Monday, February 19, 2007

டெல்லி-லாகூர் ரயிலில் குண்டு: 66 பலி

டெல்லியில் இருந்து பாகிஸ்தான் சென்ற ரெயிலில் குண்டு வெடித்து 66 பயணிகள் சாவு: தீவிரவாதிகள் நாசவேலை

பானிபட், பிப். 19-

டெல்லியில் இருந்து பாகிஸ்தானில் உள்ள லாகூருக்கு வாரத்துக்கு 2 தடவை பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்படுகிறது.

இந்தியா-பாகிஸ்தான் இடையே சுமூக உறவை மேம்படுத்தும் வகையில் 2004ம் ஆண்டு ஜனவரி மாதம் 15-ந்தேதி முதல் இந்த ரெயில் சேவை நடந்து வருகிறது.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையான அத்தாரி வரை இந்த ரெயில் ஓடுவதால் "அத்தாரி எக்ஸ்பிரஸ்'' என்றும் அதன் பிறகு பாகிஸ்தானுக்குள் ஓடும் ரெயில் "சம்ஜ×தா எக்ஸ்பிரஸ்'' என்றும் இந்த ரெயில் அழைக்கப்படுகிறது.

பழைய டெல்லி ரெயில் நிலையத்தில் இருந்து நேற்றி ரவு 10.40 மணிக்கு இந்த ரெயில் அத்தாரி நோக்கிப் புறப்பட்டது. 16 பெட்டிகள் இணைக்கப்பட்டிருந்தன. அதில் மொத்தம் 610 பயணி கள் இருந்தனர். பெரும்பா லானவர்கள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களா கும்.

நள்ளிரவு 1.50 மணிக்கு அரியானா மாநிலம் பானிபட் அருகே ரெயில் சென்று கொண்டிருந்த போது கடைசி பெட்டிகளில் திடீரென குண்டு வெடித்தது.
இதையடுத்து கடைசி 2 பெட்டிகளில் தீ பிடித்தது. ரெயில் வேகமாக சென்று கொண்டிருந்த காரணத்தால் கடைசி 2 பெட்டி முழுக்க தீ பரவி நாலாபுறமும் பற்றி எரிந்தது.

அயர்ந்து தூங்கிக் கொண் டிருந்த பயணிகள் திடீரென தங்களை சுற்றி தீ எரிவதை கண்டு அலறினார்கள். இதை யடுத்து சிவா கிராமம் பகுதியில் ரெயில் நிறுத்தப்பட்டது. உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரி விக்கப்பட்டது.

2 இடங்களில் இருந்து தீயணைப்பு வீரர்கள் வந்தனர். இதற்கிடையே கடைசி 2 பெட்டியையும் துண்டித்து தீயை அணைக்க சிலர் முயன்ற னர். அதற்கு பலன் கிடைக்க வில்லை

நாலாபுறமும் தீ எரிந்ததால் கடைசி 2 பெட்டிகளில் இருந்த பயணிகளில் சிலர் மட்டுமே தப்ப முடிந்தது. மற்றவர்கள் தீயில் கருகினார்கள். 66 பேர் ரெயில் பெட்டிக்குள்ளேயே கருகி உயிரிழந்தனர். இதில் பெரும்பாலானவர்கள் பாகிஸ் தான் நாட்டுக்காரர்கள்.

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் முதன் முதலாக இந்த குண்டு வெடிப்பு நாச வேலை மூலம் பாகிஸ்தானி யர்களையே கொன்று குவித் துள்ளனர்.
சுமார் 50 பயணிகள் தீகாயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு பானிபட் நகரில் உள்ள சிவில் மருத்துவ மனையில் சேர்க்கப் பட்டுள்ளனர். அவர்களில் சில ரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

சுமார் 1 மணி நேர போராட் டத்துக்குப் பிறகு தீ அணைக்கப்பட்டது. அதன் பிறகு 2 பெட்டிகளும் துண்டிக்கப்பட்டு தனியாக கொண்டு செல் லப்பட்டது. 2 பெட்டிகளுக் குள் பிணமான 64 பேர்களின் உடல்கள் கரிக்கட்டையாகி விட்டன.

உயிரிழந்த பயணிகளில் பெரும்பாலானவர்கள் யார் என்றே தெரியாத அளவுக்கு உடல்கள் உருக்குலைந்து சாம்பலாகி விட்டன.

சம்பவ இடத்துக்கு போலீ சாரும் வடக்கு மண்டல ரெயில்வே உயர் அதிகாரி களும் சென்று தீவிர விசா ரணை நடத்தினார்கள். அப் போது 3 சூட்கேஸ்களில் வெடிகுண்டுகள், தீ பிடிக்கும் திரவங்கள் இருப்பதை கண்டு பிடித்தனர். அதில் 2 வெடிகுண்டுகள் ரெயிலுக் குள்ளும், ஒரு வெடிகுண்டு தீவானா ரெயில் நிலையப் பகுதியிலும் கிடந்தன.

தேசிய பேரழிவு பதிலடிப் படை வீரர்கள், சிறப்பு அதிரடிப்படை வீரர்கள், அரியானா மாநில தடயவியல் நிபுணர்கள் மற்றும் ரெயில்வே போலீசார் ஒருங்கிணைந்து சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்கள். பானிபட் மாவட்டம் முழுக்க அதிரடி தேடுதல் வேட்டையும் நடத்தப் பட்டது.

முதல் கட்ட விசாரணையில் இது பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகளின் சதி வேலை என்று தெரிய வந்துள்ளது. பெரிய அளவில் உயிரிழப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற கொடூர திட்டத்துடன் அவர்கள் நன்கு திட்டமிட்டு கடைசி 2 பெட்டியில் குண்டு வெடிப்பை நிகழ்த்தி தீ பிடிக்க செய்துள்ளனர்.

ரெயிலில் குண்டு வெடிக்கும் சத்தத்தை கேட்டதாக தீவானா ரெயில் நிலைய கேட் கீப்பர் கூறினார். அவர் உள்பட பயணிகளிடம் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தினார்கள்.

சம்பவ இடத்துக்கு மத்திய மந்திரிகள் சிவராஜ் பாட்டீல், லல்லுபிரசாத் யாதவ், வேலு, உள்துறை செயலாளர் வி.கே.தக்கல், தேசிய பாதுகாப்பு படை இயக்குனர் ஜே.கே.தத், வடக்கு மண்டல ரெயில்வே பொது மேலாளர் வி.என்.மாத்தூர் உள்பட உயர் அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர். ரெயிலுக்கு குண்டு வைத்த தீவிரவாதிகளை பிடிக்க தொடர்ந்து தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.

தீவிர விசாரணைக்கு பிறகு அத்தாரி எக்ஸ்பிரஸ் ரெயில் 5 பெட்டிகளை மட்டும் விட்டு விட்டு 11 பெட்டிகளுடன் இன்று அதிகாலை 3 மணிக்கு எல்லை நோக்கி புறப்பட்டுச் சென்றது.

No comments: