Tuesday, November 07, 2006

சரத்குமார் விலகல்

அ.தி.மு.க.வில் இருந்து சரத்குமார் ராஜினாமா
கட்சித் தலைமைக்கு கடிதம் அனுப்பினார்

சென்னை, நவ.7-

அ.தி.மு.க.வில் இருந்து ராஜினாமா செய்துவிட்டதாக நடிகர் சரத்குமார் அறிவித்துள்ளார்.

தி.மு.க.வில் விலகல்

சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலின்போது ஏற்பட்ட பிரச்சினை காரணமாக தி.மு.க.வில் இருந்து விலகி, அ.தி.மு.க.வில் சேர்ந்தார் நடிகர் சரத்குமார். பாராளுமன்ற மேல்சபையில் தி.மு.க. சார்பில் வகித்து வந்த எம்.பì. பதவியையும் அவர் ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து, சட்டமன்ற தேர்தலின்போது அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரசாரத்தை சரத்குமார் மேற்கொண்டார். அ.தி.மு.க.வில் அவர் சேர்ந்தபோது அவருடன் அவரது மனைவி ராதிகாவும் உடன் சென்றிருந்தார். அப்போது, அவருக்கும் அ.தி.மு.க. உறுப்பினர் அட்டையை அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா அளித்தார்.

ராதிகா நீக்கம்

இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்பு அ.தி.மு.க.வில் இருந்து ராதிகா நீக்கப்பட்டதாக ஜெயலலிதா அறிவித்தார். அதன்பிறகு, சரத்குமார் மட்டும் கட்சியில் நீடித்து வந்தார்.

இந்த நிலையில், அ.தி.மு.க.வில் இருந்து விலகியுள்ளதாகவும், அது தொடர்பான ராஜினாமா கடிதத்தை கட்சித் தலைமையிடத்துக்கு அனுப்பியிருப்பதாகவும் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

விரும்பத்தகாத நிகழ்வுகள்

சில விரும்பத்தகாத நிகழ்வுகள் காரணமாக எனது அரசியல் வாழ்க்கையில் கடினமான, மனவேதனை அளிக்கக்கூடிய முடிவுகளை நான் எடுக்க நேர்ந்துள்ளது. எனக்குத் தொடர்ந்து ஆதரவளித்து வரும் ரசிகப் பெருமக்களும், தமிழக மக்களுமே சினிமாவில் நான் இப்போது அடைந்திருக்கும் நிலையை எட்டுவதற்கு காரணமாவார்கள். எனது சினிமா தொழìலை தொடரும் அதே வேளையில், சமுதாய நலன் மற்றும் மேம்பாட்டுக்காக பங்களிக்க விரும்பினேன்.

வறுமை மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றின் பிடியில் இருந்து தமிழகத்தைக் காக்கவும், மாநிலத்தில் சமூக ஒருமைப்பாட்டை நிலைநாட்டவும் நான் எனது ரசிகர்களிடம் எப்போதும் வலியுறுத்தி வந்திருக்கிறேன்.

வேலைப்பளு

அரசியல் மற்றும் சினிமா ஆகிய துறைகளில் நான் மேற்கொண்ட முடிவுகள் எப்போதும் சுயமாக சிந்தித்து எடுக்கப்பட்டவையே ஆகும். கடந்த சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மறëறும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்காக தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தீவிர பிரசாரதëதில் ஈடுபட்டேன். கட்சியில் எனக்களிக்கப்பட்ட பணிகளை விருப்பத்துடன் ஏற்று திருப்தìகரமாக செய்து முடித்திருக்கிறேன்.

தற்போது, நான் சார்ந்திருக்கும் சினிமா தொழிலில் வேலைப்பளு அதிகரித்துள்ளது. அத்துடன், நான் தலைவராக பொறுப்பு வகிக்கும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பணிகளையும் கவனிக்க வேண்டியுள்ளது.

ராஜினாமா

இது போன்றதொரு சூழ்நிலையில் அ.தி.மு.க. தலைமையிடத்துக்கு எனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ளேன். எனது தொழிலில் கூடுதல் கவனம் செலுத்தி மேலும் பல உயர்வுகளைப் பெற்று, சினிமா தொழில் மட்டுமின்றி தமிழ்நாட்டு மக்களுக்காகவும், சமுதாயத்துக்காகவும் தொடர்ந்து பாடுபடுவேன்.

இவ்வாறு சரத்குமார் அறிக்கையில் கூறியிருக்கிறார்.

செய்தி: தினத்தந்தி

No comments: