Tuesday, November 14, 2006

ஆபாச படம்

ரெயில் நிலையத்தில் ஆபாச படம் எடுத்தவர் காதல் ஜோடியை ரகசிய காமிராவில் படம் பிடித்தார்

சென்னையில் சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களுக்கு வரும் பெண் பயணிகளை செல்போன் மூலம் ஆபாசமாக படம் பிடித்து வக்கிர கும்பல் ஒன்று இன்டர்நெட்டில் பரப்புவதை மாலைமலர் அம்பலப்படுத்தியது.

இதையடுத்து ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டு ஆனிவிஜயா தலைமையில் பெண் போலீசார் சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் காமிரா செல்போனுடன் சுற்றி திரிந்த வாலிபர்களை பிடித்து செல்போனை சோதனை செய்தனர். தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.

ரெயில் நிலையம் வரும் பெண் பயணிகளை செல்போன் மூலம் ஆபாச படம் எடுத்து இன்டர்நெட்டில் பரவவிடுவது குறித்து விசாரிக்க கமிஷனர் லத்திகா சரண் உத்தரவிட்டார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர்.

முதல் கட்ட விசாரணையில் பெண்களை செல்போன் மூலம் படம் பிடித்தது இண்டர்நெட் மைய உரிமையாளர் என்பது தெரிய வந்தது.

அவர் தனது இண்டர்நெட் மையத்துக்கு வரும் சில மாணவிகளை அவர்களுக்கு தெரியாமலேயே செல்போன் மூலம் ஆபாசமாக படம் பிடித்ததும் அந்த படங்களை தான் உருவாக்கிய `இண்டியன் மசாலா மிக்ஸ்டு டாட் ரிப்போடு டாட்காம்' என்ற இணைய தள முகவரி மூலம் பரவ விட்டிருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

இதையடுத்து அவரது இணைய தள முகவரியை போலீசார் தீவிரமாக ஆய்வு செய்யத் தொடங்கினர். இதில் அவர் தனது இண்டர்நெட் மையத்துக்கு வரும் காதல் ஜோடிகளை ரகசிய வீடியோ காமிரா மூலம் ஆபாச படம் பிடித்தது தெரிய வந்துள்ளது.

அது பற்றிய விவரம் வருமாறு:-

பெண்களை செல்போன் காமிரா மூலம் ஆபாசமாக படமெடுத்தவரின் இண்டர் நெட் மையத்தில் பிரவுசிங் செய்ய வரும் ஜோடிகளுக்கு என்று தனி தனி கேபின்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் இந்த கேபினில் வலது ஓரத்தில் ரகசிய கேமிரா ஒன்று பொருத்தப்பட்டுள்ளது. இங்கு பிரவுசிங் செய்வதற்கு என்று வரும் இளம் ஜோடிகளுக்கு சம்பந்தப்பட்ட கேபின்கள் ஒதுக்கப்படும் என தெரிகிறது.

இந்த கேபின்கள் ஒவ்வொன்றும் தனி அறை போல் காட்சி அளிக்கிறது. இதில் 2 இருக்கைகளும் நவீன வசதியுடன் கூடிய கம்ப்ïட்டர்கள் உள்ளன. பிரவு சிங் செய்ய வரும் காதல் ஜோடிகள் கேபினுக்குள் வைத்து செய்யும் செக்ஸ் விளையாட்டுகள் அனைத்தும் சம்பந்தப்பட்ட காதல் ஜோடிகளுக்கு தெரியாமலேயே ரகசிய காமிராவில் படம் பிடிக்கப்படுகின்றன.

இதில் ஒரு சில காதல் ஜோடிகள் எல்லை மீறி ஒட்டுதல், உரசுதல், கட்டுதலை தொடர்ந்து `அந்த' விஷயத்தையும் கேபின் உள்ளேயே அரங்கேற்றுகின்றனர்.

இந்த காட்சிகளை அப்படியே காமிரா படம் பிடிக்கிறது. இதில் உள்ள ஆபாச காட்சிகளை தொகுத்து ஒரு முழு நீள `புளூ பிலிம்' ஆக தயாரித்து 1/2 நிமிடம் ஓடும் அளவில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த வீடியோ காட்சிகளையும், இண்டர்நெட்டில் பரவவிட்டுள்ளனர். இண்டர்நெட்டில் பரப்பப்பட்ட வீடியோ காட்சி மூலம் மேற்படி தகவல் போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.

சம்பந்தப்பட்ட இணைய தள முகவரியில் இந்த புளூ பிலிம் வீடியோ காட்சிகள் 3 பிரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளன. முதல் வீடியோவில் பிரவுசிங் செய்யும் காதல் ஜோடிகள் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபடுவது போலவும் அடுத்தடுத்த வீடியோவில் மேற்படி சமாச்சாரங்ள் நடப்பதும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து இண்டர்நெட் மையத்தில் ரகசிய கேமிரா மூலம் படம் பிடித்து இண்டர்நெட்டில் பரவவிடுவது என்றால் அதன் உரிமையாருக்கு தெரியாமல் நடைபெற வாய்ப்பில்லை என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இதற்கிடையே ரகசிய காமிராவில் பதிவாகி உள்ளது போல் சென்னையில் எங்கெல்லாம் இண்டர்நெட் மைய கேபின் உள்ளது என போலீசார் ஆய்வு செய்ய முடிவு செய்துள்ளனர். சம்பந்தப்பட்ட கேபின் அடையாளம் காணப்பட்டால் அதன் உரிமையாளர் யார்? என்பது தெரிந்து விடும் என உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

செய்தி : மாலைமலர்

No comments: