Tuesday, November 14, 2006

தலைப்புகள்-11/14

தினத்தந்தி

* 4 ஊராட்சிகளுக்கும் தி.மு.க. சார்பில் ரூ.5 லட்சம்
# பாப்பாபட்டி, கீரிப்பட்டி, உ∙பட 4 ஊராட்சிகளுக்கும் தி.மு.க. சார்பில் தலாரூ.5லட்சம் வழங்கப்படும் என்று கருணாநிதி அறிவிப்பு.

* காளிமுத்துவை நான் மிரட்டவில்லை -ஜெயலலிதா
# கருணாநிதியின் திருக்குறள் உரையை காளிமுத்து வாசித்ததற்காக நான் அவரை மிரட்டியதாக சொல்வது முழு கற்பனை என்று ஜெயலலிதாகூறியுள்ளார்.

* மருத்துவம், என்ஜினீயரிங்நுழைவுத்தேர்வு ரத்து
# தமிழ்நாட்டில் தொழிற்கல்வி படிப்புகளில் மாணவர்க∙சேர்க்கைக்கு நுழைவுத்தேர்வை ரத்துசெய்யலாம் என்று வல்லுனர்குழு பரிந்துரை.

* முல்லைப்பெரியாறு பிரச்சினை: 23-ந் தேதி பேச்சுவார்த்தை
# முல்லைப்பெரியாறு அணை பிரச்சினை தொடர்பாக மாநிலமுதல்-மந்திரிகள் கூட்டம் வரும் 23-ந் தேதி டெல்லியில் நடக்கிறது.

* ஆண்டிப்பட்டி தேர்தல் :அ.தி.மு.க-தி.மு.க. மோதல்
# ஆண்டிப்பட்டியில் அ.தி.மு.க-தி.மு.க.வினர் இடையே ஏற்பட்ட மோதலை தொடர்ந்து ïனியன் தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு.

தினமலர்

* துண்டிப்பு! * மேட்டுப்பாளையம் குன்னூர் ரோட்டில் 12 இடங்களில் நிலச்சரிவு * பலத்த மழைக்கு தாக்கு பிடிக்க முடியாமல் உருண்டன பாறாங்கற்கள்
# குன்னூர்:கடந்த 10 நாட்களாக பெய்து வரும் கனமழை காரணமாக, குன்னுõர் மேட்டுப்பாளையம் சாலையில் 12 இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. மழைக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் பாறைகள் உருண்டு பாதையில் நின்றிருந்த லாரிகள் மீது விழுந்ததால், இரண்டு லாரிகள் மண்ணில் புதைந்தன. மூன்று பேர் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். ஒருவர் உடல் மீட்கப்பட்டது. குன்னுõர்மேட்டுப்பாளையம் இடையேயான போக்குவரத்து அடியோடு துண்டிக்கப்பட்டது.

* இந்தியா பாக்., வெளியுறவு செயலர்களின் பேச்சுவார்த்தை துவங்கியது *காஷ்மீர், பயங்கரவாதம் உட்பட பல பிரச்னைகள் குறித்து அலசல்
# புதுடில்லி:நான்கு மாத இடைவெளிக்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்தான் வெளியுறவு செயலர்களின் இரண்டு நாள் பேச்சு வார்த்தை டில்லியில் நேற்று துவங்கியது. காஷ்மீர், பயங்கரவாதம் உள்ளிட்ட பல பிரச்னைகள் குறித்தும், இருநாடுகளுக்கு இடையே நம்பிக்கையை வலுப்படுத் தும் நடவடிக்கைகள் குறித்தும் நேற்று பேசப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

* காளிமுத்து மரணம் ஏன்? ஜெயலலிதா புது விளக்கம்
# சென்னை: ""மறைந்த காளிமுத்துவை நான் அண்ணனாக மதித்தேன். ஆனால், அவர் மீது பொய் வழக்கு போட்டு மன உளைச்சலை ஏற்படுத்தி அவரை சாகடித்தது கருணாநிதி,'' என்று அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதா ஆவேசமாக கூறியுள்ளார்.

* இந்திய விமானப்படை எப்போதும்"பெஸ்ட்' * தென்பிராந்திய பயிற்சி தளபதி பெருமிதம்
# சென்னை: ""எந்த காலத்திலும் பாகிஸ்தானை விட இந்திய விமானப் படை அனைத்திலும் சிறந்தே விளங்குகிறது,'' என்று இந்திய விமானப் படையின் தென்பிராந்திய பயிற்சி பிரிவு தளபதி ஜி.எஸ்.சவுதிரி தெரிவித்தார்.

* யு.எஸ்., பறக்க ஜெட் தயாராகுது
# புதுடில்லி: கடும் போராட்டத்துக்கு பின்னர், இந்தியாவின் முதன்மையான தனியார் விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ்க்கு, அமெரிக்க வானில் பறக்க அனுமதி கிடைக்கும் சாத்தியம் அதிகரித்துள்ளதாக தெரிகிறது.

* வங்கதேச எதிர்க்கட்சி போராட்டத்தில் வன்முறை: ஒருவர் படுகொலை
# தாகா: வங்கதேசத்தில் தலைமை தேர்தல் ஆணையரை நீக்கக்கோரி எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் ஆர்ப்பாட்டம் வன்முறையாக மாறியது. இதில், ஒருவர் கொல்லப் பட்டார். மேலும் 60 பேர் காயமடைந்தனர்.

* உலக கோப்பைக்கு யுவராஜ் வருவாரா?* தெ.ஆப்ரிக்க தொடரிலிருந்து நீக்கம்
# புதுடில்லி: இந்திய அணியின் தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணத்திலிருந்து யுவராஜ் சிங் நீக்கப்பட்டுள்ளார். எனினும் உலக கோப்பை தொடரில் அவர் இடம் பெறும் வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

No comments: