வரை புகை மண்டலமாக காட்சி அளித்தது. இதனால் கொழும்பில் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். இலங்கை விமானப்படை அதிகாரிகளுக்கும் இது கடும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

வான்புலிகள் தாக்குதல் நடத்தியதை சிஎன்என் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் புலிகளின் செய்தித் தொடர்பாளர் தமிழ்ச்செல் வன் உறுதிப்படுத்தினார். காட்டு நாயக்க விமானப்படை தளத்தில் பார்க்கிங் பகுதியில் 4 குண்டுகள் வீசப்பட்டதாக தெரிவித்தார்.

விடுதலைப்புலி தளபதிகளில் ஒருவரான ராசையா இளந்திரையன் கூறியதாவது:-

வான்புலிகளின் 2 விமானங்கள் இந்த தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டன. காட்டு நாயக்க தலைமை முகாமை அழித்து விட்டு 2 விமானங்களும் பாதுகாப்பாக வன்னிபடை தளத்துக்கு திரும்பி வந்து விட்டன.

வான்புலிகள் தாக்குதலில் கிபிர், மிக் ரக விமானங்களுக்கு பெரும் அழிவுகள் ஏற்பட்டுள்ளது. எதிர் காலத்திலும் இத்தகைய தாக்குதல்கள் தொடர்ந்து நடத்தப்படும். வான்புலிகள் முதன் முதலாக இன்றுதான் தாக்குதலை தொடங்கி உள்ளனர். எமது மக்களை காப்பாற்றுவதற்காக, இலங்கை விமானப்படையை அழிக்கவே இன்றைய வான்தாக்குதல் நடத்தப்பட்டது.

இவ்வாறு ராசையா இளந்திரையன் கூறினார்.

வான்புலிகள் தாக்குதலை ராணுவ செய்தித் தொடர்பாளர் அஜந்தாசில்வா ஒத்துக்கொண்டார்.

அவர் கூறியதாவது:-

வான்புலிகள் தாக்குதல் நடத்தியதும் வான் எதிர்ப்பு சாதனங்கள் இயங்கின. உடனே புலிகளின் 2 விமானங்களும் தப்பிச் சென்று விட்டன. எங்களது வான்படை மூலம் புலிகளின் விமானங்களை தேடி வருகிறோம்.

அவர்கள் நடத்திய குண்டு வீச்சு குறி தப்பி விட்டது. எனவே எங்களுக்கு அதிக சேதம் இல்லை. விமானப்படை தளத்துக்குள் எரிந்த தீயை உடனே அணைத்து விட்டோம். அனைத்து முன்எச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்பட்டுள்ளன.

வான்தாக்குதல் நடத் தப்பட்டதும் பயணிகள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர். வான் தாக்குதல்கள் தொடரும் என விடுதலைப்புலிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதால் கொழும் பின் அனைத்துப் பகுதிகளிலும் இரவுநேரங்களில் மின் விளக்குகளை எரிய விட வேண்டாம் என்று பொது மக்களுக்கு அறிவுறுத்தி இருக் கிறோம்.

இவ்வாறு அஜந்தாசில்வா கூறினார்.

Wednesday, March 21, 2007

பாப்உல்மர் மரணத்தில் சந்தேகம்

பாகிஸ்தான் பயிற்சியாளர் விஷம் கொடுத்து கொலையா?
விசாரணைக்காக பாகிஸ்தான் அணி ஜமைக்காவைவிட்டு வெளியேற தடை


ஜமைக்கா, மார்ச்.21-

பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் பாப் உல்மர் சாவில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. இதனால் பாகிஸ்தான் அணி ஜமைக்காவில் இருந்து வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் படுதோல்வி

வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வரும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸ், அயர்லாந்து ஆகிய நாடுகளிடம் அடுத்தடுத்து படுதோல்வி அடைந்த பாகிஸ்தான் அணி, உலக கோப்பை போட்டிகளில் இருந்தே வெளியேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பயிற்சியாளர் பாப் உல்மர் மர்மமான முறையில் இறந்தார்.

ஜமைக்காவில் உள்ள கிங்ஸ்டனில் உள்ள ஓட்டல் அறையில் அவர் வாந்தி எடுத்தும், மூக்கில் ரத்தம் வழிந்த நிலையிலும் மயங்கி கிடந்தார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவரது உயிர் பிரிந்தது. அவரது மரணம் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சந்தேகங்கள்

பாப் உல்மர் மர்ம சாவு குறித்து ஜமைக்கா போலீஸ் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில் சந்தேகத்திற்கிடமான பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. வழக்கமாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியினருடன் சாப்பிடும் பாப் உல்மர், சம்பவத்தன்று அவர்களுடன் சாப்பிடவில்லை என்று தெரிய வந்துள்ளது. அவர் மன உளைச்சலுடன் காணப்பட்டுள்ளார்.

பாப் உல்மர் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து காரில் சென்றால் 15 நிமிடத்தில் ஆஸ்பத்திரியை அடைந்து விடலாம். ஆனால் அவரை ஒரு மணி நேரத்துக்கு பிறகே ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அதுவரை அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததாக தெரிய வந்துள்ளது.

மேலும், அவரது அறையில் ரத்தக்கறை படிந்திருப்பது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவர் கடுமையாக தாக்கப்பட்டு உயிரிழந்திருக்கலாம் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இந்த வாய்ப்பை ஜமைக்கா போலீசாரும் மறுக்க வில்லை. சம்பவத்தன்று பாப் உல்மரை சந்தித்தவர்களிடம் அவர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

விஷம் கொடுத்து கொலையா?

சூதாட்டக்காரர்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு பாகிஸ்தான் அணி வீரர்கள், வேண்டுமென்றே தோற்றதாகவும், இது பாப் உல்மருக்கு தெரிய வந்ததால் அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

பாகிஸ்தான் அணியின் தோல்வியை தாளமுடியாமல், அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்றும், மாரடைப்பால் உயிரிழந்திருக்கலாம் என்றும் பல்வேறு ïகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

பிரேத பரிசோதனை தாமதம்

இருப்பினும், பாப் உல்மர் சாவுக்கான காரணம், பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியான பிறகுதான், உறுதியாக தெரிய வரும். கிங்ஸ்டன் நகரில் அமலில் உள்ள உள்ளூர் சட்டப்படி, மரணம் அடைந்தவரின் குடும்பத்தார் ஒப்புதலுடன்தான் பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்பது கட்டாயம் ஆகும். ஆனால் பாப் உல்மரின் குடும்பத்தினர் தென்ஆப்பிரிக்காவில் கேப் டவுன் நகரில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட போதிலும், அவர்களால் உரிய நேரத்தில் வர இயலாத சூழ்நிலை உள்ளது.

எனவே, தாங்கள் வராமலேயே பிரேத பரிசோதனையை நடத்த ஜமைக்கா அதிகாரிகளுக்கு பாப் உல்மர் குடும்பத்தினர் அதிகாரம் அளித்துள்ளனர். பிரேத பரிசோதனையை கூடவே இருந்து கவனித்து, பாப் உல்மர் உடலை தென் ஆப்பிரிக்காவுக்கு அனுப்பி வைக்கும்படி, பாகிஸ்தான் அணியின் மற்றொரு பயிற்சியாளரான முரே ஸ்டீவன்சனை பாப் உல்மர் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டனர்.

பாப் உல்மர் குடும்பத்தினரை எதிர்பார்த்து காத்திருந்ததால், பிரேத பரிசோதனை தாமதமாகவே தொடங்கி உள்ளது. அதன் அறிக்கை இன்று வெளியாகும் என்று எதிர்பார்ப்பதாக பாகிஸ்தான் அணி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதன்பிறகுதான், பாப் உல்மர் மரணம் குறித்த மர்ம முடிச்சுகள் அவிழும் என்று தெரிகிறது.

வெளியேற தடை

பாகிஸ்தான் அணி தனது கடைசி ஆட்டத்தில் இன்று ஜிம்பாப்வேயை எதிர்கொள்கிறது. அதன்பிறகு நாளை பாகிஸ்தான் அணியினர் வெஸ்ட் இண்டீசில் இருந்து தாயகம் திரும்ப திட்டமிட்டு இருந்தனர். ஆனால் பாப் உல்மர் மரணம் குறித்த மர்மம் தீரும்வரை ஜமைக்காவை விட்டு வெளியேற வேண்டாம் என்று ஜமைக்கா போலீசார், பாகிஸ்தான் அணியினருக்கு உத்தரவிட்டுள்ளனர். அதனால் தாயகம் திரும்பும் திட்டத்தை சனிக்கிழமைக்கு பாகிஸ்தான் அணியினர் தள்ளி வைத்துள்ளனர்.

*தினத்தந்தி

-oOo-

பாப் உல்மர் மரணத்தில் நீடிக்கிறது மர்மம் பிரேத பரிசேதனை அறிக்கையில் போலீசார் சந்தேகம்

ஜமைக்கா : பாகிஸ்தான் அணி பயிற்சியாளர் உல்மரின் திடீர் மரணத்தில் மர்மம் இன்னமும் தொடர்கிறது. அவரது பிரேத பரிசோதனை அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் அவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர் .இந்நிலையில் தனிப்படை அமைக்கப்பட்டு, அவரை கடைசியாக சந்தித்தவர்கள் விசாரிக்கப்படுகின்றனர். உல்மர் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து 15 நிமிட பயணத்தில் தான் ஆஸ்பத்திரி இருக்கிறது. ஆனால் அறையில் மயங்கிக் கிடந்த உல்மர், ஒரு மணி நேரம் கழித்து தான் ஆஸ்பத்திரி கொண்டு செல்லப்பட்டுள்ளார். இவ்விஷயமும் பாத்ரூமில் உறைந்து கிடந்த ரத்தமும் போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளன. ஒருவேளை உல்மர் விஷம் கொடுக்கப்பட்டிருந்தால் அதில் கிரிக்கெட் சூதாட்ட புக்கிகளுடன் தொடர்பு கொண்டுள்ள பாக்., வீரர்களுக்கு நிச்சயம் தொடர்பு இருக்கும் என்றும், இது உறுதிப்படுத்தப்படும் வரை பாக்., வீரர்கள் நாட்டைவிட்டு வெளியேறக்கூடாது என்றும் அங்கு பிரச்னை கிளம்பியுள்ளது. நாளை (மார்ச் 22) வெ.இண்டீசைவிட்டு பாகிஸ்தான் அணி கிளம்புவதாக இருந்தது. போலீஸ் விசாரணையால் மார்ச் 24ம் தேதிதான் அந்த அணி புறப்பட முடியும் என தெரிகிறது.

*தினமலர்.

Friday, March 16, 2007

உச்சநீதிமன்ற நீதிபதி அழுகை!

உச்சநீதிமன்றத்தில் கதறி அழுத ஏ.ஆர்.லட்சுமணன்!

மார்ச் 16, 2007

டெல்லி: உ.பி. முதல்வர் முலாயம் சிங் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகளில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த ஏ.ஆர்.லட்சுமணனுக்கு மிகவும் அநாகரீகமான வகையில் மிரட்டல் கடிதம் வந்துள்ளது. இதை உச்சநீதிமன்றத்தில் இன்று தெரிவித்த லட்சுமணன், கண்ணீர் விட்டுக் கதறி அழுததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உ.பி. முதல்வர் முலாயம் சிங் யாதவ், அவரது மகன் அகிலேஷ் சிங் யாதவ் ஆகியோர் ரூ. 5,00 கோடிக்கு மேல் சொத்து குவித்துள்ளதாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து முலாயம் சிங் தாக்கல் செய்த மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த நிலையில், முலாயம் சிங் மீதான சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட உச்சநீதிமன்ற பெஞ்ச்சில் இடம் பெற்றிருந்த நீதிபதிகளில் ஒருவரான தமிழகத்தைச் சேர்ந்த ஏ.ஆர்.லட்சுமணன் இன்று நீதிமன்றத்தில் பரபரப்புத் தகவலை வெளியிட்டார்.

தனக்கு இந்த வழக்கு தொடர்பாக ஒரு அனாமதேய கடிதம் வந்துள்ளது. எனது நீதிமன்ற வாழ்க்கையில் இப்படி ஒரு மோசமான மிரட்டலை நான் சந்தித்ததில்லை என்று கூறிய லட்சுமணன் உணர்ச்சிவசப்பட்டு கதறி அழுதார். இதனால் நீதிமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்ட லட்சுமணன், இந்த வழக்கை நான் விசாரிக்க விரும்பவில்லை. இதுகுறித்து தலைமை நீதிபதியிடம் தெரிவித்து விட்டேன் என்று கூறி விட்டு எழுந்து சென்றார்.

இன்னும் ஐந்து நாளில் லட்சுமணன் நீதிபதி பதவியிலிருந்து ஓய்வு பெறவுள்ளார் என்பது நினைவிருக்கலாம். இந்த நிலையில் முலாயம் சிங் யாதவ் தரப்பிலிருந்து லட்சுமணனுக்கு மிரட்டல் வந்துள்ளதாக கூறி அவர் நீதிமன்றத்தில் அழுதது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனக்கு என்ன மாதிரியான மிரட்டல் வந்தது என்பதைத் தெரிவிக்க லட்சுமணன் மறுத்து விட்டார்.

Thursday, March 15, 2007

சத்தீஸ்கரில் 50 போலீசார் கொலை

சத்தீஸ்கரில் நக்சலைட் தாக்குதலில் 50 போலீசார் பலி:
வெடிகுண்டு வீச்சு, துப்பாக்கிசூடு

ராய்ப்பூர், மார்ச். 15-

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் மாவட்டத்தில் ராணிபோட்லி எனும் காட்டுப்பகுதியில் போலீஸ் புறக்காவல் நிலையம் உள்ளது.

அங்கு சத்தீஸ்கர் ஆயுதப்படை போலீஸ் பிரிவைச் சேர்ந்த 23 போலீசார் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். அவர்களுக்கு துணையாக 55 சிறப்பு போலீஸ் அதிகாரி கள் அங்கு இருந்தனர். பிஜப்பூர் மாவட்டத்தில் காட்டுப்பகுதியில் நக்சலைட்டுகளை ஒடுக்க இவர்கள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

நேற்றிரவு2.15 மணிக்கு நூற்றுக்கணக்கான நக்சலைட் டுக்கள் அந்த போலீஸ் நிலையத்தை சூழ்ந்தனர். போலீசார் உஷராவதற்குள் நக்சலைட்டுக்கள் நாலாபுறமும் நின்று அதிரடி தாக்குதலை நடத்தினார்கள். போலீஸ் நிலையத்துக்குள் கை எறி குண்டுகளை சரமாரியாக வீசினார்கள்.

பெட்ரோல் வெடிகுண்டுகளையும் வீசி எறிந்து அந்த போலீஸ்நிலையத்தை தகர்த்தனர். பிறகு துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே போலீஸ் நிலையத்துக்குள் நுழைந்தனர்.

நக்சலைட்டுக்களின் இëந்த திடீர் அதிரடி தாக்குதலில் சத்தீஸ்கர் மாநிலஆயுதப்படை போலீசார் 50 பேர் உயிர் இழந்தனர். மேலும் பலர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருப்பதாக என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

தாக்குதல் நடத்தி முடித்த பிறகு நக்சலைட்டுக்கள் அனை வரும் அடர்ந்த காட்டுக்குள் தப்பி ஓடிவிட்டனர்.போகும் போது அவர்கள் போலீஸ் நிலையத்தில் இருந்த அனைத்து ஆயுதங் களையும் அள்ளிச் சென்று விட்டனர்.

ஆயுதங்களை கைப்பற்றி விட்டு வெளியில் வந்ததும் நக்சலைட்டுகள் போலீஸ் நிலையத்தின் உள்ளேயும், போலீஸ் நிலையத்தை சுற்றியும் கண்ணி வெடிகளை வைத்து அவற்றை ரிமோட் மூலம் இயக்கி வெடிக்க வைத்தனர். இந்த கண்ணி வெடி தாக்குதலில் போலீஸ் நிலையம் தகர்ந்தது.

அதன் சுற்றுப்புறங்களும் கண்ணி வெடிகள் வெடித்ததால் போர்க்களம் போல மாறியது. படுகாயங்களுடன் போராடிக் கொண்டிருந்த போலீசார் கண்ணி வெடி தாக்குதல் காரணமாக போலீஸ் நிலையத்துக்குள்ளேயே பிணமானார்கள்.

சம்பவ இடத்துக்கு மத்திய போலீஸ் படை வீரர்கள் விரைந்தனர். ராணிபோட்லி போலீஸ் நிலையத்தின் இடிபாடுகளை அகற்றி பிணங்களை மீட்டனர். அங்கு வெடிக்காத சில கண்ணி வெடிகள் கிடந்தன. வெடி குண்டு நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு அந்த கண்ணி வெடிகள் செயல் இழக்க செய்யப்பட்டன.

ராணிபோட்லி காட்டுப் பகுதியில் போலீஸ்காரர்களின் உடல்கள் சில இடங்களில் சிதறி கிடக்கின்றன. அவற்றை கணக்கிட்டு வருவதாகவும் அது முடிந்த பிறகே பலியான போலீசாரின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு என தெரிய வரும் என்று பிஜப்பூர் மாவட்ட காட்டிலாகா போலீஸ் ஜ.ஜி. ஆர்.கே.விஜ்.கூறினார்.

நக்சலைட்டுகளுக்கு எதிராக சத்தீஸ்கர் மாநில அரசு தீவிர நடவடிக்கை எடுக்கத் தொடங்கியதில் இருந்து பிஜப்பூர் மாவட்டத்தில் நக்சலைட்டுக்களின் வெறியாட்டம் அதிகரித்து விட்டது. போலீசாரை மட்டுமின்றி பொது மக்களையும் அவர்கள் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொல்கின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளில் சத்தீஸ்கர் மாநிலத்தில் மட்டும் நக்சலைட்டுகள் 1187 தடவை தாக்குதல் நடத்தி இருக் கிறார்கள். இதில் 676 பேர் கொல்லப்பட்டனர். இன்று நடத்தப்பட்ட தாக்குதலில் இதுவரை இல்லாதபடி அதிக போலீசார் பலியாகி விட்டனர்.

Tuesday, March 13, 2007

திமுக-கம்யூ நாடாளுமன்றத்தில் மோதல்

லோக்சபாவில் மார்க்சிஸ்ட் எம்.பி.,க்கள்... ரகளை! *
மந்திரி டி.ஆர்.பாலுவை தாக்க பாய்ந்தனர் *
சென்னை கடல்சார் பல்கலைக்கு எதிர்ப்பு

சென்னையில் கடல்சார் பல்கலைக் கழகம் அமைப்பது தொடர்பான மசோதாவை லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்ய முற்பட்டபோது மேற்கு வங்க மார்க்சிஸ்ட் எம்.பி.,க்கள் பயங்கர ரகளையில் ஈடுபட்டனர். மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலுவை தாக்க முற்பட்டு, அவர் கையில் இருந்த மசோதா ஆவணத்தைப் பறிக்க முயன்றனர்.

பாலுவை காப்பாற்றும் வகையில் மற்ற தமிழக எம்.பி.,க்கள் அரண் அமைத்ததால், அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. சென்னையில் கடல்சார் பல்கலைக் கழகம் அமைக்க, மத்திய அமைச்சரவையில் கடந்த ஆண்டே விவாதிக்கப்பட்டது. விவாதம் நடந்த போது மகாராஷ்டிராவைச் சேர்ந்த அமைச்சர் சரத்பவார் தவிர வேறு எந்த அமைச்சரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. எனவே, கடந்த டிசம்பர் 18ம் தேதி, மத்திய அமைச்சரவையில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதற்கான மசோதாவை லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது. லோக்சபாவில் எடுத்துக் கொள்ளப்படும் விவாதங்கள் அனைத்துமே, விவாதம் செய்வதற்கான முதல் வாரமே ஆலோசனை செய்யப்பட்டு, அலுவல் குறிப்பேட்டில் எழுதப்படுவது வழக்கம். இதேபோல், கடந்த வாரம் ஆலோசனை நடந்தபோது "கடல்சார் பல்கலைக் கழகத்தை சென்னையில் அமைப்பதற்கான மசோதா தாக்கல் செய்யப்படும்' என்று கூறப்பட்டு, அலுவல் குறிப்பேட்டில் எழுதப்பட்டது. அப்போதும் எந்த எம்.பி.,க்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.அலுவல் குறிப்பேட்டில் கூறியபடி, லோக்சபாவில் இந்த மசோதாவை தாக்கல் செய்வதற்காக நேற்று நண்பகல் 12 மணியவில் அமைச்சர் பாலு எழுந்தார். அப்போது, யாரும் சற்றும் எதிர்பாராத வகையில், மேற்கு வங்க மார்க்சிஸ்ட் எம்.பி.,க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். "திபுதிபு'வென சபாநாயகர் இருக்கையை நோக்கி ஓடி வந்தனர். சபையில் திடீரென கூச்சலும், குழப்பமும் நிலவியது. இதனால் சபை 10 நிமிடத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

பின்னர் மதியம் 12.15 மணிக்கு சபை கூடியதும், மசோதா குறித்து அமைச்சர் பாலு பேச முற்பட்டார். அப்போது, மேற்கு வங்க மார்க்சிஸ்ட் எம்.பி.,க்கள் அனில் பாசு, சுமித் லாகிரி ஆகியோர் பின் வரிசையில் இருந்து படு வேகமாக ஓடி வந்தனர். முன் வரிசையில் நின்று கொண்டிருந்த பாலுவை நோக்கி ஆவேசமாக கத்தியபடியே ஓடி வந்து, பாலுவின் கைகளில் இருந்த மசோதா ஆவணங்களை பறிக்க முற்பட்டனர். இவர்கள் இருவரோடு சேர்ந்து மற்ற மார்க்சிஸ்ட் எம்.பி.,க்களும் பாலுவை தாக்க முயன்றனர். அப்போது, மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பழனி மாணிக்கம், அரண் போல கைகளை அகற்றி நின்று பாலுவைப் பாதுகாத்தார். மார்க்சிஸ்ட் எம்.பி.,க்கள், பழனி மாணிக்கத்தை தள்ளி விட்டு பாலுவை நெருங்க முயற்சி செய்தனர். இதற்குள் தங்கபாலு ஓடி வந்து எம்.பி.,க்களை அப்புறப்படுத்தினார். தமிழக எம்.பி.,க்கள் அனைவரும் அங்கே கூடி, மார்க்சிஸ்ட் எம்.பி.,க்களை கடுமையாக எச்சரித்தனர். இரு தரப்பும் ஒருவரையொருவர் எதிர்த்து ஆவேசமாக வாக்குவாதம் செய்யவே, சபையை ஒத்தி வைப்பதாக கூறிவிட்டு சபாநாயகர் எழுந்து சென்று விட்டார். அதை கவனிக்காத மேற்கு வங்க எம்.பி.,க்களும், தமிழக எம்.பி.,க்களும் அவையில் ஒருவொரையொருவர் முட்டித் தள்ளத் துவங்கிய நேரத்தில், சபை பாதுகாவலர்கள் வேகமாக உள்ளே நுழைந்து, எம்.பி.,க்களை விலக்க முயன்றனர். மூத்த அமைச்சர்கள் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி மற்றும் சிவராஜ்பாட்டீல் ஆகியோர் எம்.பி.,க்களை சமாதானப்படுத்தினர். அரைமணி நேரத்திற்கு பின், சபையில் அமைதி திரும்பியது.

காலை நடந்த அமளிக்கு பிறகு மதியம் 2.30 மணிக்கு லோக்சபா மீண்டும் கூடியது. அப்போது மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த எம்.பி., பாசுதேவ் ஆச்சார்யா எழுந்து ஒரு அறிக்கை வாசித்தார். அவர் கூறியதாவது: இன்று (நேற்று) காலையில் நடந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. எங்கள் எம்.பி.,க்கள் சிலர் மிகுந்த உணர்ச்சி வசப்பட்டதால் சம்பவம் நடந்து விட்டது. சபாநாயகர் இருக்கை அருகே வந்து விட்டனர். இதற்காக நான் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். எனது கட்சி சார்பில் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். எங்கள் நடவடிக்கையினால் சபையின் கண்ணியத்திற்கும், சபாநாயகர் இருக்கைக்கும் அவமரியாதை ஏற்பட்டிருந்தால் அதற்கும் வருந்துகிறேன். இந்த மசோதா தாக்கல் செய்யப்படுவதால் எங்களது உணர்வுகள் காயப்பட்டுள்ளன. எனவே மத்திய அரசு இவ்விஷயத்தில் உரிய கவனம் செலுத்தும் என நம்புகிறேன். இவ்வாறு பாசுதேவ் ஆச்சார்யா கூறினார்.

சபை முன்னவர் பிரணாப் முகர்ஜி பேசியதாவது: மதியம் நடந்த சம்பவம் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. ஒரு மசோதா அறிமுகம் செய்யப்பட்டால், அது குறித்து தங்களது கருத்தை தெரிவிக்க எவ்வளவோ வழிகள் உள்ளன. மசோதா அறிமுகம் ஆன பின் பார்லிமென்ட் நிலைக்குழு போன்றவற்றிற்கு அது செல்லும். அப்போது தங்களது எதிர்ப்பையும், விமர்சனத்தையும் தெரிவிக்க வாய்ப்புள்ளது. அதை விட்டு விட்டு சபையிலேயே இவ்வாறு நடந்து கொண்டது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. இவ்வாறு பிரணாப் முகர்ஜி பேசினார். தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் அத்வானி பேசினார். அதன்பின் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு சென்னையில் கடல்சார் பல்கலைக்கழகம் அமைப்பது தொடர்பான மசோதாவை தாக்கல் செய்தார். இத்துடன் சபையில் பிரச்னை முடிவுக்கு வந்தது. தும்பை விட்டு வாலை பிடித்த கதை மும்பை, கோல்கட்டா மற்றும் சென்னை ஆகிய மூன்று இடங்களிலும் கடல் சார் கல்வி மையங்கள் உள்ளன. சென்னையில் "துறைமுக நிர்வாக கல்வி மையம்' உள்ளது. இவற்றை ஒருங்கிணைத்து கடல்சார் பல்கலைக் கழகம் அமைப்பது எனவும், அதை சென்னையில் அமைப்பது எனவும் அமைச்சர் பாலு முடிவு செய்தார். இந்த விவரத்தை 200506ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டிலேயே நிதியமைச்சர் சிதம்பரம் அறிவிப்பு செய்திருந்திருந்தார். அதே ஆண்டு மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதலுக்காக இந்த திட்டம் சென்றபோது அங்கு மகாராஷ்டிரா அமைச்சர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். சரத்பவார் தலைமையிலான குழு, மும்பையில் தான் இந்த பல்கலைக் கழகம் அமைக்க வேண்டுமென குரல் எழுப்பியது. அப்போது பாலு, "அதற்கு தேவையான நிலத்தை தாருங்கள். எனக்கு ஆட்சேபனை இல்லை' என்றார். நிலம் அளிக்க முடியாத நிலையை ஒப்புக் கொண்ட சரத்பவார், சென்னையிலேயே அமைத்துக் கொள்ள ஒப்புதல் அளித்தார். இதன் பின்னர் மத்திய அமைச்சரவையில் இத்திட்டத்திற்கு ஒப்புதல் பெறப்பட்டது. ஜனாதிபதி உரையிலும் இவ்விஷயம் இடம்பெற்றது. இவ்வளவு தடைகளையும் கடந்து வந்த பின்னரே, கடல்சார் பல்கலைக் கழக மசோதாவை அமைச்சர் பாலு லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்ய முயன்றார். ஆனால் முன்னர் எந்த இடத்திலும் எதிர்ப்பு தெரிவிக்காத மார்க்., எம்.பி.,க்கள் நேற்று எதிர்ப்பு தெரிவித்தது, "தும்பை விட்டு வாலை பிடித்த கதை' ஆகி விட்டது.

நடப்பது "சிவில் வார்': அத்வானி வர்ணனை லோக்சபாவில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் அத்வானி பேசுகையில்,""இந்த சம்பவம் நடந்த போது நான் சபையில் இல்லை. சபையில் என்ன நடந்திருந்தாலும் அது மிகவும் துரதிர்ஷ்டவமானது. ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்குள் "சிவில் வார்' (உள்நாட்டுக் குழப்பம்) உள்ளது. இந்த சூழ்நிலை முன் எப்போதும் இருந்ததில்லை. ஆளும் கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு இருந்தால் அதை அமைச்சரவை கூட்டத்திலேயே சரி செய்திருக்க வேண்டும். அமைச்சரவையில் ஏற்கனவே ஒப்புதல் பெறப்பட்ட மசோதா இது. ஆனால் பார்லிமென்ட்டில் தாக்கலாகும் போது இப்படி நடக்கிறது என்றால் மத்திய அரசின் நிர்வாகம் தோல்வி அடைந்துள்ளதையே காட்டுகிறது. சபைக்குள் பாதுகாவலர்கள் வந்து சமாதானப்படுத்துவது முன்னெப்போதும் நடந்ததில்லை. வழக்கமாக ஆளுங்கட்சிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே சண்டை நடப்பது வழக்கம். ஆனால் ஆளும் கூட்டணிக்குள்ளேயே சண்டை நடப்பது கேவலமாக உள்ளது. கூட்டணி தர்மத்தை இந்த அரசு மீறியுள்ளதையே காட்டுகிறது. இந்த கூட்டணி அரசை அவர்களே முடித்துக் கொள்வர்' என்று கூறினார். அத்வானியின் பேச்சுக்கு இடதுசாரி கட்சி எம்.பி.,க்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தி.மு.க.,வினர் அமைதி காத்தனர். வருத்தம் தெரிவித்த சபாநாயகர் லோக்சபாவில் நேற்று அமைச்சர் பாலுவை தாக்க முயன்ற சம்பவம் நடந்த பின்னர், சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி அறைக்கு தமிழக எம்.பி.,க்கள் விரைந்தனர். அவர்களிடம் பேசிய சபாநாயகர் நடந்த சம்பவம் குறித்து வருத்தம் தெரிவிப்பதாகக் கூறினார். இதன் பிறகு மார்க்சிஸ்ட் கட்சி மூத்த எம்.பி.,க்கள் பாசுதேவ் ஆச்சார்யா, ரூப்சந்த் பால் ஆகியோர் சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

Wednesday, February 28, 2007

பட்ஜெட்: வருமானவரி உச்சவரம்பு உயர்வு

மத்திய பட்ஜெட் தாக்கல்:
வருமானவரி உச்சவரம்பு உயர்வு

புதுடெல்லி, பிப். 28-

2007-08 ஆம் ஆண்டுக்கான மத்திய பட் ஜெட்டை நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டில் கூறப்பட்டி ருப்பதாவது:-

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 2006-07-ல் 9.2 ஆக இருந்தது. கடந்த 3 ஆண்டுகளில் இது சராசரியாக 8.6 சதவீதம் இருந்தது. உற்பத்தி வளர்ச்சி விகிதம் 11.3 சதவீதமாக உள்ளது.

சேமிப்பு விகிதம் 32.4 சதவீதமாகவும், முதலீட்டு விகிதம் 33.8 சதவீதமாகவும் தொடர்ந்து நீடிக்கும். 2007-ம் நிதி ஆண்டில் சராசரி பண வீக்க விகிதம் 5.2 முதல் 5.4 சதவீதம் வரையில் இருக்கும். பணவீக்கம் கட்டுப்படுத்தப் படும்.

2006-07 நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் வங்கிக்கடன் விகிதம் 29 சதவீதமாக உயர்ந்ததது. கோதுமை, அரிசி தொடர்பாக எந்த புதிய ஒப்பந்தமும் செய்யப்பட மாட்டாது. கூடுதலாக 24 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் பாசன வசதி செய்யப்படும்.

ஊரகப்பகுதிகளில் தொலைபேசியை கொண்டு செல்லும் திட்டத்தின் கீழ் 15 ஆயிரத்து 54 கிராமங் களில் போன் வசதி செய்யப் பட்டுள்ளது. உடல் நலத்துக்கான நிதிஒதுக் கீடு 21.9 சதவீதமாக அதிகரிக்கப் பட்டுள்ளது.

கல்விக்கு 34.2 சதவீதமும் கூடுதல் நிதி ஒதுக்கீடு நடப்பாண் டில் கூடுதலாக 2 லட்சம் ஆசிரியர்கள் நியமிக்கப் படுவார்கள். 5 லட்சம் புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.

மேல்நிலைப்பள்ளி கல்விக் கான உதவித்தொகை ரூ. 1837 கோடியில் இருந்து ரூ.3794 கோடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது. ராஜீவ்காந்தி குடிநீர் திட்டத்தின் கீழ் புதிய பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.4680 கோடியில் இருந்து ரூ.5850 கோடியாக அதிகரிக் கப்படுகிறது.

பாரத் நிர்மான் திட்டத்தின் கீழ் புதிதாக 15 லட்சம் வீடுகள் கட்டப்படும். தேசிய ஊரக சுகாதார திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு ரூ.8207 கோடியில் இருந்து ரூ.9947 கோடியாக அதிகரிக்கப்படுகிறது. எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத் துக்கு ரூ. 969 கோடி நிதிஒதுக்கப் படுகிறது.

நாடெங்கும் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்து பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதை தடுக்க தேசிய அளவில் புதிய ஸ்காலர்ஷிப் திட்டம் அமல் படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குழந்தைக்கும் படிப்பைத்தொடர தலா ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

போலியோவை முற்றிலு மாக விரட்ட ரூ.1290 கோடி வழங்கப்படும். உத்தர பிரதேசத்தில் 20 மாவட்டங் களிலும், பீகாரில் 10 மாவட்டங்களிலும் போலியோ ஒழிப்புக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படும்.

பொது வினியோக முறை கம்ப்ïட்டர்மயமாக்கப்படும். இந்திய உணவுக்கழக செயல் பாடுகள் கம்ப்ïட்டரில் ஒருங்கிணைக்கப்படும். எஸ்.சி. மற்றும் எஸ்.டி.க்களுக்கு மட்டுமே வழங்கப்படும் திட்டங்களுக்கு நிதிஒதுக்கீடு ரூ.3271 கோடியாக அதிகரிக் கப்படுகிறது. எஸ்.சி., எஸ்.டி.க்கான உதவித்தொகை நிதி ஒதுக்கீடு ரூ.440 கோடியில் இருந்து ரூ.611 கோடியாக அதிகரிக்கப்படுகிறது.

சிறுபான்மை இன மாணவ-மாணவிகளுக்கான ஸ்காலர்ஷிப் திட்டத்தில் மெட்ரிக்கில் படிப்பவர்களுக்கு ரூ.72 கோடியும், பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படிப்பவர் களுக்கு ரூ.48 கோடியும் வழங்கப்படும்.

வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாட்டுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும். இந்த மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.12041 கோடியில் இருந்து ரூ.14365 கோடியாக உயர்த்தப்படுகிறது. அதோடு வடகிழக்கு மாநிலங்களுக்கு வரும் மார்ச் 31-ந்தேதிக்குள் புதிய தொழில்கொள்கை தயாரித்து வெளியிடப்படும்.

பெண்கள் மேம்பாட்டுக் கான நிதிஒதுக்கீடு ரூ.22,282 கோடியாக இருக்கும். விவசாயிகளுக்கு ரூ.2,25,000 கோடி பயிர்க்கடன்கள் வழங்க புதிய பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக 50 லட்சம் விவசாயிகள் பயன் பெறு வார்கள்.

2006-07-ல் விவசாயி களுக்கு ரூ.1,75,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டது. இது ரூ.1,90,000 கோடியை எட்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

தேயிலை உற்பத்திக்கு புதிய உத்வேகம் கொடுக்க சிறப்பு நோக்க தேயிலை நிதி உருவாக்கப்படும். இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு தேசிய விவசாய இன்சூரன்ஸ் திட்டம் தொடர்ந்து நடை முறைப்படுத்தப்படும்.

மாநில அரசுகளின் உதவியுடன் சமூகநலத்திட்டங் கள் மேம்படுத்தப்படும். இதன் மூலம் ஒரு அங்கமாக 70 லட்சம் குடும்பங்கள் எல்.ஐ.சி. திட்டத்தில் இணைக்கப் படுவார்கள். இவர்களுக்கு 50 சதவீத பிரிமீயத்தொகையாக 200 ரூபாயை மத்திய அரசு வழங்கும். இந்த திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.16,261 கோடி கடனாக வழங்கும். தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கான நிதிஒதுக்கீடு ரூ.9955 கோடியில் இருந்து ரூ.12,600 கோடியாக அதிகரிக் கப்படுகிறது. டெல்லி, கொல் கத்தா, மும்பை, சென்னை ஆகிய 4 முக்கிய நகரங் களை இணைக்கும் தங்கநாற்கர சாலைத்திட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. வட கிழக்கு மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலை மேம் பாட்டுத்திட்டத்துக்கு ரூ.405 கோடி வழங்கப்படும்.

கைத்தறித்தொழில் மேம்பாட்டு நிதி ரூ.533 கோடியில் இருந்து ரூ.911 கோடியாக உயர்த்தப்படுகிறது. நெசவாளர்களுக்கான சுகா தார காப்பீட்டுத்திட்டம் இதர சிறு தொழில்களுக்கும் விரிவு படுத்தப்படும். இதற்காக நிதி ஒதுக்கீடு ரூ. 241 கோடியில் இருந்து ரூ.321 கோடியாக அதி கரிக்கப்படும்.

கயிறு தொழிற்சாலை நவீனப்படுத்த ரூ. 23.55 கோடி வழங்கப்படும். சுற்றுலாத் துறைக்கான நிதிஒதுக்கீடு ரூ.423 கோடியில் இருந்து ரூ.520 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.

நலிவடைந்த பிரிவின ருக்கு கடன் வழங்க ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப் படுகிறது. அவர்களது வீட்டுக் கடனுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.5000 கோடியில் இருந்து 20 ஆயிரம் கோடியாக அதிகரிக் கப்படுகிறது.

தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வராத மாவட்டங்களுக்கு சம்பூர்ணா கிராம வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ.800 கோடி ஒதுக்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள சொர்ண ஜெயந்தி வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ஒதுக்கீடு ரூ.250 கோடியில் இருந்து ரூ.344 கோடியாக உயர்த்தப்படுகிறது. இந்த நிதி ஆண்டில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 12.5 பில்லியன் டாலர்களாக (ரூ.57 ஆயிரம் கோடி) உயர்ந்துள்ளது. துறை ரீதியான முதலீடுகள் 6.8 பில்லியன் டாலர்கள் தேசிய மழைநீர் பிடிப்புபகுதி மேம்பாட்டு நிறுவன, திட்டங் களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது.

ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு ரூ.96 ஆயிரம் கோடி யாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் மூலதன செலவு ரூ.41,922 கோடியும் அடங்கும். நாட்டு பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நிதிஉதவிகளும் செய்யப்படும்.

பிற்பட்ட மண்டல பகுதி களை மேம்படுத்துவதற்காக ரூ.5800 கோடி சிறப்பு நிதி வழங்கப்படும்.

மும்பை நகரை உலகத்தரம் வாய்ந்த நிதி மையமாக மாற்ற உயர் அதிகாரக்குழு ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும்.

உடல்ஊனமுற்றோருக்காக 1 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். நாட்டில் ஏற்பட்டுள்ள சீதோஷ்ண இயற்கை மாற்றத்தின் விளைவை ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்று ஏற்படுத் தப்படும். பல்வேறு துறை களில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டு ரூ.1,72,728 கோடியாக இருந்தது. 2007-2008-ம் ஆண்டுக்கான ஒதுக்கீடு ரூ.2,05,100 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் மத்திய திட்டங்களுக்கான ஒதுக்கீடு ரூ.1,54,939 கோடி.

20 மாநிலங்களுக்கு ரூ.8575 கோடி கடன் பாக்கி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மாநிலங்கள் மூலம் மத்திய அரசுக்கு வருவாய் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 450 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ.1,20,377 கோடியாக இருந்தது.

அடுத்த நிதி ஆண்டு முதல் தேசிய அளவில் பொருட்கள் மற்றும் சேவைவரி திட்டம் அறிமுகம் செய்யப்படும். நடப்பு நிதி ஆண்டில் நிதிபற்றாக்குறை 3.7 சதவீதமாக இருக்கும். வருவாய் பற்றாக்குறை 2 சதவீதம். மொத்த செலவு ரூ.6,81,521 கோடியாக இருக்கும்.

விவசாயம் அல்லாத பொருட்கள் மீதான சுங்கவரி விகிதம் 12.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப் படுகிறது. சமையல் செய்ய பயன்படும் நிலக்கரி மீதானவரி விதிப்பு முழுமையாக நீக்கப் படுகிறது. குறைபாடுள்ள பொருட்கள் மீதான வரி விதிப்பு 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக் கப்படுகிறது.

பாலிஸ்டர் மீதான வரி 10-ல் இருந்து 7.5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. விவசாய கருவிகள், உணவு பதப்படுத்தும் கருவிகளுக்கு வரி 7.5லிருந்து 5 சதவீதமாக குறைகிறது.

சில உணவுகளுக்கு வரி 30 லிருந்து 20 சதவீதமாக குறையும். சூரியகாந்தி எண்ணைக்கு வரி 15 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

குடைகளுக்கான உதிரி பாகங்கள், கைக்கடிகார டயல் ஆகியவற்றுக்கான வரி 12 சதவீதத்தில் இருந்த 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

விமான உதிரிப்பாகங் கள் இறக்குமதிக்கு 3 சதவீத இறக்குமதி வரிவிதிக்கப்படும். இரும்புதாது ஏற்றுமதிக்கு டன்னுக்கு ரூ.300 வரி விதிக்கப்படும்.

சிறு தொழில்களுக்கான சுங்கவரி விலக்கு ரூ.1 கோடியில் ரூ.1.5 கோடி யாக உயர்த்தப்படுகிறது. பெட்ரோல், டீசல் பற்றிய விளம்பர படவரி 8 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறை கிறது.

பிளைவுட் மீதான சுங்கவரி 16 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைக்கப்படுகிறது. கலப்பு உணவுகளுக்கு முழுமை யான வரி விலக்கு வழங்கப் படுகிறது.

பயோ-டீசல் மீதான சுங்க வரி முழுமையாக நீக்கப்படு கிறது. தண்ணீர் சுத்தி கரிக்கும் கருவிகள், அனைத் திற்கும் வரிவிலக்கு அளிக்கப் படுகிறது.

சிகரெட் மீதான சுங்கவரி அதிகரிக்கப்படுகிறது. புகையிலை இல்லாத பான் மசாலா மீதான சுங்கவரி 66 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக குறைக்கப்படுகிறது. டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடக்க உள்ளதால் கவுரவ புத்தாநகரம், ஸ்ரீதாபாத், காவியாபாத், கோரகன், டெல்லியில் 2,3,4 நட்சத்திர ஓட்டல்களுக்கு 5 ஆண்டுகளுக்கு வரிச்சலுகை வழங்கப்படும். 20 ஆயிரம் கூடுதல் அறைகள் தேவைப் படுவதால் வரி சலுகை நீடிக்கும்.

மாதசம்பளம் பெறுவோருக் கான வருமான வரியில் இந்த பட்ஜெட்டில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுவரை ஆண்டு ஒன்றுக்கு ரூ. 1 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமானவரி இல்லை. இந்த வருமான உச்சவரம்பில் மேலும் ரூ. 10 ஆயிரம் உயர்த் தப்பட்டுள்ளது.

அதன்படி ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமானவரி இல்லை.

இந்த வருமானவரி விலக்குக் கான உச்சவரம்பு ரூ. 1,45,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு இந்த வருமான வரி விலக்கு ரூ.1,95,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சேவை வரி விலக்கால் 2 லட்சம் பேருக்கு பயன்

மத்திய பட்ஜெட்டில் பல சேவை வரிகளில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இத னால் 2 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்.

இந்த வரி விலக்கு காரண மாக மத்திய அரசுக்கு ஆண் டுக்கு ரூ.800 கோடி இழப்பு ஏற்படும்.

இதுவரை உயர்தர குடி யிருப்போர் நலச் சங்கங் கள் மீது சேவை வரி விதிக் கப் பட்டிருந்தது. புதிய பட் ஜெட்டில் அதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கம்பெனிகளுக்கான கார்ப் பரேட் வருமான வரியில் சர்சார்ஜ் (ரூ.1 கோடிக்கு கீழ் உள்ளவர்களுக்கு) நீக்கப் படுகிறது.

பொது பட்ஜெட் 2007: முக்கிய அம்சங்கள்

. மகளிர் திட்டங்களுக்கு 22,282 கோடி ரூபாய்

. சிறுபான்மையினர் கழகத்துக்கு 63 கோடி ரூபாய்

. தங்க நாற்கரச் சாலைத் திட்டம் 2009ல் நிறைவு

. அந்நிய செலாவணி கையிருப்பு விபரம்

. சுகாதாரம், கல்வி மற்றும் பணவீக்கம் சிதம்பரம் பட்ஜெட்டின் முக்கிய இலக்குகள்

. வடகிழக்கு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு

. வடகிழக்கு சாலை வசதிக்கு 405 கோடி

. கிராமப்புற மின்வசதிக்கு ரூ. 3983 கோடி

. தேயிலை, தேங்காய் வளர்ச்சி நிதி

. நிலமற்ற கிராமத்தினருக்கு இன்சூரன்ஸ்

. தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சிக்கு கூடுதல் நிதி

. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டம்

. கல்விக்கான நிதி 34 சதமாக அதிகரிப்பு

. விவசாயத்துக்கு 2,25,000 கோடி கடன்

. எஸ்சி, எஸ்டிக்களுக்கான திட்டங்களுக்கு கூடுதல் நிதி

. 15 ஆயிரம் கிராமங்களுக்கு தொலைபேசி வசதி

. எய்ட்ஸ் இல்லாத நிலையை உருவாக்க கூடுதல் நிதி

. போ#யாவை ஒழிக்க 1290 கோடி ஒதுக்கீடு

. கல்வித்துறை ஒதுக்கீடு 34.2 சதவீதமாக உயர்வு

. குடிநீர் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு

. சுகாதாரத் துறைக்கு நிதி ஒதுக்கீடு உயர்வு

. கடந்த மூன்று ஆண்டுகளில் 8.6 சதவீத வளர்ச்சி

. 11வது ஐந்தாண்டு திட்டத்தில் விவசாயத்துக்கு முன்னுரிமை

. விவசாயத்துக்கு புதிய நீர்ப்பாசணத் திட்டம்

. பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர சிதம்பரம் உறுதி

. 8% வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது

. விவசாயத்துக்கு முக்கியத்துவம்

. பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக பங்குச்சந்தை வீழ்ச்சி

. வடகிழக்கு சாலை வசதிக்கும் 405 கோடி

. பாதுகாப்பு துறைக்கு 96,000 கோடி ஒதுக்கீடு

. மின் ஆளுமை திட்டத்துக்காக ரு.719 கோடி ஒதுக்கீடு

. காமன்வெல்த் போட்டிகளுக்கு 150 கோடி நிதி

. வாட் வருவாய் 24.3 சதமாக அதிகரிப்பு

. வலுவான நிலையில் பொருளாதாரம்

. டிசம்பருக்குள் 12198 கிலோமீட்டர் கிராமப்புற சாலைகள்

. ஜவுளியை நவீனப்படுத்த 911 கோடி நிதி

Tuesday, February 27, 2007

பஞ்சாப், உத்தராஞ்சல் - தேர்தல் முடிவுகள்

பஞ்சாப் சட்டசபை தேர்தல் அகாலி தளம் ஆட்சியை பிடித்தது:
காங்கிரஸ் படுதோல்வி

சண்டிகர், பிப். 27-

ஐந்தாண்டு பதவிக் காலம் முடிந்ததைத் தொடர்ந்து கடந்த 13-ந் தேதி பஞ்சாப் மாநிலத் தில் சட்டசபை தேர்தல் நடந்தது.

பஞ்சாபில் மொத்தம் 117 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தேர்தல் வன்முறை காரணமாக பியாஸ் தொகுதி தவிர மீதமுள்ள 116 தொகுதிகளுக்கும் ஓட்டுப் பதிவு நடத்தப்பட்டது. இந்த 116 தொகுதிகளில் 1043 பேர் போட்டியிட்டனர்.

ஆளும் காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் போட்டி யிட்டது. அவர்களை எதிர்த்து பா.ஜ.க.-சிரோமணி அகாலிதளம் கூட்டணி களம் இறங்கியது. இதனால் ஆட்சியை கைப்பற்றப் போவது யார் என்பதில் கடும் போட்டி நிலவியது.

116 தொகுதிகளிலும் மின்னணு எந்திரத்தில் ஓட்டுப்பதிவு நடந்தது. இன்று (செவ்வாய்) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. இந்த தேர்தலில் பா.ஜ.க.-அகாலி தளம் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்து கணிப்புகள் கூறியிருந்தன.

பஞ்சாப் தேர்தல் முடிவும் இன்று அதை உறுதி செய்தது. ஓட்டு எண்ணிக்கை தொடக்கம் முதலே பா.ஜ.க-அகாலி தளம் கூட்டணி பெரும்பா லான தொகுதிகளில் அதிக ஓட்டுக்கள் பெற்று முன்னணி யில் இருந்தது. காலை 9 மணிக்கெல்லாம் பஞ்சாபில் பா.ஜ.க.-அகாலிதளம் கூட் டணி ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகி விட்டது.

மதியம் 1 மணி நிலவரப்படி 116 இடங்களில் அகாலி தளம் கூட்டணி 65 இடங்களிலும் காங்கிரஸ் 46 இடங்களிலும் வெற்றி பெறும் நிலையில் இருந்தது.

பஞ்சாபில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்துள்ளது. அங்குள்ள மூத்த தலைவர்கள் பலர் தோல்வியைத் தழுவி னார்கள். கடந்த தேர்தலில் காங்கிரஸ் 62 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்திருந் தது.

இந்த தடவை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பாதி பேர் வெற்றி வாய்ப்பை இழந்தனர். கடந்த தேர்தலில் 44 இடங் களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பா.ஜ.க.-அகாலி தளம் கூட்டணி இந்த தடவை அந்த இட எண்ணிக்கையை கணிசமாக அதிகரித்து ஆட்சியைப் பிடித்துள்ளது.

அகாலி தளம் மூத்த தலை வர் பிரகாஷ்சிங் பாதல் லம்பி தொகுதியில் எளிதாக வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் மகேஷ் இந்தர்சிங் பாதலை 6 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

முதல்-மந்திரி அம்ரிந்தர்சிங் பாட்டியாலா தொகுதியில் வெற்றி பெற்றார். அவர் அகாலி தளம் வேட்பாளர் சுர்ஜித்சிங் சோகிலியை 32, 149 ஓட்டுக்கள் வித்தியாசத் தில் தோற்கடித்தார்.

காங்கிரஸ் மந்திரிகளில் ஜகஜித்சிங், ஜக்மோகன்சிங், சர்தூல்சிங் கர்னாம்தாஸ் ஜோகர், ரமேஷ் சந்திரதோக்ரா, ராகேஷ் பாண்டே ஆகிய 6 பேர் தோல்வி அடைந்தனர்.

அகாலி தளம் மூத்த தலை வர்களில் சிரோமணி குருத் வாரா கமிட்டி தலைவர் பிபி ஜகிர்கவுர், குல்தீப் சிங் வகேலா ஆகியோர் தோல்வியைத் தழு வியவர்களில் முக்கியமான வர்கள்.

பஞ்சாப் துணை முதல்- மந்திரி ரஜிந்தர் கவுர் (காங்) எலக்ரா தொகுதியில் அகாலி தளம் வேட்பாளர் பிரேம்சிங்கை 259 ஓட்டுக்களில் தோற்கடித்தார்.

அகாலி தளம் மீண்டும் வெற்றி பெற்றதன் மூலம் பஞ்சாப் முதல்-மந்திரியாக பிரகாஷ்சிங் பாதல் பதவி ஏற்பார். இதை பாதலின் மகன் சுக்பீர்சிங் இன்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "முதல்-மந்திரியாக இருந்த அம்ரிந்தர்சிங் ஒரு சர்வாதி காரி போல ஆட்சி நடத்தினார். சர்வாதிகாரி போல வாழ்ந்தார். சர்வாதிகாரி போல நடந்து கொண்டார். அவர் ஒரு போதும் மக்கள் உணர்வுகளை உணரவில்லை. மக்களின் அந்த உணர்வுதான் ஓட்டுக்களாக மாறி உள்ளது'' என்றார்.

-oOo-

உத்தகாண்டம் மாநிலத்தில் பா.ஜனதா அபார வெற்றி:
கந்தூரி முதல்-மந்திரி ஆகிறார்

டேராடூன், பிப். 27-

உத்தரகாண்டம் மாநிலத்தில் என்.டி.திவாரி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. கடந்த 21-ந்தேதி அந்த மாநில சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 69 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது.

இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி யது. பாரதீய ஜனதா கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் என்று கருத்து கணிப்புகள் கூறி இருந்தன. தேர்தல் முடிவும் அது போலவே இருந்தது.

ஓட்டு எண்ணிக்கை தொடக் கத்தில் பா.ஜ.க., காங்கிரஸ் இரு கட்சிகளும் சம அளவில் முன்னணியில் இருந்தன. எனவே உத்தரகாண்டம் மாநி லத்தில் இழுபறி ஏற்படும் என்று எல்லாரும் முதலில் கருதினார்கள்.

10 மணி அளவில் காங்கிரசை விட பா.ஜ.க. கூடுதல் இடங்க ளில் முன்னணி பெற தொடங்கியது. மதியம் 12 மணிக்கு 69 இடங்களில் 38 இடங்களில் பா.ஜ.கவும், 14 இடங்களில் காங்கிரசும் மற்ற கட்சியினர் சுயேச்சைகள் 14 இடங்களில் முன்னணியில் இருந்தன.

உத்தரகாண்டம் மாநிலத்தில் ஆட்சி அமைக்க 36 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை.12.30 மணி அளவில் பாரதீய ஜனதா கட்சி 38 இடங்களில் வெற்றி பெறும் வகையில் இருந்தது. இதன் மூலம் உத்தரகாண்டத்தில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது.

உத்தரகாண்டம் மாநில பா.ஜனதா மூத்த தலைவர்கள் அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் அந்த மாநிலத்தில் பா.ஜ.க.வினர் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி உள்ளனர்.

உத்தரகாண்டம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. வயதான காரணத்தால் ஆளும் காங்கிரஸ் முதல்-மந்திரி என்.டி.திவாரி இந்த தடவை தேர்தலில் போட்டியிடவில்லை.

அவருக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் தகவல் தொடர்பு மந்திரி இந்திர ஹிரிதயேஸ். இவர் ஹல்டவாணி தொகுதியில் போட்டியிட்டு தோற்றுப்போனார். மூத்த தலைவர்கள் தோல்வி காரணமாக உத்தரகாண்ட மாநில காங்கிரசார் துவண்டு போய் உள்ளனர்.

கடந்த தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்திருந்த காங்கிரஸ் இந்த தடவை 16 இடங்களுடன் திருப்திப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது.

இந்தியாவின் 27-வது மாநிலமாக 2000-ம் ஆண்டு உருவான உத்தரகாண்டம் மாநிலத்தில் முதலில் நித்தி யானந்த சுவாமி தலைமையில் 9.11.2000 முதல் 30.10.2001 வரை பா.ஜ.க. ஆட்சி நடந்தது. பிறகு 30.10.2001 முதல் 2.3.02 வரை பகத்சிங் கோஷியாரி முதல்-மந்திரியாக இருந்தார்.

இதையடுத்து நடந்த முதல் தேர்தலில் காங்கிரஸ் வென்று 2002-ல் என்.டி.திவாரி முதல்வராக இருந்தார். அவரிடம் இருந்த ஆட்சியை தற்போது பா.ஜ.க. மீண்டும் தட்டிப் பறித்து தன் வசமாக்கி உள்ளது.

உத்தரகாண்டத்தில் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்ய பா.ஜ.க. பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று மாலை டெல்லியில் கூடுகிறது. கூட்டத்துக்கு பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங் தலைமை ஏற்கிறார்.

கூட்டத்தில் உத்தரகாண்டம் புதிய முதல்-மந்திரியாக புவன்சந்திர கந்தூரி தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது. இவர் கடந்த பா.ஜ.க. மத்திய மந்திரி சபையில் போக்குவரத்துத் துறை மந்திரியாக இருந்தவர். இவர் போட்டியின்றி முதல்வர் பதவிக்கு ஏகமனதாக தேர்வாகிறார்.

முதல்-மந்திரி பதவி ஏற்க போகும் பி.சி.கந்தூரி இன்று மதியம் நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்களுக்கு சேவை செய்ய எனக்கு கிடைத்த அதிர்ஷ்டகரமான வாய்ப்பாக இதை நான் கருதுகிறேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிëக்கிறது.

பா.ஜ.க.வின் பாரம்பரிய சேவையை அங்கீகரிக்கும் வகையில் மக்கள் மகத்தான ஆதரவு கொடுத்துள்ளனர். எனது தலைமையில் அமையும் அரசு நம்பகத் தன்மைக்கு முதலிடம் கொடுக்கும். ஊழலை ஒழிக்கவும், அரசு பணம் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் முன்னுரிமை கொடுக்கப்படும்.

இவ்வாறு பி.சி.கந்தூரி கூறினார்.

தோல்வி குறித்து உத்தரகாண்டம் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், "விலைவாசி உயர்வு எப்போதும் இருப்பதுதான். அதற்காக நாங்கள் தோல்வி அடையவில்லை.

கடந்த 5 ஆண்டுகளில் என்.டி.திவாரி அரசு மக்களுக்கு எவ்வளவோ நன்மைகளை செய்துள்ளது. அந்த சாதனைகளை நாங்கள் மக்களிடம் சரியாக எடுத்துச் சொல்ல தவறி விட்டோம். ஆனால் பா.ஜ.க.வினர் விலைவாசி உயர்வை பூதாகர மாக்கி வென்று விட்டனர் என்றார்.