Sunday, November 12, 2006

தலைப்புகள்-11/12

தினமலர்

* மிரட்டல்!* இலங்கையில் உள்நாட்டு கலவரம் வெடிக்கும் * சிங்களர்களை தாக்க புதிய அமைப்பு எச்சரிக்கை
# கொழும்பு : இலங்கையில் கடந்த சில நாட்களாக அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 1983ம் ஆண்டு துவங்கி பல ஆண்டுகள் நீடித்த உள்நாட்டு கலவரத்தால் 65 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர். அது போன்றதொரு உள்நாட்டு கலவரம் மீண்டும் வெடிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளதாக, சர்வதேச அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

* "தம்பிக்கு அண்ணன் கொடுக்கும் தொகை' திருச்சியில் முதல்வர் கருணாநிதி உருக்கம்
# திருச்சி : ""வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அளிக்கும் உதவித் தொகை முதல்வர் வழங்கும் தொகை அல்ல. தம்பிக்கு அண்ணன் கொடுக்கும் தொகையாக கருத வேண்டும்,'' என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

* போலி ஆவணங்களுடன் விமான நிலையத்தில் மூவர் * பயங்கரவாதிகளாக இருக்கலாம் என்பதால் பரபரப்பு *மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை
# சென்னை : பயங்கரவாதிகள் எந்த நேரமும் தாக்குதல் நடத்தலாம் என்ற பதட்டத்துடன் அதிகாரிகள் கண்காணித்துக் கொண்டிருக்கும் வேளையில், போலி விசா மற்றும் பாஸ்போர்ட்டுகளுடன் விமானத்தில் பயணம் செய்ய வந்த வெளிநாட்டைச் சேர்ந்த மூவரால் சென்னை விமான நிலையத்தில் பதட்டம் ஏற்பட்டது.

* போரை விட அச்சுறுத்தலாக உள்ளது எல்லை தாண்டிய பயங்கரவாதம் : பிரணாப் முகர்ஜி ஆவேசம்
# புதுடில்லி : ""நாடுகளுக்கு இடையேயான போர்களை விட, எல்லை கடந்த பயங்கரவாதம் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. இப்பிரச்னையைச் சமாளிக்க, சர்வதேச சமூகத்தினரின் குறிக் கோளுடன் கூடிய ஒத்துழைப்பு தேவை,'' என்று வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.

* தொடர் மழையால் தக்காளி விலை உயர்வு *வெளி மாநில ஏற்றுமதியும் பாதிப்பு
# வாழப்பாடி : வாழப்பாடி பகுதியில் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து பெய்த மழையால், தக்காளி உற்பத்தி பாதிக்கப்பட்டு விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், வெளி மாநிலங்களுக்கான ஏற்றுமதி தடைபட்டுள்ளது.

* டாக்டர்களுக்கு பேருதவி புரியும் கூகுல் வெப்சைட்
# லண்டன் : நோயாளிகள் மட்டுமல்லாது டாக்டர்களும் நோய்கள் தொடர்பாக தங்களுக்கு வேண்டிய தகவல்களைத் தேடுவதற்கு "கூகுல் வெப்சைட்டை' பயன்படுத்துகின்றனர் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

* சாதிக்க தவறும் முன்னணி வீரர்கள்!* டிராவிட் குற்றச்சாட்டு
# பெங்களூர் : ""டாப் ஆர்டர் பேட்ஸ் மேன்களின் பொறுப்பற்ற ஆட்டமே, தொடர்ச்சியான தோல்விக்கு வழிவகுத்து விட் டது. உலககோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்பாக முன்னணி வீரர்கள் இழந்த பார்மை மீட்க வேண்டும். ,'' என எச்சரிக்கிறார் இந்திய கேப்டன் ராகுல் டிராவிட்.

No comments: