Thursday, November 16, 2006

தலைப்புகள்-11/16

தினமலர்

* சீல்!* கர்நாடக, ஆந்திர எல்லை பகுதிகளில் போலீஸ் குவிப்பு* தமிழகத்துக்குள் நக்சலைட்டுகள் ஊடுருவலை தடுக்க அதிரடி
# சென்னை : எப்போதும் இல்லாத வகையில் தமிழகத்தில் நக்சல்கள் ஊடுருவக் கூடும் என்று உளவுத் துறை எச்சரித்துள்ளதால், தமிழகத்தை ஒட்டியுள்ள கர்நாடக, ஆந்திர எல்லைப் பகுதிகளில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

* ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் ; அபாயம் நீங்கியது
# டோக்கியோ : ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை வாபஸ் பெறப்பட்டுள்ளதால் அங்குள்ள மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

* பயங்கரவாத தடுப்பு அமைப்பை உருவாக்க இந்தியா பாக்.,சம்மதம்! *இரண்டு நாள் பேச்சுவார்த்தைக்கு பின் கூட்டறிக்கை வெளியீடு
# புதுடில்லி:இந்தியா பாகிஸ்தான் வெளியுறவு செயலர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில் பயங்கரவாத தடுப்பு அமைப் பை உருவாக்குவது என தீர்மானிக்கப்பட்டது. இந்த அமைப்பில் இரு தரப்பிலும் தலா மூன்று அதிகாரிகள் இடம் பெறுவர். இரு நாடுகளுக்கும் உட்பட்ட பகுதிகளில் அணு ஆயுத அபாயத்தை தவிர்ப்பது என்றும், அடுத்த கட்ட பேச்சுவார்த் தையை அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடத்துவது என்றும் முடிவு செய்யப் பட்டது. இரு நாடுகளின் சார்பில் கூட்டறிக்கையும் வெளியிடப்பட்டன.

* மேட்டூர் மலையில் நக்சல் பயிற்சி முகாம்? * மலை உச்சியில் இரண்டு "டென்ட்' * மர்ம மனிதர்கள் நடமாட்டத்தால் பீதி
# மேட்டூர்: மேட்டூர் அருகே பாலமலை உச்சியில் இரு டென்ட்டுகள் புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. அங்கு, இரவு நேரத்தில் மர்ம மனிதர்கள் நடமாட்டம் இருப்பது பாலமலை அடிவார கிராம மக்களை பீதியடைய வைத்துள்ளது.

* உள்நாட்டு விமான கட்டணம் ஏறுது
# புதுடில்லி:போட்டா போட்டியை சமாளிக்க என்னதான் விலை குறைத்தாலும், செலவு கணக்குகள் "கையை' கடிப்பதால், உள்நாட்டு விமான கட்டணங்களை ஏற்ற வேண்டிய நிலைக்கு பல தனியார் நிறுவனங்கள் வந்துள்ளன என்று தெரிகிறது.

* இந்திய அணுசக்தி உடன்பாடு மசோதா :அமெரிக்க செனட் சபையில் இன்று விவாதம்
# வாஷிங்டன்:அமெரிக்க செனட் சபையில் நேற்று இந்திய அணுசக்தி உடன்பாடு குறித்தான மசோதா விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவதாக இருந்தது கடைசி நேரத்தில் ஒத்தி வைக்கப்பட்டது. இன்று நடக்கும் கூட்டத்தில் இந்த மசோதா மீது விவாதம் நடத்தப்பட்டு நிறைவேற்றப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

* வெற்றியுடன் துவக்குமா இந்தியா?* இன்று தெ.ஆ., "ஏ' அணியுடன் மோதல்
# பெனோனி : தென் ஆப்ரிக்க பயணத்தை இந்திய அணி வெற்றியுடன் துவக்க காத்திருக்கிறது. இன்று தனது முதல் பயிற்சி போட்டியில் தென் ஆப்ரிக்க "ஏ' அணியை சந்திக்கிறது.

மாலைமலர்

* இலங்கை தமிழர்களுக்கு 7000 டன் அரிசி- சர்க்கரை; பால் பவுடர்: பிரதமர் மன்மோகன்சிங் அறிவிப்பு
* தமிழ்நாட்டில் மேலும் 2 நாட்கள் மழை நீடிக்கும்
* முல்லைபெரியாறு அணையில் 142 அடி தண்ணீரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: ஜெயலலிதா கோரிக்கை
* தடையை மீறி நாளை இலங்கை தூதரகம் முன் ம.தி.மு.க. ஆர்ப்பாட்டம்: வைகோ தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்
* நிலச்சரிவால் துண்டிக்கப்பட்ட பாலங்கள் சீரமைப்பு: மழை பெய்வதால் மீட்பு பணி தாமதம்
* ஜனநாயக படுகொலை என்று விமர்சித்து உள்ளாட்சி தேர்தலை குறை சொல்வதா? காங்.தலைவர் கிருஷ்ணசாமி கண்டனம்
* வக்கீல் தொழிலுக்கு எந்த வயதிலும் பதிவு செய்யலாம்: ஐகோர்ட்டு தீர்ப்பு
* நீர்மட்டம் 138 அடியை தாண்டியது; முல்லைப்பெரியாறு அணைக்கு பாதிப்பா? தயார் நிலையில் ராணுவம்-கப்பல் படை
* முக்கிய பிரமுகர்கள் பாதுகாப்புக்கு 650 ஆயுதப்படை போலீசார்
* தமிழ்நாடு முழுவதும் காலியாக உள்ள 3700 கிராம உதவியாளர்கள் விரைவில் நியமனம்

No comments: