Monday, November 13, 2006

தலைப்புகள்-11/13

தினமலர்

* தமிழகத்தில் நுழைவு தேர்வை ரத்து செய்ய அனந்த கிருஷ்ணன் குழு பரிந்துரை
# சென்னை : தமிழகத்தில் தொழிற் படிப்புகளுக்கான பொது நுழைவு தேர்வை ரத்து செய்ய அனந்த கிருஷ்ணன் குழு பரிந்துரை செய்துள்ளது.

* தனித்து போட்டி * காங்கிரசில் இப்போதே ஒலிக்கத் துவங்கி விட்டது கோஷம் *மத்திய அரசில் இடம் பெற்றுள்ள கூட்டணி கட்சிகள் கலக்கம்
# புதுடில்லி:மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அமைந்து இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகி விட்டன. அடுத்த லோக்சபா தேர்தலுக்கு இன்னும் மூன்று ஆண்டுகள் இருந்தாலும், தனித்து போட்டி என்ற கோஷம் இப்போதே காங்கிரஸ் கட்சிக்குள் எழ தொடங்கி விட்டது.

* சென்னையிலிருந்து புறப்படும் விமானங்களை கடத்த சதி அமெரிக்க உளவுத்துறையின் எச்சரிக்கையால் பரபரப்பு * ஐரோப்பிய விமானங்களில் விடிய விடிய சோதனை
# சென்னை:இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் விமானங்களை பயங்கரவாதிகள் கடத்தப் போவதாக வந்த தகவலை தொடர்ந்து சென்னையில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட மூன்று விமானங்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதே போன்றதொரு எச்சரிக்கை நடவடிக்கை டில்லி, மும்பை விமான நிலையங்களிலும் மேற்கொள்ளப்பட்டது.

* மத்திய அரசு பணிகளில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு * வீரப்ப மொய்லி யோசனை
# புதுடில்லி:""மத்திய அரசு பணிகளில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வேண்டும்'' என்று வீரப்ப மொய்லி கூறினார்.மத்திய அரசு பணிகளில் பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அளிக்க மாஜி கர்நாடக முதல்வர் வீரப்ப மொய்லி தலைமையில் உயர் மட்ட கமிட்டி மத்திய அரசு நியமித்துள்ளது.

* புதிய ஜென் மாடல் கார்கள்
# புதுடில்லி:மாருதி உத்யோக் நிறுவனம், புதிய ஜென் மாடல் கார்களை விரைவில் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.

* வங்கதேசத்தில் எதிர்க்கட்சி போராட்டம் ரயில் மற்றும் பஸ்களுக்கு தீ வைப்பு
# தாகா:வங்கதேசத்தில் எதிர்க்கட்சியினர் நடத்திய போராட்டத்தில் ரயில் மற்றும் பஸ்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி, கல்லுõரிகள் இயங்கவில்லை. வங்கதேசத்தில் விரைவில் பார்லிமென்ட் தேர்தல் நடக்கவுள்ளது.

* முகமது யூசுப் சதத்தில் பாக்., முன்னிலை! * எடுபடவில்லை வெ.இண்டீஸ் பந்துவீச்சு
# லாகூர்:லாகூர் டெஸ்டில் துõள் கிளப்புகிறது பாகிஸ்தான்.நேற்று முகமது யூசுப் சூப்பர் சதம் அடிக்க, முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 265 ரன்கள் எடுத்தது. தற்போது 59 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. இன்னும் ரசாக் போன்றோர் இருப்பதால் வலுவான ஸ்கோரை எட்ட வாய்ப்பு உள்ளது. ஆடுகளம் படுமந்தமாக இருந்ததால் வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சு எடுபடாமல் போனது.

மாலைமலர்

* கருணாநிதியிடம் வல்லுநர் குழு அறிக்கை: நுழைவு தேர்வு ரத்து ஆகிறது
* விமானங்களை கடத்த சதி: மிரட்டல் விடுத்தது யார்? உளவுத்துறை தீவிர விசாரணை
* டெல்லி கடைகள் `சீல்'வைப்பை எதிர்த்து மத்திய அரசு அப்பீல்
* ஆண்டிப்பட்டியில் பஸ் மறியலில் ஈடுபட்ட தங்கதமிழ்செல்வன் எம்.பி. உள்பட 100 அ.தி.மு.க.வினர் கைது
* காளிமுத்துவை நான் மிரட்டவில்லை: கருணாநிதிக்கு ஜெயலலிதா பதில்
* திருமண மண்டப இடிப்பு பிரச்சினை: விஜயகாந்த்-மந்திரி டி.ஆர்.பாலு மோதல்
* போலீஸ் வேட்டை தீவிரம்: சென்னையில் 5 நாளில் 2000 ரவுடிகள் கைது
* ம.தி.மு.க.வை நிர்மூலம் செய்ய கருணாநிதி திட்டம்: வைகோ குற்றச்சாட்டு
* கிராம மக்களுடன் சிறப்பு ரெயிலில் வருகை: 4 பஞ்சாயத்து தலைவர்களை மு.க.ஸ்டாலின் வரவேற்றார்
* இலங்கையில் சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் எம்.பி. உடல் புதன்கிழமை அடக்கம்; கொழும்பில் இன்று முழு அடைப்பு

1 comment:

தமிழ் அகராதி said...

இந்தி பேசுவோருக்கு தமிழகத்தில் இடஒதுக்கீடு உண்டு; தமிழ் முற்பட்டோருக்கு இடவிலகல்

அன்புள்ள அய்யா,

தற்போதைய தமிழக அரசின் இடஒதுக்கீடு கொள்கை தமிழ் என்கிற அடிப்படையில் அல்லாமல் வெறும் ஜாதி என்கிற அடிப்படையில் உள்ளது.

நீங்கள் பிற்பட்டோர் பட்டியலை பார்த்தால் தமிழ் தவிற்று பிறமொழிகள் பேசும் ஜாதிகள் உள்ளன.

இதில் இந்தி பேசும் முஸ்லிம்கள், ஸவுராஷ்டிரியர்கள்; தெலுங்கு பேசும் ரெட்டியார்கள்,நாயுடுகள், கன்னடம் பேசும் கவுண்டர்கள் ஆகியோர்க்கெல்லாம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

தமிழ் பிராமிணர்களை அயோக்கியர்கள் என கருதும் தி மு க இந்தி பேசும் வடக்கர்கள் வாக்குகளை பெற இந்தி மொழி தேர்தல் பிரசுரங்களை வெளியிட்டது.

தமிழகத்தில் தமிழ் பிராமணர்கள் தமிழர்கள் அல்ல என பிரச்சாரம் செய்கின்றன ப ம க, தி மு க ஆகியோர்.

கர்ணாநிதிக்கு தமிழ் பிராமணர்கள் வெறுப்பு இந்தி மொழிக்கு மேலானது போலுள்ளது.

எனது வகுப்பில் இந்தி பேசும் மாணாக்கர் விலைக்கொடுத்து OBC சான்றிதழ் வாங்கி அண்ணா பல்கலைக்கழகம் சேர்ந்தார். இந்தி/உருது மட்டும் பேசும் முஸ்லிம் தமிழகத்தில் ஜாதிகள் இடஒதுக்கீடு பெறுகின்றனர்.

சென்னை விமானகத்தில் தமிழ் ஊழியர்கள் அவ்வளவு இல்லை. எல்லாமே இந்தி பேசுபவர்கள் தான்.

தமிழக CBSE பள்ளிகள் இந்தி திணிப்பு தான்.

இந்தி, கன்னடம், தெலுங்கு பேசும் ஜாதிகள் வருக; தமிழ் பிரமாணர் ஒழிக என கொள்கை வைத்துள்ளது தற்போதைய இடஒதுக்கீடு சட்டம்.

கர்நாடகத்தில் கன்னடத்திற்கு பிரதானம் அளிக்கப்படுகிறது. கன்னட பிராமணர் கன்னடர் ஆவார். தமிழகத்தில் தமிழ் பிராமணர் வெளியாள் எனவு இந்தி, உருது, கன்னடம், தெலுங்கு ஜாதிகள் தமிழர்கள் என்கிற பெயரில் இடஒதுக்கீடு வாங்குகின்றனர்.

தமிழக தமிழர்களுக்கா வெறும் ஜாதி கணக்கில் உகுந்தவருக்கா?