Saturday, November 11, 2006

தலைப்புகள்-11/11

தினத்தந்தி

* இலங்கையில் தமிழ் எம்.பி. சுட்டுக் கொலை
# இலங்கையில் தமிழ் எம்.பி.யான நடராஜா ரவிராஜ், மர்ம மனிதர்களால் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

* திருமண மண்டபம் இடிப்பு :விஜயகாந்த் புகார்
# எனது கட்சியை அழிப்பதற்கே, திருமண மண்டபத்தை இடிக்க போவதாக அறிவித்துள்ளனர்-விஜயகாந்த் புகார்.

* இலங்கை பிரச்சினை :மன்மோகன்சிங் உறுதி
# இலங்கையில் தமிழர்கள் மீதான தாக்குதலை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்று மன்மோகன்சிங் உறுதி.

* இட ஒதுக்கீடு வழக்கு :ஜெயலலிதா குற்றச்சாட்டு
# இடஒதுக்கீட்டுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கை நடத்தியதாக மத்திய, தமிழக அரசு மீது ஜெயலலிதா குற்றச்சாட்டு.

* "நான் பிரதமர் ஆவது உறுதி''-லல்லு பிரசாத் அறிவிப்பு
# "நான் பிரதமர் ஆவது உறுதி'' என்று மத்திய ரெயில்வே மந்திரி லல்லு பிரசாத் கூறினார்.

தினமலர்

* அகதிகளை தாக்கிய ராணுவத்திற்கு புலிகள் பதிலடி * கொழும்பு நகரில் தமிழ் எம்.பி., சுட்டுக் கொலை
# கொழும்பு : இலங்கையில் விடுதலைப் புலிகளின் ஆதரவு எம்.பி., நடராஜா ரவிராஜ் நேற்று காலை சுட்டுக் கொல்லப்பட்டார். மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் சரமாரி துப்பாக்கி சூடு நடத்தியதில் எம்.பி.,யின் பாதுகாவலரும் கொல்லப்பட்டார். அதே நேரத்தில் திரிகோணமலை கடற்பகுதியில் இலங்கை கடற்படை மற்றும் விடுதலைப் புலிகள் இடையே நடந்த மோதலில் இரண்டு தரப்பையும் சேர்ந்த 50 பேர் கொல்லப்பட்டனர்.

* நுழைவுத்தேர்வு உண்டா?: அரசு முடிவு என்ன? 13ம் தேதி முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிப்பு
# சென்னை : நுழைவுத் தேர்வை ரத்து செய்வது குறித்து ஆய்வு செய்த அனந்தகிருஷ்ணன் கமிட்டி வரும் 13ம் தேதி முதல்வரிடம் தனது அறிக்கையை சமர்ப்பிக்கிறது. அதனடிப்படையில் நுழைவுத் தேர்வு விஷயத்தில் மாணவர்களுக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் அறிவிப்பு வெளியிடப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

* மனித நேயமற்று சுடுகாட்டில் வீசப்பட்ட முதியவர் சாவு
# மேலூர் : மேலூர் அருகே சுடுகாட்டில் வீசிப்பட்ட முதியவர் இறந்து போனார். இறந்த அவர், தன் தம்பியை கொலை செய்த குற்றவாளி என அடையாளம் தெரிந்தது.

* இந்திய அமெரிக்க உடன்பாட்டுக்கு ஆதரவு திரட்ட ஜனநாயக கட்சியினருடன் அதிபர் புஷ் ஆலோசனை
# வாஷிங்டன் : இந்திய அமெரிக்க அணுசக்தி உடன்பாட்டுக்கு செனட் சபையில் ஒப்புதல் பெற அதிபர் புஷ் தனிப்பட்ட ஆர்வம் காட்டி வருகிறார். இது குறித்து ஜனநாயக கட்சி தலைவர்களுடனும் அவர் பேசியுள்ளார்.

* ஸ்ரீபெரும்புதூரில் தொழிற்சாலை: "சாம்சங்' நிறுவனம் ஒப்பந்தம்
# சென்னை : சென்னையை அடுத்த ஸ்ரீபெரும் புதூரில் "சாம்சங்' நிறுவனம் 450 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற் சாலை துவங்க தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

* அமைதி ஒப்பந்தத்தின் வெற்றியை கொண்டாடிய மாவோயிஸ்ட்கள்
# காத்மாண்டு : நேபாள அரசுக்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள அமைதி ஒப்பந்தத்தை கொண்டாடும் பொருட்டு மாவோயிஸ்ட்டுகள் சார்பில் நேற்று வெற்றி பேரணிகள் நடத்தப்பட்டன.

* மகாத்மா, நேரு வரிசையில் நானா...!* சச்சின் ஆச்சர்யம்
# மும்பை : மகாத்மா காந்தி, நேரு ஆகியோரது வரிசையில் தனது பெயரையும் சேர்த்துள்ளது மிகப் பெரும் கவுரவம் என சச்சின் தெரிவித்துள்ளார்.

No comments: