Wednesday, February 28, 2007

பட்ஜெட்: வருமானவரி உச்சவரம்பு உயர்வு

மத்திய பட்ஜெட் தாக்கல்:
வருமானவரி உச்சவரம்பு உயர்வு

புதுடெல்லி, பிப். 28-

2007-08 ஆம் ஆண்டுக்கான மத்திய பட் ஜெட்டை நிதிஅமைச்சர் ப.சிதம்பரம் இன்று பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டில் கூறப்பட்டி ருப்பதாவது:-

நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 2006-07-ல் 9.2 ஆக இருந்தது. கடந்த 3 ஆண்டுகளில் இது சராசரியாக 8.6 சதவீதம் இருந்தது. உற்பத்தி வளர்ச்சி விகிதம் 11.3 சதவீதமாக உள்ளது.

சேமிப்பு விகிதம் 32.4 சதவீதமாகவும், முதலீட்டு விகிதம் 33.8 சதவீதமாகவும் தொடர்ந்து நீடிக்கும். 2007-ம் நிதி ஆண்டில் சராசரி பண வீக்க விகிதம் 5.2 முதல் 5.4 சதவீதம் வரையில் இருக்கும். பணவீக்கம் கட்டுப்படுத்தப் படும்.

2006-07 நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் வங்கிக்கடன் விகிதம் 29 சதவீதமாக உயர்ந்ததது. கோதுமை, அரிசி தொடர்பாக எந்த புதிய ஒப்பந்தமும் செய்யப்பட மாட்டாது. கூடுதலாக 24 லட்சம் ஹெக்டேர் நிலங்களில் பாசன வசதி செய்யப்படும்.

ஊரகப்பகுதிகளில் தொலைபேசியை கொண்டு செல்லும் திட்டத்தின் கீழ் 15 ஆயிரத்து 54 கிராமங் களில் போன் வசதி செய்யப் பட்டுள்ளது. உடல் நலத்துக்கான நிதிஒதுக் கீடு 21.9 சதவீதமாக அதிகரிக்கப் பட்டுள்ளது.

கல்விக்கு 34.2 சதவீதமும் கூடுதல் நிதி ஒதுக்கீடு நடப்பாண் டில் கூடுதலாக 2 லட்சம் ஆசிரியர்கள் நியமிக்கப் படுவார்கள். 5 லட்சம் புதிய வகுப்பறைகள் கட்டப்படும்.

மேல்நிலைப்பள்ளி கல்விக் கான உதவித்தொகை ரூ. 1837 கோடியில் இருந்து ரூ.3794 கோடியாக அதிகரிக்கப் பட்டுள்ளது. ராஜீவ்காந்தி குடிநீர் திட்டத்தின் கீழ் புதிய பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.4680 கோடியில் இருந்து ரூ.5850 கோடியாக அதிகரிக் கப்படுகிறது.

பாரத் நிர்மான் திட்டத்தின் கீழ் புதிதாக 15 லட்சம் வீடுகள் கட்டப்படும். தேசிய ஊரக சுகாதார திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு ரூ.8207 கோடியில் இருந்து ரூ.9947 கோடியாக அதிகரிக்கப்படுகிறது. எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத் துக்கு ரூ. 969 கோடி நிதிஒதுக்கப் படுகிறது.

நாடெங்கும் பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்து பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. இதை தடுக்க தேசிய அளவில் புதிய ஸ்காலர்ஷிப் திட்டம் அமல் படுத்தப்படும். இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு குழந்தைக்கும் படிப்பைத்தொடர தலா ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.

போலியோவை முற்றிலு மாக விரட்ட ரூ.1290 கோடி வழங்கப்படும். உத்தர பிரதேசத்தில் 20 மாவட்டங் களிலும், பீகாரில் 10 மாவட்டங்களிலும் போலியோ ஒழிப்புக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்படும்.

பொது வினியோக முறை கம்ப்ïட்டர்மயமாக்கப்படும். இந்திய உணவுக்கழக செயல் பாடுகள் கம்ப்ïட்டரில் ஒருங்கிணைக்கப்படும். எஸ்.சி. மற்றும் எஸ்.டி.க்களுக்கு மட்டுமே வழங்கப்படும் திட்டங்களுக்கு நிதிஒதுக்கீடு ரூ.3271 கோடியாக அதிகரிக் கப்படுகிறது. எஸ்.சி., எஸ்.டி.க்கான உதவித்தொகை நிதி ஒதுக்கீடு ரூ.440 கோடியில் இருந்து ரூ.611 கோடியாக அதிகரிக்கப்படுகிறது.

சிறுபான்மை இன மாணவ-மாணவிகளுக்கான ஸ்காலர்ஷிப் திட்டத்தில் மெட்ரிக்கில் படிப்பவர்களுக்கு ரூ.72 கோடியும், பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு படிப்பவர் களுக்கு ரூ.48 கோடியும் வழங்கப்படும்.

வடகிழக்கு மாநிலங்கள் மேம்பாட்டுக்கு கூடுதல் கவனம் செலுத்தப்படும். இந்த மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.12041 கோடியில் இருந்து ரூ.14365 கோடியாக உயர்த்தப்படுகிறது. அதோடு வடகிழக்கு மாநிலங்களுக்கு வரும் மார்ச் 31-ந்தேதிக்குள் புதிய தொழில்கொள்கை தயாரித்து வெளியிடப்படும்.

பெண்கள் மேம்பாட்டுக் கான நிதிஒதுக்கீடு ரூ.22,282 கோடியாக இருக்கும். விவசாயிகளுக்கு ரூ.2,25,000 கோடி பயிர்க்கடன்கள் வழங்க புதிய பட்ஜெட்டில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால் கூடுதலாக 50 லட்சம் விவசாயிகள் பயன் பெறு வார்கள்.

2006-07-ல் விவசாயி களுக்கு ரூ.1,75,000 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப் பட்டது. இது ரூ.1,90,000 கோடியை எட்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

தேயிலை உற்பத்திக்கு புதிய உத்வேகம் கொடுக்க சிறப்பு நோக்க தேயிலை நிதி உருவாக்கப்படும். இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு தேசிய விவசாய இன்சூரன்ஸ் திட்டம் தொடர்ந்து நடை முறைப்படுத்தப்படும்.

மாநில அரசுகளின் உதவியுடன் சமூகநலத்திட்டங் கள் மேம்படுத்தப்படும். இதன் மூலம் ஒரு அங்கமாக 70 லட்சம் குடும்பங்கள் எல்.ஐ.சி. திட்டத்தில் இணைக்கப் படுவார்கள். இவர்களுக்கு 50 சதவீத பிரிமீயத்தொகையாக 200 ரூபாயை மத்திய அரசு வழங்கும். இந்த திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு ரூ.1000 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

மத்திய பொதுத்துறை நிறுவனங்கள் ரூ.16,261 கோடி கடனாக வழங்கும். தேசிய நெடுஞ்சாலை மேம்பாட்டுத் திட்டங்களுக்கான நிதிஒதுக்கீடு ரூ.9955 கோடியில் இருந்து ரூ.12,600 கோடியாக அதிகரிக் கப்படுகிறது. டெல்லி, கொல் கத்தா, மும்பை, சென்னை ஆகிய 4 முக்கிய நகரங் களை இணைக்கும் தங்கநாற்கர சாலைத்திட்டம் நிறைவடையும் தருவாயில் உள்ளது. வட கிழக்கு மாநிலங்களில் தேசிய நெடுஞ்சாலை மேம் பாட்டுத்திட்டத்துக்கு ரூ.405 கோடி வழங்கப்படும்.

கைத்தறித்தொழில் மேம்பாட்டு நிதி ரூ.533 கோடியில் இருந்து ரூ.911 கோடியாக உயர்த்தப்படுகிறது. நெசவாளர்களுக்கான சுகா தார காப்பீட்டுத்திட்டம் இதர சிறு தொழில்களுக்கும் விரிவு படுத்தப்படும். இதற்காக நிதி ஒதுக்கீடு ரூ. 241 கோடியில் இருந்து ரூ.321 கோடியாக அதி கரிக்கப்படும்.

கயிறு தொழிற்சாலை நவீனப்படுத்த ரூ. 23.55 கோடி வழங்கப்படும். சுற்றுலாத் துறைக்கான நிதிஒதுக்கீடு ரூ.423 கோடியில் இருந்து ரூ.520 கோடியாக உயர்த்தி வழங்கப்படும்.

நலிவடைந்த பிரிவின ருக்கு கடன் வழங்க ரூ.15,000 கோடி ஒதுக்கீடு செய்யப் படுகிறது. அவர்களது வீட்டுக் கடனுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.5000 கோடியில் இருந்து 20 ஆயிரம் கோடியாக அதிகரிக் கப்படுகிறது.

தேசிய கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வராத மாவட்டங்களுக்கு சம்பூர்ணா கிராம வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ரூ.800 கோடி ஒதுக்கப்படுகிறது. ஏற்கனவே உள்ள சொர்ண ஜெயந்தி வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ஒதுக்கீடு ரூ.250 கோடியில் இருந்து ரூ.344 கோடியாக உயர்த்தப்படுகிறது. இந்த நிதி ஆண்டில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் 12.5 பில்லியன் டாலர்களாக (ரூ.57 ஆயிரம் கோடி) உயர்ந்துள்ளது. துறை ரீதியான முதலீடுகள் 6.8 பில்லியன் டாலர்கள் தேசிய மழைநீர் பிடிப்புபகுதி மேம்பாட்டு நிறுவன, திட்டங் களுக்கு ரூ.100 கோடி ஒதுக்கப் பட்டுள்ளது.

ராணுவத்துக்கான நிதி ஒதுக்கீடு ரூ.96 ஆயிரம் கோடி யாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில் மூலதன செலவு ரூ.41,922 கோடியும் அடங்கும். நாட்டு பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நிதிஉதவிகளும் செய்யப்படும்.

பிற்பட்ட மண்டல பகுதி களை மேம்படுத்துவதற்காக ரூ.5800 கோடி சிறப்பு நிதி வழங்கப்படும்.

மும்பை நகரை உலகத்தரம் வாய்ந்த நிதி மையமாக மாற்ற உயர் அதிகாரக்குழு ஒரு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும்.

உடல்ஊனமுற்றோருக்காக 1 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். நாட்டில் ஏற்பட்டுள்ள சீதோஷ்ண இயற்கை மாற்றத்தின் விளைவை ஆய்வு செய்ய நிபுணர் குழு ஒன்று ஏற்படுத் தப்படும். பல்வேறு துறை களில் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு கடந்த ஆண்டு ரூ.1,72,728 கோடியாக இருந்தது. 2007-2008-ம் ஆண்டுக்கான ஒதுக்கீடு ரூ.2,05,100 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. இதில் மத்திய திட்டங்களுக்கான ஒதுக்கீடு ரூ.1,54,939 கோடி.

20 மாநிலங்களுக்கு ரூ.8575 கோடி கடன் பாக்கி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

மாநிலங்கள் மூலம் மத்திய அரசுக்கு வருவாய் ரூ.1 லட்சத்து 42 ஆயிரத்து 450 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு ரூ.1,20,377 கோடியாக இருந்தது.

அடுத்த நிதி ஆண்டு முதல் தேசிய அளவில் பொருட்கள் மற்றும் சேவைவரி திட்டம் அறிமுகம் செய்யப்படும். நடப்பு நிதி ஆண்டில் நிதிபற்றாக்குறை 3.7 சதவீதமாக இருக்கும். வருவாய் பற்றாக்குறை 2 சதவீதம். மொத்த செலவு ரூ.6,81,521 கோடியாக இருக்கும்.

விவசாயம் அல்லாத பொருட்கள் மீதான சுங்கவரி விகிதம் 12.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப் படுகிறது. சமையல் செய்ய பயன்படும் நிலக்கரி மீதானவரி விதிப்பு முழுமையாக நீக்கப் படுகிறது. குறைபாடுள்ள பொருட்கள் மீதான வரி விதிப்பு 20 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக் கப்படுகிறது.

பாலிஸ்டர் மீதான வரி 10-ல் இருந்து 7.5 சதவீதமாக குறைக்கப்படுகிறது. விவசாய கருவிகள், உணவு பதப்படுத்தும் கருவிகளுக்கு வரி 7.5லிருந்து 5 சதவீதமாக குறைகிறது.

சில உணவுகளுக்கு வரி 30 லிருந்து 20 சதவீதமாக குறையும். சூரியகாந்தி எண்ணைக்கு வரி 15 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

குடைகளுக்கான உதிரி பாகங்கள், கைக்கடிகார டயல் ஆகியவற்றுக்கான வரி 12 சதவீதத்தில் இருந்த 5 சதவீதமாக குறைக்கப்படுகிறது.

விமான உதிரிப்பாகங் கள் இறக்குமதிக்கு 3 சதவீத இறக்குமதி வரிவிதிக்கப்படும். இரும்புதாது ஏற்றுமதிக்கு டன்னுக்கு ரூ.300 வரி விதிக்கப்படும்.

சிறு தொழில்களுக்கான சுங்கவரி விலக்கு ரூ.1 கோடியில் ரூ.1.5 கோடி யாக உயர்த்தப்படுகிறது. பெட்ரோல், டீசல் பற்றிய விளம்பர படவரி 8 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக குறை கிறது.

பிளைவுட் மீதான சுங்கவரி 16 சதவீதத்தில் இருந்து 8 சதவீதமாக குறைக்கப்படுகிறது. கலப்பு உணவுகளுக்கு முழுமை யான வரி விலக்கு வழங்கப் படுகிறது.

பயோ-டீசல் மீதான சுங்க வரி முழுமையாக நீக்கப்படு கிறது. தண்ணீர் சுத்தி கரிக்கும் கருவிகள், அனைத் திற்கும் வரிவிலக்கு அளிக்கப் படுகிறது.

சிகரெட் மீதான சுங்கவரி அதிகரிக்கப்படுகிறது. புகையிலை இல்லாத பான் மசாலா மீதான சுங்கவரி 66 சதவீதத்தில் இருந்து 45 சதவீதமாக குறைக்கப்படுகிறது. டெல்லியில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி நடக்க உள்ளதால் கவுரவ புத்தாநகரம், ஸ்ரீதாபாத், காவியாபாத், கோரகன், டெல்லியில் 2,3,4 நட்சத்திர ஓட்டல்களுக்கு 5 ஆண்டுகளுக்கு வரிச்சலுகை வழங்கப்படும். 20 ஆயிரம் கூடுதல் அறைகள் தேவைப் படுவதால் வரி சலுகை நீடிக்கும்.

மாதசம்பளம் பெறுவோருக் கான வருமான வரியில் இந்த பட்ஜெட்டில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இதுவரை ஆண்டு ஒன்றுக்கு ரூ. 1 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்களுக்கு வருமானவரி இல்லை. இந்த வருமான உச்சவரம்பில் மேலும் ரூ. 10 ஆயிரம் உயர்த் தப்பட்டுள்ளது.

அதன்படி ரூ.1 லட்சத்து 10 ஆயிரம் வரை வருமானம் உள்ளவர்களுக்கு வருமானவரி இல்லை.

இந்த வருமானவரி விலக்குக் கான உச்சவரம்பு ரூ. 1,45,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மூத்த குடிமக்களுக்கு இந்த வருமான வரி விலக்கு ரூ.1,95,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

சேவை வரி விலக்கால் 2 லட்சம் பேருக்கு பயன்

மத்திய பட்ஜெட்டில் பல சேவை வரிகளில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இத னால் 2 லட்சம் பேர் பயன் பெறுவார்கள்.

இந்த வரி விலக்கு காரண மாக மத்திய அரசுக்கு ஆண் டுக்கு ரூ.800 கோடி இழப்பு ஏற்படும்.

இதுவரை உயர்தர குடி யிருப்போர் நலச் சங்கங் கள் மீது சேவை வரி விதிக் கப் பட்டிருந்தது. புதிய பட் ஜெட்டில் அதற்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

கம்பெனிகளுக்கான கார்ப் பரேட் வருமான வரியில் சர்சார்ஜ் (ரூ.1 கோடிக்கு கீழ் உள்ளவர்களுக்கு) நீக்கப் படுகிறது.

பொது பட்ஜெட் 2007: முக்கிய அம்சங்கள்

. மகளிர் திட்டங்களுக்கு 22,282 கோடி ரூபாய்

. சிறுபான்மையினர் கழகத்துக்கு 63 கோடி ரூபாய்

. தங்க நாற்கரச் சாலைத் திட்டம் 2009ல் நிறைவு

. அந்நிய செலாவணி கையிருப்பு விபரம்

. சுகாதாரம், கல்வி மற்றும் பணவீக்கம் சிதம்பரம் பட்ஜெட்டின் முக்கிய இலக்குகள்

. வடகிழக்கு மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு

. வடகிழக்கு சாலை வசதிக்கு 405 கோடி

. கிராமப்புற மின்வசதிக்கு ரூ. 3983 கோடி

. தேயிலை, தேங்காய் வளர்ச்சி நிதி

. நிலமற்ற கிராமத்தினருக்கு இன்சூரன்ஸ்

. தேசிய நெடுஞ்சாலை வளர்ச்சிக்கு கூடுதல் நிதி

. அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு திட்டம்

. கல்விக்கான நிதி 34 சதமாக அதிகரிப்பு

. விவசாயத்துக்கு 2,25,000 கோடி கடன்

. எஸ்சி, எஸ்டிக்களுக்கான திட்டங்களுக்கு கூடுதல் நிதி

. 15 ஆயிரம் கிராமங்களுக்கு தொலைபேசி வசதி

. எய்ட்ஸ் இல்லாத நிலையை உருவாக்க கூடுதல் நிதி

. போ#யாவை ஒழிக்க 1290 கோடி ஒதுக்கீடு

. கல்வித்துறை ஒதுக்கீடு 34.2 சதவீதமாக உயர்வு

. குடிநீர் திட்டத்துக்கு நிதி ஒதுக்கீடு அதிகரிப்பு

. சுகாதாரத் துறைக்கு நிதி ஒதுக்கீடு உயர்வு

. கடந்த மூன்று ஆண்டுகளில் 8.6 சதவீத வளர்ச்சி

. 11வது ஐந்தாண்டு திட்டத்தில் விவசாயத்துக்கு முன்னுரிமை

. விவசாயத்துக்கு புதிய நீர்ப்பாசணத் திட்டம்

. பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர சிதம்பரம் உறுதி

. 8% வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது

. விவசாயத்துக்கு முக்கியத்துவம்

. பட்ஜெட் தாக்கலுக்கு முன்னதாக பங்குச்சந்தை வீழ்ச்சி

. வடகிழக்கு சாலை வசதிக்கும் 405 கோடி

. பாதுகாப்பு துறைக்கு 96,000 கோடி ஒதுக்கீடு

. மின் ஆளுமை திட்டத்துக்காக ரு.719 கோடி ஒதுக்கீடு

. காமன்வெல்த் போட்டிகளுக்கு 150 கோடி நிதி

. வாட் வருவாய் 24.3 சதமாக அதிகரிப்பு

. வலுவான நிலையில் பொருளாதாரம்

. டிசம்பருக்குள் 12198 கிலோமீட்டர் கிராமப்புற சாலைகள்

. ஜவுளியை நவீனப்படுத்த 911 கோடி நிதி

4 comments:

பிரதீப் said...

செய்திக்கு நன்றி. நிதிநிலை அறிக்கை பற்றி உங்கள் கருத்து என்ன?

பிரதீப் said...

நம்மளும் ஒரு வரி கட்டுநர் (ஹிஹி) என்ற அளவில்தானே கருத்து எல்லாஞ் சொல்ல முடியும்?

இந்தச் செய்தி எங்கருந்துங்க கெடைச்சுது? நல்ல கவரேஜ் குடுத்திருக்காங்க.

வலைஞன் said...

தட்ஸ்தமிழ், தினமலர் இணைய தளங்களில் உடனுக்குடன் அப்டேட் கிடைத்தது. கடைசியாக விரிவாக மாலைமலர் இணைய தளத்தில் கிடைத்தது.

வலைஞன் said...

பட்ஜெட் விமர்சனம்

சிதம்பர ஜாலம் - பலிக்கவில்லை-பிரதீப்