Monday, November 13, 2006

நுழைவுத் தேர்வு ரத்தாகும்!

கருணாநிதியிடம் வல்லுநர் குழு அறிக்கை: நுழைவு தேர்வு ரத்து ஆகிறது

சென்னை, நவ. 13-

மருத்துவம், என்ஜினீயரிங் உள்ளிட்ட தொழிற்கல்வி படிப்புகளில் சேர நுழைவுத்தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.

`கிராமப்புற மாணவர் களும், அரசுப்பள்ளி மாணவர்களும் நுழைவுத் தேர்வால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே நுழைவுத் தேர்வு முறையை ரத்து செய்ய வேண்டும்' என்று கோரிக்கை விடப்பட்டது.

இதையடுத்து, இந்த முறையை ரத்து செய்வது தொடர்பாக அண்ணா பல் கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

செய்த: மாலைமலர்

இந்த குழு நுழைவுத் தேர்வு ரத்து தொடர்பாக சென்னை, மதுரையில் கலந்தாய்வு கூட்டம் நடத்தி பொதுமக்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோரிடம் கருத்து கேட்டது. அப்போது பெரும்பாலானோர் "நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்'' என்று கூறினார்கள்.

சி.பி.எஸ்.இ. மாணவர்கள், நகர்புற மாணவர்கள் உள்ளிட்ட ஒருசிலர் மட்டும் நுழைவுத் தேர்வு வேண்டும் என்று கருத்து தெரிவித்தனர். நுழைவுத் தேர்வு பற்றிய பல்வேறு பிரச்சினைகள் குறித்து நிபுணர் குழு ஆய்வு செய்தது.

இந்த நிலையில் ஆனந்த கிருஷ்ணன் தலைமையிலான நிபுணர் குழு, நுழைவுத் தேர்வு பற்றிய அறிக்கையை இன்று முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் வழங்கியது.

அப்போது அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, எ.வ.வேலு மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

இந்த குழுவின் பரிந்துரைப்படி நுழைவுத் தேர்வு ரத்தா கிறது. அதற்கான சட்டமும் வரும் சட்டசபை கூட்டத்தில் நிறைவேற்றப்படுகிறது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:-

2006 மே மாதம் ஆளுநர் சட்டமன்றத்தில் உரையாற்றிய போது-தொழிற்கல்வி படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு மாணவர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை தரக்கூடியதாகவும், அதிகப் பொருட் செலவை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

கிராமப்புற மாணவர்கள் மற்றும் ஏழைக் குடும் பங்களைச் சேர்ந்த மாண வர்களுக்கு நுழைவுத் தேர்வில் சம வாய்ப்பு இல்லை என்ற நிலை இருப்பதாலும் நுழைவுத் தேர்வினை ரத்து செய்வது குறித்து ஆராய்ந்து பரிந்துரை செய்ய ஒரு வல்லுநர் குழு அமைக்கப்படும் என்று அறி விக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து 7.7.2006 அன்று அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் எம்.ஆனந்த கிருஷ்ணன் தலைமையில் இது குறித்து ஆராய்ந்து பரிந் துரைகளை வழங்க ஒரு வல்லுநர் குழு அமைக்கப் பட்டது.

வல்லுநர் குழு இன்று பரிந்துரைகளை முதல்- அமைச்சர் கருணாநிதியிடம் அளித்தது. நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்படலாம் என்ற வல்லுநர் குழுவின் பரிந் துரைகளை நடைமுறைப் படுத்துவதற்கான வழிமுறை கள் அமைச்சரவைக் கூட் டத்தில் விவாதிக்கப்படும்.

டிசம்பர் 4 அன்று தொடங்கப்படும் சட்டமன்றக் கூட்டத் தொடரில் உரிய சட்ட முன் வடிவினைக் கொண்டு வந்து அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செய்தி: தினமலர்

No comments: