Thursday, November 09, 2006

தலைப்புகள்-11/9

* பள்ளி மீது இலங்கை ராணுவம் குண்டு வீசியதில் 40 பேர் பலி! * மட்டக்களப்பில் தமிழ் அகதிகள் மீது கொடூர தாக்குதல்
# கொழும்பு : இலங்கையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள மட்டக்களப்பு பகுதியில் பள்ளி ஒன்றின் மீது இலங்கை ராணுவத்தினர் நேற்று பீரங்கி தாக்குதல் நடத்தினர். இந்த கொடூர தாக்குதலில் அந்த பள்ளியில் அகதிகளாக தங்கியிருந்த 40 பேர் கொல்லப்பட்டனர். நுõற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

* மீண்டும் ஆரம்பம் * டில்லியில் சட்ட விரோத கடைகளுக்கு "சீல்' வைப்பது * பலத்த பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
# புதுடில்லி : டில்லியில் குடியிருப்பு பகுதிகளில் சட்ட விரோதமாகச் செயல்பட்டு வரும் கடை களுக்கு "சீல்' வைக்கும் பணி, நேற்று மீண்டும் துவங்கியது.டில்லியில் குடியிருப்பு பகுதிகளில் சட்ட விரோதமாகச் செயல்பட்டு வரும் 40 ஆயிரம் மேற்பட்ட கடைகளுக்கு "சீல்' வைக்கும் பிரச்னை, பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

* ஜெ., வீட்டில் அத்துமீறி நுழைந்தவர் நான்கு மணி நேரத்தில் கைது
# சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வீட்டின் முன்புறமுள்ள இரும்பு கதவை இருசக்கர வாகனத்தில் சென்று முட்டித் தள்ளியவர், "மகளின் மருத்துவ செலவுக்கு பணம் தரவில்லை' என்று கூறி அசிங்கமாக திட்டினார். அங்கிருந்த கமாண்டோ போலீசாரிடமிருந்து தப்பியவரை நான்கு மணி நேரத்தில் சென்னை மாநகர போலீசார் கைது செய்தனர்.

* அமெரிக்க பார்லி., தேர்தலில் அதிபர் புஷ் கட்சிக்கு அடி * பெருவாரியான இடங்களை அள்ளியது ஜனநாயக கட்சி
# வாஷிங்டன் : அமெரிக்க பார்லிமென்ட் மற்றும் மாகாண கவர்னர் தேர்தல்களில் அதிபர் புஷ் கட்சியான குடியரசு கட்சிக்கு பெருத்த அடி விழுந்துள்ளது. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி 12 ஆண்டுகளுக்கு பிறகு பார்லிமென்ட் காங்கிரஸ் சபையை கைப்பற்றியுள்ளது. மாகாண கவர்னர் பதவிகளிலும் பெரும்பான்மையானவை இக்கட்சி வசமே வந்து விட்டன. செனட் சபையில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

* இந்தியாவின் நான்கு பெருநகர ரயில் நிலையங்கள் உலகத் தரம் வாய்ந்த நிலையங்களாக மாற்றப்படும் : லாலு அறிவிப்பு
# "உலகத்தரம் வாய்ந்த ரயில்வே நிலையமாக சென்னை, மும்பை உட்பட நான்கு பெருநகர ரயில்வே நிலையங்களும் மாற்றப்படும் 'என்று ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் தெரிவித்தார்.

* நேபாள அரசு மாவோ.,க்கள் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்து * இடைக்கால அரசு அமைக்கவும், தேர்தல் நடத்தவும் இருதரப்பும் முடிவு
# காத்மாண்டு : நேபாள அரசுக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே நீண்ட இழுபறிக்கு பின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து கடந்த பத்தாண்டுகளாக வன்முறையால் பாதிக்கப்பட்டிருந்த நேபாள மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர். வரும் டிச., 1ம் தேதிக்குள் இடைக்கால அரசு அமைக்கப்படும் என ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* பவாரிடம் "ஸாரி' கேட்க தயார்! * பாண்டிங் பகிரங்க அறிவிப்பு
# சிட்னி : சரத் பவார் விவகாரத்தில் புதிய திருப்பமாக ஆஸ்திரேலிய கேப்டன் பாண்டிங்பகிரங்க மன்னிப்பு கேட்க முன் வந்துள்ளார். தனது செயல் மனதளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால், சரத் பவார் உள்ளிட்ட இந்திய நிர்வாகிகளிடம் வருத்தம் தெரிவிக்க தயாராக இருப்பதாக பாண்டிங் தெரிவித்துள்ளார்.

No comments: