Tuesday, February 27, 2007

பஞ்சாப், உத்தராஞ்சல் - தேர்தல் முடிவுகள்

பஞ்சாப் சட்டசபை தேர்தல் அகாலி தளம் ஆட்சியை பிடித்தது:
காங்கிரஸ் படுதோல்வி

சண்டிகர், பிப். 27-

ஐந்தாண்டு பதவிக் காலம் முடிந்ததைத் தொடர்ந்து கடந்த 13-ந் தேதி பஞ்சாப் மாநிலத் தில் சட்டசபை தேர்தல் நடந்தது.

பஞ்சாபில் மொத்தம் 117 சட்டசபை தொகுதிகள் உள்ளன. தேர்தல் வன்முறை காரணமாக பியாஸ் தொகுதி தவிர மீதமுள்ள 116 தொகுதிகளுக்கும் ஓட்டுப் பதிவு நடத்தப்பட்டது. இந்த 116 தொகுதிகளில் 1043 பேர் போட்டியிட்டனர்.

ஆளும் காங்கிரஸ் அனைத்து தொகுதிகளிலும் போட்டி யிட்டது. அவர்களை எதிர்த்து பா.ஜ.க.-சிரோமணி அகாலிதளம் கூட்டணி களம் இறங்கியது. இதனால் ஆட்சியை கைப்பற்றப் போவது யார் என்பதில் கடும் போட்டி நிலவியது.

116 தொகுதிகளிலும் மின்னணு எந்திரத்தில் ஓட்டுப்பதிவு நடந்தது. இன்று (செவ்வாய்) காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கியது. இந்த தேர்தலில் பா.ஜ.க.-அகாலி தளம் கூட்டணி ஆட்சியைப் பிடிக்கும் என்று கருத்து கணிப்புகள் கூறியிருந்தன.

பஞ்சாப் தேர்தல் முடிவும் இன்று அதை உறுதி செய்தது. ஓட்டு எண்ணிக்கை தொடக்கம் முதலே பா.ஜ.க-அகாலி தளம் கூட்டணி பெரும்பா லான தொகுதிகளில் அதிக ஓட்டுக்கள் பெற்று முன்னணி யில் இருந்தது. காலை 9 மணிக்கெல்லாம் பஞ்சாபில் பா.ஜ.க.-அகாலிதளம் கூட் டணி ஆட்சியைப் பிடிப்பது உறுதியாகி விட்டது.

மதியம் 1 மணி நிலவரப்படி 116 இடங்களில் அகாலி தளம் கூட்டணி 65 இடங்களிலும் காங்கிரஸ் 46 இடங்களிலும் வெற்றி பெறும் நிலையில் இருந்தது.

பஞ்சாபில் காங்கிரஸ் தோல்வியை சந்தித்துள்ளது. அங்குள்ள மூத்த தலைவர்கள் பலர் தோல்வியைத் தழுவி னார்கள். கடந்த தேர்தலில் காங்கிரஸ் 62 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்திருந் தது.

இந்த தடவை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பாதி பேர் வெற்றி வாய்ப்பை இழந்தனர். கடந்த தேர்தலில் 44 இடங் களில் மட்டுமே வெற்றி பெற்றிருந்த பா.ஜ.க.-அகாலி தளம் கூட்டணி இந்த தடவை அந்த இட எண்ணிக்கையை கணிசமாக அதிகரித்து ஆட்சியைப் பிடித்துள்ளது.

அகாலி தளம் மூத்த தலை வர் பிரகாஷ்சிங் பாதல் லம்பி தொகுதியில் எளிதாக வெற்றி பெற்றார். அவர் தன்னை எதிர்த்து நின்ற காங்கிரஸ் வேட்பாளர் மகேஷ் இந்தர்சிங் பாதலை 6 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தினார்.

முதல்-மந்திரி அம்ரிந்தர்சிங் பாட்டியாலா தொகுதியில் வெற்றி பெற்றார். அவர் அகாலி தளம் வேட்பாளர் சுர்ஜித்சிங் சோகிலியை 32, 149 ஓட்டுக்கள் வித்தியாசத் தில் தோற்கடித்தார்.

காங்கிரஸ் மந்திரிகளில் ஜகஜித்சிங், ஜக்மோகன்சிங், சர்தூல்சிங் கர்னாம்தாஸ் ஜோகர், ரமேஷ் சந்திரதோக்ரா, ராகேஷ் பாண்டே ஆகிய 6 பேர் தோல்வி அடைந்தனர்.

அகாலி தளம் மூத்த தலை வர்களில் சிரோமணி குருத் வாரா கமிட்டி தலைவர் பிபி ஜகிர்கவுர், குல்தீப் சிங் வகேலா ஆகியோர் தோல்வியைத் தழு வியவர்களில் முக்கியமான வர்கள்.

பஞ்சாப் துணை முதல்- மந்திரி ரஜிந்தர் கவுர் (காங்) எலக்ரா தொகுதியில் அகாலி தளம் வேட்பாளர் பிரேம்சிங்கை 259 ஓட்டுக்களில் தோற்கடித்தார்.

அகாலி தளம் மீண்டும் வெற்றி பெற்றதன் மூலம் பஞ்சாப் முதல்-மந்திரியாக பிரகாஷ்சிங் பாதல் பதவி ஏற்பார். இதை பாதலின் மகன் சுக்பீர்சிங் இன்று அதிகாரப் பூர்வமாக அறிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், "முதல்-மந்திரியாக இருந்த அம்ரிந்தர்சிங் ஒரு சர்வாதி காரி போல ஆட்சி நடத்தினார். சர்வாதிகாரி போல வாழ்ந்தார். சர்வாதிகாரி போல நடந்து கொண்டார். அவர் ஒரு போதும் மக்கள் உணர்வுகளை உணரவில்லை. மக்களின் அந்த உணர்வுதான் ஓட்டுக்களாக மாறி உள்ளது'' என்றார்.

-oOo-

உத்தகாண்டம் மாநிலத்தில் பா.ஜனதா அபார வெற்றி:
கந்தூரி முதல்-மந்திரி ஆகிறார்

டேராடூன், பிப். 27-

உத்தரகாண்டம் மாநிலத்தில் என்.டி.திவாரி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வந்தது. கடந்த 21-ந்தேதி அந்த மாநில சட்டசபைக்கு தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 69 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நடத்தப்பட்டது.

இன்று காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கி யது. பாரதீய ஜனதா கட்சி அதிக இடங்களை கைப்பற்றும் என்று கருத்து கணிப்புகள் கூறி இருந்தன. தேர்தல் முடிவும் அது போலவே இருந்தது.

ஓட்டு எண்ணிக்கை தொடக் கத்தில் பா.ஜ.க., காங்கிரஸ் இரு கட்சிகளும் சம அளவில் முன்னணியில் இருந்தன. எனவே உத்தரகாண்டம் மாநி லத்தில் இழுபறி ஏற்படும் என்று எல்லாரும் முதலில் கருதினார்கள்.

10 மணி அளவில் காங்கிரசை விட பா.ஜ.க. கூடுதல் இடங்க ளில் முன்னணி பெற தொடங்கியது. மதியம் 12 மணிக்கு 69 இடங்களில் 38 இடங்களில் பா.ஜ.கவும், 14 இடங்களில் காங்கிரசும் மற்ற கட்சியினர் சுயேச்சைகள் 14 இடங்களில் முன்னணியில் இருந்தன.

உத்தரகாண்டம் மாநிலத்தில் ஆட்சி அமைக்க 36 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை.12.30 மணி அளவில் பாரதீய ஜனதா கட்சி 38 இடங்களில் வெற்றி பெறும் வகையில் இருந்தது. இதன் மூலம் உத்தரகாண்டத்தில் பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்துள்ளது.

உத்தரகாண்டம் மாநில பா.ஜனதா மூத்த தலைவர்கள் அனைவரும் வெற்றி பெற்றுள்ளனர். இதனால் அந்த மாநிலத்தில் பா.ஜ.க.வினர் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி உள்ளனர்.

உத்தரகாண்டம் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. வயதான காரணத்தால் ஆளும் காங்கிரஸ் முதல்-மந்திரி என்.டி.திவாரி இந்த தடவை தேர்தலில் போட்டியிடவில்லை.

அவருக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் தகவல் தொடர்பு மந்திரி இந்திர ஹிரிதயேஸ். இவர் ஹல்டவாணி தொகுதியில் போட்டியிட்டு தோற்றுப்போனார். மூத்த தலைவர்கள் தோல்வி காரணமாக உத்தரகாண்ட மாநில காங்கிரசார் துவண்டு போய் உள்ளனர்.

கடந்த தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்திருந்த காங்கிரஸ் இந்த தடவை 16 இடங்களுடன் திருப்திப்பட வேண்டிய நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது.

இந்தியாவின் 27-வது மாநிலமாக 2000-ம் ஆண்டு உருவான உத்தரகாண்டம் மாநிலத்தில் முதலில் நித்தி யானந்த சுவாமி தலைமையில் 9.11.2000 முதல் 30.10.2001 வரை பா.ஜ.க. ஆட்சி நடந்தது. பிறகு 30.10.2001 முதல் 2.3.02 வரை பகத்சிங் கோஷியாரி முதல்-மந்திரியாக இருந்தார்.

இதையடுத்து நடந்த முதல் தேர்தலில் காங்கிரஸ் வென்று 2002-ல் என்.டி.திவாரி முதல்வராக இருந்தார். அவரிடம் இருந்த ஆட்சியை தற்போது பா.ஜ.க. மீண்டும் தட்டிப் பறித்து தன் வசமாக்கி உள்ளது.

உத்தரகாண்டத்தில் புதிய முதல்-மந்திரியை தேர்வு செய்ய பா.ஜ.க. பாராளுமன்ற குழுக் கூட்டம் இன்று மாலை டெல்லியில் கூடுகிறது. கூட்டத்துக்கு பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத்சிங் தலைமை ஏற்கிறார்.

கூட்டத்தில் உத்தரகாண்டம் புதிய முதல்-மந்திரியாக புவன்சந்திர கந்தூரி தேர்வு செய்யப்படுவார் என்று தெரிகிறது. இவர் கடந்த பா.ஜ.க. மத்திய மந்திரி சபையில் போக்குவரத்துத் துறை மந்திரியாக இருந்தவர். இவர் போட்டியின்றி முதல்வர் பதவிக்கு ஏகமனதாக தேர்வாகிறார்.

முதல்-மந்திரி பதவி ஏற்க போகும் பி.சி.கந்தூரி இன்று மதியம் நிருபர்களிடம் கூறியதாவது:-

மக்களுக்கு சேவை செய்ய எனக்கு கிடைத்த அதிர்ஷ்டகரமான வாய்ப்பாக இதை நான் கருதுகிறேன். இது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிëக்கிறது.

பா.ஜ.க.வின் பாரம்பரிய சேவையை அங்கீகரிக்கும் வகையில் மக்கள் மகத்தான ஆதரவு கொடுத்துள்ளனர். எனது தலைமையில் அமையும் அரசு நம்பகத் தன்மைக்கு முதலிடம் கொடுக்கும். ஊழலை ஒழிக்கவும், அரசு பணம் தவறாக பயன்படுத்தப்படுவதைத் தடுக்கவும் முன்னுரிமை கொடுக்கப்படும்.

இவ்வாறு பி.சி.கந்தூரி கூறினார்.

தோல்வி குறித்து உத்தரகாண்டம் மாநில காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், "விலைவாசி உயர்வு எப்போதும் இருப்பதுதான். அதற்காக நாங்கள் தோல்வி அடையவில்லை.

கடந்த 5 ஆண்டுகளில் என்.டி.திவாரி அரசு மக்களுக்கு எவ்வளவோ நன்மைகளை செய்துள்ளது. அந்த சாதனைகளை நாங்கள் மக்களிடம் சரியாக எடுத்துச் சொல்ல தவறி விட்டோம். ஆனால் பா.ஜ.க.வினர் விலைவாசி உயர்வை பூதாகர மாக்கி வென்று விட்டனர் என்றார்.

No comments: