Monday, November 06, 2006

தலைப்புகள்-11/6

தினத்தந்தி

* சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை
# 148 பேரை கொன்று குவித்த ஈராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை விதித்து தனிக்கோர்ட்டு தீர்ப்பு.

* கவுகாத்தியில் 2 இடத்தில் குண்டு வெடித்து 10பேர் சாவு
# கவுகாத்தி நகரில் 2 இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதில் 10 பேர் இறந்தனர். 52 பேர் காயம்.

* கறுப்பு கொடி ஆர்ப்பாட்டம் டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு
# 17-ந் தேதி டெல்லி வரும் இலங்கை அதிபருக்கு சென்னையில் கறுப்புகொடி ஆர்ப்பாட்டம் நடத்துவோம் என்று ராமதாஸ்கூறினார்.

* சென்னை மீனவர்கள் 5 பேரின் கதி என்ன?
# சென்னை காசிமேடு மீனவர்கள் சென்ற படகு பூம்பூகாரில் கரை ஒதுங்கியது. அதில் இருந்த 5மீனவர்களின் நிலை என்ன?.

* சென்னை :ஓட்டல்களில் மதுவிருந்துடன் கொண்டாட்டம்
# சென்னையில் நள்ளிரவில் குடி போதையில் நட்சத்திர ஓட்டல்களில் ஆட்டம்போட்டதாக 26 பேரை போலீசார் கைதுசெய்தனர்.

தினமணி

* சதாம் ஹுசைனுக்கு மரண தண்டனை
* "சர்வதேச சமூகம் ஏற்பதாக இருக்க வேண்டும்': இந்தியா
* சிறப்புப் பக்கம்: அரபு மக்களின் வரவேற்பும் எதிர்ப்பும்
* இந்தியா வரும் இலங்கை அதிபருக்கு கண்டனம்:
* 'வீடுகளில் கருப்பு கொடி ஏற்றுங்கள்' - ராமதாஸ்
* அடுத்த சில ஆண்டுகளில் பொருளாதாரத்தில் உலகில்
* 3-வது பெரிய நாடாக இந்தியா மாறும்: சிதம்பரம்
* தமிழகத்தில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை: வைகோ
* தகவல் அறியும் உரிமைச் சட்ட அமலில் மெத்தனம்: தமிழக தலைமைச் செயலருக்கு நோட்டீஸ்
* பிராக்கென், மெக்ராத் அபாரம்: கோப்பை வென்றது ஆஸி

தினமலர்

* சதாமுக்கு தூக்கு!* 148 பேரை கொலை செய்த வழக்கில் ஈராக் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு * உடந்தையாக இருந்த மேலும் இரண்டு பேருக்கும் மரண தண்டனை
# பாக்தாத்: ஈராக் துஜெய்ல் நகரில் 148 ஷியா முஸ்லிம்களை கொன்ற வழக்கில் சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

* சிறப்பு பொருளாதார மண்டலங்கள் சட்டத்தில் திருத்தம்*பார்லி., தொடரில் வலியுறுத்த இடதுசாரிகள் திட்டம்
# புதுடில்லி: மத்திய அரசு அறிமுகப்படுத்தி உள்ள சிறப்பு பொருளாதார மண்டல சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும்படி வரும் பார்லிமென்ட் குளிர்கால கூட்டத் தொடரின்போது இடது சாரிகள் வலியுறுத்த உள்ளன.

* பொதுச் செயலராகிறார் ராகுல் காந்தி * காங்கிரசில் விரைவில் அதிரடி மாற்றம்
# புதுடில்லி: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அதிவிரைவில் மாற்றியமைக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு உ.பி.,யில் நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு ராகுல் காந்தி காங்கிரஸ் பொதுச் செயலராக நியமிக்கப்படலாம் என நம்பப்படுகிறது.

* நவ.7 தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம்
# சென்னை: ""புற்றுநோய் என்பது குணப்படுத்த முடியாத நோய் என்ற தவறான கருத்து, மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. இந்நோய்க்கு ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சை அளிக்கப்படுமானால் 95 சதவீதம் பேரை காப்பாற்ற முடியும்,'' என்று அடையாறு புற்றுநோய் மைய அறிவியல் இயக்குனர் ராஜ்குமார் தெரிவித்தார்

* சென்செக்ஸ் 13 ஆயிரம் புள்ளிகளை தாண்டியதால் மியூச்சுவல் பண்ட்களில் முதலீடுகள் அதிகரிப்பு
# மும்பை: மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் 13 ஆயிரம் புள்ளிகளை எட்டியுள்ளதால், சாதாரணமாக வங்கிகளுக்கு வரவேண்டிய பணமெல் லாம் தற்போது பங்குச் சந்தைக்கு, அதாவது மியூச்சுவல் பண்ட்களுக்கு சென்று கொண்டிருப்பதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

* இந்திய சீன எல்லை பிரச்னையில் முன்னேற்றம் * சீன அரசு அறிக்கையில் தகவல்
# பீஜிங்: இந்தியாசீனா இடையிலான எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காணும் முயற்சியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக சீன வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

* முதல் முறையாக ஆஸி., "மினி' சாம்பியன்!* வாய்ப்பை கோட்டை விட்டது வெ.இண்டீஸ்
# மும்பை: சபாஷ் பாண்டிங்! மினி உலக கோப்பை வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது ஆஸ்திரேலியா. நேற்று நடந்த இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி, டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி வெஸ்ட் இண்டீசை 8 விக்கெட் வித்தியாசத்தில் மிக எளிதாக வீழ்த்தியது.

தினகரன்

* 148 பேரை படுகொலை செய்ததாக குற்றச்சாட்டு சதாம் உசேனுக்கு தூக்கு ஈராக் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு
* குழந்தைகள் இறப்புக்கான காரணத்தை ஆராய வேண்டும் மருத்துவர்கள் வலியுறுத்தல்
* விடுதலைப்புலிகள் சுட்டு வீழ்த்தியதா? மீனவர் வலையில் சிக்கிய இலங்கை விமான டயர்கள்
* தகவல் தொழில்நுட்பப் பூங்காக்களுக்கு சலுகைகள் தொடரும்: தயாநிதி மாறன்

No comments: