Wednesday, December 13, 2006

பாராளுமன்ற தாக்குதல் நினைவு!

அப்சல் தூக்கு தண்டனையை தாமதப்படுத்துவதா? பாராளுமன்ற தாக்குதலில் உயிர் இழந்த குடும்பத்தினர் ஜனாதிபதியிடம் பதக்கத்தை திருப்பி கொடுத்தனர்

புதுடெல்லி, டிச. 13-

டெல்லி பாராளுமன்றத்துக் குள் கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் 13-ந் தேதி தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் நடத்தினார்கள். அப்போது நடந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பெண் சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 9 பாதுகாப்பு படையினர் பலியானார்கள். பாராளுமன்றத்துக்குள் நுழைந்த தீவிரவாதிகளும் சுட்டு வீழ்த்தப்பட்டனர். இந்த சம்பவத்தில் புகைப்பட கலைஞர் ஒருவரும் பலியானார்கள்.

இந்த தாக்குதல் தொடர்பாக காஷ்மீர் தீவிரவாதி முகமது அப்சலுக்கு டெல்லி கோர்ட்டு தூக்கு தண்டனை விதித்தது. தூக்கில் போடுவதற்கு கோர்ட்டு நாள்குறித்த நிலை யில் அப்சல் மற்றும் அவனது குடும்பத்தினர் ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியதால் தண்டனை நிறைவேற்றப்பட வில்லை. கருணை மனு மீது இன்னும் மத்திய உள்துறை அமைச்சகம் முடிவு எடுக்காமல் உள்ளது.

பாராளுமன்ற தாக்குதல் சம்பவம் நடந்து இன்றுடன் 5 ஆண்டுகள் ஆகிறது. அப் சலுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றாமல் காலம் தாழ்த்துவதற்கு பாராளுமன்ற தாக்குதலில் பலியானவர்களின் மனைவி மார்கள் மற்றும் குடும்பத்தினர் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இன்று அவர்கள் டெல்லி யில் ஜனாதிபதி மாளிகை நோக்கி பேரணி சென்றனர். உயிர்நீத்த போலீஸ்காரர்களின் குடும்பத்தினருக்கு வழங்கிய "அமர்ஜோதி ஜவான்'' விருதையும், பதக்கத்தையும் ஜனாதிபதி மாளிகையில் திரும்ப ஒப்படைத்தனர்.

தீவிரவாதிகளை எதிர்த்து போராடி உயிர்நீத்த டெல்லி போலீஸ் உதவி சப்-இன்ஸ் பெக்டர் நானக் சந்த்தின் மனைவி கங்கா தேவி. விதவையான இவர் ஆவேசத்துடன் கூறியதாவது:-

எனது கணவர் இந்த நாட் டுக்காக தீவிரவாதிகளை எதிர்த்து போராடி உயிர் நீத் தார். அவரது தியாகத்தை மத்திய அரசு நினைத்துப் பார்க்க வேண்டும். எனது கணவரின் தியாகத்துக்காக `அமர் ஜவான் ஜோதி' விருதும் மெடலும் வழங்கப்பட்டுள்ளது. மெடல் வழங்கினால் மட்டும் போதாது. உயிர் நீத்தவர்களின் தியாகத்தை மதிக்க வேண்டும். தீவிரவாதி அப்சலை உடனே தூக்கில் போட வேண்டும் என்றார்.

கணவரை இழந்த மேலும் ஒரு பெண் கூறும்போது, என் கணவரது தியாகத்துக்கு மதிப்பு அளிக்க வேண்டும், அப்சலின் தூக்கு தண்ட னையை நிறைவேற்றுவது தொடர்பாக முடிவு எடுப்பதில் மத்திய அரசு காலம் தாழ்த்தக் கூடாது. சம்பவம் நடந்து 5 ஆண்டுகள் ஆகி விட்டன. இதில் முடிவு எடுக்க தாமதிப்பதால் எங்களுக்கு வழங்கப்பட்ட மெடல்களை அரசிடம் திரும்ப ஒப்படைக்கிறோம் என்றார்.

பலியான போலீஸ்காரர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக தீவிரவாத தடுப்பு முன்னணி தலைவரான மனீந்தர் சிங் பிட்டா, முன்னாள் உளவுத்துறை இயக்குனர் அஜீத் கே.டோவல் மற்றும் பல்வேறு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

பிட்டா கூறுகையில், அப்ச லுக்கு ஆதரவாக பல்வேறு அமைப்புகள் குரல் கொடுக்கின்றன. அவர்கள் அப்சலை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள். அதற்கு ஒரு போதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றார்.

அப்சலை தூக்கில் போடுவது தொடர்பாக மத்திய அரசு முடிவு எடுப்பதில் தேவையில்லாமல் காலம் கடத்து வதாக பலியான போலீஸ்காரர்களின் குடும்பத்தினர் பலர் குறை கூறினார்கள்.

இதற்கிடையே அப்சல் தூக்கு தண்டனை விவாகரம் குறித்து டெல்லி மேல்- சபையில் பாரதீய ஜனதா உறுப்பினர்கள் பிரச்சினையை எழுப்பினார்கள். இதனால் சபையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து பிற்பகல் வரை சபை ஒத்திவைக்கப்பட்டது.

முன்னதாக டெல்லி மேல்-சபையிலும், பாராளுமன்றத்திலும் பாராளுமன்ற தாக்குதல் நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது.

செய்தி: மாலைமலர்

No comments: